Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

நாளை விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளகுறிச்சி இல் போராட்டத்தில் கலந்துகொள்வதாக முகநூலில் ஒரு தமிழக உறவு குறிப்பிட்டிருந்தார். :rolleyes:

  • Replies 1.3k
  • Views 119.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

  • கருத்துக்கள உறவுகள்

Indian F.M P. Chidambaram hinted on a possible vote against S.L at a session

of the U.N H.R. Council (UNHRC) later this month. This is after DMK

Chief M.K warned of pulling out his ministers from the cabinet over

Lankan issue." I am confident that if phrases in the UN resolution

sought credible independent international probe, India would support

it". Mr. Chidambaram said. Indian Govt. is also concerned over the

students protests in T.N.

 

இந்தச் செய்தி உண்மையா?

மாணவர்கள் நடாத்திய போராட்டம் மெதுவாக... பொது மக்கள் மத்தியிலும் ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சியை தருகின்றது. மெல்லெனப் பாயும் நீர், கல்லையும் கிழித்துப் பாயட்டும்.

மே 17 இயக்கமும் மெரீனாவில் ஒரு போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது. இது அது தானோ தெரியவில்லை. அவர்கள் வழமையாக மக்களை ஒன்று சேர்த்து போராட்டம் நடத்துபவர்கள். :)

 

எப்படியாயினும் மாணவர்களுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்கள் வரவேற்கத்தக்கது. :rolleyes::)

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

உணர்வை வெளிப்படுத்திய கடலூரைச் சேர்ந்த பெண் மீன் வியாபாரிகள்...
 

ராஜபக்சவுக்கு எதிராக கரறுப்பு பட்டியுடன் மீன் வியாபாரம்

 

Tamil%20nadu%20Fishing_CI.jpg

 File Photo

கடலூரைச் சேர்ந்த பெண் மீன் வியாபாரிகள், இலங்கை  ஜனாதிபதி ராஜபக்சவுக்குக் கண்டனம் தெரிவித்து கரறுப்பு பட்டியை தங்களது ஜாக்கெட்டில் அணிந்து கொண்டு வியாபாரம் செய்தது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. 

ராஜபக்சவுக்கு எதிராகவும், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. 

மாணவர்களே  இந்தப் போராட்டத்தை உணர்வெழுச்சியுடன் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடலூரில் பெண் மீன் வியாபாரிகளும் கரறுப்பு பட்டி அணிந்து தங்களது உணர்வை வெளிப்படுத்தினர். 

கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டு கொல்வதை கண்டித்தும், இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை போர் குற்றவாளியாக அறிவித்து தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடலூர் மீன் சந்தையில் மீன் விற்கும் பெண்கள் இன்று கரறுப்பு பட்டி அணிந்து மீன்விற்றனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட மீன் விற்கும் பெண்கள் இலங்கை அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கரறுப்பு பட்டி அணிந்து இருந்தனர். இதை அனைவரும் பார்த்து நெகிழ்ந்தனர்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/89741/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் போல இருக்கு.. சிதம்பரம் இப்படித்தான் சொல்லியிருக்கிறார்.. ஆனால் நாடகமோ தெரியாது..

 

http://www.ndtv.com/video/player/news/fromndtv/268730

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

6-வது நாளாக தொடரும் உண்ணாவிரதம் திருச்சியில் ஒருவர் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனை அனுமதி

 

v-thiruchchi6naall%20%281%29.jpg

photo.gifvideo123.gifதொடர்ந்து 6 நாட்களாக தொடர் உண்ணாநிலை போராட்டம் இருந்து வரும் திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்களில் முகமது ஜெப்ரி என்ற மாணவர் இப்பொழுது கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார்.

மருத்துவமனையிலும் அவர் தனது உண்ணாநிலையை தொடர்ந்து வருகிறார். 

