Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டைனாசோர்கள் அழியக் காரணம் பூமியுடன் ஒரு வால்நட்சத்திர மோதல்..!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_66548984_e6700084-cretaceous-tertiary_i

 

சுமார்.. 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்த டைனாசோர்கள் என்ற இராட்சத உயிரினங்கள் அழியக் காரணம் என்ன.. இந்தக் கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை.

 

_66549874_mass_extinctions.jpg

 

ஆனாலும்.. சமீபத்தில் மெக்சிக்கோவை அண்டிக் காணப்படும் 180 கிலோமீற்றர்கள் விட்டமுள்ள பள்ளத்தில் மேற்கொள்ளப்பட்ட மீள்ஆய்வில் இருந்து இது விண்ணில் வேகமாகச் செல்லக் கூடிய வால்நட்சத்திரம் ஒன்று பூமியோடு மோதியதன் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என்று கருத்துச் சொல்லப்பட்டுள்ளது.

 

_66548983_e6700046-gravity_map_of_chicxu

 

முன்னர் இந்தப் பள்ளத்திற்கு ஒப்பீட்டளவில் மெதுவாகச் செல்லக் கூடிய பெரிய விண்கல் ஒன்று மோதியதே காரணம் என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால் அதற்கான சாத்தியத்தை விட சிறிய ஆனால் வேகமாகச் செல்லக் கூடிய வால்நட்சத்திரம் ஒன்று மோதி இருக்கவே அதிக சந்தர்ப்பம் உள்ளதாக அங்கு நடத்தப்பட்ட இரசாயனக் கனிமங்களின் படிவு.. மற்றும் திணிவிழப்பில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாம்.

 

இந்த மோதலின் விளைவாகத் தோன்றிய.. நெருப்பு.. பூகம்பம்.. எரிமலை வெடிப்புக்கள்.. சுனாமிகள் மற்றும் தூசிப்படலம் வளி மண்டத்தில் எழுந்து படர்ந்து வெப்பநிலையில் குறிப்பிட்ட காலங்கள் தொடர்.. மாற்றங்கள் ஏற்பட்டதன் விளைவாக.. பூமிப்பந்தில் இருந்து சுமார் 70% உயிரினங்கள் அழிந்து போயுள்ளன. அவற்றில் டைனாசோர்களும் அடங்குகின்றனவாம்.

 

அண்மையில் பூமியை ஒட்டிக் கடந்து சென்ற விண்கல் மற்றும் ரஷ்சியாவுக்கு மேல் காற்றுமண்டலத்தில் வெடித்துச் சிதறிய விண்கல்லின் விளைவுகள் போன்றவற்றில் இருந்தும் மற்றும் விண்வெளிக் கூறுகளின் பெளதீக.. இரசாயனத் தகவல்களில் இருந்து.. பெறப்பட்ட அவதானிப்புக்களின் கீழும்.. இந்த முடிவு பெரிதும் ஒத்துப் போகிறதாம்.

 

மேலும் தகவல்கள்.. http://kuruvikal.blogspot.co.uk/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரிய பெரிய பிலாப்பழங்கள் மேலை நிக்க.......... இஞ்சையிருக்கிற கதலிவாழைப்பழங்களுக்குள்ளை நான் பெரிசு நீ பெரிசு எண்ட புடுங்குப்பாடு சொல்லி வேலையில்லை. நன்றி நெடுக்கர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெரிய பெரிய பிலாப்பழங்கள் மேலை நிக்க.......... இஞ்சையிருக்கிற கதலி வாழைப்பழங்களுக்குள்ளை நான் பெரிசு நீ பெரிசு எண்ட புடுங்குப்பாடு சொல்லி வேலையில்லை. நன்றி நெடுக்கர்.

 

ஒரு பெரிய புத்தமாக எழுதக் கூடிய விடயத்தை இலகு தமிழில் எல்லோரும் புரிய இரண்டே வரிகளில் சொல்லுவிடுகிறீர்கள்.. கு.சாண்ணா.

 

விண்வெளியில் பூமி நோக்கிய ஆபத்துக்கள் மனிதன் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு.. சேதம் தரவல்லதாக.. கணமும் இருந்து கொண்டிருக்க.. இங்கோ பூமியில் மனிதன் வேறு ஆயுதங்கள்.. அணுகுண்டுகள்.. இராணுவங்கள்.. இயற்றி.. தமக்கிடையே பிரிவினைகள் தூண்டி.. அழிந்து போவது எவ்வளவு பெரிய முட்டாள் தனம். அதை பலாப்பழம்.. கதலி வாழைப்பழங்களை உவமைகளாக வைச்சு கருத்துச் சொன்ன அழகோ அழகு..! நன்றி கு.சாண்ணா. :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சிந்திக்க வைத்த பதிவு, நெடுக்கர்! நன்றிகள்!

 

வால்நட்சத்திரம் ஒன்றின் பெரும்பகுதி, பனிப்பாறைகளினால் உருவாக்கப்பட்டது! அகிலம் முழுவதும் உயிரின் மூலப்பொருள்களையும், அடிநிலை உயிரினங்களையும் இது காவிச் செல்வதாகும் கூறுகின்றார்கள்! நமது பூமி, ஒரு காலத்தில் காய்ந்து போய்க்கிடந்ததாகவும், இந்த வால்நட்சத்திரங்களின் பூமி மீதான மோதல்களே, நீரைப் பூமிக்குக் கொண்டுவந்ததாகவும் கூட, கருது கோள்கள் உள்ளன! 

 

இவற்றை ஒருநாளும் உறுதிபட, இப்படித்தான் நடந்தது என்று கூறமுடியாது என எண்ணுகின்றேன்!

ஆனாலும், டைனோசாரின் அழிவு பற்றிய ஆய்வில், இன்னுமொரு அடி முன்னே வைத்திருக்கிறோம் என்பது மட்டும் உண்மை!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நான்கு பருவநிலைகள் (four seasons) காணப்படுவதற்கும் அந்த விண்கல் மோதல்தான் காரணம் என்கிறார்கள்..!

 

புங்கை.. நீங்கள் சொன்ன பனிக்கட்டியால் ஆன வால் நட்சத்திரம் comet என்றும் இரும்பு, நிக்கல் போன்றவற்றால் ஆனவை meteorite (விண்கல்) என்றும் அழைக்கப்படும் என தொலைக்காட்சி பார்த்து அறிந்துகொண்டுள்ளேன்..! :D

பாவம், புண்ணியம், கடவுள் என்பதெல்லாம் டைனோசர் அழிவு பற்றி சிந்திக்கும் போது எவ்வளவு முட்டாள்தனம் என்று விளங்குகின்றது. மனிதன் பாவம் செய்கின்றான், சாமியை கும்பிட வேண்டும் இல்லாட்டி அழிவான் என்றால் டைனோசர்கள் என்ன பாவம் செய்து இருக்கும் இப்படி அழிய?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.