Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூடங்குளத்தில் அணுக் கசிவுக்கு வாய்ப்பில்லை: எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூடங்குளத்தில் அணுக் கசிவுக்கு வாய்ப்பில்லை: எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்

 

கூடங்குளம் அணுவுலை பாதுகாப்பு கமிட்டி உறுப்பினரும், இந்திய அணுசக்தி கமிஷன் முன்னாள் தலைவருமான sinivasan.jpgஇன்று உதகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கூடங்குளம் அணுவுலையில் கசிவு ஏற்பட்டுள்ளதாகப் பரப்பப்பட்டுள்ளது தவறான தகவல். அணுவுலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற காலத்தில் அணுவுலைக்கான பணிகள் மேற்கொள்ளப்படாததாலும், உள்ளே நிபுணர்கள் அனுமதிக்கப்படாததாலும், மேலும் உலைக்குத் தேவையான இயந்திரங்கள் சரியாகப் பொருத்தப்படாததாலும், சோதனை ஓட்டத்தின்போது சில தவறுகள் கண்டறியப்பட்டன. அவை ஒவ்வொன்றான சரிசெய்யப்பட்டுவிட்டன.அணுவுலை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அணுவுலையே செயல்படாதபோது, உலையில் அணுக்கசிவு என்பது சாத்தியமில்லை. எனவே இது, அரசியல் நோக்கங்களுக்காகக் கூறப்படும் தவறான தகவல்தானே ஒழிய வேறு ஒன்றும் இல்லை.

 

கூடங்குளம் அணுவுலையில் சர்வதேசப் பாதுகாப்பு தொடர்பான அனைத்து அம்சங்களும் உள்ளதால் அணுக்கசிவுக்கு வாய்ப்பில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தில், முதல் யூனிட்டில் மின் உற்பத்தி இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் துவங்க, தயார் நிலையில் உள்ளது.

அதன் அடுத்த யூனிட் செப்டம்பர் மாதத்தில் செயல்படத் துவங்கும். கூடங்குளத்தில் 6000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க வசதி உள்ளன. மேலும் 2 யூனிட் அமைக்க ரஷ்ய அரசுடன் இந்திய அரசு ஆலோசனை நடத்தியுள்ளது.

 

அணு மின் உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

இந்தியாவில் அணு மின் உற்பத்திக்கு வாய்ப்புள்ள இடங்களாக ஆந்திரம், கோவா, குஜராத்தில் பவநகர், அரியானா, ம.பி., ஆகிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. கூடங்குளம் உள்பட, அணுமின் நிலையப் பணிகள் தொடர்பாக ரஷியப் பிரதமருடன் இந்தியப் பிரதமர் பேச்சு நடத்தியுள்ளார்.

உலக அளவில் 430 அணு மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இவற்றில் ஜப்பானில் மட்டும் 50 அணுமின் நிலையங்கள் உள்ளன. அவற்றில், 2 மட்டுமே பழுதடைந்துள்ளன. இவற்றைத் தவிர உலகில் வேறு எந்த அணு மின் நிலையங்களிலும் பழுதோ பாதிப்போ எற்பட்டதாக புகாரோ தகவலோ இல்லை.

 

அதனால் அணுமின் உற்பத்தி நிலையங்கள் பாதுகாப்புடனே உள்ளன.

இவ்வாறு கூறினார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

 

  • கருத்துக்கள உறவுகள்

தவறு நேர வாய்ப்பில்லாத வடிவமைப்பு என்று ஒன்று இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தவறு நேர வாய்ப்பில்லாத வடிவமைப்பு என்று ஒன்று இல்லை.

இந்தியாவில், தவறு நேரும்போது, விதியில் பாரத்தைப் போட்டுவிடலாம்! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அணுஉலை கழிவுகள்

 
              

அணுஉலை கழிவுகள் பற்றிய பதிவு இது.....

அணுஉலையே சர்ச்சையில் ஓடிகொண்டிருக்கும் போது நாம் ஏன் அணுஉலை கழிவுகளை பற்றி பேச வேண்டும் ???.....

