Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தயா மாஸ்டர் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தயா மாஸ்டர் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவார்
24 ஏப்ரல் 2013
Thaya%20Master_CI.jpg

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சாளர் தயா மாஸ்டர் எனப்படும் வேலாயுதம் தயாநிதி எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட உள்ளதாக ஆங்கில ஊடகமொன்றுக்கு தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
 
இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளது.
 
2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் திகதி தயா மாஸ்டரும், புலிகளின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டரும் புதுமத்தளான் பிரதேசத்தில் அரசாங்கப் படையினரிடம் சரணடைந்திருந்தனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91060/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
வட மாகாணசபை தேர்தல் தொடர்பாக தயா மாஸ்டருடன் கோத்தபாய பேச்சுவார்த்தை! 
[Wednesday, 2013-04-24 08:27:58]
 
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ நேற்றையதினம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டரை சந்தித்து பேசியுள்ளார். இதன் போது வடக்கு மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வாரணி இராணுவ முகாமில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, மேலும் 23 பேர் பேர் கலந்து கொண்டிருந்தனர். அவர்களே இந்த முறை வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஈ.பி.டி.பியின் நிலவரம் குறித்து இன்னும் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. இந்த முறை தேர்தலில் ஈ.பி.டி.பி அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுமா அல்லது தனித்து நிற்குமா என்பது இன்னும் தெரியவில்லை. எவ்வாறாயினும் தயா மாஸ்ட்டர் இந்த முறை தேர்தலில் போட்டியிடவுள்ளமை தற்போதைக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்

இதற்கிடையில் அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஈ.பி.டி.பியின் நிலவரம் குறித்து இன்னும் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. இந்த முறை தேர்தலில் ஈ.பி.டி.பி அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுமா அல்லது தனித்து நிற்குமா என்பது இன்னும் தெரியவில்லை. எவ்வாறாயினும் தயா மாஸ்ட்டர் இந்த முறை தேர்தலில் போட்டியிடவுள்ளமை தற்போதைக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சபாஸ்....சரியான போட்டி,,,, சரணடைந்த புலிக்கும்.....அரச கையாளுக்கும்......மக்கள் வோட்டு யாருக்கு போடுவார்கள் பொருத்திருந்து பார்ப்போம்....

Edited by putthan

இந்தத் தேர்தலில், அரசுக்கு,  இயக்கம் ஒன்றின் தலைவன் நல்ல தெரிவாக இருந்திருக்கலாமாயின் POLTE இன் சித்தார்த்தன் மாதிரி ஒருவர் அரசுக்கு கிடைத்திருந்திருக்க முடியாது. அரசின் உள்ளே கையில் செயலாளர் நாயகம் இருக்கிறார்.  யாழில் நாம் செயலாளர் நாயகத்தின் பல பிரசாரிகளின் புகழாரங்களாள் தினமும் புளித்திருந்தாலும், அரசு செயலாளர் நாயகத்தையும் பலிக்கடாவாகத்தான் வளர்த்துவருகிறது. கொஞ்சம் சபையில் ஏற்றத்தக்க ஸ்ரீரங்கன் போன்றோரையும் அரசு பயன் படுத்த விரும்பவில்லை. பதியுதின் இதில் இறங்க கூட இல்லை. ஆனந்த சங்கரி போன்றோர் தேவானந்தாவுடன் பலகாலம் முறுகலில் இருந்தது இந்த பதவி போட்டியில் மகிந்தா தனக்கு ஒரு இடம் தரலாம் என்று ஒரு நப்பாசை வைத்திருந்தாலேயே.