சமூக ஆர்வலர்களும்,தமிழ் உணர்வாளர்களும் எவ்வளவோ கோரிக்கை விடுத்தும் அவர் தனது நிலையில் உறுதியாக உள்ளார். 

v-thiruchchi6naall%20%282%29.jpgv-thiruchchi6naall%20%283%29.jpg

 

 

 

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19610:6------------&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  • கருத்துக்கள உறவுகள்

மே 17 இயக்கமும் மெரீனாவில் ஒரு போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது. இது அது தானோ தெரியவில்லை. அவர்கள் வழமையாக மக்களை ஒன்று சேர்த்து போராட்டம் நடத்துபவர்கள். :)

 

எப்படியாயினும் மாணவர்களுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்கள் வரவேற்கத்தக்கது. :rolleyes::)

 

நேற்று இரவு மெரினாவில்... உண்ணாவிரதம் இருந்த‌ சட்டக் கல்லூரி மாண‌வர்களை கைது செய்த காவல் துறைக்கு, இன்று பொதுமக்கள் செய்யும் போராட்டத்தைப் பார்க்க... அதிர்ச்சியாக இருக்கும். மே 17 இயக்கத்தின் போராட்டம் இது என நான் எண்ணுகின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிராக ஆந்திரவாழ் தமிழர்கள் போராட்டம்

 

aarppaaddamm.jpg

இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை ஆதரித்து, ஆந்திர வாழ் தமிழர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐதராபாத்தின் மாதாபூரில் உள்ள ஹைடெக் சிட்டி என்ற இடத்தில், இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை, பிற மாநில மக்களும் அறிந்து கொள்ளும் வகையில், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் துண்டுப்பிரசுரங்களை அச்சடித்தும் விநியோகித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளர்.

 

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19613:2013-03-17-13-12-34&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இரவு மெரினாவில்... உண்ணாவிரதம் இருந்த‌ சட்டக் கல்லூரி மாண‌வர்களை கைது செய்த காவல் துறைக்கு, இன்று பொதுமக்கள் செய்யும் போராட்டத்தைப் பார்க்க... அதிர்ச்சியாக இருக்கும். மே 17 இயக்கத்தின் போராட்டம் இது என நான் எண்ணுகின்றேன்.

இந்த மாணவர் போராட்டம் பெரிய எரிமைலையாக வெடிக்கப் போக்குது சிறி அண்ணா....ஜந்து பத்து மாணவர் என்றால் கைது செய்து பயப்பிடுத்தாலாம் மானம் கெட்ட காவல்துறையால்...11 மாணவர் போராட்டமாய் ஆரம்பிச்சு இப்ப முழு தமிழ் நாட்டு மாணவர்  போராட்டமாய் மாரி போச்சு......இதுக்கு தமிழ் நாட்டு அரசும் மத்திய அரசும் நல்ல பதிலை சொல்லி ஆக்கனும் இல்லாட்டி பின் விளைவு அதிகமாய் இருக்கும்..இன்று மாணவர்கள் குடுத்த பேட்டியை பார்த்தால் தெரியும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நாட்கள் தொடர்ந்த எங்கள் உண்ணாவிரத போராட்டத்தின் அடுத்த கட்டமாய்
நாளை (அன்னூர் சசூரி பொறியியல்) கல்லூரியில் வகுப்பு புறக்கணிப்பு போறாட்டம்.
சாலை மறியல் மற்றும் மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்

தனித்தமிழ் ஈழம் வெல்லும் வரை குறையப் போவதில்லை எங்கள் தனல்

பொறியியல் மாணவர்கள் என்பதாலோ ஊடங்களால் மறைக்கப்டுகிறோம் நாங்கள் உதவி தேவை

 

- முகநூல்: Loyolahungerstrike -

 

  • கருத்துக்கள உறவுகள்

திருச்சி - தஞ்சை சாலையில் உள்ள துவாக்குடியில் பொது மக்கள் சார்பாக "தனி தமிழீழத்திற்கான சுதந்திர பொது வாக்கெடுப்பு கோரி" மாபெரும் பேரணி நடைபெற்றது.

தங்கள் வீட்டு பிள்ளைகளான மாணவர்களின் போராட்டத்தை அரசு நசுக்க முயற்ச்சிப்பதால் மாணவர்களுக்கு ஆதரவாக கட்சி சார்பற்று தாங்களும் களத்தில் இறங்குவதாக பொது மக்கள் குறிப்பிட்டனர்.

