Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கர்நாடகாவில் 7 ஆண்டுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ் : பா.ஜ.க.வுக்கு படுதோல்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூர்: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் 7 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. ஆளும் கட்சியான பா.ஜ.க. படுதோல்வியை சந்தித்துள்ளது.

223 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது.

இதுவரை முடிவு அறிவிக்கப்பட்ட தொகுதிகளில், 84 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.  பா.ஜ.க. 24 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 21 இடத்திலும், எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதரகட்சிகள் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நடிகர் அம்பரீஷ், வருணா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சித்தராமையா, ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக ஜனதா கட்சித் தலைவர் எடியூரப்பா ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

முன்னிலை நிலவரம்

 

 

 

காங்கிரஸ் - 36

 

பா.ஜ.க.- 15

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி  - 18

எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி -

 

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=14638

 

கர்நாடக சட்டசபை தேர்தல்-கட்சிகள் வென்ற இடங்கள்   காங்கிரஸ்- 121 பாஜக- 40 மதசார்பற்ற ஜனதா தளம்- 40 எதியூரப்பா கட்சி- 6 ரெட்டி-ஸ்ரீராமுலு கட்சி- 4 சுயேச்சைகள்- மற்றவை- 12

 

கர்நாடகா இறுதி நிலவரம்: 121 இடங்களில் வென்று காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை!

 

கர்நாடகா தேர்தல் முடிவுகள் இறுதிக்கட்டம் எய்தியுள்ளது. மொத்தம் 223 தொகுதிகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி 121 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

அடுத்த இடத்தில் பாஜக 40 தொகுதிகளையும், தேவ கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் 40 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. மற்றவைகள் 12 தொகுதிகளில் வென்றுள்ளது.

எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சிக்கு சரியான அடி. மொத்தம் 6 இடங்களில் மட்டுமே அந்தக் கட்சி வென்றுள்ளது. எடியூரப்பாவின் முடிவாக இது அமையலாம்.

பி.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சி 4 இடங்களில் வென்றுள்ளது.

அடுத்து முதல்வர் யார் என்று காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கவேண்டும். இதில்தான் பெரிய தலைவலி ஆரம்பமாகப்போகிறது. ஏற்கனவே சித்தராமையா, கே.டி. சிவகுமார், ‌பரமேஸ்வரா, மல்லிகார்ஜுன கார்கே, வீரப்ப மொய்லி என்று ஐவர் போட்டாப்போட்டியில் இருக்கின்றனர். எம்.பி.க்கள் குழுவுடன் ஆலோசனை செய்து முதல்வரை காங்கிரஸ் மேலிடம் தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் யார் என்ற பிரச்சனை தீர்ந்தவுடன் இந்த வாரத்தில் காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் பீடமேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஏற்கனவே கர்நாடகா காங்கிரஸிற்கு தொடர்புடைய பெரும் காங்கிரஸ் தலைகள் தங்களுக்கு ஆதரவு கோர துவங்கிவிட்டன.

பாஜக தனக்குத் தானே குழி தோண்டிக்கொண்டுள்ளது. எடியூரப்பா கட்சி வெகு சரியாக வாக்குகளை உடைத்தது காங்கிரஸ் கட்சிக்கு பல இடங்களில் உதவியாக அமைந்தது.

எடியுரப்பாவின் லட்சியம் நிறைவேறியது. அதாவது பாஜகவை ஒழிக்கவேண்டும் என்ற லட்சியம் நிறைவேறியது. ஆனால் அதுவே அவரது அந்திமக்காலமாகவும் மாறிவிடும் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை.

பாஜகவை விடவும் பெரும் சோகத்தில் இருக்கும் கட்சி கர்நாடகா ஜனதா கட்சிதான். ஷெட்டரை விடவும் சோகத்தில் இருப்பவர் எடியுரப்பாதான்!

 

http://tamil.webdunia.com/newsworld/news/national/1305/08/1130508044_1.htm

 

Edited by துளசி

நான் கர்நாடக கருணாநிதி! – எடியுரப்பா.

December 7, 2012

yedi.jpg

நாளை மறுநாள் ‘கட்நாடக ஜனதா கட்சி’ என்ற புதிய கட்சியை தொடங்க இருக்கும் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியுரப்பா, பத்திரியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, “கர்நாடக அரசியலில் புதிய மாநில கட்சி உதயமாக போகிறது. மாநில அளவில் வலுவான தலைவராக நான் உருவெடுப்பேன். மூன்று மாதங்களுக்கு முன்பு பாஜக மேலிடம் என்னுடன் பேச்சு நடத்துவதற்காக தர்மேந்திர பிரதான், சந்தோஷ் ஆகிய இருவரை அனுப்பியது. அவர்களிடம் நான் எனக்கு முதல்-மந்திரி பதவி வேண்டாம். தலைவர் பதவி மட்டுமே தாருங்கள் என்று கேட்டேன். ஆனால் பாஜக மேலிட தலைவர்கள் என்னை புறக்கணித்தனர்.

பாஜக மூத்த தலைவர்கள் சிலரால் தான் நான் கட்சியில் இருந்து விலக நேரிட்டது. இனி நான் ஒரு போதும் மீண்டும் பாஜகவில் சேர மாட்டேன். மோடி பிரதமர் ஆனாலும் என் முடிவில் மாற்றம் இல்லை. பாஜக தலைவர்கள் கெஞ்சி கேட்டாலும் அந்த கட்சிக்கு திரும்பி செல்ல மாட்டேன்.

ஹெக்டே, தேவராஜ் அர்ஸ், பங்காரப்பா ஆகிய முதல்-மந்திரிகள் மாதிரி நான் ஓய்ந்து விட மோட்டேன். நான் கர்நாடக கருணாநிதி மாதிரி. நிச்சயம் மீண்டும் முதல்-மந்திரி ஆகி காட்டுவேன். நான் அரை குறை மனதுடன் களத்தில் இறங்க வில்லை. முழு மனதுடன் களம் இறங்கியுள்ளேன். முடிவு என்ன என்பதை நீங்களே பார்ப்பீர்கள்.” என்று கூறியுள்ளார்.

 

 

http://www.myoor.com/karnaadakas-karunaanithi/

 

ஆறு மாதங்களுக்கு முன்னர் தான் கட்சியை ஆரம்பித்தாரா?

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

 

 பா.ஜ.க. ஒழுங்காக இருந்திருந்தால்...  காங்கிரஸ் ஏன் ஆச்சியைப் பிடிக்கிறது.(பையன் 26 கோவிக்கப் போறான். :D )

 

தென்னிந்யாவுக்கு இது நல்லதல்ல. (தென்னிந்தியா என்றால்... திராவிடர் தேசம்)    :icon_idea:  :lol:  :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

 

 பா.ஜ.க. ஒழுங்காக இருந்திருந்தால்...  காங்கிரஸ் ஏன் ஆச்சியைப் பிடிக்கிறது.(பையன் 26 கோவிக்கப் போறான். :D )

 

தென்னிந்யாவுக்கு இது நல்லதல்ல. (தென்னிந்தியா என்றால்... திராவிடர் தேசம்)    :icon_idea:  :lol:  :D

 

:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.