Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலை புலிகள் என்று சொல்லி உள்ளே தள்ளிடுவோம்-மாணவர்களை மிரட்டிய காவல்துறை.

Featured Replies

விடுதலை புலிகள் என்று சொல்லி உள்ளே தள்ளிடுவோம்-மாணவர்களை மிரட்டிய காவல்துறை.

'இலங்கையில்
நடந்தது இன படுகொலையே....ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்
சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணை வேண்டும்' என்ற கோரிக்கையோடு சேலம் அரசு
கலை கல்லூரி மாணவர்கள் காலையிலேயே வகுப்பு புறக்கணிப்பு செய்து உள்ளிரிப்பு
போராட்டத்தை தொடங்கினர்.

 ஆனால் கல்லூரி முதல்வர் ராஜாமணி 'எவனோ
எங்கயோ செத்தான்னா இங்க எதுக்கு போராடுறீங்க 'என  இதற்கு எதிர்ப்பு
தெரிவித்தார். ஆனால் மாணவர்களோ 'இது எங்கள் உணர்வு நாங்கள் மானமும் ஈரமும்
வீரமும் உள்ள தமிழச்சிக்கு பிறந்தோம்.   அதனால் இந்த போராட்டம்
செய்கிறோம்.  மானம் உள்ளவர்கள் இந்த போராட்டத்தை ஆதரிப்பார்கள்' என பதிலடி
தந்து  கல்லூரி உள்ளேயே பாய் படுக்கை எடுத்து வந்து போராட்டத்தை
தொடர்ந்தனர்.

இதனால் கோபமான முதல்வர் காவல்துறைக்கு பேசி அவர்களை
வரவழைத்தார். மாணவர்களில் ஒரு பிரிவினர் தொடர் காலைவரையற்ற
உண்ணாவிரதத்திற்கு தயாராகினர். மாலை ஆக ஆக அங்கே குவிந்த காவல்துறை
மாணவர்களை மிரட்ட ஆரம்பித்தது.

கல்லூரி முதல்வர் அனைத்து
மாணவர்களின் பெயர்களையும்,ரோல் நம்பரையும் எழுதி வாங்கிகொண்டு உங்களை
எல்லாம் கல்லூரியை விட்டே டிஸ்மிஸ் செய்ய போகிறேன் என மிரட்டி வந்தார்.

 

நடந்தவைகளை மாணவர்கள் சார்பாக விவரிக்கின்றனர் மாணவர்கள் வினோத் மற்றும் வேல்முருகன்...
'நீங்க
படிக்க வந்துருக்கிங்களா இல்லை இப்படி தண்ட சோறு மாதிரி போராட வந்தீங்களா?
எங்கயோ எவனோ செத்தா உங்களுக்கு இங்க போராட்டம் உங்க எல்லா போரையும்
கொடுங்க டிஸ்மிஸ் செய்றேன் என கல்லூரி முதல்வர்
மிரட்டினாரு....உளவுப்பிரிவோ காலையில் இருந்து 'நீங்க போராடினீங்கண்ணா
உங்களை விடுதலை புலிகள்னு உள்ள தள்ளிடுவோம் உங்க எதிர்காலமே போயிடும் அரசு
வேலை கிடைக்காது காலத்துக்கும் கோர்ட்டுக்கும் போலிஸ் ச்டேசனுக்கும் நடையா
நடந்துகிட்டே இருக்கணும் 'னு பயமுறுத்தி வந்தாங்க...காவல்துறையோ 'உங்க
எல்லோரையும் தூக்கி உள்ள போட்டுடுவோம் சிறையில கலி திங்கணும்னு
மிரட்டினாங்க இதுல தான் எங்கள் உள்ளிருப்பு போராட்டம் கொஞ்சம் தொய்வு
அடைந்தது ஆனாலும் மாலை வரை நடத்திட்டோம்.

 
நாங்க தமிழர்கள்
எங்களுக்குள் ஈரம் இருக்கு. அதைவிட வீரம் இருக்கு...அங்கே லயோலா கல்லூரி
மாணவர்களை கைது செய்தது காவல்துறை.  இன்று தமிழகமே மாணவ போராட்டங்களாய்
கொந்தளித்து கொண்டுள்ளது.

