Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தமிழர் பகுதிக்குள் ஊருடுவும் சீனா... யாழ்பாண நூலகத்திற்கு உதவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில் தமிழர் பகுதிக்குள் ஊருடுவும் சீனா... யாழ்பாண நூலகத்திற்கு உதவி
Posted by: Mayura Akilan Published: Thursday, March 28, 2013, 11:13 [iST]
 
யாழ்ப்பாணம்: இலங்கையில் மெல்ல மெல்ல கால் ஊன்றி ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா தமிழர்கள் வாழும் பகுதிக்குள்ளும் காலடி எடுத்து வைத்துள்ளது. யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு அடிப்படை வசதிகளைச் செய்ய பல மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் கடந்த சில ஆண்டுகளாகவே தலை தூக்கி வருகிறது. சீனாவின் ஆயுதக் கிடங்கு இலங்கையில் திறக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக மாற்றும் குத்தகை சீனாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
கடல் மார்க்கம் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. தற்போது மன்னார் வளைகுடாவில் பெட்ரோல் எடுக்கும் உரிமமும் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந் நிலையில் யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு 20 மில்லியன் ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை சீன அரசு அளித்துள்ளது. இந்த நிதியில் ஏசி,கம்யூட்டர், ஜெராக்ஸ் இயந்திரங்கள், உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டன.
யாழ் பொது நூலகத்தில் யாழ் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்ற விழாவில் அவரிடம் சீன அரசின் முதலாவது செயலாளர் கியூ, ஸ்கியூபிங் இந்த உதவிகளை வழங்கினார்.
சிங்களர்கள் வாழும் பகுதியில் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய சீனா, மெல்ல மெல்ல யாழ் நூலகம் வரை தனது ஆதிக்கத்தினை வளர்த்துக் கொண்டுள்ளது.
இந்த நாட்டைத் தான் இந்தியாவின் நண்பன் என்கிறது மத்திய அரசு. இதைத் தான் சு.சாமி போன்ற ஆசாமிகளும் கூறுகின்றனர்.

வெறும் அறிக்கைகள் மூலம் மட்டும் உதவிசெய்வதாக நடித்துகொண்டு தமிழின அழிப்புக்கு தொடர்ந்து முழுமனதுடன் துணைபோகும் ஹிந்திய அரச கயவர்களுக்கும் சீனாவின் உதவிக்கும் நிறைய வேறுபாடுகள்  உண்டு.

இந்த சீன உதவி மூலம் மீண்டுமொருமுறை தமிழின அழிப்புக்கு துணைபோய்க் கொண்டிருக்கும் ஹிந்திய அரச கொலைகாரக் கும்பலின் முகமூடி மீண்டுமொரு முறை கிழிக்கப்படவுள்ளது.

எப்படியெனின், முன்னர் சீனா சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு உதவுவதாக கூறி தமிழின படுகொலைக்கு   ஹிந்திய அரச கொலைகாரக் கும்பல்  உதவியது.

அதே யதார்த்தம் உண்மை எனின் தற்போது சீனா யாழ் மக்களுக்கு வழங்கும் உதவிக்கு போட்டியாக ஹிந்திய அரச கொலைகாரக் கும்பலும் போட்டி போட்டு யாழ் மக்களுக்கு உதவ வேண்டும்! ஆனால் இது நடக்காது - என்னெனில் தமிழின அழிப்பே ஹிந்திய அரச கொலைகாரக் கும்பலின் உண்மையான நோக்கம்.


