Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாம் என்ன ஊமையா?

Featured Replies

நாம் என்ன ஊமையா?

one11lw.jpg

இந்த நிமிடம் இதே வருசம்..

இமைகளின் மீது.......

இரும்பு பறவைகள் ....

எரிதிராவகம் வீசி போன நாள்!

இந்த நாள்..!

சிலுவை சுமந்த ஜீவனின் மடியில்.....

சிதைகளாய் எம்மை - ஆக்கிவிட்டுபோன

பேரினவாதத்தின் ......

தமிழன் குடல் வெளி எடுத்து..

கும்மி அடித்த நாள்!

விலா எலும்பு நோக பெற்றவள் வயிறும்

வைரம் என்றும் அவள் கருதிய மகனும்

ஒன்றாய் குடல் கிழிந்து செத்தாரே..

உலகமே உனக்கு அது தெரியுமா?

நாம் என்ன செய்தோம் இறைவா?

நாம் என்ன உனக்கு தீராத பகையா?

நெஞ்சு மீது மூட்டிய தீ

இன்னும் ஈரம் பாயாமல்

ஊரெல்லாம் இருக்கிறதே

கொல்லுங்களேன்- எம்மை

தொலைந்தோம் நாம் என்று..

யாருக்கும் சொல்லியும் விடுங்களேன்!

இருக்கும் போதே இறக்க முடியுமா?

இருப்பு அழிந்து போன பின்பும்..

இனியும் ஒரு வாழ்வு தேவையா?

இனியும் நீ இருக்கிறாயா என்று கேட்காது விட

இறைவா நாம் என்ன ஊமையா???

உணர்வைத் தூண்டும் கவிதை... இறைவன் மீது பாரத்தை போடுவதை விட்டு இயலுமானவரை போராட வேண்டும் இரசிகை...

உங்கள் உணர்வை மதிக்கும்

-எல்லாள மஹாராஜா-

  • தொடங்கியவர்

உணர்வைத் தூண்டும் கவிதை... இறைவன் மீது பாரத்தை போடுவதை விட்டு இயலுமானவரை போராட வேண்டும் இரசிகை...

உங்கள் உணர்வை மதிக்கும்

-எல்லாள மஹாராஜா-

நன்றி கருத்துக்கு. ம்ம் என்னால் முடிந்தளவு போராடுகிறேன்.

நன்றி கருத்துக்கு. ம்ம் என்னால் முடிந்தளவு போராடுகிறேன்.

என்ன சமையலுடனா...? :lol::lol:

-எல்லாள மஹாராஜா-

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றிகள் ரசிகை! சில மணித்துளிகளால் அங்கிருந்து காப்பாற்றப்பட்டவள் என்ற உணர்வுகளால் எழுதப்பட்டிருப்பதன் தாக்கம் தெரிகின்றது!

இப்படி ஆயிரக்கணக்கான உறவுகளை இழந்த வேதனை! சொல்லி மாளாது! அப்போதும் ஊமையாகத் தான் இருந்தோம். இருக்கின்றோம்!!

ரசிகை...கண்களில் நீர்துளிகளுடன் இந்த பதிவை எழுதுகின்றேன்...

இருக்கும் போதே இறக்க முடியுமா?

இருப்பு அழிந்து போன பின்பும்..

இனியும் ஒரு வாழ்வு தேவையா?

இனியும் நீ இருக்கிறாயா என்று கேட்காது விட

இறைவா நாம் என்ன ஊமையா???

உயிர்காக்க இறை சந்நிதியில் புகுந்தவர்களையே பரலோகம் அனுப்பினானே பகைவன். அந்த இறைவனையும் சேர்த்து. பாவம், அவனைக்கேள்விகேட்டாலும் பதில் கிடைக்காது.

உணர்வுகளின் கொந்தளிப்பு...., உங்களின் கவிதை.., மனதில் சோகச்சுமைகளை விதைத்துச்செல்கிறது.

கவிதை........அங்கு செத்தபிணங்கள்...இங்கு சாகாத பிணங்களாக இருப்போருக்கு கொஞ்ச உயிர்கொடுத்து உணர்வை தூண்டுவதாகவும்...ஏதாவது செய்யவேண்டும் என எண்ணத்தை தூண்டுவதாகவும் இருக்கின்றது....பாராட்டுக்கள் தொடர்ந்து எழுதுங்கள் :arrow: :wink:

வணக்கம் ரசிகை,

உணர்வுபுூர்வமான கவிதை.

