Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தப்பாய்யா இது.......!!!

Featured Replies

            விரும்பினா படியுங்கோ இல்லாடிலும் தயவு செய்து  படியுங்கோ, நீங்கள் எப்படியும் படிப்பியள் என்று  தெரியும். ஒ, படிக்க தொடங்கியிட்டியள் என்ன, இனி உடன விசயத்துக்கு போகத்தான் வேணும்.
           

               அது ஒண்டுமில்ல  இண்டைக்கு  ஒரு இடத்தில கொஞ்சம் புத்திமதி சொல்லிச்சினம் அதை கேட்ட நேரத்தில இருந்து கையும் ஒடலை காலும் ஓடலை, எதுக்கு அவர் அப்படி அறிவுரை சொன்னார் என்று தலையை போட்டு உடைக்காதையுங்க போற போக்கில கட்டாயம் சொல்லித்தான் போவன்.
               

              அவர் சொல்ல வெளிக்கிட்டதும் எனக்கு சட்டென்று ஊரில  சைக்கிளில்  திரிந்த நினைவுதான் வந்தது. சைக்கிளுக்கும் ஒரு பேர்  மோனல். மோனல் யார் தெரியுமே சிம்ரனின் தங்கச்சி ,உந்த விசயத்த கேட்டுத்தான் அந்த பிள்ளை அப்படி ஒரு முடிவு எடுத்தோ தெரியா, அது இருக்கட்டும், நாப்பது பக்க  கொப்பியை சுருட்டி பொக்கற்றுக்குள் வைச்சுக்கொண்டு படிக்க எண்டு போறது. வடிவா கவனியுங்க படிக்க எண்டுதான் போறது. போறவழியில ரோட்டுக்கரையில இருக்கிற வீடுகளில்  வாசல்கேற்றடியில் இரண்டு மூன்று வயதுபோனவையள் சேர்ந்து கதைச்சுக்கொண்டு  இருப்பினம், அப்ப அவையளுக்கு வேற பொழுது போக்குகள் இல்லை. மெதுவா சைக்கிளை கிட்ட கொண்டு போய் ஒரு காலை ஊன்றிக்கொண்டு ஐயா என்று  அன்பாக கூப்பிட அவையளும் என்னவோ எதோ என்று பரபரப்போடு என்ன என்று ஒருவரை முந்தி ஒருவர் கேப்பினம்... ஒரு நிமிஷம் சும்மா நின்றுவிட்டு  அதில்லை ஐயா பாடைக்குசொல்லவோ  என்றோ அல்லது பூவரசுஓடர் குடுக்கவோ  என்றோ கேட்டு விட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடுவோம். சட்டென்று அவர்களுக்கும் விளங்காது, புரிந்து கொண்டதும் நடக்குமே ஒரு வசவு............,

 

               எரிவண்டு அடிக்கிற செக்கல்நேரம், அந்த பிரதான வீதியின் மதவடியில் இருகேக்க, யாராவது ஒரு அப்பாவி ஊருக்குள யாரையாவது  தேடி வந்து  விலாசம் கேட்பார்கள். அப்ப நல்லவங்க மாதிரி ஒரு பவ்வியம் காட்டி, தேடிவந்தவரிடம் அவர் தேடிவந்தவரின் காதலியின் அல்லது கோபக்காரனின் விலாசத்தை கொடுத்து அனுப்பி விட்டு ஒரு பத்து நிமிஷம் கழிச்சு அந்த இடத்துக்கு போவோம்.அந்த அப்பாவி கிழிக்கப்பட்டு தொங்கிய தலையுடன் எங்களை பார்த்து..........................
             

            அந்த சந்தியில் இருந்த எந்தபக்கம் போறதென்று காசுபோட்டுபார்த்து, அந்த ரோட்டில போற கூட படிக்கிற  பிள்ளைகளுக்கு பின்னால வீடுமட்டும் போய், அந்த ஊரவங்களிடம் கொளுவுப்பட்டு, தாய் தகப்பனிடமெல்லாம் கண்டபடி பேச்சு வாங்கி அடுத்தநாள் அடுத்த ரோட்டிலும் இதே வழக்கமாகி, காதலும் இல்லாமல் காதலியும்இல்லாமல் எல்லோரையும் காதலித்து எல்லோரிடமும் ஏச்சுகளை திட்டுக்களை வாங்கி.................
           

            இருந்தாப்போல புளியடியில சும்மா நாலு பிள்ளையளை பார்ப்பம் எண்டு நிக்கும் போது ஐம்பத்தொன்று பஸ் வரும் யாராவது ஒருத்தன் வாடா யாழ்ப்பாணம் போவம் என்று சொல்ல நின்றபடி அப்படியே பஸ் ஏறி யாழ்ப்பாணம் போய் சாரத்தையும் தூக்கிபிடிச்சுக்கொண்டு  அங்கினேக்கை திரிஞ்ச எங்களை பார்த்து  சனங்கள் தங்களுக்குள்ளை திட்டி கொட்டிய  முனுமுனுப்புக்களை எல்லாம்  கேட்டும் கேளாதது போல திரிந்த ............
             

