Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவின் புதிய ஊடுருவலால் 750 சதுர கி.மீ பரப்பளவு நிலத்தை இழந்தது இந்தியா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
China-India-border-252013-150.JPG

காஷ்மீர் மாநிலம் லடாக்கில் சீன ராணுவம் 19 கிலோ மீட்டர் தூரம் இந்திய பகுதிக்குள் நுழைந்து முகாம் அமைத்துள்ளது. தற்போது மேலும் ஒரு முகாமையும் அந்த பகுதியில் அமைத்திருக்கிறது. அந்த பகுதியில் இருந்து வெளியேறும்படி கேட்டுக் கொண்டும், சீனா வெளியேற மறுத்து வருகிறது. இதனால் அங்கு பதட்டமான நிலைமை நிலவி வருகிறது. சீனா ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் தற்போது சீன ராணுவம் லாரிகளை அனுப்பி வீரர்களுக்கு தேவையான பொருட்களை அனுப்பி வருகிறது. மேலும அந்த லாரிகள் வரும் வழித்தடத்தில் இந்திய பகுதிக்குள் சாலைகள் அமைக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.

  

சீனா ராணுவம் 19 கிலோ மீட்டர் தூரம் இந்திய பகுதிக்குள் நுழைந்திருப்ப தன் மூலம் 750 சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளது. இது டெல்லி மாநிலத்தில் பாதி அளவுக்கு சமமானதாகும். சீனா ஆக்கிரமிப்பு தொடர்பாக நேற்று ராணுவ தளபதி பிக்ராம்சிங் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று அப்போது ஆலோசிக்கப்பட்டது. ராணுவ நடவடிக்கையை எடுக்கலாமா? என்று இந்தியா தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

http://www.seithy.com/breifNews.php?newsID=81787&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

750 சதுர கிலோமீட்டர்கள் என்பது ஏதோ பெரிய பரப்பளவு போலத் தெரியும்.. ஆனால் அருணாசலப் பிரதேசத்தில் இழந்ததை ஒப்பிடும்போது இது ஒரு சிறிய இழப்பாகும்.. ஆகவே இதுபற்றி அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

இது டெல்லி மாநிலத்தில் பாதி அளவுக்கு சமமானதாகும்.

 

 

இந்தியா இப்படியான ஆக்கிரமிப்புக்கு என்ன பதிலடி கொடுக்கிறது என சீனா அவதானித்து அடுத்த நகர்வை மேற்கொள்ளும் என நம்பலாம்.இந்தியா எதனையும் செய்யாத போது ( இராணுவ அல்லது ராஜ தந்திர நகர்வுகள்) சீன மேலும் பல நில ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ளும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சீனா இந்தியாவின் கண்ணில் விரல்விட்டு ஆட்டி மூக்கையும் இடைக்கிடை பிடிப்பது வழக்கம்.  இந்தியாவால் ஒன்றும் பண்ணமுடியாது.  பண்ணவெளிக்கிட்டால் சீனா மூஞ்சியைப் பொத்தி வசமாகக் கொடுக்கும்.  இத்தகைய சந்தர்ப்பங்களில் தமிழர்கள் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் இந்தியா நன்றாக வாங்கிக் கட்டட்டுமென்று பேசாமலிருந்துவிடவேண்டும். 

 

பாக்கு நீரிணையின் இருபுறத்திலும் தமிழ்த் தேசியமொன்று உருவாவதற்கு இந்திய சீன யுத்தம் பெருமளவில் உதவ வாய்ப்பிருக்கிறது.  நல்ல தருணம் பார்த்து தமிழ்நாட்டில் பிரிவினைக் கோரிக்கையை வலுப்படுத்தி சீனாவின் உதவியோடு இந்தியாவின் மூஞ்சையில் செருப்பாலடிக்க வேண்டும்.  ஒருகோடிச் சிங்களவர்கள் சீனாவை நண்பனாக்கிக் கொள்ளலாமென்றால் ஏழுகோடித் தமிழர்கள் ஏன் ஆக்கமுடியாது.

 

a316303_10151578883687068_110688910_n.jpg

சீனாவிடம் உதை வாங்கும் உலக வல்லரசு(??) இந்தியா!

வீரம் என்ற பெயரில், பத்துக்கும் மேற்ப்பட்ட உலக நாடுகள் ஒன்று சேர்ந்து கொண்டு, இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள...ை வீழ்த்தி விட்டோம் என்று மார்தட்டி கொண்டீர்களே! எதோ உலகப்போரையே நீங்கள் ஜெயித்ததை போல!

*இதோ ஒண்டிக்கு ஒண்டியாய், வந்து பார் என்று சண்டியத்தனம் செய்கிறானே சீனாக்காரன்!

*இந்திய தேசத்தின் எல்லையில் பத்தொன்பது கிலோமீட்டர் உள்நுழைந்து சவால் விடுகிறானே!

