Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாத்மாக்களுக்கு மட்டுமா?

Featured Replies

images9wq1.jpg

தெத்தி தெத்தி நடைபயின்று விழுந்த போதும், தெத்தி தெத்தி ஓடியாடி விளையாடிய போதும் கண்ணுக்குக் கண்ணாய், தன் உயிர் மீது சுமந்து காப்பவர் தந்தையாவர். என்னதான் தாய் பத்துமாதம் நம்மை சுமந்து பெற்றாலும் காலம் முழுவதும் தன் தோளில் நம்மை சுமப்பவர், சுமந்தவர் தான் எமது தந்தை.

சில படிக்காத தந்தைகளைப் பற்றி இந்த ஊர் உலகம் எழுத அவர்கள் பெரிய மகாத்மா ஆக இருந்திருக்கமாட்டார்கள் ஆனால் அவர்களுடைய குடும்பத்திற்கு அவர்கள்தான் ஆத்மாவாக இருந்திருப்பார்கள். ஒரு காலத்திற்குப் பிறகு தங்கள் சுக தூக்கங்களை மறந்து தங்கள் குடும்பத்திற்காகவே தங்களை மெழுகுவார்த்தியாக உருக்கிக்கொண்டிருப்பவர்கள

ஒரு குடும்பத்தை வழி நடத்துவதில் அப்பாவிற்கு பெரும்பங்கு இருந்தாலும்

அவரை பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. வாழ்க்கையில் கவலைகளை வெளிக்காட்டாமல்

குடும்பத்துக்காக கஷ்டப்படும் ஒரு ஜீவன் அப்பாதான் எந்த ஒரு உணர்ச்சியையும் வெளியில்

காட்டமாட்டார்கள் பொதுவாக பெண்கள்அப்பாவிலும் ஆண்கள்அம்மாவிலும் கவரப்பட்டவர்களாக

இருப்பார்கள் இது பொதுவானதுதான்.. உப்பு இல்லாவிட்டால்த்தான் உப்பின் அருமை தெரியும்

என்று கூறுவார்கள். அதேபோல் அப்பா இல்லாத போதுதான் அவரின் தியாகங்களை நம்மால்

உணர முடிகிறது. அம்மா இல்லாத நிலையில் எப்படி அப்பா தாயாகவும் தந்தையாகவும்

வழிநடத்தினார் என்பதை அழகாக சொல்லியிருக்கிறீங்கள் ரமா.

ஒரு குடும்பத்தை வழி நடத்துவதில் அப்பாவிற்கு பெரும்பங்கு இருந்தாலும்

அவரை பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. வாழ்க்கையில் கவலைகளை வெளிக்காட்டாமல்

குடும்பத்துக்காக கஷ்டப்படும் ஒரு ஜீவன் அப்பாதான் எந்த ஒரு உணர்ச்சியையும் வெளியில்

காட்டமாட்டார்கள் பொதுவாக பெண்கள்அப்பாவிலும் ஆண்கள்அம்மாவிலும் கவரப்பட்டவர்களாக

இருப்பார்கள் இது பொதுவானதுதான்.. உப்பு இல்லாவிட்டால்த்தான் உப்பின் அருமை தெரியும்

என்று கூறுவார்கள். அதேபோல் அப்பா இல்லாத போதுதான் அவரின் தியாகங்களை நம்மால்

உணர முடிகிறது. அம்மா இல்லாத நிலையில் எப்படி அப்பா தாயாகவும் தந்தையாகவும்

வழிநடத்தினார் என்பதை அழகாக சொல்லியிருக்கிறீங்கள் ரமா.

ரமாவுக்கு நன்றிகள்

:wink: :wink: :wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் அப்பாவாக இருக்கும் சின்னப்புக்கு பிரயோசனமான கட்டுரை.

ரமாவுக்கு நன்றிகள்

:wink: :wink: :wink: :wink:

சின்னப்புவின் சந்தோசத்தை பாருங்கோ தன்னைப் பற்றி பெருமையா சொல்லி இருக்கு என்று. :wink:

நன்றி ரமா நன்றி என் போன்ற அப்பாகளை பற்றி உண்மைகளை எழுதியதுக்கு :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாக்களை பற்றிய உண்மையான ஏற்றுக்கொள்ளப்பட கூடிய விடயங்களை தொகுத்து தந்திருக்கிறீர்கள். இது கொஞ்சம் காலதாமதமான ஆக்கம் என்று நினைக்கிறேன். இருதாலும் வரவேற்கப்படக்கூடியது.

ஆனால் என்னவோ தெரியல.. உண்மை, சரியானது என்று தெரிகின்ற போதும் அப்பாமாருக்கு சாதகமா கதைக்க மனம் விடுதில்லை. :roll: :roll: :roll: :roll: எதிர்வாதத்தையாவது வைக்கமல் விடுறன். ஒரு நன்றிக்கடனுக்காக. :wink:

அப்பாக்களை பற்றிய உண்மையான ஏற்றுக்கொள்ளப்பட கூடிய விடயங்களை தொகுத்து தந்திருக்கிறீர்கள். இது கொஞ்சம் காலதாமதமான ஆக்கம் என்று நினைக்கிறேன். இருதாலும் வரவேற்கப்படக்கூடியது.

