Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காரிருள் ஆடி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

29653006299230072992300929953021295029753007vc9.gif

காரிருள் ஆடி

இலங்கையை உலுப்பி இரத்தத்தை உறைய வைத்து

. கலக்கத்தை மேம்படுத்தியதே காரிருள் ஆடி

கலையாது எம்மவரின் காயம் தொலையாது

. காலத்தின் தேவை கலங்கிய தமிழரின்

பலத்தையும் தளத்தையும் பறை சாற்றும்

. பாவியரின் குணம் பரவியதால் அகிலத்தில்

நிலைத்ததே ஈழத்தவரின் பெருமை - இதற்கு

. நிச்சயம் பதிலிறுக்கும் ஈழதேசம்.

உணர்வுள்ள கவிதை பாராட்டுக்கள்.

நல்ல கவிதை பாராட்டுக்கள்

கவிதை மிகவும் உணர்வுபூர்வமாக உள்ளது.

29653006299230072992300929953021295029753007vc9.gif

காரிருள் ஆடி

இலங்கையை உலுப்பி இரத்தத்தை உறைய வைத்து

. கலக்கத்தை மேம்படுத்தியதே காரிருள் ஆடி

கலையாது எம்மவரின் காயம் தொலையாது

. காலத்தின் தேவை கலங்கிய தமிழரின்

பலத்தையும் தளத்தையும் பறை சாற்றும்

. பாவியரின் குணம் பரவியதால் அகிலத்தில்

நிலைத்ததே ஈழத்தவரின் பெருமை - இதற்கு

. நிச்சயம் பதிலிறுக்கும் ஈழதேசம்.

தலை கவிழ்ந்த தமிழன் தலை

நிமிர்வதெப்போ...நிலைமாறுவதெப

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னவனே,

மதி கெட்ட தென்னகம் தலை கவிழும்

முறத்தால் புலி துரத்திய எம்மினம் தலை நிமிரும்

கௌதமனின் அடிவருடிகள் கரிகாலனின் பேர் வழிக்கு

இடம் விட்டு நின்று சாட்சியம் பகர்வர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி, சுஜிந்தன், மணிவாசகன், இரசிகை

படைப்பு சார்ந்த விமர்சனங்கள் படைப்பாளியை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி, சுஜிந்தன், மணிவாசகன், இரசிகை

படைப்பு சார்ந்த விமர்சனங்கள் படைப்பாளியை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டும்.

உணர்வு பூர்வமான கவிதை பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கௌரிபாலனுக்கு எந்தன் நன்றியறிதலைத் தெரிவிக்கின்றேன்.

ஆடிப்புயலில் அடிபட்டுப் போவாமா?

ஆடிவேல் ரதம்வந்த கொழும்புநகர் தமிழரில்லம்

கூடிநின்று கொள்ளிவைத்தார் காவலரும் சேர்ந்துநின்றார்

தேடித்தேடி வாக்காளர் இடாப்பினிலே தமிழர்பெயர்

கோடிட்டுக் கொளுத்திவிட்டார் தமிழழிப்பின் ஒத்திகையாய்.

சரக்குக் கப்பலுடன் சிதம்பரமும் சேர்ந்துவர - தமிழுணர்வுச்

சரக்கேற்றிக் காங்கேசன் துறை சேர்ந்தார்

தலைநகர் தந்த தரக்குறைவுப் படிப்பினையில்

உலையொன்று கொதித்தது விடுதலைத்தீ கொழுந்தது

ஆடிப்புயலில் அடிபட்டுப் போனதனால் - சுயநல

நாடித்துடிப்பின் அடி பட்டுப் போனதுவே

நாடிவந்தார் தமிழிளைஞர்: கூடிவிட்டார் விடுதலைக்காய்

தேடிவென்ற ஆயுதங்கள் அகலக்கால் பதித்ததுவே.

மிதித்தாலும் வாழ்தலுக்காய்த் துடித்தெழும்பும் மண்புழுவும்

வெட்டவெட்டத் தழைத்தோங்கும் பூவரசும் கிளுவைகளும்

நசித்தாலும் தலைதூக்கும் கோரைப்புல் பற்றைகளும்

இருப்புக்காய் வேகத்தடன் இறுமாந்து எழுகையிலே

கொழும்புத் தமிழரென்றும் யாழ்ப்பாணத் தமிழரென்றும்

மட்டுத் தமிழரென்றும் கோணமலைத் தமிழரென்றும்

தொக்கிநின்ற எல்லைத்தேரின் அச்சாணி முறித்துவிட்ட

ஆடிப்புயலில் அடிபட்டுப் போவோமா?!

இல்லை….

ஆடிப்புயல் அடித்த துடிப்பில் வெடித்திட்ட

கூடிப்பெருகும் வீரமும் தியாகமும்: இழப்பும் கசப்பும்

தேடித்தரும் விடியலிலே அடிமைத் தளையழிந்து

ஆடிப்புயல்தந்த அதிகார அடிவட்டு, அடிபட்டுப் போகு முண்மை.

இராஜன் முருகவேல்

(ஐபிஸி 18.07.98)

:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோழியன் தந்த ராஜன் முருகவேலின் "ஆடிப் புயலில் அடிபட்டுப் போவோமா" கவிதை அருமை காத்திரமாகவுள்ளது,

இன்னும் இது போன்ற கவிதைகளை யாழ் இணையத்தில் எதிர்பார்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தேவந்தி பாராட்டுக்கள் ......இராஜன் தந்த கவியும் நன்று

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தனின் பாராட்டுதலுக்கு நன்றி.

83 யூலையின் வேதனைகள் கவிதையில். கவி நன்று

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்வு பூர்வமான கவிதை பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலக்கியன், ராதை இருவரும் தந்த பாராட்டுதலுக்கு நன்றி

  • 1 year later...

தேவேந்தி சிலவரிகளில் கறுப்பு ஜூலை பற்றி அழகாக எழுதியுள்ளார்

காரிருள் ஆடி

இலங்கையை உலுப்பி இரத்தத்தை உறைய வைத்து

. கலக்கத்தை மேம்படுத்தியதே காரிருள் ஆடி

கலையாது எம்மவரின் காயம் தொலையாது

காலத்தின் தேவை கலங்கிய தமிழரின்

பலத்தையும் தளத்தையும் பறை சாற்றும்

. பாவியரின் குணம் பரவியதால் அகிலத்தில்

நிலைத்ததே ஈழத்தவரின் பெருமை - இதற்கு

. நிச்சயம் பதிலிறுக்கும் ஈழதேசம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.