Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிணமாக பிரசவித்த பெண், உயிரோடு திரும்பிய அதிசயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் இதய மற்றும் நாடி துடிப்பு நின்ற நிலையில் ஒரு குழந்தைக்கு தாயான ஒரு பெண், குழந்தை பிறந்த பின், உயிருடன் திரும்பிய அதிசயம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் மிசவுரி நகரில் வசித்து வருபவர் எரிக்கா நிக்ரெல்லி (32), அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் நாத்தனும் அதே பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.

9 மாத கர்ப்பிணியாக இருந்த எரிக்கா, கடந்த பிப்ரவரி மாதம் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது, தன்னிலை இழந்து மயங்கி விழுந்தார்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் அப்பெண்ணின் நாடித்துடிப்பும், இதயத்துடிப்பும் முற்றிலுமாக அடங்கிப்போய் விட்டது.

அவர் இறந்துவிட்டதாக அறிவித்த மருத்துவர்கள், வயிற்றில் இருந்த குழந்தையை மட்டும் அவசர அவசரமாக ‘சிசேரியன்’ அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர்.அதிர்ஷ்டவசமாக குழந்தையின் நாடி மற்றும் இதயத்துடிப்பு நன்றாகவே இருந்தது.

அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்த பின்னர், எரிக்காவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்த மருத்துவர்கள், அவரது இதயம் துடிப்பதை கண்டு அதிர்ந்து போனார்கள். இதனையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து இயல்பு நிலைக்கு வரவழைத்தனர்.

இந்த அரிய சம்பவம் தொடர்பாக கருத்து கூறிய மருத்துவர்கள் ‘பத்தில் ஒன்பது பேர், முதல் கட்ட மாரடைப்பில் உயிரிழந்து விடுவார்கள். அபூர்வமாக எரிக்கா போல் சிலர் உயிர் பிழைக்கவும் வாய்ப்புள்ளது’ என்றனர்.

எரிக்காவிற்கு பிறந்த குழந்தைக்கு எலைனா எனப் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.tamil.webdunia.com/newsworld/news/international/1305/27/1130527013_2.htm

 

  • கருத்துக்கள உறவுகள்

எரிக்காவின் கணவர் பெயரை நந்தன் என்று வாசித்துவிட்டு அதிர்ச்சி அடைந்தேன்.. :(:D

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி.. தாய்க்கு இதயத் துடிப்பு நின்ற உடன சிசுவுக்கும் நிற்கும் என்றது எந்த சாத்திரத்தில சொன்னவை..! அதிஸ்டவசமாக குழந்தையின் இதயத் துடிப்பு நிற்கல்லையாம் என்று செய்தி போட்டிருக்காங்கள்..! தாயின் இதயத் துடிப்புக்கும் குழந்தையின் இதயத்துடிப்புக்கும் தொடர்பில்லை. அது தனிய. இது தனிய. அதுவும் பிறக்கும் தறுவாயில் உள்ள குழந்தைக்கு இதயம் தன்பாட்டில்.. நல்லாத் துடிக்கும். ஒரே ஒரு பிரச்சனை தான்.. ஒக்சிசன் மற்றும் குளுக்கோஸ் சப்பிளை. மற்றும் கழிவகற்றல். தாயின் குருதி ஓட்டமே இதனை சூலகத்தின் ஊடாக குழந்தைக்கு செய்கிறது. ஏனெனில் வயிற்றில் உள்ள சிசு சுயாதீமான சுவாசிக்காது. தாயின் குருதிச் சுற்றோட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டால் (அதாவது தாயின் இதயம் துடிப்பது நின்று விட்டாலும்..) குழந்தையின் இதயத் துடிப்பு உடன நிற்கனுன்னு அவசியம் கிடையாது. அது குழந்தையின் இதயத்திற்கு தேவையான ஒக்சிசன்.. மற்றும் சக்தி கிடைக்கும் வரை இயங்கும்..!

 

இதயச் சத்திர சிகிச்சைகளின் போதும் இதயத் துடிப்பை நிறுத்தி மீண்டும் இயங்கச் செய்யும் பொறிமுறைகள் உள்ளன. ஆகவே இதொன்னும்.. பெரிய அதிசயம் என்று சொல்வதற்கில்லை. ஆனால் அசாதாரணமாக ஒரு நிகழ்வு... எனலாம்..! :):icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இந்த அரிய சம்பவம் தொடர்பாக கருத்து கூறிய மருத்துவர்கள் ‘பத்தில் ஒன்பது பேர், முதல் கட்ட மாரடைப்பில் உயிரிழந்து விடுவார்கள். அபூர்வமாக எரிக்கா போல் சிலர் உயிர் பிழைக்கவும் வாய்ப்புள்ளது’ என்றனர்."

 

பத்தில ஒருவர் தப்புவது அரிய நிகழ்வா? என்ன கோல்மாலோ ஆண்டவருக்குதான் வெளிச்சம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 தாயும், சேயும் நலமாக இருப்பது மகிழ்ச்சி.   :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.