Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்: பிரதமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

manmohan-singh-12.jpg
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரவிருக்கின்ற தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று காலை சந்தித்தனர்.

பிரதமரை சந்திப்பு தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கின்ற தீர்மானத்தை இந்தியா ஆதரவளிக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பாக பிரதமரிடம் நாங்கள் நீண்ட நேரம் பேசினோம். எங்கள் கருத்துக்களை பொறுமையாக கேட்டார்.

'அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மாநாட்டில், சென்ற முறை இலங்கைக்கு எதிராக எடுத்த நிலையை தான் இந்த முறையும் மேற்கொள்வோம்' என்று பிரதமர் உறுதி கூறினார்.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிக உரிமையை பெற்றுத் தருவது, வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வசிக்கும் இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்துவது, பறிக்கப்பட்ட அவர்களின் சொத்துகளை உரிமையாளர்களுக்கு திருப்பி வழங்குவது தொடர்பான கோரிக்கைகளையும் இந்தியா வற்புறுத்தும் எனவும் பிரதமர் வாக்குறுதி அளித்தார் என்றும் அவர் சொன்னார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிரான பிரேரணையை இந்தியா ஆதரிக்கும்; மன்மோகன் சிங் திட்டவட்டம்

ac1281efe41b876311997f1ff34ffb49.jpg

 

ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து உரையாடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் ´இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என சுதர்சன நாச்சியப்பன் தலமையிலான குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும்,

இதற்கு சென்ற முறை இலங்கைக்கு எதிராக எடுத்த நிலையை தான் இந்த முறையும் மேற்கொள்வோம். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிக உரிமையை பெற்றுத் தருவது, வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வசிக்கும் இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்துவது, 

அத்துடன் பறிக்கப்பட்ட அவர்களின் சொத்துகளை உரிமையாளர்களுக்கு திருப்பி வழங்குவது தொடர்பான கோரிக்கைகளையும் இந்தியா வற்புறுத்தும் என இந்திய பிரதமர் தங்களிடம் உறுதியளித்துள்ளதாக சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=104651855122300293

  • கருத்துக்கள உறவுகள்

இனி 

உங்களால் எதிர்க்கமுடியாது

 

தமிழகம் தீப்பொறியாக உள்ளது

காசை

பதவியை வாங்கிக்கொண்டு கண்ணை மூட கருணாநிதியும் ஆட்சியில் இல்லை.

அத்துடடன் இந்திய மற்ற  மாநிலங்களும் உருகத்தொடங்கியுள்ளன.

தமிழகமும் மற்றையவர்களும் இப்பொழுது இந்தியாவை அடுத்த கட்டத்திற்று நகர அழுத்தம் தரல் வேண்டும்

 

- முழுமையாயன சுதந்திரனமான போர்குற்ற விசாரணை
- இல்லையேல் பொருளாதார தடை

  • கருத்துக்கள உறவுகள்

இனி 

உங்களால் எதிர்க்கமுடியாது

 

தமிழகம் தீப்பொறியாக உள்ளது

காசை

பதவியை வாங்கிக்கொண்டு கண்ணை மூட கருணாநிதியும் ஆட்சியில் இல்லை.

அத்துடடன் இந்திய மற்ற  மாநிலங்களும் உருகத்தொடங்கியுள்ளன.

 

நீங்கள் இப்படி எழுத ... எனக்கு கருணாநிதியின் குள்ள நரி விளையாட்டுவல் தான் ஞாவகத்துக்கு வருது....என்னமா நாடகம் போட்டார் 2009ம் ஆண்டு.. ***

 

நியானி: பண்பற்ற சொற்கள் திருத்தம்/தணிக்கை

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்படி எழுத ... எனக்கு கருணாநிதியின் குள்ள நரி விளையாட்டுவல் தான் ஞாவகத்துக்கு வருது....என்னமா நாடகம் போட்டார் 2009ம் ஆண்டு.. ***

 

நியானி: பண்பற்ற சொற்கள் திருத்தம்/தணிக்கை

 

ம்

அதை உணர்ந்து தான் தமிழக மக்கள் சரியான இடத்தில் வைத்திருக்கிறார்கள்.  எதிர்க்கட்சியாக கூட வரமுடியவில்லை என்பது கருணாநிதியின் சாணக்கிய  அரசியலில் கடைசிநிலை.

