Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் குழந்தைகளுக்கு தங்க மாலையா? சைனற் குப்பிகளா வேண்டும்? யாழில் விமல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2113955193index.jpg

உங்கள் குழந்தைகளுக்கு தங்க மாலையா? சைனற் குப்பிகளா வேண்டும்? யாழில் விமல்

ஜெனிவாவில் இருப்பவர்கள் தமிழ் பிள்ளைகளில் கழுத்துக்களில் மீண்டும் சைனற் குப்பிகளை அணிவிக்கவே விரும்புகின்றனர் என வீடமைப்பு மற்றும் பொறியல்துறை அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் குருநகர் தொடர்மாடி வீட்டுத்திட்டத்தின் புனர்நிர்மானப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகைறும் போதே அவர் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.

விமல் வீரவன்ஸ மேலும் கருத்து தெரிவிக்கையில், 

உங்கள் குழந்தைகளின் கழுத்துக்களில் தங்க மாலை அணிவதையா அல்லது சைனற் குப்பிகளை அணிவதையா விரும்புகின்றீர்கள் என தமிழ் மக்களிடம் நான் கேட்க விரும்புகின்றேன். 

தென்னிந்தியாவில் இருப்பவர்கள் மீண்டும் யுத்ததை விரும்புகிறனர். அங்கு ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான நிலமைக்கு காரணம் தனி நாடு கோருகின்றனர். இவர்களின் பகல் கனவு ஏதுவும் நிறைவேறாது. 

இறுதி யுத்தம் நடைபெற்ற காலத்தில் கூட இல்லாத கொந்தளிப்பு தென்னிந்தியாவில் இப்போது ஏற்படக் காரணம் பொருமளவான புலம் பெயந்த தமிழர்களின் பணமே. 

உண்மையில் தமிழ் மக்களில் அக்கறையற்று இருப்பவர்கள் தமிழ் நாட்டில் இருக்கின்றார்கள். அவர்கள் பிரிவினை வாதத்தை விரும்புகின்றனர். இதையே இங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்து கொண்டு இருக்கின்றது. 

சம்பந்தன் பாராளுமன்றத்திற்கு வரும் நாட்களை விட வெளிநாடுகளிலேயே அதிக காலத்தை கழிக்கின்றார். அவருக்கு திருகோணமாலையில் எங்கு தமிழ் குடியிருப்புக்கள் இருக்கிறது என்பது தெரியது. 

கடந்த கால யுத்தில் ஏற்பட்ட சூழலை மாற்றுவதற்கே நாம் விரும்புகின்றோம். யுத்தம் தந்த வடுக்கள் தற்போது தமிழ் மக்களின் இதயங்களிலிருந்து அகற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அதேபோல் இடிந்த சிதைந்த கட்டிடங்களை நாங்கள் புனரமைத்து வருகின்றோம். 

யுத்தின் போது இழக்கப்பட்ட இரு தரப்பு உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் எங்களினால் பெற்றுக் கொடுக்க முடியும். யுத்ததின் போது மாண்டு போன குடியிருப்புக்களுக்கு தற்போது உயிர் கொடுத்து வருக்கின்றோம் என்றார். 

 

சம உரிமைகளை மறுத்து கழுத்தில் இருந்த தங்க மாலைகளையும் தொடர்ந்து பறிக்கும் இனவாத சிங்கள பௌத்த அரசிற்கு ஜெனீவா அழுத்தம் கொஞ்சமும் பிரச்னையை தீர்க்கவேண்டும் என உணரவைக்கவில்லை.

 

மாறாக தொடர்ந்தும் அழிக்கவே எண்ணுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில எலும்புக் கூடுகளாக வெளிவரும் ஜே வி பி தோழர்களிற்கு பதில் சொல்லிட்டு.. எங்களுக்கு பாடம் எடுக்க வாருங்கள்.. விமல் வீரவன்ச.

 

சிங்களம் எங்கள் தேசத்தை விட்டு வெளியேறினாலே போதும்.. அதைச் செய்யாமல்.. தங்கமாலையா.. சைனைட் குப்பியா.. எது தேவை என்பதை நீங்கள் தான் தீர்மானிக்கப் போகிறீர்கள். தமிழர்கள் அல்ல..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

உங்கள் குழந்தைகளுக்கு தங்க மாலையா? சைனற் குப்பிகளா வேண்டும்? யாழில் விமல்

எங்களுக்கு சுதந்திரமான தமிழீழம்தான் வேண்டும் அதற்காகவே இந்த மண்ணில் ஆயிரக்கணக்கான மாவீரர்கள் மாண்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

wimal_weeravansa_jaffna_seithy-20130402-

  • கருத்துக்கள உறவுகள்
எங்கள் குழந்தைகளுக்கு தங்கமாலையும் வேண்டாம் வைரமாலையும் வேண்டாம் :wub: ..அவர்களுக்கு எங்கள் முப்பாட்டான் அரையில் கட்டிவிட்ட அரைஞான் கொடியை திருப்பிகொடுங்கள்..முடியாதா..? அப்ப எங்க குழந்தைகள் கழுத்தில் சைனற்குப்பிகள் மறுபடி ஏறுதோ இல்லையோ..உங்க கழுத்துகள் இறுகப்போவது மட்டும் நிச்சயம்.. :wub:  :wub: 
 
கண்ணா விமல்..இதைக் கவனமா கேட்டுக்கோ..
 
"உயரப்பறந்தாலும்..நீ உட்கார பூமிக்கு வரத்தான் வேணுங்றதை மறந்திடாதை.."
 
என்னங்க..அப்ப நான் கிளம்புறன்..

விமல் அண்ணை எங்கடை குழந்தைகள் தங்கமாலை அணியிறதோ அல்லது நஞ்சுமாலை அணியிறதோ எண்டது உங்கடை நடை முறையிலைதான் இருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சுனாமியின் போது வெளிநாட்டு நிறுவனங்களால் தமிழருக்கு என (பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்)கொடுக்கப்பட்ட பணம் புலிகளுக்கு போய்விடப்போகிறது என வழக்கு போட்டு அப்பணத்தை தமிழ் மக்களுக்கு போகாமல் பண்ணியவர் இவர்.வழக்குக்கு தமிழருக்கு எதிராக தீர்ப்வை வழங்கியதும் சனிநாயக சிறிலங்காவின் அநீதிமன்றம் தான்.
 
இப்போ என்ன முகத்துடன் தமிழ் மக்களிடம் கேள்வி வெட்கம் இல்லாமல் கேள்வி கேட்கிறார் வெற்று வேட்டு வன்ச.
  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு தமிழரின் 2 மாலையும் கண்ணுக்கு குத்துது என்பது   மட்டும் தெரியுது

 

அத்துடன் அந்த மாலைகள் பற்றி  பேசாமல் தமிழ்மக்களிடம் பேச முடியாது என்றும் தெரியுது

நல்ல அரசியல்வாதியாக மாறி  வருகின்றார்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.