 

ஆனால் சர்வதேசம் முழுவதும் புலிகளை பயங்கரவாதிகளாக பிரச்சாரம் செய்து வெற்றி கண்டு புலிகளை அழிக்க அவர்களிடம் உதவி வேண்டிய மகிந்தவுக்குத்தான் நன்கு புரியும் தமிழ் மக்களின் மனத்தில் புலிகளின் ஜனநாயக கோட்பாடுகளுக்கு இருந்த மதிப்பு. அதை அவர் சரியான கணிப்பு வைத்திருந்தார். அவர்களின்   நீதி, அவர்களின் அர்ப்பணிப்பு, கண்ணியம், அவர்களின் காருண்ணியம் என்பனவற்றை பற்றி எவ்வளவை தமிழ் மக்கள் அறிந்திருந்தார்கள் என்பதை அவர்களுக்கு வெளியே சரியாக அறிந்து வைத்திருக்கும் ஒரு மனிதர்தான் மகிந்தா. இதனால்தான், வெளிநாடுகளுக்கு பிரச்சாரமாக, முள்ளிவாய்க்காலில் நடத்திய இன அழிப்பை "மனிதாபிமான போர் " என்று பெயர் வைத்திருந்தார்.

 

தான் ,"தமிழ் மக்கள் அரசை ஆதரிக்கிறார்கள்" என்று ஊதுகுழல் பத்திரிகைகளை வைத்தும், பிரச்சாரிகளை வைத்தும் அறிக்கைகளை தொடர்ந்து வெளிவிட்டுக்கொண்டிருந்தாலும், புலிகளுக்கு தமிழ் மக்களிடம் கூட்டமைப்பை விட ஆதரவு இருந்ததை மகிந்தா நன்கு அறிவார் இதனால் சரணடைந்த புலிகளை வைத்து கூட்டமைப்பை விழுத்த மகிந்தா திட்டம் தீட்டுகிறார்.  அரசு காத்திருந்தது கூட்டமைப்பு புலிகளின் அடையாளத்தில் வடக்கு தேர்தலை சந்திக்கலாம் என்று. அதனால் திரும்பவும் ஒரு "மனிதாபிமானத்தேர்தல்" என்று பெயர் வைத்துவிட்டு புலிகளின் பெயரால் இன்னொரு பயங்கரவாதத்தை தேர்தல் நேரம் அரங்கேற்ற சந்தர்ப்பம் பார்த்திருந்தது. ஆனால் கூட்டமைப்பின் தெரிவுகள் கூட்டமைப்பை கூட பிரதிந்திதுவம் செய்யாது என்றதை கேள்விப்பட்டவுடன் ஏமாந்து போய்விட்ட அரசு முடிக்கிவிட முயன்ற பிரசாரம் "கூட்டமைப்பை பற்றி வெளிநாட்டு ராஜதந்திரிகள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்றால் கூட்டமைப்புக்கு தமிழ் மக்களிடம் ஆதரவு  இல்லை என்பதால் தானே வெளியே வேட்பாளர் தேடுகிறார்கள்"  எனபதாகும்.   அரசாங்கம் தூண்டிவிட்ட இந்த பிரசாரத்தை பிரசாரப் பீரங்கிகள் தரையில் இருந்து மேலே எழுப்பக்கூட முடியாமல் போய்விட்டதை கண்டுதான் அரசு இன்று , வெளிநாடுகள் அரசு புலிகளில் ஒருவரை தேர்தலில் போட்டால் என்ன நினைக்கலாம் என்பதை பற்றிக்கூட கவலைப்படாமல் இப்படி இறங்கியிருக்கிறது.  அரசாங்கம் எத்தனை தடவை சீலை உரி பட்டாலும் தேடுவது வெற்றியே. அதன் பின்னர் வெளிநாடுகள் கேள்விகள் கேட்டால் அவர்களின் வாயை பொத்த வைக்க பதில் சொல்வது அரசுக்கு ஒன்றும் கஸ்டமானதல்ல.

 

தயாமஸ்டர் புலிகளுடன் இருந்த காலத்தில் தமிழ் மக்களின் அன்பை பெற்றிருந்தார் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் இந்த நேரத்தில் கேட்கத்தக்க ஒரு நல்ல ஒரு பொதுக்கேள்வி 'தமிழ் மக்கள் புலிகளை ஏன் "பெடியள்" என்று அழைத்தார்கள் என்பதாகும்?".

