Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருளுதிர்காலம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிசின் அழகான கோடைகாலம் .காந்தனுக்கும் 'வாணிக்கும் இரு கிழமைகள் விடுமுறை.மிகவும் மகிழ்வாக உணர்ந்தாள்.இயந்திரங்களுடன் இயந்திரமாக இருவரும் ஓடிக்களைத்த பொழுது கிடைத்த விடுமுறையை மகிழ்வாக போக்கும் திட்டத்துடன் காந்தனின் முதுகில் ஒட்டிக்கொண்டாள்.
என்னது புயல் திசைமாறி அடிக்குது.மனதுக்குள் காந்தன் நினைக்கும் பொழுதே நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது என்றாள் வாணி.
சரிசரி என்னதிட்டம் சொல்லும்.நான் எப்ப தனிய முடிவெடுத்தேன் எல்லாம் உம்முடையது தானே.காந்தன் சொல்லி முடிக்கவும் வாணி நான் எல்லாம் திட்டமிட்டுள்ளேன் நீங்கள் தலையாடடினால் போதும் என்றாள்.
பின்னால் அனைத்திருந்தவளை இழுத்து முன்னால்அணைத்தவன் என்ன சொன்னாலும் தலையாட்டபோறன் சொல்லு.என்னசெய்ய?
எங்கெல்லாம் சுத்தமுடியுமோ அங்கெல்லாம் சுத்துவம் சரியா?
சரி செய்தால் போச்சு.
------------------------------------------------------------------------------
விடுமுறை முடிந்து வேலையும் தொடங்கியாச்சு.ஆனாலும் இன்னும் அந்த விடுமுறை நாட்களின் இனிய நினைவுகள் எவ்வளவு மகிழ்வானது.இயற்கையை இரசித்ததும் செயற்கையில் வியந்ததும் மெல்லிய தொடுகையில் மேனி சிலிர்த்ததும் 'வல்லிய கலவியில் மேனி வியர்த்ததும் காதல் தளும்ப கண்கள் வியர்த்ததும் காமம் தளும்ப உசிரில் வியர்த்ததும் இன்னும் இனித்ததுஎப்பொழுதும் உதட்டு சாயத்துக்கு பதில் புன்னகையை பூசியிருப்பவள் அந்த நினைவுகளால் புன்னகைக்கே புன்னகையிட்டிருந்தாள்.
காந்தன்  அழகனேல்லாம் கிடையாது.ஆனால் ஆண் மகன் .கூடல் நகரின் வேலைக்காரன்.
வாணியின் உசிரும் அவனே.
--------------------------------------------------------------------------
திருமணமாகி இருமனமினைந்து சில ஆண்டுகளானது.எல்லாரும் போல அல்லது அதைவிட மேலாக இருந்தது வாழ்வு.ஊடல்கள் இருந்த பொழுதுகள் கழிய கூடல் இனித்தது. வாழ்வின் இனிய கவிதைகள் அவர்கள் .ஆனாலும் ஏனோ அவர்கள் எழுதிய கவிதைகள் கிருக்கல்கலாயின.
--------------------------------------------------------------------
ஒரே சொல் ---குழந்தை.
அவர்களுக்கே இல்லாத கவலை சுற்றியிருந்த நண்பர்களுக்கு.தேனுக்குள் மிளகு கலந்த மனிதர்களின் பேச்சு மெதுவாக அவர்களின் வட்டத்தை சுருக்கியது.நிறைய அழைப்பிதழ்கள் திறக்கப்படாமல் போக தவறிப்போய் போன இடமெல்லாம் அறியாளிகளின் அனுதாபமும் தாண்டிச்செல்லும் பொழுது வரும் அசிங்கப்பெச்சும் முதன் முதலாய் தங்களின் சிறகுகளை கத்தரித்து தமக்குத்தானே சிறையிட்டனர்.
------------------------------------------------------
அழகான கூடல்ஒன்றின் முடிவில் அவனின் தோழில் கிடந்தவளின் கண்ணீர்த்துளி சுட்டு இதயம் கருகிப்போக இறுக்கி அணைத்தவன்
என்னடா?என்றான்.
ஏன்? அவனின் கைகள் விழிநீர் துடைத்துவிட உதடுகள் அவளின் விம்மலைதுடைத்து விட்டது.
ஏய் பெண்ணே  எங்களில் குறையில்லை .ஆனாலும் எதுவும் மாற்றம் நிகழவில்லை.மருத்துவம் எல்லா கதவுகளையும் திறந்து விட்டுள்ளது.
பார்ப்போம் விதியா? அல்லது நாமா?என ஆறுதல் கூரியவன் அடுத்த நகர்வுகளை உடனும் அடுத்த வேலைகளை தொடர்ந்தும் செய்தான்.
-------------------------------------------------------------------வரும்
 

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக இருக்கிறது. நீங்கள் கதை எழுதுவீர்கள் என்று எனக்குத் தெரியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
 இருப்பதில் இருந்து வாழ்வை அழகாக்குவோம் 
 
பகிர்விற்கு நன்றி 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமேரியர் கதைஎன்பது கற்பனையாய் வருவதாய்இருந்தால் எனக்கு வராது. சூழலை பார்த்து வருவதால் மட்டுமே முடிகிறது.உங்களைப்போல் என்னால் முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

அன்னிலிங்கம், அழகான கவித் தமிழில் உங்கள் கதை நகர்கின்றது! :D

 

காந்தனும், வாணியும் ஒன்றாகக் கரம் கோர்த்து நடக்கும் வரையும், உலகத்தின் அபிப்பிராயங்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை!

