Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறக்கமுடியாத மலரக்கா

Featured Replies

இந்தச் சம்பவம் நடந்து நான்கு வருடங்கள் இருக்கும், ஆனால் இன்று வரை நான் என் வானொலிக் கலையகம் போய், ஒலிபரப்புக்கூடத்தில் நுளையும் போது தவறாமல் வரும் ஞாபகச் சிதறலாக அது இருக்கின்றது.

முழுப்பதிவிற்கும்:

http://kanapraba.blogspot.com/2006/07/blog...og-post_06.html

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கும் போது என்னை அறியமால் என் கண்களில் கண்ணீர். என்ன எழுதுவது என்று எணக்குத் தெரியவில்லை. அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்

உணர்வுகளை நல்ல அழகாக கூறியிருக்கிறீர்கள்.

கண்கள் பனித்துவிட்டன. இணைப்புக்கு நன்றி. :cry:

  • தொடங்கியவர்

வாசித்துக் கருத்துக் கூறிய கந்தப்பு, ரசிகை உங்களுக்கு என் நன்றிகள்

என்னையறியாமல் நானும் அழுதுவிட்டேன்...

உங்கட ஞாபகச் சிதறல்களை இப்படி எல்லாரிட்டயும் தெளித்து நீங்கள் ஆறுதல் பட்டு எங்களை அழ வைச்சிட்டிங்கள்.மலர் என்று பெயர் வந்தாலே வாடிப்போறதுதான் விதியா? இதோட புற்றுநோயால் இறந்த மூன்றாவது மலரக்கா இவர்.

  • தொடங்கியவர்

என் உணர்வுகளை வாசித்து, உங்கள் உணர்வுகளையும் பகிர்ந்துகொண்ட தூயாவுக்கும், சினேகிதிக்கும் என் நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசித்து முடிக்கமுடியவில்லை. கண்கள் பனித்து, இதயம் வேகமாக அடித்துக் கனத்தது. உண்மைச் சம்பவம் என்றாலே அதிலே ஓர் உயிரோட்டம் இருக்கும். ஆனால் இது உயிரையே பிழிந்துவிட்டது. மலரக்கா போன்ற பலர் மற்றவர்களுக்காக தம்மை அர்ப்பணித்துவிட்டு தாம் தனிமரங்களாக நிற்கிறார்கள். ஆனால் அப்படியானவர்களுக்கு இப்படியான முடிவு கொடுமையிலும் கொடுமை.

கானபிரபாவின் கதை சொன்ன விதமும் சிறப்பு.

வணக்கம் பிரபா,

இப்படியானவர்களின் வாழ்க்கையையும் பின் அவர்களின் முடிவையும் பார்க்கின்ற போது கடவுளின் மீதே கோபம் வருகின்றது.

  • தொடங்கியவர்

வணக்கம் செல்வமுத்து மாஸ்டர்

தங்கள் உணர்வைப் பகிர்ந்துகொண்டமைக்கு என் நன்றிகள்

  • தொடங்கியவர்

வணக்கம் பிரபா,

இப்படியானவர்களின் வாழ்க்கையையும் பின் அவர்களின் முடிவையும் பார்க்கின்ற போது கடவுளின் மீதே கோபம் வருகின்றது

உண்மை மணிவாசகன், அதனால் தான் கண்ணதாசன் சொன்ன, சாவே உனக்கொரு சாவு வராதா என்கிறேன்.

பிரபாண்ணா இந்தப் பதிவை நேற்று தமிழ் மணத்தில வாசிச்சன்

தனது சகோதரர்களுக்காக வாழ்ந்த மலரக்கா உங்களை மட்டும் அழவைக்கேல்லை எங்களையும் அழ வைச்சிட்டா

  • தொடங்கியவர்

வணக்கம் நித்திலா

தங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு என் நன்றிகள்

2002ல் லண்டனில் இருந்து சிட்னிக்குப் புலம் பெயர்ந்தபின்பு , இன்பத்தமிழோசையினை நான் சந்தித்தவர்கள் கேக்கும் போது, என்ன இந்த வானொலிக்கு இவ்வளவு ரசிகர்களா என்று நினைத்து நானும் கேக்க, ஒரு பெண்மணியின் பேட்டியினை அறிவிப்பாளார் பாலசிங்கம் பிரபாகரன் (கானா பிரபா அல்ல, இது இன்னும் ஒரு பிரபாகரன்) நடாத்தினார். பொதுவாக இன்பத்தமிழோசையில் இருந்து தாயகத்தில் இருந்த போராளித்தலைவர்கள், அரசியல் வாதிகள், கலைஞர்கள், தமிழகத்தில் இருந்து அறிஞர்கள், கலைஞர்கள்,அரசியல்வாதிகள் இருந்துதான் பேட்டி காண்பார்கள். ஆனால் அன்று வித்தியாசமாக ரசிகர் ஒருவருடன் பேட்டி.ஆமாம் மலரக்காவுடன் பேட்டி. மற்றைய ரசிகர்களும் மலரக்காவுடன் தங்கள் கருத்துக்களினைப் பகிர்ந்தார்கள். மலரக்கா விரும்பிய பாடல்களினையும் ஓலிபரப்புச் செய்தார்கள். அப்பேட்டியின் போது, மலரக்கா இன்னும் சில நாட்கள் தான் உயிர் வாழப்போகிறதாகவும் வைத்தியர்கள் கூறியதாகவும் அறிந்தேன். அதனால் தான் அவருடைய ஆசைகளினை நிறைவேற்ற இப்பேட்டி ஒலிபரப்பானது. 5,6 நாட்களின் பின்பு அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார். அதனையும் இன்பத்தமிழ் வானொலியின் மூலம் நான் அறிந்தேன். மலரக்காவின் பேட்டியினை மறுபடியும் ஓலிபரப்புச்செய்தார்கள். முகம் தெரியாத அக்காவுக்காக நேயர்கள் பலர் வானொலியில் வந்து கருத்துச் சொல்லி அழுதார்கள். இது நடந்து இப்பொழுது 3அரை வருடங்களுக்கு மேல். மறந்த சம்பவத்தினைப் பிரபாவின் எழுத்துக்கள் மீண்டும் யாபகப்படுத்தியதால் கண்களில் இருந்து கண்ணீர்கள்

  • தொடங்கியவர்

தங்களின் ஞாபகக் குறிப்புக்களை வழங்கியமைக்கு என் நன்றிகள் அரவிந்தன்

கானா பிரபாவின் மலரக்கா பற்றிய பதிவு - வாசிப்பவர்கள் - மனசை கொலை செய்கிறது!

  • தொடங்கியவர்

நன்றிகள் வர்ணன்

மலராக்காவை பற்றிய நினைவுகளை சுமந்த உங்கள் பதிவுகள் மனதை கலங்க வைக்கின்றது.

  • தொடங்கியவர்

வணக்கம் ரமா

வாசித்துத் தங்கள் உணர்வைப் பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.