 

இந்த கேள்விக்கு பதில் காண யாரவது முயன்றால் அவர்கள் (தமிழ்மக்கள்) புலிகள் என்ற அமைப்பைத்தான் ஆதரித்தார்கள் என்பது புரிந்துவிடும்.

புலிகள் என்ற பெயரையோ அல்லது அதில் இருந்திருக்க கூடிய சில தனி மனிதர்களையோ அல்ல என்பது அரசுக்கு தெரிய வரும் காலம் தூரத்தில் இல்லை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரையும் நிறுத்தலாம் ..... ஆனால் ....

வீட்டு சின்னத்தில TNA பனரில ஒரு பொம்மையை நிறுத்தினாலும் ....

வெல்ல உங்க ஒருத்தரும் இல்ல ...... :lol: :lol:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தேர்லில் போட்டியிடுவது நிச்சயம் எந்தக் கட்சி என்று தீர்மானமில்லை : தயாமாஸ்டர்
By General 
2013-04-25 09:49:53
 
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளரும் ஊடகவியலாளருமான தயா மாஸ்டர் என்று அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி போட்டியிடவுள்ளார்.
 
இது தொடர்பில் அவர் கூறுகையில்,
 
நடக்கவிருக்கும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி. இதற்காக இரு கட்சிகள் என்னை வேட்பாளராக நிறுத்துவதற்கு அணுகியிருந்தன. இலங்கையில் உள்ள முக்கிய தேசியக் கட்சியொன்றும் வடக்கில் உள்ள அரசியல் கட்சியொன்றும் இவ்வாறு என்னைக் கேட்டுள்ளன. நூன் எந்தக் கட்சியில் போட்டியிடுவது தொடர்பாக இன்னமும் முடிவெடுக்கவில்லை என்றார்.
 
இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த போது அவருடன் இது தொடர்பான சந்திப்பொன்றை நடத்தியதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

http://www.virakesari.lk/article/local.php?vid=4178

'தேர்தலில் போட்டியிட விருப்பம்' - தயா மாஸ்டர்

 

130425090844_daya_master_304x171_bbc_noc

 

 

விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகத்துறை பேச்சாளராகிய தயா மாஸ்டர் (வேலாயுதம் தயாநிதி) வடமாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் தம்முடன் இரண்டு தரப்பனர் தொடர்பு கொண்டு கேட்டுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிடுவதற்குத் தான் விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் கூறிய அவர், அவர்களின் தீர்மானம் என்ன என்பது தெரியும் வரையில் இதனை உறுதிப்படுத்த முடியாதிருப்பதாகவும் தெரிவித்தார்.

இறுதிச் சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தயா மாஸ்டரும், விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளராகிய ஜோர்ஜ் மாஸ்டரும் இராணுவத்தினரிடம் சரணடைந்து புலனாய்வு விசாரணைகளையடுத்து, நீதிமன்ற விசாரணைகளின் போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அதன் பின்னர், யாழ்ப்பாணத்தில் இருந்து செயற்படுகின்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் அவர் பணியாற்றி வருகின்றார்.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அவர்கள் தயா மாஸ்டரைச் சந்தித்துப் பேசியிருந்ததாகவும், வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவே முக்கியமாகப் பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்தத் தகவல்களை தயா மாஸ்டர் மறுக்கவுமில்லை. உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/04/130425_dayamaster.shtml

 

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப

புலிகளில் இவர் இல்லையோ

அன்றுடன் இவர் பூச்சியம்...

 

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப

புலிகளில் இவர் இல்லையோ

அன்றுடன் இவர் பூச்சியம்...