கீழே படியுங்கள்

          அணுஉலை வேண்டும் வேண்டும் என்று தொண்டை தண்ணி வற்ற கத்தி கொண்டிருக்கும் நவீன விஞ்ஞானிகளே.... நீங்கள் எவ்ளோ சுயநலவாதிகள் என்பதை நீங்கள் என்றைக்காவது உணர்ந்துல்லீர்களா... நிச்சயமாக இல்லை.... சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் என்றல் நிச்சயம் நான் சொல்ல போகும் இந்த விஷயம் தெரிந்திருக்கும் .... உங்களுக்கு உங்கள் நாட்டில் மின்சாரம் இருந்தால் போதும் அதனால் நீங்க எந்த வழியை வேண்டுமானாலும் பயன்படுத்துவீர்கள்.... அதனால் சொந்த மக்களுக்கே பிரச்சனை ஏறப்பட்டலும் உங்களுக்கு கவலை இல்லை.. ஏன் என்றால் நீங்க பாதிக்கப்படுவதில்லை... எவனோ ஒருவன் பாதித்தால் நான் என்ன செய்வேன் என்றே மனோபாவமே நம்மில் பலருக்கு அதிகம்....

           என் வீட்டில் மின்சாரம் வருகிறதா அது போதும் எனக்கு... மற்றவன் செத்தால் என்ன பிழைத்தால் நமக்கு என்ன ??

      மொத்தமாக நம் பூமியில் உள்ள இயங்கும் அணுஉலைகள் இவ்வளவு என்று தெரியுமா .... 440 அணுஉலைகள்..... இவ்வளவு அனுளைகளிளிருந்து வெளியேற்றப்படும் அனுக்கழிவுகள் என்ன ஆகின்றன ??... யாரவது யோசித்ததுண்டா ??? நானும் யோசிக்க வில்லை... இந்த கூடங்குளம் பிரச்சனை வந்த உடனே நானும் இதை பற்றி யோசிக்க தொண்டன்கினேன்... அதிர்ச்சிகரமான சில விஷயங்கள் என் கண்ணில் பட்டது....

அது தான் சோமாலியா ... இந்த ஊரு பெயரை உச்சரித்தாலே பஞ்சதிர்க்கும், பசிக்கும் இரையாகி எலும்பும் தோலுமாக இருக்கும் மனிதர்களையே ஞாபக படுத்தும்...

இந்த ஊரை பற்றி நம்மில் பல பேருக்கு தெரியாத (சில உலக அரசுகளுக்கும் மட்டும் தெரிந்த) விஷயங்கள் இதோ... அணுஉலை கழிவுகள் உரிய முறையில் அழிக்கப்படுகின்றன என்று கூறுவது முற்றிலும் பொய்....உலகில் உள்ள அத்தனை அனுஉலை கழிவுகள் மொத்தமாக கொட்டும் குப்பைத்தொட்டி உலகில் ஒன்று உண்டு என்றால் அது சோமாலியா தான்

அங்கே தான் மொத்த கழிவுகளும் கொட்டப்படுகின்றன.... இதற்க்கு என்ன டா ஆதாரம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது... 2004 சுனாமி வந்ததே தெரியுமா ...அதில் அதிக சேதம் அடைந்த நாடுகளில் சொமளியாவும் ஒன்று .... அந்த மக்கள் நிவாரண பணிகளுக்கும் சென்ற ஊழியார்கள் யாருமே அவர்கள் பிணத்தை தொட கூட இல்லை ஏன் என்றால்... நம் உலக வல்லரசுகள் தங்கள் அனுக்கழிவுகள் கொட்டும் குப்பைதொட்டியாக வைத்து கொண்ட சோமாலியா கடல் சுனாமியால் பொங்கி எழுந்த போது அத்தனை கழிவுகளும் கண்டைனர்களில் மூலம் வெளியே அடித்து வரப்பட்டது... அந்த கண்டைனர்களில் இருந்து கதிர்வீச்சு அதிகமாக இருந்ததே இதற்க்கு காரணம்...

அந்த சோமாலியாவை மேலும் சீரழிக்க நம்ம ஊரும் தயாராகி வருகிறது.....

இப்போது சொல்லுங்கள் அணுஉலையை ஆதரிப்பவர்கள் சுயநலவாதிகளா ?? பொதுநலவாதிகளா ???

 
 
 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

roman-der-radfahrer-tschernobyl.jpgtschernobyl-opfer_2.jpg-for-web-normal.j

 

மிஸ்டர் சிறினிவாசன்! இப்பிடி தற்செயலாய் நடக்கும் நிகழ்வுகள் இனியும் நடக்கக்கூடாதெண்டதிலைதான் எல்லாம் தெரிஞ்ச நாடுகள் கவனமாயிருக்கினம். போபால் பிரச்சனை அதுக்கிடையிலை  உங்களுக்கு மறந்து போச்சுதாக்கும்... :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.