Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா இராணுவ இரகசியங்களை இந்தியாவுக்கு வழங்கினாரா சுரேஸ் பிறேமச்சந்திரன்?

Featured Replies

சிறிலங்கா இராணுவ இரகசியங்களை இந்தியாவுக்கு வழங்கினாரா சுரேஸ் பிறேமச்சந்திரன்?

 

[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 02:01 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

suresh-prem.jpg

 

சிறிலங்காவின் இராணுவ இரகசியங்களை இந்திய நாளிதழுக்கு வெளியிட்டது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனிடம் சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். 

கொழும்பில் நாலாம் மாடியில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தலைமையகத்துக்கு நேற்றுக்காலை காலை 10 மணிக்கு அழைக்கப்பட்ட சுரேஸ் பிறேமச்சந்திரனிடம் இது தொடர்பாக சுமார் 2 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 

'ரைம்ஸ் ஒப் இந்தியா' நாளிதழுக்கு சுரேஸ் பிறேமச்சந்திரன் அளித்த செவ்வி ஒன்றில், சிறிலங்கா இராணுவத்தில் இரண்டு இலட்சம் பேர் இருப்பதாகவும், இவர்களில் சுமார் ஒன்றரை இலட்சம் பேர் வடக்கில், ஐந்து பொதுமக்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் நிலைகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

சிறிலங்காவின் இந்த இராணுவ இரகசியங்களை இந்திய ஊடகத்துக்கு வெளியிட்டது குறித்தே தம்மிடம் கேள்வி எழுப்பப்பட்டதாக, சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

இவை ஏற்கனவே ஊடகங்களில் வெளியான தகவல்களே என்றும், இராணுவ இரகசியங்களை அறியாத தான், அது குறித்து எவ்வாறு தகவல் வெளியிட முடியும் என்று விசாரணையின்போது பதிலளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்

 

http://www.puthinappalakai.com/view.php?20130420108136

 

'

ரைம்ஸ் ஒப் இந்தியா' நாளிதழுக்கு சுரேஸ் பிறேமச்சந்திரன் அளித்த செவ்வி ஒன்றில், சிறிலங்கா இராணுவத்தில் இரண்டு இலட்சம் பேர் இருப்பதாகவும், இவர்களில் சுமார் ஒன்றரை இலட்சம் பேர் வடக்கில், ஐந்து பொதுமக்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் நிலைகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

 

 

மிகப்பெரிய பகிடி. அரசியல் வாதிகள் உண்மைகளை கூறமுடியாத நிலை.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
அச்சுறுத்தி எம்மை அடிபணிய வைக்கமுடியாது! – புலனாய்வுப் பிரிவின் விசாரணை குறித்து சுரேஷ் கருத்து 
012e23db-a654-4f5f-8cd2-79a430ff6be61.jp

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்க்குப் பூட்டுப் போடவே என்னை நான்காம் மாடிக்கு அழைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால், இவ்வாறு விசாரணை மேற்கொண்டு - அச்சுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அடிபணியவைக்க முடியாது.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

நேற்றையதினம் வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நான்காம் மாடியில் வைத்து சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் இரண்டு மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணைக்காக நான்காம் மாடிக்கு வருகைதருமாறு கடந்த 12ஆம் திகதி  குற்றப்புலனாய்வு பிரிவினரால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அழைப்பு உரிய காலத்தில் கிடைக்காமையினால் அன்றைய தினம் அவரால் விசாரணைக்குச் செல்லமுடியவில்லை. இந்நிலையிலேயே நேற்றையதினம் காலை 10 மணிமுதல் 12 வரை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த விசாரணை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று மாலை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தவை வருமாறு:

இந்தியாவிலிருந்து வெளிவரும் 'டைம்ஸ் ஒப் இந்தியா' என்ற ஊடகத்தில் 'யாழ்ப்பாணத்தில் இராணுவ மயமாக்கல்' என்ற தலைப்பில் வெளிவந்த செய்தி தொடர்பாகவே என்னிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஊடகத்திற்கு நான் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இராணுவ இரகசியங்களை வெளியிட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். ஆனால், இராணுவ இரகசியங்களை நான் வெளியிடவில்லை எனவும், ஏற்கனவே இராணுவம் தொடர்பில் வெளிவந்த தகவல்களையே அந்த ஊடகத்திற்குக் கூறினேன் என்றும் தெரிவித்தேன்.

'டைம்ஸ் ஒப் இந்தியா' ஊடகத்தில் யாழ்ப்பாணத்தில் ஐந்து மக்களுக்கு ஓர் இராணுவத்தினர் என்ற ரீதியில் ஏறத்தாழ 10 இலட்சம் தமிழ் மக்களும் 2 இலட்சம் இராணுவத்தினரும் உள்ளனர் என செய்தி வெளிவந்துள்ளது. இதனை நான் அந்த ஊடகத்திற்கு வழங்கியது தவறு என என்னை விசாரித்த குற்றப்புலனாய்வு பிரிவினர் கூறினர்.

ஆனால், ஏற்கனவே இராணுவம் மற்றும் தமிழ் மக்கள் தொடர்பில் இணையத்தளங்கள், உள்ளூர் ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் வெளியிட்ட கருத்துகளை அடிப்படையாகவே வைத்தே நான் அந்த ஊடகத்திற்கு தகவலை வழங்கியுள்ளேன் என்று குறிப்பிட்டேன். சுமார் இரண்டு மணி நேர விசாரணையின் பின்னர் நான் விடுவிக்கப்பட்டேன் என்று தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 'வடக்கு மாகாணசபைத் தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாயை மௌனமாக்கச்  செய்யவேண்டும் என்பதில் அரச தரப்பினர் குறியாகவுள்ளனர். அதேவேளை, வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்பில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் கருத்துக்கள் இராணுவத்தினருக்கும், அரச தரப்பினருக்கும் சர்வதேச மட்டத்தில்  பெரும் தலையிடியாக உள்ளன என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=012e23db-a654-4f5f-8cd2-79a430ff6be6

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் நடைபெறும் அரச அட்டூழியங்களையும், கொலை, கொள்ளைகளையும் வெளியிட்டு நாட்டு இரகசியங்களை உலகத்திற்கு

வழங்கிவருவது தொடர்பாக, யாழ் இணையத்தை, எப்போது சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அழைத்து விசாரணை நடத்தப்போகின்றனர்?.

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் உள்ள அரச ஆதரவு உறுப்பினர்கள்...தங்கள் புலனாய்வு அறிக்கை கொடுத்தவுடன் ..கூப்பிடுவார்கள்.....இதில் 1 :3 என்ற விகிதத்தில் ...பணிபுரிகிறார்கள்......

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன்  இவர்களது இராணுவ  ரகசியங்கள் வேண்டுமெனில் நேரடியாக இவர்களது இணையங்களுக்கும் புகுந்து இருந்த இடத்திலிருந்து எடுக்கின்றான். :D

இவர்கள் வாயில்லாப்பூச்சிகளை மடக்கிப்பிடித்து விசாரிக்கின்றார்களாம்........ :(

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த எப்படியாவது வடமாகாண சபையையும்   டக்ளசின் ஊடாகக்

கூட்டமைப்பை அச்சுறுத்தி அடைய விரும்புகின்றார்.

இதனை தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் உணர்ந்து செயல்படவேண்டும்  

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.