Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீக்குளித்தால் தான் சீதைகள்..!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/nSSv9Kk3tkI

 

முன்னால் நின்றது

மாரீசனின் மானல்ல

மயங்கி நீர்

அண்ணலை விட்டு

ஆரணங்காகி

அணிவகுக்க..

தாயக

விடுதலைக் கனவே

உம்மை அங்கு அணிவகுத்தது..!

 

தந்தை செல்வா சொல்லி

தந்தை பெரியார் வாழ்த்தி

கலைஞர் தலையாட்டி

எம் ஜி ஆர் கரம் நீட்டி

அமிர்தலிங்கம் வெற்றித் திலகமிட

யோகேஸ்வரன் கேட்ட இடத்தில்

அணிவகுத்த

இளைஞர் கூட்டத்தின் வழி

நீவிர் நின்றீர்

அண்ணன் பாதையில்

கொள்கை காத்து..!

 

களங்கள் பல கண்டீர்

இந்திய

வானரப்படைகளென்ன

கொடும்

சிங்கள பேரினப்படைகளும்

கண்டீர்.

போதாதேன்று

இலக்கிய காலமே

கண்டிராத

அமெரிக்கக் கழுகுகளும்

இஸ்ரேல் வல்லூறுகளும்

கூடவே...

சீன ரகன்களும்

பாகிஸ்தானியப் பிறைகளும்

ரஷ்சிய அரிவாள்களும்

உம் முன்

மல்லுக்கட்டக் கண்டீர்.

 

எல்லாம் வென்று

வெற்றித் திருநாள்

வரும்...

வன வாசம் முடித்து

நாடு மீளும் நாள்

வரும்..

மங்கையர் நீர்

குப்பி மிஞ்சி

மங்கள நாண் தரித்தீர்

வேளை வரும்..

தாயக விடியலோடு

வாழ்வும்

வசந்தமும் வருமென்றே..!

 

கூனிகளின் குந்திகளின்

சூழ்ச்சிகள்

தலைவிதிகள் மாற்றிப் போட...

தோள்கொடுத்தோர்

தலையாட்டிகளாய்

மாறி விட

தரித்திரமானது

தேசம்..!!

முள்ளிவாய்க்காலில்

இனவெறி

அரக்கர் தம்

கரங்களில்

கை சேர்ந்தீர்

எம் கண்மணிகளே..!

 

ஹிந்திய சீதைக்கு

ஓர்..

சோலை வனம்

அழகு வனம்

அமைதி வனம்

தந்தவன்

இராவணன்..!

மங்கை மனம்

தானாய் இசையும் வரை

விரல் நுனிதனும்

அவள் மேனி

தொட்டிடா..

கொள்கை கொண்டவன் அவன்..!

இலக்கிய காலத்து

ஆணின் அடையாளம்..!

 

தமிழீழச் செல்வங்களே

எங்கள் தேசத்துச்

சீர்திருத்தச் சீதைகளே

உங்கள் சிறை..

அசோக வனங்கள் அல்ல

அகோர வனங்கள்..!

 

மார் திருகும் கரங்களும்

கற்புத் தின்னும்

சிங்களப் பிசாசுகளும்

பெண் உடல் ரசிக்கும்

சொந்த இனக் கூலிகளும்

கும்மாளமிட்ட

இடம்...

நீங்கள் இருந்த

அசோக வனங்கள்..!

பேரினமும்

வல்லாதிக்கமும்

மாற்றுக்கருத்தும்...

போதையூட்டி வளர்த்த

நவகால நரமாமிச

முண்டங்கள் அவை..!

கலிகாலத்து

ஆண்களின் அடையாளம்..!

 

உதவி கோரும்

உங்கள்..

கூக்குரல் தனும்

கேட்டிடா

செவி இறுக்கி

கூனி நின்று

கூத்தாடி மகிழும்

சொந்த இனம்

இன்னொரு பக்கம்..!!

 

சீதைகளே

நீவிர் இன்று

அகோரவனம் மீண்டு

சமூக வனத்தில்

தடம் பதித்தாலும்..

சோதனைகள் உம்மை

துரத்திட்டாலும்

தற்கொலைகள் உம்மை

தாலாட்டி அழைத்திட்டாலும்..

தீக்குளிக்காமல்

தீண்டமாட்டுது

எம் தமிழ் சமூகம்

இலக்கிய காலத்து

கொள்கை காத்து..!

 

தீக்குளிக்க

காத்து நிற்கும்

உங்கள் நீண்ட

வரிசை கண்டு..