 

cinnnnnnnnnna.jpg

 
fb
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாணவர் போராட்டம் பெரிய எரிமைலையாக வெடிக்கப் போக்குது சிறி அண்ணா....ஜந்து பத்து மாணவர் என்றால் கைது செய்து பயப்பிடுத்தாலாம் மானம் கெட்ட காவல்துறையால்...11 மாணவர் போராட்டமாய் ஆரம்பிச்சு இப்ப முழு தமிழ் நாட்டு மாணவர்  போராட்டமாய் மாரி போச்சு......இதுக்கு தமிழ் நாட்டு அரசும் மத்திய அரசும் நல்ல பதிலை சொல்லி ஆக்கனும் இல்லாட்டி பின் விளைவு அதிகமாய் இருக்கும்..இன்று மாணவர்கள் குடுத்த பேட்டியை பார்த்தால் தெரியும்.....

 

பையன், நாளை ஆளுநர் மாளிகையை... முற்றுக்கை இடும் போராட்டத்தை... முன் எடுக்கப் போவதாக, மாணவர்கள் அறிவித்துள்ளார்கள்.

ஏதாவது பெரிய மாற்றம் ஏற்படலாம்... மாணவர்கள், அவதானமாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

manamanakkuthu.jpg
 
உங்கள் இனம் உங்களையே நம்பியிருக்கிறது மாணவத் தோழர்களே!

உங்களிடமே மாற்றங்களின் திறவுகோல். அதனைச் சரியாகப் பயன்படுத்துங்கள்.

தமிழீழ மக்களுக்காக, நீதி கோரி, தமிழகத்தில் லயோலாக் கல்லூரி மாணவர்கள், ஏந்திய தீப்பந்தம், இன்று, மாநிலம் தழுவிய ரீதியில், பற்றிப் படர்ந்து, கோபாவேசத் தீயாக தகித்துக்கொண்டிருக்கின்றது.

சிங்கள ஆட்சியாளர்களை அது அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளதுடன், சிங்களத்தின் நண்பர்களுக்கு அது பயத்தையும் பீதியையும், நின்மதியற்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

போலி அரசியல் போராட்டக்காரர்களுக்கு அது எச்சரிக்கை மணியையும் அடித்துள்ளது.

கட்சி அரசியல், சமூக இயக்கங்கள் என்ற எல்லைகள் கடந்து, ஒரு போர்ச் சக்தியாக, மாநிலம் முழுதும், தன் பலத்தை மாணவர் சமூகம் வெளிக்காட்டி நிற்கின்றது.

எந்தச் சுயநலங்களும் ஒட்டிக்கொள்ளவில்லை. லாபநோக்கங்கள், குறுகிய எண்ணங்கள் எதுவும் இந்தப் புனிதப் போராட்டத்தில் எட்டிப்பார்க்கவில்லை. அர்ப்பணிப்பு எண்ணம் கொண்ட, போராளிகளாக மாணவ சமூகம் கனன்றுகொண்டிருக்கின்றது.

தமிழீழ மக்கள், அனுபவித்த அனுபவித்துக்கொண்டிருக்கின்ற கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல, பல தசாப்தகாலமாகத் தொடரும், சிங்கள இனவெறி அரசின் அடக்குமுறைக்கும், இனஅழிப்புக் கொடுமைக்கும் முகம்கொடுத்தபடி, குரல்வற்றிக் கிடக்கிறது தமிழீழம். இந்திய அரசின் சிங்கள அரசு சார்ந்த நகர்வுகளும், சர்வதேச சமூகத்தின் அலட்சியமும், சின்னஞ்சிறிய தேசத்து மக்களை, சிதைத்துச் சின்னாபின்னமாக்கிவிட்டுள்ளது.

சாட்சிகளற்று, நடந்துகொண்டிருக்கின்ற இனஅழிப்புக் கொடூரத்தின், சிற்சில சாட்சிகள், காட்சிகள் வடிவத்தில் தற்போது வெளிவந்திருப்பதால், இப்படியும் ஒரு கொடுமையா என உலகத்தை உறையவைத்திருக்கின்றது.

இவற்றைவிட மோசமான, பதறவைக்கும் கொடூரங்களை, தமிழீழ மக்கள் அனுபவித்தாயிற்று. சிங்களக் கொடுங்கோல் ஆட்சியாளர்களின் கோரமுகம் இதனைவிடப் பயங்கரமானது.

காட்டுமிராண்டிகளின் ஆட்சி நடக்கும் பூமியில், ஆதரிப்பார் யாருமற்றி மருவித் துடிக்கிறது தமிழ் இனம்.

