Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் மத்திய அமைச்சரவையில் நீடிப்பதில் அர்த்தமில்லை.... - திமுக தலைவர் கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைச்செய்தி:

இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் மத்திய அமைச்சரவையில் நீடிப்பதில் அர்த்தமில்லை....

- திமுக தலைவர் கருணாநிதி
Puthiyathalaimurai

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் இந்தியா திருத்தம் கொண்டு வர வேண்டும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார். இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற திருத்தத்தை இந்தியா கொண்டுவர வேண்டும் என்றும், தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், மத்திய அரசில் நீடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்

Dinamalar

  • கருத்துக்கள உறவுகள்

karunanithy-6501010-vikadan-001.jpg

சர்வதேச விசாரணை இல்லாவிட்டால் மத்திய அரசில் தொடரமாட்டோம்' - கருணாநிதி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 மார்ச், 2013 - 16:48 ஜிஎம்டி

 

 

ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால்

கொண்டுவரப்படும் தீர்மானத்தில் இலங்கை படுகொலைகள் குறித்து சர்வதேச விசாரணை

ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையை இணைக்க இந்தியா உரிய

நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய மத்திய

அரசில் தொடராது என்று அதன் தலைவரான மு. கருணாநிதி அவர்கள்

எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர்,

அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானங்கள் குறித்து பல கருத்துக்கள்

பரப்பப்படும் சூழலில், அந்தத் தீர்மானத்தில் இலங்கையில் அண்மைக் காலத்தில்

நடைபெற்ற இனப் படுகொலை குறித்தும், அந்தப் படுகொலைக்குக் காரணமான போர்க்

குற்றவாளிகளை அடையாளம் காட்டுவது குறித்தும், அப்படி அடையாளம்

காட்டப்படுபவர்கள் மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தி குறிப்பிட்ட

காலவரையறைக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற திருத்தத்தை

அமெரிக்க அரசின் தீர்மானத்தில் சேர்ப்பதற்கான முயற்சியினை எந்த

அய்யப்பாட்டிற்கும் இடம் கொடுக்காத வகையில் இந்திய அரசு மேற்கொள்ள

வேண்டுமென்று தி.மு.க. வின் சார்பில் வலியுறுத்துவதாகக் கூறுகிறார்.

அத்தகைய கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில்

திமுக இந்திய அரசின் அமைச்சரவையிலே இனி மேலும் நீடிப்பதென்பது

அர்த்தமற்றதாகி விடும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்வதாகவும்

கருணாநிதி மேலும் கூறுகிறார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/03/130315_dmkstand.shtml

திமுக அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து வெளியேறலாம். அதனால் அரசுக்கு ஆபத்து ஒன்றுமில்லை.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் சோனியா காங்கிரசு அரசிற்கு எதிராக வாக்களித்து அரசை

வீழ்த்துவார்களா என்பதே முக்கியம். இவர்கள் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே அரசை ஆதரித்து வாக்களிக்கலாம்.

மோசமான பித்தலாட்டக்காரர்கள் இவர்கள்! எனவே பொறுத்திருந்து இவர்களின் செயற்பாட்டைப் பார்த்தபின்பே

முடிவு எடுக்கலாம்.

 

Sri Lanka issue: DMK threatens to pull out of Manmohan Cabinet /15 march'13/

Lanka Issue: DMK Threatens to Pull Out Ministers

  • கருத்துக்கள உறவுகள்

திமுக அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து வெளியேறலாம். அதனால் அரசுக்கு ஆபத்து ஒன்றுமில்லை.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் சோனியா காங்கிரசு அரசிற்கு எதிராக வாக்களித்து அரசை

வீழ்த்துவார்களா என்பதே முக்கியம். இவர்கள் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே அரசை ஆதரித்து வாக்களிக்கலாம்.

மோசமான பித்தலாட்டக்காரர்கள் இவர்கள்! எனவே பொறுத்திருந்து இவர்களின் செயற்பாட்டைப் பார்த்தபின்பே

முடிவு எடுக்கலாம்.

 

Sri Lanka issue: DMK threatens to pull out of Manmohan Cabinet /15 march'13/

Lanka Issue: DMK Threatens to Pull Out Ministers

அப்படியே மத்திய அமைச்சரவையில் இருந்து விலகி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தாலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் விடும் சந்தர்ப்பமே அதிகம் உள்ளது. :unsure:

 

எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டு ஆளுங்கட்சிக்கு வாக்களித்தார்கள் என்றால் அகில இந்திய அளவில் காறித்துப்புவார்கள்..! :D

சில ஒரு பத்தி செய்திகள் தி.மு.கா விலகிவிட்டத்தாகவும், இதனால் காங்கிரஸ் அமெரிக்க பிரேரணையை ஆதரிக்கும் சந்தர்பம் குறைவு என்பதை இது காட்டுகிறது என்றும் ஆரூடமும் போட்டிருக்கின்றன. தமிழ்நாட்டு மூலங்களில் அது கணப்பட்டால்தான் உண்மை என்று எடுத்துக்கொள்ள முடியும்.