இந்த காவல்துறை அராஜகம் ஒழிய வேண்டும்.
எங்களை டிஸ்மிஸ் செய்வதா மிரட்டுறார் முதல்வர் நாங்கள் எதற்கும் அஞ்ச
மாட்டோம் எங்கள் உணர்வை காட்டுவோம். நாளையில் இருந்து உண்ணாவிரதம் இருக்க
உள்ளோம்' என்றனர் உணர்வோடு.

தமிழகம் முழுக்க நடக்கும் மாணவர்கள் போராட்டங்களில் சேலமும் இனைந்து கொண்டது.

- இளங்கோவன்

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13303:viduthalaipulikal-selam&catid=5:business-general&Itemid=101

இதற்கு பின்னாலும் நிச்சயமாக கருணாநிதியும், சுபவீரபாண்டியனும், வீரமணியும், திருமாவளவனும்தான் இருக்க வேண்டும். எல்லாமே டெசோவின் சதி

புலம் பெயர் புலிகளின் உசுப்பேத்தல் போலிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இனி இதை பூன்ஜாண்டியை வைத்து கொஞ்சப் பொலிசுக்காரர் லஞ்சம் வாங்கி பிழைப்பு நடத்தப் போகினம்.  :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்கு பின்னாலும் நிச்சயமாக கருணாநிதியும், சுபவீரபாண்டியனும், வீரமணியும், திருமாவளவனும்தான் இருக்க வேண்டும். எல்லாமே டெசோவின் சதி

 

பிணங்களின் மேலே வீழுகின்ற கற்களை ஏன் சபிக்க வேண்டும்? "ஒரு வேளை அவை பிணங்கள்  அல்ல என்பதற்கு" இந்த முறையீடு ஒரு வேண்டுதலா?

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு பின்னாலும் நிச்சயமாக கருணாநிதியும், சுபவீரபாண்டியனும், வீரமணியும், திருமாவளவனும்தான் இருக்க வேண்டும். எல்லாமே டெசோவின் சதி

 

உண்மையை ஒத்துக்கொள்கின்றீர்கள், டெசோ சதிக்காகவே அமைக்கப்பட்டதென்று. இதை உங்கள் திருவாயல் மலரத் தேவையில்லை

  • தொடங்கியவர்

மாணவர்கள் போராட்டத்தை சிதறடிக்க திமுக முழுமையாக செயற்படுகிறது.


இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும்
தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் நிறுத்தி சில
கல்லுரி மாணவர்கள் போராடுகிறார்கள்.

டெசோ அமைப்பினர் இப் போராட்டத்தின் பின் இருந்து நடத்துகிறார்கள்.

மாணவர்கள் கட்சி , மாதம் , ஜாதி கடந்து மாணவர்களாக போராடுவோம் .

எமது கோரிக்கை இதுவே

1. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நா. சபையில் அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றாதே

2. இலங்கையில் நடைபெற்றது வெறும்போர்குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை.


3. சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு.
சர்வதேசவிசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான
தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும்

4. சிங்களஇனவெறிஅரசின்துணைத்தூதரகத்தை
தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற தீா்மானம் கொண்டுவரவேண்டும். மேலும்
இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும்.

5. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்

6. உலகத்தமிழா்களின்பாதுகாப்பைஉறுதிச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும்.

7. ஆசியநாடுகள் எதுவும் சா்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது.

8. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

9. ஈழத் தமிழா் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம்.

 

 

https://www.facebook.com/tamilnaduhungerstrike

"5. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்."

 

இதுதான் கருணாநிதியிக்கு வலிக்கும் இடம். "எப்படி  எப்படி மாணவர்கள் ஜெயலலிதா பெயர் எடுக்கப் போராடலாம். ஏன் நான் பேர் எடுக்க போராடக்கூடாது?"

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதாரத் தடைக்குப் போராடமாட்டார் என நினைக்கிறேன்.. அங்கே உள்ள ஒரு கையடக்கத் தொலைபேசி நிறுவனத்தில் சன் குழுமத்துக்குப் பங்குண்டு என நினைக்கிறேன்..!

577224_10200709620681167_2015779696_n.jp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.