ஆனால் என்னவோ தெரியல.. உண்மை, சரியானது என்று தெரிகின்ற போதும் அப்பாமாருக்கு சாதகமா கதைக்க மனம் விடுதில்லை. :roll: :roll: :roll: :roll: எதிர்வாதத்தையாவது வைக்கமல் விடுறன். ஒரு நன்றிக்கடனுக்காக. :wink:

அப்பா ஆகும் வரை தான் உங்களுக்கும் இந்த உணர்வு இருக்கும் நீங்களும் அப்பா அகும் போது உங்களுக்கும் புரியும் அப்பா என்பவர்கள் எங்கு வைத்து பார்க்க வேண்டியவர்கள் என்று :wink: :wink: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாக்களைப் பற்றி அருமையாக எழுதியுள்ளீர்கள் ரமா. உண்மைதான் என்னதான் அப்பாமார் கண்டிப்பா இருந்தாலும் பெண்பிள்ளைகள் ஒரு தனிப்பாசம் தான் அவர்களுக்கு. உங்களின் ஆக்கத்தால் களத்திலுள்ள அப்பாக்களுக்கு உச்சி குளிர்ந்திருக்குமே. :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரமா மாதிரி ஒரு மகளைப் பெற்ற தந்தை உண்மையில் கொடுத்து வைத்தவர்.

அவரை அப்பாவாகப் பெற்ற ரமாவும் கொடுத்து வைத்தவர்.

அப்பாமார்களைப்பற்றிய உண்மைகளை தன் இதயத்தைத் திறந்து எழுதிய ரமாவுக்கு எனது பாராட்டுக்கள்!

  • தொடங்கியவர்

என்னை வாழ்த்தியமைக்கு எல்லோருக்கும் நன்றிகள்.

ஆனால் இதில் உங்கள் கருத்துக்களையும் எழுதி ஆரோக்கியமான கருத்தாடலாக கொண்டு செல்வோமா?

அக்கா நல்லா சொல்லி இருக்கிறியள் அப்பா பற்றி. அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணி கவலைப்படுறீங்க என தெரிகிறது. :) கவலைப்படாதீங்க அக்கா

ரமாக்கா நல்லா எழுதி இருக்கிறீங்க :P

உண்மைதான் அப்பாக்களின் தியாகமோ அன்போ பெரிசா வெளிவராமைக்கு என்ன காரணம் :?:

கவிதைகளாகட்டும் தமிழ் சினிமாவாகட்டும் தாய்பாசத்தை பேசுற அளவு தந்தை பாசம் பற்றி (சேரனின் தவமாய் தவமிருந்து விதிவிலக்கு)பேசுறதில்லையே ஏன் :?:

நீங்க சொல்வது போல பெண் பிள்ளைகள் மீது தந்தைமாருக்கு தனிப்பட்ட பாசம் இருக்கும் அதே போல பெண் பிள்ளைகளுக்கும் :wink:

அப்பா என்கிற தமது வாழ்க்கையில முதலில் அறிமுகமாகும் ஆணை வைத்து தான் தங்களுக்கு வரப்போகிற எதிர்கால துணையை எடை போடுவார்கள்

அதால களத்திலுள்ள அப்பாக்களே ஒழுங்கா இருங்க சரியா :wink: :P :P

பிள்ளை நல்லா இருக்கு இஞ்சை இன்னொரு ஆள் அப்பாக்களை ஓழுங்கா இருக்கச் சொல்லுறா.............இருக்க விட்டத்தானே அதுசரி ஒரு ரகசியம் இந்தக்கதையை மனுசியும் என்னோடை இருந்து வாசிச்சுப்போட்டு கேக்கிறாள் இப்பிடி எல்லாம் பப்பிளிக்கா உண்மைகளை ஏன் எழுதுறாங்கள்? எண்டு எங்கை போய் முட்டுறது,,,,,,,,,,,,???

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்தில் சுவர் இல்லையா முகத்தார்

பிள்ளை நல்லா இருக்கு இஞ்சை இன்னொரு ஆள் அப்பாக்களை ஓழுங்கா இருக்கச் சொல்லுறா.............இருக்க விட்டத்தானே அதுசரி ஒரு ரகசியம் இந்தக்கதையை மனுசியும் என்னோடை இருந்து வாசிச்சுப்போட்டு கேக்கிறாள் இப்பிடி எல்லாம் பப்பிளிக்கா உண்மைகளை ஏன் எழுதுறாங்கள்? எண்டு எங்கை போய் முட்டுறது,,,,,,,,,,,,???