 

விஞ்ஞானம் உதவுகிறதா என்று பார்ப்போம்! தொடருங்கள்!

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை லியோ .



நம்பிக்கைதான் வாழ்க்கை. பார்ப்போம்.புன்கையூரன்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நடையில் கதை சொல்லும் பாங்கு மிகவும் நன்றாக உள்ளது தொடருங்கள் அனிலிங்கம் பாராட்டுக்கள்.

கவிதை நடையில் கதை சொல்லும் பாங்கு மிகவும் நன்றாக உள்ளது தொடருங்கள் அனிலிங்கம் பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆரம்பம். தொடருங்கள் அன்னிலிங்கம்.. இருள் உதிரட்டும்!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கண்மணி.



இருள் கட்டாயம் ஒருநாள் விலகும் இசை.



விருப்பிட்ட அகூதா மற்றும் ரதிக்கும் நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மருத்துவமனை.உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட வாணி படுக்கையில்.காந்தனுக்கோ வேலை.ஆனாலும் ஒவ்வொரு நாளும் உணவு சமைத்து வருவான்.பின் வேலை.மீண்டும்வைத்தியசாலை.என ஓய்வற்ற ஓட்டம்.ஆனாலும் அதிலும் ஓர் சுகமிருந்தது.
வாணிக்கு அவனின் உணவு பிடிக்கவில்லை.
அவனோ என்ன செய்வான்.நன்றாக சமைக்க தெரியாது.' வாணி உன்  சமையல் சுவையானது.
ஆனால் நான் என் இதயத்தை சமைத்து வருகிறேன்.புரிந்துகொள்.நமக்கு இங்கு யாருமில்லை. எங்களைத்தவிர.அவளின் கண்களில் அன்பு கசிவதைக் கண்டான்.
ஆம்வாணி குழந்தையை சுமக்கத்தொடங்கி 30 வாரங்கள் நெருங்குகிறது.ஆனால் அவளின் உடலின் பலவீனம் அவளை படுக்கையில் தள்ளியது.
------------------
இரவு ஒருமணி தூங்காது புரண்டு படுத்தவனின் தலை மாட்டிலிருந்த தொலைபேசி அலறி எழுப்பியது.வாணி தான் உடைந்தகுரலில் 'வாறிங்களே ஒருக்கா மருத்துவமனைக்கு? இங்கை என்னென்னவோ எல்லாம் சொல்லுறாங்கள்.எனக்கும் ஏலாது.
அரை மணி நேரத்தில் அங்கிருந்தான்.
மருத்துவரின் கூற்று மனதை சிதறடித்தது.
இனியும் தாமதிக்க முடியாது .ஒருவரை மட்டும் பாதுகாக்க முடியும்.அதை செய்தாக வேண்டும்.
வாணி முற்றாக மறுத்தாள். எனக்கு எதுவும் ஆகாது.ஆனால் எனக்கு முடிவெடுக்க ஒரு நாள் தவணைதரமுடியுமா?கிடைத்தது.மறுநாளும் கிடைத்தது.மீண்டும் ஒருநாள் 'என நாட்களை நீடித்தாள்.
--------------------------------------------------------------------------
புன்னகைதவழ வந்தமருத்துவர் இனி இருவரையும் எதுவும் செய்ய முடியாது.தைரியமாக இருங்கள்என்ற பொழுது
அவர்கள் கண்ட மகிழ்வுகோடிபெறும்.
---------------------------------------------------------------------
எப்பொழுதும் எதிரியாகப்பார்க்கும் பக்கத்து வீட்டு வெள்ளையன் இவனின் காது படக் சொன்ன வார்த்தை அழகான குடும்பம்.

மகளே இருளுதிர் காலத்தை எனக்களித்தாய்.இல்லை எனக்கு.இதுவரை கிடைக்காத மகிழ்வையும் கிடைக்காத நண்பர்களையும் இன்னும் பல உவகைகளையும் எமக்காக்கினாய்.
ஆம் அவள் பிறந்தாள்
அவர்களும் புதிதாக பிறந்தார்கள்.
கண்நீர்வரைந்த காலங்கள்தான் இப்பொழுதும் ஆனால் அர்த்தங்கள்தான் வேறு.வாழ்க.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.