"சுஸ்மா தூதுக் குழு"வில் இலங்கை வந்தவர்களில் இலங்கை அரசுக்காக கதைத்தவர் சுதர்சன நாச்சியப்பன் மட்டும்தான். கதைத்தது வேறு தமிழர்களால் இலங்கை அரசின்,தமிழர் மீதான அடிமை சின்னமாக கருதப்படும் தேவானந்தாவுக்கு பொன்னாடை போர்த்தியவர். சீண்டுதல் அதோடு நின்றுவிடவில்லை, ஈழத்தமிழரின் மதிப்பிற்குரிய M.G.Rயை இழுத்து, அவருடன் எந்த வித ஒற்றுமையும் இல்லாத தேவானந்தாவுடன் ஒப்பிட்டு, நீரிணையின் இருகரையில் இருக்கும் தமிழரையும் புண்படுத்தியவர்.  

 

ஜெயலலிதாவும் மற்றய தலைவர்களும் கேட்டதான "அமெரிக்காவின் பிரேரணையை இந்தியாதான் கொண்டுவரவேண்டும்" என்ற கேள்விக்கு பதில் சொல்லாத காங்கிரஸ், தான் அவமானப்பட்டுவிடாதிருக்க பிரேரணையை ஆதரிக்கிறது.

Edited by மல்லையூரான்

ராசபக்சேவினை மாற்றி ரணில் விக்ரமசிங்கேவை கொண்டு வருவது என்பதற்கே இத்தனை நாடகங்களும் நடத்தப்படுகின்றன. காங்கிரஸ்காரன் கூட பாலச்சந்திரன் படுகொலைக்காக வருத்தப்படுவது எல்லாம் இதற்காகவே.

 

 

ரணில் விக்ரமசிங்கே ராஜபக்சேவினை விட மோசமானவன். ஆர்பாட்டம் இல்லாமல் இனப்படுகொலையை நடத்தும் வல்லமை வாய்ந்தவன். நல்லினக்க ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்துவது போல நாடகம் நடத்திவிட்டு தமிழரை அழிக்கக் கூடியவன். ஆக நமது போராட்டம் என்பது இரண்டு பேர்களையும் குறிப்பிட்டு இலங்கை அரசின் வரலாறே இனப்படுகொலை வரலாறு என்று ஆரம்பித்தல் அவசியம். இந்தியாவே -காங்கிரஸே இதன் முதுகெழும்பு என்பதும் நினைவுட்டப்படல் வேண்டும். (இதற்காகவே 23ம் தேதி சத்திய மூர்த்திபவன் முற்றுகை. )


இந்தியன் எக்ஸ்பிரஸில் ‘ரனில் காலில் தமிழீழ தாய் ஒருவர் விழுந்து கதறுவது என்பதன் நுண் அரசியல் இதுவே’.. ராஜபக்சேவிற்கு எதிராக கூக்குரல் இடும் எந்தா ஒரு கட்டுரையும் தமிழீழ விடுதலை பற்றி பேசுகிறதா எனப் பாருங்கள். பிறகு புரியும்..

 

- முகநூல் (திருமுருகன் காந்தி )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

60 வது ஆண்டுகால ஈழத்தமிழனின் மிக துயரமான வாழ்விற்கு இந்தியா இம்முறை ஈழதமிழனுக்கு விடிவிற்காக கடுமையாக உழைக்கும் அதற்க்கு காங்கிரசின் ஆதரவும் அதற்க்கு மேல் சோனியா காந்தியின் ஆதரவும் இருக்கும் என்றும் நம்புவோம்.

 

நிரந்தரம் இல்லாத மனித வாழ்வில் எதுவும் நடக்கலாம். 

