Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்படும் எந்த யோசனையையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை - இலங்கை அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்படும் எந்த யோசனையையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை - இலங்கை அரசு 
[Wednesday, 2013-02-27 08:26:01]
 
ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்படும் எந்த யோசனையையும் எதிர்ப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வில் இந்த அறிவிப்பை இலங்கை வெளியிட்டுள்ளது. இலங்கை தொடர்பில், அமரிக்க, உதவி ராஜாங்க செயலர் எஸ்தர் பிரிமர் நேற்று அமர்வின் போது வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே இலங்கை தமது அறிவிப்பை விடுத்துள்ளது.
 
இலங்கை தொடர்பில் மற்றும் ஒரு யோசனை முன்வைக்கப்பட்டு அதன் நடைமுறைப்படுத்தலை சர்வதேச சமூகம் கண்காணிக்கும் என்று அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் பிரிம்மர் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில், இலங்கையின் தரப்பில் கருத்துரைத்துள்ள, இலங்கையின் ஜெனீவாவுக்கான நிரந்தர அதிகாரி, பிரியங்கா விக்கிரமசிங்க, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, நல்லிணக்க நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும். அதனைவிடுத்து, பக்கசார்பான வகையில் நடந்துகொள்ளக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் இந்த நிலைப்பாட்டை முழு மனத்துடன் வரவேற்கின்றேன்  :D

இதற்கு முன்னர் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மற்றும் பல அமைச்சர்கள் வெளியிட்ட சிலதுகளைப் பாருங்கோ.

 

பீரீஸ் சொன்னார் தமக்கு கால அவகாசம் வேணுமாம்.

ரம்புக்வெல சொன்னார் அதுஒன்றும் பைபிள் இல்லை வரிக்கு வரி நடமுரைப்படுத்த் என்று

மகிந்த சமரசிங்க சொன்னார் தொண்ணூறு வீதமானது நிறைவு செய்தாயிர்றேன்று.

 

கொத்தா சொன்னார் இராணுவம் அகர்ரப்படாதேன்று 

 

 

இப்ப நடமுட்ரைப்ப்டடுத்தப் படமாட்டாதாம்..

 

 

 

இந்த வெளிநாட்டு ராசா தந்திரிமாருக்கு இதை யாராச்சும் சொல்லுங்கோ தயவுசெய்து...

 

 

தீர்மானங்கள் நிறைவேர்ரப்ப்டுவதாநால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை.

பொருளாதாரத்தடை தமிழருக்கு இந்த தீர்வும் தரப்போவதில்லை.

 

தமிழருக்கான தீர்வை இலங்கைக்கு வெளியே நிர்ணயிச்சு நடைமுறைப் படுத்தப் படவேண்டும் 

இதற்கு இலங்கை நிச்சயம் இணங்காது 

ஆகவே தனிநாடாக எங்களை அங்கிகரிக்கவேண்டும்.

 

 

அதுவரை உந்ததிர்மானங்கள் எல்லாம் ஒரு விறுவிறுப்பை கொடுக்குமே தவிர மாற்றத்தை கொண்டுவரப்போவதில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் இந்த நிலைப்பாட்டை முழு மனத்துடன் வரவேற்கின்றேன்

தொடரட்டும் தங்கள் பிடிவாதம்



மூஞ்சியில் அடித்தது   போல் நேரே  சொல்வீர்கள் என எதிர்பார்த்திருக்கின்றேன்

இந்தியாவின் அறிவுரையை மீறி அமெரிக்காவுடன் மல்லுக்கட்டுகிறது சிறிலங்கா

               

priyanka-wikiramasinge-unhrc.jpg

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான எத்தகைய தீர்மானம்

கொண்டு வரப்பட்டாலும், அதை எதிர்க்கப் போவதாக சிறிலங்கா அரசாங்கம்

அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின்

நேற்றைய கூட்டத்தில், அமெரிக்காவின் சார்பில் உரையாற்றிய அனைத்துலக

நிறுவனங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் எஸ்தர் பிரிம்மரின் கருத்துக்குப்

பதிலளித்துப் பேசும் போதே சிறிலங்கா பிரதிநிதி பிரியங்கா விக்கிரமசிங்க

இதனை தெரிவித்துள்ளார்.

“சிறிலங்காவுக்கு எதிராக மற்றொரு தீர்மானம் கொண்டு வரப்படும் என்ற அமெரிக்கப் பிரதிநிதியின் கருத்து ஆச்சரியமளிக்கிறது.

எந்தவொரு நீதியற்ற, பக்கச்சார்பான, கொள்கையற்ற, நியாயமற்ற அணுகுமுறையையும் சிறிலங்கா எதிர்க்கும்.” என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா கொண்டு வரும்

தீர்மானத்தை எதிர்க்க வேண்டாம் என்று இந்தியா ஆலோசனை கூறியிருந்த

நிலையிலும், சிறிலங்கா அதற்கு முரணான வகையில் தீர்மானத்தை தாம் எதிர்க்கப்

போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

http://naamthamilar.ca/?p=68529.html

  • கருத்துக்கள உறவுகள்

வர வேற்க்க வேண்டிய செய்தி......இப்படியான சிங்களத்தின் செய்தியை தினமும் எதிர் பாக்கிறோம்......அமெரிக்காவை எதிர்த்தவன் இந்த உலகில் நல்லா வாழ்ந்ததாய் சரித்திரம் இல்லை....