தமிழீழ மக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கை தமிழகம்.

தமிழகத்தில் ஏற்படுகின்ற மாற்றம், அங்கு கிளர்ந்தெழுகின்ற அப்பழுக்கற்ற, சுயநலமற்ற இனமானப் போராட்டமே அவர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை விழுதைப் பற்றிப் பிடித்தே, தமிழீழமும் தமிழும் நாளை நிமிர்ந்தெழும். சிங்கள எதிரியாலும், அதன் தோழமைச் சக்திகளாலும் கூட்டாக அடித்து வீழ்த்தப்பட்ட தமிழீழ மண்ணிற்கு தெம்பூட்டவேண்டியது தமிழகமே.

அதனை தமிழகம் செய்யும் என்று, உறுதியாக நம்புகின்றோம். அவற்றின் வெளிப்பாடுகளாக, அண்மைய நகர்வுகள், தமிழீழ மக்களிடையே நம்பிக்கையை விதைத்திருக்கின்றன.

தமிழீழ மக்களின் நிலைகுறித்து, சர்வதேச சமூகம் காலம் தாழ்த்தியேனும் சற்று அக்கறை காட்ட ஆரம்பித்திருக்கும் இத்தருணத்தில், நீதியின்பக்கம் நகரமறுக்கும் இந்திய அரசை அசைத்து வழிக்குக் கொண்டுவர, தம்மை வருத்தும் தமிழக மாணவர்கள், தமிழீழ மக்களின் நன்றிக்குரியவர்கள்.

அக்கினிக் குஞ்சுகள் போல், தீமையைச் சுட்டெரிக்கக் கிளம்பியிருக்கும், தமிழக மாணவர்கள் போராட்டம் வெல்ல பிரான்ஸ் தமிழர் நடுவம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

தமிழீழ மக்களின் நீதியான நிம்மதியான வாழ்வுக்கு, தனித்தமிழீழமே தீர்வு.

அதற்காக, அனைத்துலகத்தின் ஆதரவுடன் தமிழ்மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.

இலங்கைத்தீவில் நடைபெற்றதும் நடைபெற்றுக்கொண்டிருப்பதும் இனப்படுகொலையே.

போர்க்குற்றங்களையும், இனப்படுகொலையையும் விசாரிக்க அனைத்துலக சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

தமிழகத்தில் முரசறையப்பட்டிருக்கும் இந்த மாணவ முழக்கம், உலகமெல்லாம் வாழும் தமிழ்மக்களினது தேசிய முழக்கமாக மாறட்டும்.

தமிழால் இணைவோம். தமிழராய் வெல்வோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

தமிழர் நடுவம்- பிரான்ஸ்.

கோவை தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் படிக்கும் என் மகனை அவன் கல்லூரிக்கு விடுமுறை போட்டுவிட்டு போராட்டம் நடத்தும் மற்ற கல்லூரி மாணவர்களுடன் கலந்து போராடச்சொல்லியுள்ளேன்....

இன்று மாணவியாக போராட்டதில் என்னால் கலந்து கொள்ள முடியாத ஆதங்கத்தை என் மகன் மூலம் செய்வேன்.... - Kani Oviya

 

- முகநூல் -

 

பி.கு: இது தனியே மாணவர்களுக்காக போராட்டம் இல்லை. நீங்கள் மாணவியாக இல்லாவிட்டாலும் ஒரு பெற்றோராக கலந்து கொள்ளலாம். அதே போல் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொள்ளலாம். :rolleyes:   மாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாக மாற வேண்டும். :rolleyes:

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

883478_495281257203783_2141859495_o.jpg

  • கருத்துக்கள உறவுகள்
tamileelammmmmmmmm.jpg

1987இல் திலீபன் சொன்ன மாதிரி இதை ஒரு மக்கள் புரட்சியாக மாற்ற வேண்டும்,தாயகத்தில் மக்களால் ஒட்டுக் குழுவையும், இராணுவத்தையும் மீறி போராட முடியாது, புலம் பெயர் நாடுகளில் போராடலாம் ஆனால் அந்த நாட்டு அரச கொள்கைகளில் மாற்ரம் ஏற்படுத்த முடியாது.போராட சுதந்திரமும் அதை நிறுவ அரசியல் பலமும் கொண்டவ்ர்கள் தமிழக மக்கள் மட்டுமே, இந்த போராட்டத்தின் முடிவு ஆனது சுதந்திர தமிழ் ஈழம் அல்லது தனித் தமிழ் நாடு என்ற நிலைக்கு வருமானால் பல மாற்றங்கள் வ்ரும் என் நினைகிறேன்