ஈழ தமிழர் விவகாரம் தி மு க காங்கிரஸ் இருந்து விலகியது 

Mar 15, 2013 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Breaking_news.jpgஇலங்கை

தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளிற்கு நீதி வேண்டி , மற்றும் போர்

குற்ற விசாரனை நடைபெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, அது

ஏற்றுக்கொள்ளாப்படாத பட்சத்தில் தி மு க ஆழும் கங்கிரஸ் அரசிலிருந்து

விலகியுள்ளது. அமெரிக்க கொண்டு வரவுள்ள பிரேரனையை இந்திய மத்திய அரசு

இதுவரை ஏற்றுக்க் கொள்ள வில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

இதனையே கடந்த சில வாரங்களாக தி மு க வலியுறுத்திவந்தது. இன் நிலையில்

மத்திய அரசுக்கான ஆதரவை தாமது விலக்கிக் கொண்டுள்ளதாக திரு கே.எஸ்.

ராதாகிஷ்ணன் தெரிவித்தார்.

 

http://vannimedia.com/?p=75181

 

நம்புவதும் விடுவதும் வாசிக்கும் உறவுகளைப்பொறுத்தது.

  • கருத்துக்கள உறவுகள்

funny%2Bkalaigar.jpg

திமுக உண்மையில் ஒரு ஐ.நா. வாக்கெடுப்பை பெற்றுத்தருவதை விட தமது கட்சியை நிலைக்க வைக்க காங்கிரசில் இருந்து வெளியேறுவார்கள்.

 

மாணவர் போராட்டத்திற்கு கிடைத்த ஒரு வெற்றி.

  • கருத்துக்கள உறவுகள்

w-3.jpg

 

கருணாநிதியாவது, மத்திய அரசிலிருந்து விலகுவதாவது.
இதுவரை இவர், இப்படி எத்தனை தரம் சொல்லிவிட்டார்.
 

  • கருத்துக்கள உறவுகள்
மத்திய அரசில் இருந்து வெளியேறப் போவதாக கருணாநிதி எச்சரிக்கை! 
[saturday, 2013-03-16 08:27:20]
 
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் உரிய திருத்தத்தை சேர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால், மத்திய அரசில் நீடிப்பதில் அர்த்தமில்லை என திமுக தலைவர் க ருணாநிதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நேற்று இரவு அவர் வெளியிட்ட அறிக்கை:
 
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்க அரசு கொண்டு வரவிருக்கின்ற தீர்மானங்கள் குறி த்து பல கருத்துக்கள் பரப்பப்படும் சூழலில் திமுகவை பொறுத்தவரையில், அந்த தீர்மானத்தில் இலங்கையில் அண்மைக் காலத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்தும், அந்தப் ப டுகொலைக்குக் காரணமான போர்க்குற்றவாளிகளை அடையாளம் காட்டுவது குறித்தும், அப்படி அடையாளம் காட்டப்படுபவர்கள் மீது சுதந்திரமான சர்வ தேச விசாரணை நடத்தி குறிப்பிட்ட காலவரையறைக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற திருத்தத்தை அமெரிக்க அரசின் தீர்மானத்தில் சேர்ப்பதற்கான முயற்சியினை எந்த ஐயப்பாட்டிற்கும் இடம் கொடுக்காத வகையில் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று திமுகவின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
 
இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினராகிய நாங்கள் இந்திய அரசின் அமைச்சரவையிலே இனி மேலும் நீடிப்பதென்பது அர்த்தமற்றதாகி விடும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவையில் இருந்து விலகப் போவதாக திமுக இதுவரை 6 முறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தக் எச்சரிக்கை எல்லாக் கட்டத்திலும் பிறகு வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அமைச்சரவையில் திமுக 2004-ஆம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது. தற்போது இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை வலுவான திருத்தத்துடன் இந்தியா ஆதரிக்காவிட்டால் விலகுவோம் என்று கருணாநிதி கூறியுள்ளார். அமெரிக்கத் தீர்மானத்துக்காக 2-ஆம் முறையாக விலகல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் மத்திய அமைச்சரவையில் நீடிப்பதில் அர்த்தமில்லை....

- திமுக தலைவர் கருணாநிதி

 

 

செம காமடி!!! வெளிய போய் சிரிங்க! வெளிய போய் சிரிங்க. :D 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.