 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் தமிழர்கள் சீனாவை வெறுக்க வேண்டிய அவசியமில்லை. அரவணைப்போம். சிங்களவன் சீனாவையும்.. இந்தியாவையும் பாகிஸ்தானையும் ரஷ்சியாவைம்.. மேற்குலக நாடுகளையும்.. அரவணைச்சுக் கொண்டு தான் எங்களை அழிச்சவன். சீனாவிற்கு எங்களின் தயவு அவசியம் என்றால் அதனை வழங்கி எங்கள் நலனை அதனூடாகவும் சாதிக்கப் பின்னிற்கக் கூடாது. இது அரசியல்.. இராஜதந்திர.. வியாபாரம். வியாபாரமுன்னு வந்திட்டா இலாபம் தான் குறிக்கோள். நட்டமும் வரலாம். உணர்ச்சிக்கு வேலை கொடுத்தால்.. வியாபாரம் நடத்த முடியாது. குப்புற.. வீழ்ந்து தான் கிடக்கனும். :):icon_idea:

Edited by nedukkalapoovan

நாங்கள் தமிழர்கள் சீனாவை வெறுக்க வேண்டிய அவசியமில்லை. அரவணைப்போம். சிங்களவன் சீனாவையும்.. இந்தியாவையும் பாகிஸ்தானையும் ரஷ்சியாவைம்.. மேற்குலக நாடுகளையும்.. அரவணைச்சுக் கொண்டு தான் எங்களை அழிச்சவன். சீனாவிற்கு எங்களின் தயவு அவசியம் என்றால் அதனை வழங்கி எங்கள் நலனை அதனூடாகவும் சாதிக்கப் பின்னிற்கக் கூடாது. இது அரசியல்.. இராஜதந்திர.. வியாபாரம். வியாபாரமுன்னு வந்திட்டா இலாபம் தான் குறிக்கோள். நட்டமும் வரலாம். உணர்ச்சிக்கு வேலை கொடுத்தால்.. வியாபாரம் நடத்த முடியாது. குப்புற.. வீழ்ந்து தான் கிடக்கனும். :):icon_idea:

 

100 % உடன்படுகிறேன்!

 

தமிழர்களின் வெளிநாட்டு கொள்கை என்பதில் சீனாவிற்கு கணிசமான இடம் தரப்படல் வேண்டும்.

 

ஆனால், அது இந்திய உறவை விட குறைந்ததாக இருக்கவேண்டும். இங்கே இந்திய உறவு என குறிப்பிடுவது - தமிழக உறவை மட்டுமே.

யாழ்ப்பாண நூல் நிலையத்திற்கு சீன உதவியா அல்லது கிந்திய உதவியா என்றால் அதில் இரண்டு கருத்திருக்காது. தமிழ் நாட்டில் திணிக்க முடியாமல் போவிட்ட கிந்தியை சந்தர்பத்தை பாவித்து தமிழ் ஈழத்தில் கிந்தியா திணிக்க முடியாது.  கிந்தியாவின் யாழ்ப்பாண நடிவடிக்கைகள் தமிழரை அழித்து சிங்கள குடியேற்றத்திற்கு உதவுவது. சீனாவின் யாழ்ப்பாண முயற்சி கிந்தியாவை வேவு பார்ப்பது. எனவே இரண்டாவதைப் பற்றி நாம் இப்போ அலட்டிக்கொள்ள தேவை இல்லை.

 

ஆனால் பொருளாதார முனேற்றங்களில் என்று வரும் போது நாம் தொழில் போட்டிகளில் அதிகம் நேர்மை காட்டும் மேற்கு நாடுகளுடன் மட்டும்தான் அணைய முடியும். சுரண்டல், லஞ்ச கிந்தியா தொழில் வழங்களை நிர்மூலமாக்கிவிடும். அதே நேரம் சீனா தேர்தெடுத்த கடன் வழங்கலால் உள்நாட்டு முன்னேற்றங்களுக்கு இடம் கொடுப்பத்தில்லை. உள்நாட்டு அரசியலில் தலையிடாவிட்டாலும் சீனாவிடம் உதவி பெற்ற எந்த நாடும் தொழில் துறை முன்னேற்றங்களைக்கண்டது இல்லை. இலங்கை மாதிரி தனக்கென்று ஒரு வருவாய்(எண்ணை, மூலப்பொருள்....) இல்லாத நாடுகள் கடனில் தான் சிக்குவதுண்டு.