இனியும் நீ இருக்கிறாயா என்று கேட்காது விட

இறைவா நாம் என்ன ஊமையா???

நியாயமான உங்கள் கோபம் புரிகிறது.

அன்புடன்

மணிவாசகன்

ஒவ்வொருவருடைய மனங்களையும் தொடுகின்ற கவிக்கு வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

என்ன சமையலுடனா...? :lol::lol:

-எல்லாள மஹாராஜா-

சமையலுடனா? அது எல்லாம் வெரி சிம்பிள். போராட்டம் தேவை இல்லை.

எனது போராட்டம் எல்லாம் எல்ஸ்சுடன் தான் ;) :P :P :P

  • தொடங்கியவர்

கவிதைக்கு நன்றிகள் ரசிகை! சில மணித்துளிகளால் அங்கிருந்து காப்பாற்றப்பட்டவள் என்ற உணர்வுகளால் எழுதப்பட்டிருப்பதன் தாக்கம் தெரிகின்றது!

இப்படி ஆயிரக்கணக்கான உறவுகளை இழந்த வேதனை! சொல்லி மாளாது! அப்போதும் ஊமையாகத் தான் இருந்தோம். இருக்கின்றோம்!!

ம்ம் மனது மறக்குமா? தூய்ஸ் கருத்துக்கு நன்றி

  • தொடங்கியவர்

எல்லோரினது கருத்துக்கும் எனது நன்றிகள்.

நாம் என்ன ஊமையா?

ஆனாலும் ஊமையாக இருக்கின்றோமோ ரசிகை.

அழகான கவிதை. பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

நாம் என்ன ஊமையா?  

ஆனாலும் ஊமையாக இருக்கின்றோமோ ரசிகை.  

அழகான கவிதை. பாராட்டுக்கள்.

பாராட்டுக்கு நன்றிகள் ரமா

இருக்கும் போதே இறக்க முடியுமா?

இருப்பு அழிந்து போன பின்பும்..

இனியும் ஒரு வாழ்வு தேவையா?

இனியும் நீ இருக்கிறாயா என்று கேட்காது விட

இறைவா நாம் என்ன ஊமையா???

இறைவனிட்டயா கேக்கிறீங்கள் ரசி அக்கா?? எந்த அவலக்குரலும் கேக்காத சாமிக்கு உங்கள் விசனக் குரலாவது கே;குதா பார்ப்பம்.

  • தொடங்கியவர்

இறைவனிட்டயா கேக்கிறீங்கள் ரசி அக்கா?? எந்த அவலக்குரலும் கேக்காத சாமிக்கு உங்கள் விசனக் குரலாவது கே;குதா பார்ப்பம்.

ம்ம் பார்ப்பம் :?

கருத்துக்கு நன்றி சிநேகிதி :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்ச்சி ததும்பும் கவிதை வாழ்த்துக்கள்.

என்ன கருத்து எழுதுவது என்று தெரியவில்லை இரசிகை.

தயவு செய்து மன்னியுங்கள்.

  • தொடங்கியவர்

நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரசிகை,

கவிதை அருமை பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்லாய்ப் போன கடவுளை நோக்கி தமிழ்ச் சொல்லால் கணை தொடுக்கும் சோதரியே! உணர்வுகள் புரிகின்றன.

படம் பார்த்ததும் உள்ளம் உணர்வுகளுடன் துடிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ரசிகை கவிதை நன்றாக உள்ளது . நாம் ஊமைகள்தான் ஆனால் களத்தில் கேட்கவேன்டியவிதத்தில் கேட்கிறார்கள் அதனால் ஆன்டவன் ஊமையாக இருக்கிறான் போல........

  • 1 month later...

இந்த நிமிடம் இதே வருசம்..

இமைகளின் மீது.......

இரும்பு பறவைகள் ....

எரிதிராவகம் வீசி போன நாள்!

இந்த நாள்..!

சிலுவை சுமந்த ஜீவனின் மடியில்.....

சிதைகளாய் எம்மை - ஆக்கிவிட்டுபோன

பேரினவாதத்தின் ......

தமிழன் குடல் வெளி எடுத்து..

கும்மி அடித்த நாள்!

நினைவினில்

நிற்கும் கவி

நிலை குலைந்த

மனிதனின்

நிலைகளை

நீர்த்த கவி

நன்றே

உன் கவி

நல் வாழ்த்து

உந்தனுக்கு...

அன்னும் தேச கவ நீ புனைக...

-அவதனி -

  • தொடங்கியவர்

கருத்துக்களுக்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.