  • கருத்துக்கள உறவுகள்

 

 
தேசிய பிரச்சினையை சர்வதேசமயமாக்க வேண்டாம்: ஜெனீவாவில் மஹிந்த சமரசிங்க 

இலங்கையின் தேசிய பிரச்சினைகளை சர்வதேசமயமாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் எதிராக உள்ளது என மனித உரிமைகள் பேரவைக்கு, ஜனாதிபதியின் சிறப்புத்தூதுவரும் இலங்கை பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் ஆரம்பமாகியிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 22ஆவது பொது அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து, இன்று மாலை உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தனது உரையில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையின் உள்ளநாட்டு பிரச்சினைகளை சர்தேசமயப்படுத்துவதனால் நாட்டின் ஐக்கிய நிலை பாதிப்படையும். இதேவேளை ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானங்கள் தேவையற்ற ஒன்றாகும். மேலும் இவை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானது.

போருக்கு பின்னர் இலங்கையில் சிறப்பான முறையில் மனித உரிமை தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகளில் எஞ்சியிருக்கும் பயங்கரவாத சக்திகள் இலங்கையின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பொய் பிரசாரங்களையும் தந்திரோபாயங்களையும் மேற்கொண்டு வருகின்றன. இதனால் சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கை மீது அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இது வருந்ததக்க விடயமாகும். இதனால் இலங்கை பக்கசார்பான, சமநிலையற்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவில்லை என கூறுவது தவறான விடயமாகும். மேலும் செனல் 4 ஆவணப்படம் குறித்து புலனாய்வு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்ற. 75 வீதமான நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன. அதாவது 99 சதவீதமான நிலப்பகுதிகளில் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. 98 சதுர கிலோ மீட்டர் பகுதியே இன்னமும் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இந் நிலப்பரப்பும் மிகவிரைவில் சுத்தம் செய்யப்படும்.

இதேவேளை காணிகள் குறித்த பிரச்சினைகளின் தீர்வுக்காக காணி ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு வலயப் பிரதேசங்கள் குறைக்கப்பட்டு வருவதோடு இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட்டு வருகின்றது.

மக்கள் சுதந்திரமாக நடமாட கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3233

 

http://webtv.un.org/watch/sri-lanka-high-level-segment-6th-meeting-22nd-regular-session-human-rights-council/2193200170001/

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 
தேசிய பிரச்சினையை சர்வதேசமயமாக்க வேண்டாம்: ஜெனீவாவில் மஹிந்த சமரசிங்க 

இலங்கையின் தேசிய பிரச்சினைகளை சர்வதேசமயமாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் எதிராக உள்ளது என மனித உரிமைகள் பேரவைக்கு, ஜனாதிபதியின் சிறப்புத்தூதுவரும் இலங்கை பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் ஆரம்பமாகியிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 22ஆவது பொது அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் குறித்து, இன்று மாலை உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தனது உரையில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையின் உள்ளநாட்டு பிரச்சினைகளை சர்தேசமயப்படுத்துவதனால் நாட்டின் ஐக்கிய நிலை பாதிப்படையும். இதேவேளை ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானங்கள் தேவையற்ற ஒன்றாகும். மேலும் இவை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானது.

போருக்கு பின்னர் இலங்கையில் சிறப்பான முறையில் மனித உரிமை தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகளில் எஞ்சியிருக்கும் பயங்கரவாத சக்திகள் இலங்கையின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பொய் பிரசாரங்களையும் தந்திரோபாயங்களையும் மேற்கொண்டு வருகின்றன. இதனால் சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கை மீது அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இது வருந்ததக்க விடயமாகும். இதனால் இலங்கை பக்கசார்பான, சமநிலையற்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவில்லை என கூறுவது தவறான விடயமாகும். மேலும் செனல் 4 ஆவணப்படம் குறித்து புலனாய்வு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்ற. 75 வீதமான நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன. அதாவது 99 சதவீதமான நிலப்பகுதிகளில் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. 98 சதுர கிலோ மீட்டர் பகுதியே இன்னமும் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இந் நிலப்பரப்பும் மிகவிரைவில் சுத்தம் செய்யப்படும்.

இதேவேளை காணிகள் குறித்த பிரச்சினைகளின் தீர்வுக்காக காணி ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு வலயப் பிரதேசங்கள் குறைக்கப்பட்டு வருவதோடு இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட்டு வருகின்றது.

மக்கள் சுதந்திரமாக நடமாட கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3233

 

http://webtv.un.org/watch/sri-lanka-high-level-segment-6th-meeting-22nd-regular-session-human-rights-council/2193200170001/

சர்வதேசத்தின் உதவியுடன் தான் 'பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்தோம்" எண்டும் பேசினவை தானே இவை?!! உப்ப உது சர்வதேசப்பிரச்சனை இல்லையாமோ?!!!.....

மகிந்தாவை தலைவராக்கியதில் இது ஒரு நன்மை !

 

உள்ளதை அப்படியே கூறிவிடுவார்கள் அவரின் சகாக்கள் !!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.