Edited by மல்லையூரான்

சீனவுடனான உறவு எமக்கு எப்போதும் நன்மையே தரும் .(சீனாவின் முதன்மைக்கொள்கை பொருளாதார அபிவிருத்தி )

  • கருத்துக்கள உறவுகள்

கிடைக்கப்போகும் பலாக்காயினும் கிடைக்கும் களாக்காய் மேல்.

களாக்காயின் படம் ப்ளீஸ்

  • கருத்துக்கள உறவுகள்

புலி இல்லாத இடத்தில்.....
ஒட்டுக்குழு, இந்தியா போன்ற பிச்சைக்காரர் வாறதை விட சீனாக்காரன் வாறது நல்லது. :D 

cartoon-29_03_2013.jpg

களாக்காயின் படம் ப்ளீஸ்

 

https://www.google.com/search?hl=en&q=cranberry&bav=on.2,or.r_qf.&bvm=bv.44442042,d.dmg&biw=1280&bih=899&um=1&ie=UTF-8&tbm=isch&source=og&sa=N&tab=wi&ei=9ThWUe-aDeXA4APd_YC4AQ

 

நாம்(யாழ்ப்பாணத்தை மட்டும் குறிப்பிடுகிறேன்) அறியாத பழம்! நாம் அறியாத பழமொழி! 

 

பலாப்பழத்தின் இனிமையால் அது முக்கனிகளில் ஒன்றாக இருக்கிறது. ஆனால் கிரான்பெரி எனப்படும் இது புளிப்பானது.  அதனால்த்தான் போலும் இந்த பழமொழி.

 

தரமான கிரான் பெரி, அமெரிக்காவின் புளோரிடா மானிலத்தில் அதிகம் சாகுபடி செய்யப்படும். இதானால் இந்தப் பழச்சாற்றை விற்கும் கம்பனிகள் அதை புளோரிடாவிலிருந்து என்று விளம்பரப்படுத்தும்.

 

தமிழ் நாட்டில் இது கேரளாப்பக்கம் கிடைப்பதாக இருக்கலாம். இதை பயிரிட ஆளம் குறைந்த நீர் ஏரிகள் தேவை.  

Edited by மல்லையூரான்

சீனாவின் உதவியும் அதன் தமிழ் நில வருகையும் கூட்டமைப்பால் சரியாக கையாளப்படின் சிங்கள நாட்டிற்கு அது கொடுத்துவரும் அரசியல் ஆதரவில் மாற்றங்களை கொண்டுவர முடியும்.

 

அப்படி செய்யும் இடத்தில் உருசியாவும் பின்வாங்கும் சாத்தியங்கள் உருவாகும்.


இது ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஐ.நா. வாக்கெடுப்பிற்கு ஆதராவான தீர்மானம் நிறைவேற்ற உதவியாக இருக்கும்.

தெற்கிலை சீனா இடும் முதலீடுகளும் வேலைத்திட்டங்களும் இந்தியாவை கவலை அடைய செய்யாது...  ஆனால் வடக்கிலை போய் பலாலி விமான நிலையத்தை திருத்தி கொடுக்க எண்று புறப்பட்டால் இந்தியா சும்மா இருக்காது...  <_<

 

ஆகும் செலவை போல மேலும் ஒரு மடங்கு காசை மகிந்த குடும்பத்துக்கு குடுத்து இலவசமாகவே பலாலி ஓடுபாதைகளை  திருத்தி அகட்டி கொடுப்பார்கள்...   கொள்கை வகுப்பு எண்டால் சும்மாவா...   பிறகு எதுக்கு துணைத்தூதரகத்தை யாழ்ப்பாணத்திலை வைச்சு இருக்கினம்...??

Edited by தயா

தெற்கிலே கால் வைத்த சீனா இந்தியாவையும் மீறி மெல்ல மெல்ல தமிழர் பகுதிக்குள்ளும் வரும். குறிப்பாக கட்டமைப்பு முதலீடுகளை செய்யும்.

 

அதேவேளை சீனர்களை அகற்ற வேண்டுமாயின் முதலில் மகிந்த கூட்டத்தை அகற்றவேண்டும், இலிபியாவில் போன்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.