            இப்படியெல்லாம்   நல்லவங்களா இருந்தவனை புத்திமதி சொல்லி திருத்திறன் எண்டு வெளிக்கிட்டு ஒரு அரை மணித்தியாலம் அறிவுபூர்வமாக உணர்ச்சிபூர்வமாக சொல்லி பார்த்து முடியாமல் .............கடசியா ஒன்று மட்டும் சொன்னார் நீங்கமாறவே மாட்டிங்கடா........
       

              இந்தளவு அறிவுரை  சொல்லும்படி என்ன செய்தேன்.
        அவரை கண்ட உடனே வணக்கம் சொன்ன நான் கை குடுக்கவில்லை அது ஒன்றுதான் நான் செய்த தப்பு.............
            தப்பாய்யா இது !!!

 

தப்புதான்ய்யா..., அடுத்த முறை கண்டவுடன் கை கொடுத்துவிட்டு, இப்படி கட்டிப்பிடித்து கொஞ்சிவிடவும். அடுத்த முறைகிட்டவும் வர மாட்டார்.

 

 

hug.jpg

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்தேவி வெளிக்கிடத் தொடங்கின பிறகு, யன்னலுக்குள்ளால எட்டிப்பாத்துக்கொண்டிருக்கிற ஒரு அப்பாவியைப் பார்த்து, ' டேய், மச்சான், எத்தினை நாளடாப்பா, கண்டு? கன நாளா மச்சான் யாழ்ப்பாணத்தில நிண்டனி, வீட்டில நிண்டிருக்கலாம் தானே, எண்டு கேட்டுவைக்க, அந்த அப்பாவியும் கையைக்காட்டின படியே, கொழும்பு வரைக்கும், தலையைப் போட்டுக் குடைஞ்ச படி, பயணம் போற பரிதாபத்திலும் பாக்க, நீங்க பறுவாயில்லை, நேற்கொழுதாசன்! :D  

  • கருத்துக்கள உறவுகள்

தொலைவில் பழைய சட்டம்பியார் வருவதை பார்த்தவுடன் தெருவோரம் கோஷ்டியாக கூடி கதைத்தபடி நின்றுகொண்டிருந்த எங்கள் நண்பர் கூட்டம் திடீர் என்று வானத்தை அண்ணாந்து பார்த்தபடி வால்வெள்ளி தெரியுது வால்வெள்ளி தெரியுது என்று சொல்லி மரக்கிளைகளுக்கு இடையே வானத்தை காட்ட சட்டம்பியாரும் எங்களுடன் சேர்ந்துகொண்டு அங்கும் இங்கும் ஓடி ஓடி பட்டப் பகலில் வால்வெள்ளியை தேடிய நாட்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

 

 

தப்பாய்யா இது.......!!!

 

 

 

எங்க சங்கத்து ஆள அடிச்சது எவன்டா? :D தப்பே இல்ல தலைவா..நீங்க ஜமாயுங்க..அந்த வானமே எல்லை நமக்கு..

:D

  • கருத்துக்கள உறவுகள்

இடம், மெல்பர்னில, பிலிப் ஐலன்ட்!

 

மாலை நேரத்தில், அழகிய பென்குயின் பறவைகள், சில வாரங்கள் உணவுதேடல் முடித்துக், கரைக்கு வரும் அழகைப் பார்க்கக் 'கோடிக் கண்கள்' வேண்டும்!

 

நானும் ஒரு குடும்பத்தைக் கூட்டிக் கொண்டு போயிருந்தேன். மெல்பனில் இருந்தவர்களின், பலத்த எச்சரிக்கையையும் கணக்கிலெடுக்காது, (திமிர்?), ஒரு விதமான குளிருடுப்பும் இல்லாது, கடற்கரையில் காவலுக்கு இருக்கும்போது, சூரியன் சொல்லாமல் கொள்ளாமல், மறைந்துவிடக் 'குளிர்' எலும்புகளுக்குள்ளால், பூந்து விளையாடியது!

 

எமக்கருகில், இரண்டு ஜப்பானியர்கள்! தங்கள், கண்களில் ' விலை கூடிய தொலைநோக்கிகளை' ப் பொருத்திய படி, பென்குயின்களை, வழிமேல் விழி வைத்துப் பார்த்திருந்தார்கள்!

 

எனக்கும், எனது நண்பருக்கும் பயங்கரக் கடுப்பு! 

 

இருவரும், கடலை நோக்கியபடி, அதோ வருகின்றது, இதோ வருகின்றன என்று கையைக்காட்டி, பென்குயின்களுக்கு, மாலைவணக்கம் சொல்லிக்கொண்டிருந்தோம்!

பக்கத்தில், அந்த இரண்டு, ஜப்பானியர்களும், தங்கள் தொலைநோக்கிகளைப் போட்டு, உருட்டிக்கொண்டு, எங்களைப் பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

அவர்கள், கோபத்துடன், தங்கள் தொலைநோக்கிக்கருவிகளை தங்கள் பைகளுக்குள் மறைத்துக்கொண்டனர்!

 

பின்பு, உண்மையாகப் பென்குயின்கள் வரத்தொடங்கிய பின்னரும், அவர்கள் தங்கள், தொலைநோக்கிகளை வெளியே எடுக்கவேயில்லை! :o

 

penguin-parade_2125359i.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.