யாரு அங்கிள் உங்களை நல்லா இருக்க விடுறதில்லை :roll:

நிச்சயம் பொன்னம்மா அன்ரியாக இருக்காது அப்ப வேறு யார் :wink: :P

நிச்சயம் பொன்னம்மா அன்ரியாக இருக்காது அப்ப வேறு யார்

இதுதான் சொல்லுறது பெம்பிளை பிள்ளைகளுக்கு கதை சொல்லப்பிடாது எண்டு எப்ப பாத்தாலும் மனுசிக்கு சப்போட்டாத்தான் கதைப்பினம் என்ன செய்வம்

அப்ப ஆம்பிளைப் பிள்ளைகளுக்கு மட்டும் எண்டு போட்டு கதை சொல்லுங்க அங்கிள்

ம்ம் சேரனின் அன்பு தங்கை..ரமாக்கா நல்லா இருக்கு :lol:

அப்பாக்களை பற்றி எழுதி இருக்கீங்கள்..எனக்கும் அப்பாவில் ரொம்ப பாசம் இருக்கு..பயமும் இருக்கு..நான் சின்ன வயசிலிருந்தே நிறைய காலமாக அப்பாவை பிரிந்து இருந்தேன். அதனால அப்பாவோட கூடிய காலம் இருக்க முடியல..இப்போ தான் இருக்கேன்..அதனால்..ஆரம்பத்தில

பக்கத்தில் சுவர் இல்லையா முகத்தார்

ஐயோ பாவம்..நோகுமெல்லோ சுவருக்கு :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பா 2 நாள் இல்லை என்றாலே..தெரியும்..உப்பின் அருமையா?

அப்பாக்களை பற்றி எழுதி இருக்கீங்கள்..எனக்கும் அப்பாவில் ரொம்ப பாசம் இருக்கு..பயமும் இருக்கு..நான் சின்ன வயசிலிருந்தே நிறைய காலமாக அப்பாவை பிரிந்து இருந்தேன். அதனால அப்பாவோட கூடிய காலம் இருக்க முடியல..இப்போ தான் இருக்கேன்..அதனால்..ஆரம்பத்தில

ம்ம் சேரனின் அன்பு தங்கை..ரமாக்கா நல்லா இருக்கு :lol:

அப்பாக்களை பற்றி எழுதி இருக்கீங்கள்..எனக்கும் அப்பாவில் ரொம்ப பாசம் இருக்கு..பயமும் இருக்கு..நான் சின்ன வயசிலிருந்தே நிறைய காலமாக அப்பாவை பிரிந்து இருந்தேன்

பாவம் அப்பா 2 நாள் நின்மதியாக எங்கும் போய் இருப்பம் என்றால் அதுக்கும் வழி இல்லை போல பாவம்

அப்பா ஏன் தான் கடவுள் அப்பாக்களை மட்டும் இப்படி சோதிக்கிறாரோ தெரியவில்லை

ஏன் நீங்கள் காட்டுக்கு 16 வருசமா போய் இருந்திங்களா? :roll: :roll:

சகி இப்ப வருவா கொஞ்சம் இருங்க வினித் அண்ணா :wink:

சகி சொன்னது அப்பா வீட்டில இருந்தா சகி சமையலறைக்கு போக வேண்டியதில்லை ஏனண்டா தனது மகள் சமையலறையில கஸ்டப்படுவது அப்பாக்களுக்கு பிடிக்காது தானே :wink: :P

அப்பா இல்லையெண்டா அம்மா சொல்லுவா நாளைக்கு வேற வீட்டில :?: :?: போய் சமைக்கவேணுமல்லே இப்ப வந்து பழகுறதுதானே :(:( எண்டு சொல்லி எங்கட தலயில மிளகாய் அரைக்கிறதுதானே அம்மாக்களின் வேலை :x :D:D:D (அப்பிடித்தானே சகி :wink: :P )

சகி இப்ப வருவா கொஞ்சம் இருங்க வினித் அண்ணா :wink:

கி சொன்னது அப்பா வீட்டில இருந்தா சகி சமையலறைக்கு போக வேண்டியதில்லை ஏனண்டா தனது மகள் சமையலறையில கஸ்டப்படுவது அப்பாக்களுக்கு பிடிக்காது தானே :wink: :P

அப்பா இல்லையெண்டா அம்மா சொல்லுவா நாளைக்கு வேற வீட்டில :?: :?: போய் சமைக்கவேணுமல்லே இப்ப வந்து பழகுறதுதானே :(:( எண்டு சொல்லி எங்கட தலயில மிளகாய் அரைக்கிறதுதானே அம்மாக்களின் வேலை :x :D:D:D (அப்பிடித்தானே சகி :wink: :P )

ப்ரியசகியின் அப்பா மட்டும் இல்லை அண்ணாவும் வீட்டில் இருந்தா ப்ரியசகியி சமையல் அறைக்கு விட மாட்டார் எண்று நினைக்குறேன் அவருக்கு சுவையக சாப்பட ஆசை வரும் தானே :P :P

வினித் அண்ணா ஆஆஆஆஆஆஆ :oops: :x :x

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.