Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜெனிவா பயணம்

Featured Replies

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினரடங்கிய குழுவினர் இன்று வியாழக்கிழமை இரவு ஜெனிவா பயணமாகவுள்ளனர்.

 

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் ஆகியோரே இன்று ஜெனிவா புறப்படவுள்ளனர்.

 

ஜெனிவா பயணம் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்துக் கூறுகையில்...


“இன்றைய சூழலில் தமிழ் மக்களின் துயர் துடைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே நாங்கள் ஜெனிவா பயணிக்கின்றோம். அங்கு உயர்மட்ட சந்திப்புகளையும் மேற்கொள்வதோடு எமது மக்களின் நிலைமையினையும் எடுத்துக்கூறவிருக்கிறோம்” என்றார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59742-2013-02-28-08-52-15.html#sthash.hSh37o2M.dpuf

  • தொடங்கியவர்

த.தே.கூ ஜெனீவாவில்

 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று ஜெனிவா நோக்கி பயணமாகவுள்ளது.


கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன், பி. அரியனேந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஸ்ரீதரன் ஆகிய ஐவர் அடங்கிய குழு நாளை செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெனிவாவில் இடம்பெற்று வரும் 22வது மனித உரிமைகள் மாநாட்டு இடம்பெற்று வரும் நிலையில் கூட்டமைப்பு ஜெனிவா செல்வது குறிப்பிடத்தக்கது.

 

ஏற்கனவே இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் பிரித்தானியா சென்றுள்ள நிலையில் இவர்கள் அங்கிருந்து ஜெனிவா பயணமாவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

http://www.hirunews.lk/tamil/54281

ஏற்கனவே இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் பிரித்தானியா சென்றுள்ள நிலையில் இவர்கள் அங்கிருந்து ஜெனிவா பயணமாவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

இலங்கையிலேயே சொல்லி போட்டு வர பயந்தாரா அல்லது தமிழ் மக்களின் ஏகோபித்த விருப்பத்திற்கு தலை சாய்த்தாக வேண்டும் என்று மனத்தை மாற்றினாரா?

 

கூட்டமைப்பு ஈழத்தமிழரின் தாயக பிரதிநிதி. சம்பந்தர் அதன் தலைவர். எதுவானாலும் சம்பந்தர் ஜெனிவாவில் பிரசாரம் செய்வதுதான் ஈழத்தமிழர் இலங்கை மீது இனவழிப்பு, போர்குற்ற சாட்டுதல்களை வைக்கிறார்கள் என்பதின் அடையாள சின்னம்.

  • தொடங்கியவர்

இவர்கள் மீண்டும் நாட்டிற்கு செல்லும்பொழுது நாலாம் மாடிக்கு அழைத்தால்

- சிங்களம் கடும் போக்கிலேயே உள்ளது என உணரலாம்

- பேசாமல் விட்டு ஆனால் கொலையும் செய்யலாம்

 

சர்வதேசத்திற்கு பயந்தால் மட்டுமே இவர்கள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் விடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து இராஜதந்திரிகளுடனும் நெருக்கமான உறவுகளை தமிழர் தரப்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.சிங்களவர்களிடம் தமிழர்கள் அடித்தோ இல்லை பேசியோ உரிமைகளை பெறமுடியாது என்பது கடந்த 60 வருடத்தில் நிறுவப்பட்டுள்ளது.இறுதி வழி சர்வதேசத்தின் துணையுடன் ஏதாவது கிடைக்குமா என முயற்சிப்பது மட்டுமே எஞ்சிய வழி.

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து இராஜதந்திரிகளுடனும் நெருக்கமான உறவுகளை தமிழர் தரப்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.சிங்களவர்களிடம் தமிழர்கள் அடித்தோ இல்லை பேசியோ உரிமைகளை பெறமுடியாது என்பது கடந்த 60 வருடத்தில் நிறுவப்பட்டுள்ளது.இறுதி வழி சர்வதேசத்தின் துணையுடன் ஏதாவது கிடைக்குமா என முயற்சிப்பது மட்டுமே எஞ்சிய வழி.

 

இவர்கள் வந்து இராஜதந்திரிகளுடனும் நெருக்கமான உறவுகளை தமிழர் தரப்பு ஏற்படுத்திக்கொண்டால் நல்லது.

மாறாக ஒருவர் மீது ஒருவர் தமிழர் தரப்பே சேறு வாரும் வேலையைச்செய்யாமலிருக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் போவது, நல்லது என்பதே எனது கருத்தாகும்!

 

சுயமாக முடிவெடுக்கக் கூடிய தலமையொன்றே, தமிழினத்தின் நீண்ட காலத் தேவையாகும்!

 

வெறும், இந்திய நிகழ்ச்சி நிரலுக்கேற்ப, ஆடுபவர்களால் நாம் அடைந்த துன்பங்கள் போதும்! :wub:  

 

இவர்களின் வருங்காலத்தை, இவர்களின் நடவடிக்கைகளை வைத்து, மக்களே தீர்மானிக்கட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவா சென்றுள்ள கூட்டமைப்பின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சம்பிக்கரணவக்க

 

images-1-150x128.jpgஇலங்கைக்கு எதிராக துரோகமிழைக்கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜெனீவா சென்றுள்ளனர். இவர்களுக்கு எதிராக அரசியலமைப்பின் 157 ஆவது பிரிவின் பிரகாரம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

தமிழ் மக்களை மென்மேலும் அழிவை நோக்கி பின்தள்ளும் செயற்பாடுகளையே சம்பந்தன் குழுவினர் தொடர்ந்தும் மேற்கொள்கின்றனர். இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் மண்டியிட்டு பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியுமென கூட்டமைப்பு நம்புவது வேடிக்கையானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 

http://plote.co.uk/?p=5386

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.