 

அதை அந்த மக்கள் தெளிவாக தேர்தலில் காட்டுவார்கள் என எதிர்பார்ப்போம்...

  • கருத்துக்கள உறவுகள்

அதை அந்த மக்கள் தெளிவாக தேர்தலில் காட்டுவார்கள் என எதிர்பார்ப்போம்...

 

அதை அவர்கள் போன தேர்தலிலும்  காட்டியிருந்தனர்.

அதேநேரம் வெளிப்படையாக இன்று தாயகக்கோரிக்கையை முன் வைப்போருக்கும் மக்கள் வாக்களிக்காது தவிர்த்துவருகின்றனர்.  அதையும் நாமும் அந்த தலைமைகளும் புரிந்து கொள்ளணும்  புத்தர்.

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு முந்தி ஏதோ ஒரு பட்டப்பெயர் இருந்தது.. அதை அண்ணர் எங்கையோ றோட்டில் வைத்து சொல்லிவிட இவர் வீட்டுக்கு வந்து எங்கடா உன்ரை கொண்ணன் எண்டு கேட்டவர்.. :lol:

நாங்கள் எங்களை கொன்று அழித்த சரத் பொன்சேகாவுக்கே  ஒரு சில மாதங்களுக்குள் ஆதரவு கொடுத்து வாக்களித்த புத்திசாலி மக்களாக்கும்... கைதாகும் வரைக்கும் புலிகளில் இருந்த தயா மாஸ்ரருக்கு மட்டும் வஞ்சகம் செய்வமா என்ன...?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீட்டு சின்னம் .....

TNA  பனர் ....

யாழ்ப்பான தமிழன் பஞ்சு பாஞ்சு புள்ளடி போடுவான் ...
 

வோட்டு போட போனா கைய வெட்டுவனெண்டு சொல்லுற ஆக்களுமில்ல ....

 

கவலைய விடுங்கோ ..... :lol: :lol:

 

அதை அவர்கள் போன தேர்தலிலும்  காட்டியிருந்தனர்.

அதேநேரம் வெளிப்படையாக இன்று தாயகக்கோரிக்கையை முன் வைப்போருக்கும் மக்கள் வாக்களிக்காது தவிர்த்துவருகின்றனர்.  அதையும் நாமும் அந்த தலைமைகளும் புரிந்து கொள்ளணும்  புத்தர்.

சிலருக்கு  சொன்னால்  புரியாது .அனுபவித்து  தான்  புரிந்து 

கொள்ளுவீனம் . காலம்  பதில்   சொல்லும் .

உண்மைகள்  உறங்குவதில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

தயா மாமா வெல்ல மாட்டார் என்பது அவர்களுக்கும் தெரிந்ததுதான்.

 
கள்ள வோட்டு களவாடல்.
தமிழ் வாக்குகளை பிரிப்பது. போன்ற வேலைகளுக்கு இவர் களம் இறக்க படுகின்றார்.
இவர் கோத்த பாய நில் என்றால் நிற்க வேண்டும் குனி என்றால் குனியவேண்டும்.
இந்த நிலையில் இருக்கும் ஒருவர் மீது இனியும் அவதுறுகளை அள்ளி கொட்டுவதால் பயன் ஒன்றும் இல்லை.
தமிழனை தமிழனே அழிக்கட்டும் என்று சிங்களவன் யோசிக்கிறான்.
அதை மதியால் வெல்ல வேண்டும்.
 
இவரை ஒரு தொகுதியில் (கள்ள வாக்கால் என்றாலும்) வெல்ல வைப்பதன் மூலம். அந்த தொகுதி மக்களுக்கும் த தே கூட்டணிக்கும் ஒரு முரண்பாட்டை கொண்டுவரலாம்.
இந்த இழுபறிக்குள் .............. டக்களசை குறைந்த வாகுகளுடனேயே வெல்ல வைத்து விடலாம்.
இப்படிதான் சிங்களவன் யோசிக்கிறான்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.