*காஷ்மீர் எல்லைக்குள் சீன கொடியை நாட்டிவிட்டு முடிந்தால் தடுத்துப்பார் என்கிறானே!

உங்கள் வீரம்(?) எங்கே வல்லரசு இந்தியாவே ?

உங்கள் வீரம் எல்லாம் மாலத்தீவு, இலங்கை போன்ற துக்கடா நாடுகளில் மட்டுமே எடுபடும் தம்பிகளா!

இவை எல்லாவற்றையும் அமைதியாக வேடிக்கை பார்த்த பிறகும் கூட, தெற்காசியாவில் நாங்கள் தான் வல்லரசு, எங்களிடமும் அணு ஆயுதம் இருக்கிறது, அக்னி இருக்கிறது, பிரமோஸ் இருக்கிறது, உலகின் மிகப்பெரிய ராணுவம் எங்களுடையது என்று, பிஸ்கோத்து தின்று கொண்டே பெருமை பேசுவதற்கு பதிலாக, பேசாம மண்ணுமோகன் சிங்கும், சோனியா காங்கிரஸ் கும்பலும் மாடு மேய்க்க போகலாமே!

உங்க கூமுட்டை தனமான வெளியுறவு கொள்கைகளையும், ராணுவ பலத்தையும் பிரமாண்டமாய் காட்ட இலங்கை, மாலத்தீவு போன்ற சின்ன சின்ன நாடுகள்தான் சரியாக இருக்கும்.

சீனாக்காரன் வைக்கும் ஆப்புக்கு, பதில் சொல்லும் அளவுக்கு இந்தியாவுக்கு திராணி இருப்பதாய் ஒருபோதும் நம்புவதற்கில்லை.

மயிலே மயிலே இறகு போடு என்று கடைசி வரை சீனாகாரனிடம் கெஞ்சுவதை தவிர உங்களுக்கு வேறு வழி இல்லை.

ஊரெல்லாம் நீங்க உதார் விட்டாலும், உங்கள் பலம் என்னெவென்று எங்களுக்கு தானே தெரியும்!

உங்களால் அநியாயமாக கொல்லப்பட்ட எங்கள் மாவீரர்களின் தியாகம் எல்லாம் சும்மாவா? அந்த பாவம் எல்லாம் சும்மா விடாது பாவிகளா!

வாழ்க வல்லரசு இந்தியா :)
 
-ஆன்டனி வளன்

 

facebook

 

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறவுகள்
டெல்லியில் பாதி அளவு சீனா கையில், பதிலடிக்கு இந்தியா தயாரா?
வெள்ளி, 3 மே 2013( 17:09 IST )
 
காஷ்மீர் மாநிலம் லடாக்கில் சீன ராணுவம் 19 கிலோ மீட்டர் தூரம் இந்திய பகுதிக்குள் நுழைந்து முகாம் அமைத்துள்ளது. இந்த நிலையில் இந்தியா அதன் எதிரிகளுக்கு தக்க சமயத்தில் பிரபல குத்துச் சண்டை முகமது அலி பாணியில் பதிலடி கொடுக்கும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். 
 
தெற்காசியாவில் மண்டல தொழில் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான சர்வதேச மாநாட்டின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் சல்மான் குர்ஷித் பேசியதாவது, லடாக்கில் சீன ராணுவம் 19 கிலோ மீட்டர் தூரம் இந்திய பகுதிக்குள் நுழைந்து முகாம் அமைத்துள்ளது. 
 
இந்தியா அதன் வெளியுறவு கொள்கைகளுக்கு மதிப்பு அளித்தாலும், எதிரிகளுக்கு தக்க சமயத்தில் பிரபல குத்துச் சண்டை முகமது அலி பாணியில் பதிலடி கொடுக்கும் என அவர் அப்போது குர்ஷித் தெரிவித்துள்ளார்.

http://tamil.webdunia.com/newsworld/news/national/1305/03/1130503038_1.htm

காங்கிரஸ் இதை எல்லாம் தெரிந்துதான் பழிவாங்கள் பாதுகாப்பு கொள்கையை பின்பற்றத்தொடம்கியது. அவர்கள் யார் எப்படி கிண்டல் அடைத்தாலும் கண்டுகொள்ள மாட்டர்கள்.

 

மிஞ்சி மிஞ்சி போனால் யாழின் மாத்து கருத்திக்கள் மாதிரி யாரையாவது கூலிக்கு அமர்த்தினால் தேர்தல் வரையும் உள்ள தெல்லாவற்றுக்கும் மறுப்பு எழுதி சமாளித்து போடுவார்கள். தேர்தல் வரயும் தானே தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்தியா ஒன்றுமே செய்யாது என்பது சீனாவுக்கு தெரியும்.ஆகவே சீனா தொடர்ந்து இந்தியாவின் நிலத்தை கைப்பற்றும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.