1987இல் திலீபன் சொன்ன மாதிரி இதை ஒரு மக்கள் புரட்சியாக மாற்ற வேண்டும்,தாயகத்தில் மக்களால் ஒட்டுக் குழுவையும், இராணுவத்தையும் மீறி போராட முடியாது, புலம் பெயர் நாடுகளில் போராடலாம் ஆனால் அந்த நாட்டு அரச கொள்கைகளில் மாற்ரம் ஏற்படுத்த முடியாது.போராட சுதந்திரமும் அதை நிறுவ அரசியல் பலமும் கொண்டவ்ர்கள் தமிழக மக்கள் மட்டுமே, இந்த போராட்டத்தின் முடிவு ஆனது சுதந்திர தமிழ் ஈழம் அல்லது தனித் தமிழ் நாடு என்ற நிலைக்கு வருமானால் பல மாற்றங்கள் வ்ரும் என் நினைகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=WPfVChRa5F8

 

கர்நாடகம், பெங்களூரைச் சேர்ந்த மாணவர்கள்... தமிழ்நாட்டு மாணவர்களுக்கு.... ஆதரவாக நடத்தும் போராட்டம்.

ஆந்திரா, கர்நாடக மாணவர்களும் ஆதரவு கொடுத்துள்ள நிலையில்.... மலையாளம் மௌனமாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சியும் பெங்களூரில் போராட்டத்தில் இருப்பார்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சியும் பெங்களூரில் போராட்டத்தில் இருப்பார்..! :D

 

யாழ் களத்திற்காக, புரட்சி பெங்களூரிலிருந்து நேரடிச் செய்திகளை வழங்கும்படி... கேட்டுக் கொள்கின்றோம். :D

ஒரு சில பொறியியல் கல்லூரிகளுக்கு விரைவில் தேர்வுகள் ஆரம்பிக்க போகும் நிலையிலேயும் போராட்டத்தின் வீரியம் குறையாமல் நடத்தும் மாணவர்களுக்கு நன்றிகள் !

திருச்சி - தஞ்சை சாலையில் உள்ள துவாக்குடியில் பொது மக்கள் சார்பாக "தனி தமிழீழத்திற்கான சுதந்திர பொது வாக்கெடுப்பு கோரி" மாபெரும் பேரணி நடைபெற்றது.

தங்கள் வீட்டு பிள்ளைகளான மாணவர்களின் போராட்டத்தை அரசு நசுக்க முயற்ச்சிப்பதால் மாணவர்களுக்கு ஆதரவாக கட்சி சார்பற்று தாங்களும் களத்தில் இறங்குவதாக பொது மக்கள் குறிப்பிட்டனர்.

 

479990_594820423863320_1033794558_n.jpg

 

- முகநூல்  -

Edited by துளசி

தென்காசியில் (18.03.2013 நாளை) மாணவர்கள் போராட்டம்

 

தொடர்புக்கு :-

முத்துக்குமார் 9790422721,

சார்லஸ் 9750332052

 

(முகநூல்)
 



மாணவர்க்கு ஒரு அறிவிப்பு


இனத்திற்கு பாடுபட்டு சிறை யில் இருந்தவர்கள் காந்தி ஜி, நெல்சல் மண்டேலா, லெனின்,ஸ்டாலின், பிடல் காஸ்டால்,மவே. எனவே மாணவர்களை காவல் துறை கைது செய்தால் அது இனத்திற்கு பாடுபட்ட ஒரு விருது இதனால் மாணவர்கள் பயம் வேண்டாம்.
போராட்ட களத்தில் இருக்கும் ஒவ்வொரு மாணவ-மாணவியும் புரட்சியாளர் தான். தமிழ் இனத்தலைவன் "பிரபாகரன்" மட்டும் தான்...

 

- முகநூல் -

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

Software Engineers have announced a large-scale protest on March 20th, around 4pm in front of Tidel Park (near Taramani, Chennai),

calling for a referendum on Independent state of Tamil Eelam

 

 

 

 

301693_557402737625815_66059727_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.