545799_10151324940580894_61059255_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

manmohan-singh-2222013-150.jpg

தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று காலை சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தனர். அப்போது, அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் 'இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்' என பிரதமரிடம் கோரிக்கை வைத்தனர். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டதற்கு நன்றியும் தெரிவித்தனர்.

  

பிரதமரை சந்தித்து விட்டு வெளியே வந்த சுதர்சன நாச்சியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பாக பிரதமரிடம் நாங்கள் நீண்ட நேரம் பேசினோம். எங்கள் கருத்துக்களை பொறுமையாக கேட்டார்.

 

அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மாநாட்டில், சென்ற முறை இலங்கைக்கு எதிராக எடுத்த நிலையை தான் இந்த முறையும் மேற்கொள்வோம்' என்று பிரதமர் உறுதி கூறினார். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிக உரிமையை பெற்றுத் தருவது, வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வசிக்கும் இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்துவது, பறிக்கப்பட்ட அவர்களின் சொத்துகளை உரிமையாளர்களுக்கு திருப்பி வழங்குவது தொடர்பான கோரிக்கைகளையும் இந்தியா வற்புறுத்தும் எனவும் பிரதமர் வாக்குறுதி அளித்தார்.

 

மேலும், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் சார்பாக பிரதமருக்கு நன்றி தெரிவித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=76593&category=IndianNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

'ஜெனிவாவில் இந்திய நிலைப்பாடு மாறாது' - மன்மோகன் சிங்
 
 

 

ஐநாவின் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கை விடயத்தில் இந்தியா கடந்த தடவை எடுத்த நிலைப்பாட்டையே இந்தத் தடவை எடுக்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.

 

தமிழ்நாடு காங்கிரஸ் நாடாளுமன்ற இரு அவை உறுப்பினர்களும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து பேச்சு நடத்தியுள்ளார்கள்.

அந்தப் பேச்சுவார்த்தையின் போதே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக இந்திய நாடாளுமன்றத்தின் மேலவைக்கான காங்கிரஸ் கட்சி உறுப்பினரான சுதர்சனம் நாச்சியப்பன் தெரிவித்தார்.

 

அத்துடன் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13 வது திருத்தச் சட்டத்தை இலங்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தும் என்றும் இந்திய பிரதமர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.

 

அதேவேளை வடக்கு கிழக்கு தமிழர் பாரம்பரிய நிலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தாம் இலங்கை அரசாங்கத்தை கேட்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட 37 அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்திய, இலங்கையை வலியுறுத்தும் என்றும் இந்திய பிரதமர் கூறியுள்ளார்.

 

 

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொக்க மக்க;


 

இன்னும் சர்வதேச விசாரணை பற்றி வாய் திறக்கவில்லை - BBC செய்திப்படி


 

சிட்டுவேசன் சாங்


 

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா .................

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
ஜெனிவாவில் கடந்த தடவை எடுத்த நிலைப்பாட்டையே இந்தத் தடவையும் இந்தியா எடுக்கும்: - அறிவித்தார் மன்மோகன் சிங்
[Friday, 2013-02-22 23:06:59]
 
ஐநாவின் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கை விடயத்தில் இந்தியா கடந்த தடவை எடுத்த நிலைப்பாட்டையே இந்தத் தடவை எடுக்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் நாடாளுமன்ற இரு அவை உறுப்பினர்களும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து பேச்சு நடத்தியுள்ளார்கள். அந்தப் பேச்சுவார்த்தையின் போதே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக இந்திய நாடாளுமன்றத்தின் மேலவைக்கான காங்கிரஸ் கட்சி உறுப்பினரான சுதர்சனம் நாச்சியப்பன் தெரிவித்தார்.
 
  
அத்துடன் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13 வது திருத்தச் சட்டத்தை இலங்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தும் என்றும் இந்திய பிரதமர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.
 
அதேவேளை வடக்கு கிழக்கு தமிழர் பாரம்பரிய நிலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தாம் இலங்கை அரசாங்கத்தை கேட்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட 37 அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்திய, இலங்கையை வலியுறுத்தும் என்றும் இந்திய பிரதமர் கூறியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.