அதில் கொடுமை

காணாது எம் கண்கள்

நவ காலத்தின்

நவீன நாசியமாய்

எம்

தமிழ் மண்ணில்

அவை இன்று..!

ஹிட்லரிலும்

கேடாய்

நம்

மனச்சாட்சி..!

அதுதான் உண்மை..!

 

சுயநலத்தால்

உம்மேல்

பழியிட்டு

குழியிட்டு

புதைத்து விட்டு

தொலைத்து விட்டு

மாவீரர் ஆக்கி

மகிழ்ந்திடுவோம்

நவம்பர் 27 இல்..!

 

விடுதலையும்

வீரமும்

எங்கே..?!

அங்கே...

எம்மை

இதமாய்

தழுவிக் கொள்கிறது

அடிமையும்

அசைலமும்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்திய சீதைக்கு

ஓர்..

சோலை வனம்

அழகு வனம்

அமைதி வனம்

தந்தவன்

இராவணன்..!

மங்கை மனம்

தானாய் இசையும் வரை

விரல் நுனிதனும்

அவள் மேனி

தொட்டிடா..

கொள்கை கொண்டவன் அவன்..!

இலக்கிய காலத்து

ஆணின் அடையாளம்..!

கவிதையில் உங்கள் ஆதங்கத்தை வடித்திருக்கின்றீர்கள்! நன்றாக உள்ளது!

 

ஆனால் சீதைக்கும், ராமருக்கும் இடையில், சுமுகமான உறவு இருந்திருக்கவில்லை என்றும் ஒரு வதந்தி அடிபடுகின்றது!  :icon_idea:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இராவணன் ஒரு தமிழன் மட்டுமல்ல சைவநெறி கொண்டு ஒழுகிய ஏந்தல் அவன். அவனைக் கெட்டவனாகச் சித்தரிக்கவேண்டிய ஒரு தேவைப்பாடு வைணவருக்கு (ஆரியருக்கு) இருந்தது. வான்மீகியின் இராமாயணத்தில் இல்லாத ஒரு அப்பழுக்கற்ற பாட்டுடைத் தலைவனாக காண்பிக்கவேண்டி கம்பன் எனும் தும்பன் செய்த மாறுபடுதான் இந்தக் கதை.

 

அண்ணன் மனையாளாய் இச்சித்து அவளை அடையத் துடித்த இலக்குவனிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே சீதை இராவணனிடம் தானாகவே அடைக்கலம் புகுந்துகொள்கிறாள். பின்னர் இராமன் திரும்பிவர இலக்குவன் கூறிய பொய்யுரையே மாரீசன் கதை.

 

இராவணனுக்குச் சீதை மகள்முறை வேறு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் நோக்கமும் இராவணனை.. கெட்டவனாக காட்டுவதல்ல. எங்கள் நோக்கம் எமக்குள் உள்ள.. நவகால நாசிகளையும்.. சிங்களப் பேரின இனவெறியர்களையும்.. ஒரு நேர்கோட்டில் நிறுத்தி வைத்து இனங்காட்டுவது தான்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுடைத் தலைவன் எனக் கம்பனால், கூறப்படும் வரிகள்,இவை!

 

தன்னை மறைந்திருந்து, கோழைத்தனமாகக் கொன்ற இராமனைப் பார்த்து, வாலி சொலவதாகக் 'கம்பன்; எழுதியது,

 

 

வீரம் அன்றுவிதி அன்றுமெய்ம்மையின்

வாரம் அன்றுநின் மண்ணினுக்கு என்னுடல்

பாரம் அன்றுபகையன்றுபண்பு ஒழிந்து

ஈரம் இன்றி இது என் செய்தவாறு அரோ

அதே கம்பன், போரில் எல்லாவற்றையும் இழந்து, இலங்கை போகும்போது, இராவணனைப் பற்றிக்கூறுவது!

வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்,
நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்,
தார் அணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்,
வீரமும், களத்தே போட்டு, வெறுங் கையே மீண்டு போனான்’

எனவே, ராமனின்  இழிகுணமும், இராவணின் பெருமையும் கம்பன் வாயிலிருந்தே வடிகின்றன!

எனவே பாட்டுடைத் தலைவன், நம்ம இராவணேசனே! :D 

 

விடுதலையும்

வீரமும்

எங்கே..

எம்மை

இதமாய்

தழுவிக் கொள்கிறது

அடிமையும்

அசைலமும்..! //////////////////////////// சுடுகிறது உண்மைகள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளே கருத்துப் பகிர்விற்கு..! இந்தத் துயர்களுக்கு விடை தான் ஏதோ..???! ஏக்கங்கள் தான் பதிலாக தற்போது...!!!!

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.