Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகை மீது தலிபான்கள் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1622534932afgan-2.jpg

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகை மீது தலிபான்கள் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகையின் மீது இன்று (25) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

தலிபான் ஆயுததாரிகள் ஆப்கானிஸ்தான் நேரப்படி இன்று காலை 6.30 மணியளவில் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். 

ஜனாதிபதி மாளிகை பாதுகாப்பு படையினர் மற்றும் மாளிகைக்கு அருகிலுள்ள கட்டடங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியின் பாதுகாவலர்களுடன் தீவிரவாதிகள் மோதிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் அமெரிக்க உளவுப் பிரிவான சீ.ஐ.ஏ வின் காரியாலயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
  • கருத்துக்கள உறவுகள்

CIAயே றூட்போட்டுக் கொடுத்திருக்கலாம்.....

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி மாளிகையின் மீது தலிபான்கள் அதிரடித்தாக்குதல்…

 

 

காபூலின் மிகப்பாதுகாப்பான பகுதிகளில் ஒன்றான ஜனாதிபதி மாளிகைப்பிரதேசத்தினுள் ஊடுருவிய தாலிபான் தற்கொலைப்படையினர் ராணுவத்தினரினருடன் ஒருமணித்தியாலத்துக்கும் மேல் நீடித்த மோதலை தொடர்ந்து ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே கார் குண்டு ஒன்றை வெடிக்கவைத்துள்ளனர்.

 

இதே நேரம் சண்டைகள் ஆப்கானிஸ்த்தானின் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அருகாமையிலும் சீ.ஜ.ஏ யினால் முன்னர் பாவிக்கப்பட்டு வந்த அரியானா கொட்டலுக்கு அருகாமையிலும் இடம்பெற்றுள்ளன.

 

மூன்று கட்டடம்களும் இலக்குவைக்கப்பட்டதாக தாலிபான் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 2008 இல் வருடாந்த ராணுவ அணுவகுப்பில் இடம்பெற்ற தக்குதலில் ஜனாதிபதி ஹமிட் கர்சாயி மயிரிழையில் உயிர் தப்பிய தாக்குதலின் பின்னர் தலைநகரில் இடம்பெற்ற தாக்குதல்களில் மிக அதிர்ச்சிகரமானதாக்குதல் இதுவாகும்.


மத்திய சாஸ் டாராக் பகுதியில் இந்ததாக்குதல் காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காரில் வந்திறங்கிய நான்கு ஆயுததாரிகள் போலியான ஆவணங்களை காட்டிவிட்டு ராணுவ சோதனைசாவடியினூடாக நுழைய முற்படுகையில் ராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டவேளை ஆயுததாரிகள் தாக்குதலை ஆரம்பித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

சர்வதேச உதவிப்படையினர் போன்று தோற்றமளிக்கும் வகையில் குறித்த ஆயுததாரிகள் இராணுவ உடையை அணிந்திருந்ததாகவும் தாம் பிரயாணம் செய்த காரில் ரேடியோ அன்ரெனாக்களை பொருத்தி இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து ஆயுததாரிகளும் கொல்லப்பட்டுவிட்டதாகவும் ராணுவத்தினர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவுத்துள்ளார்.

 

அதிபர் ஹமிட் கர்சாயி தாலிபான்களுடன் நடந்துகொண்டிருக்கும் சமாதான முயற்சிகள் பற்றி விவரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட செய்தியாளர் மாநாடு ஒன்றுக்காக செய்தியாளர்கள் ஒன்றுகூடி இருந்த வேளை ஜனாதிபதி மாளிகையின் கிழக்கு வாசல் பகுதியில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

 

தக்குதல் நடந்த வேளை அதிபர் ஹமிட் கர்சாயி அதிபர் மளிகையில் இருந்தாரா என்பதை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.

 

சம்பவ இடத்துக்கு அருகாமையல் வகுப்புகளுக்கு சென்றுகொண்டிருந்த பாடசாலை மணவர்களும் தாக்குதலில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

 

தாக்குதல் இடம்பெற்ற பகுதி அமெரிக்க தூதரகம்,நேட்டோ படைகளின் தலைமையகம் போன்றவற்றை உள்ளடக்கிய உயர் பாதுக்காப்பு பிரதேசமாகும்.

காபூல் செய்தியாளர்களிற்கு அனுப்பி வைத்துள்ள குறுந்தகவலில் தலிபான்கள் தாமே இந்த தாக்குதலை செய்ததாக அறிவித்துள்ளனர்.

 

இதேவேளை நாட்டின் தெற்குப்பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு ஒன்றில் திருமண நிச்சயதார்த்தம் ஒன்றிற்காக காரில் பிரயாணம் செய்து கொண்டிருந்த எட்டுபெண்களும் ஒரு சிறுவனும் கொல்லப்பட்டுள்ளனர்.

 

தெருவோரத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு ஒன்று பொதுமக்கள் பயணம் செய்த கார் ஒன்றின்மேல் வெடிக்கவைக்கப்பட்டதில் தமது மகனின் திருமண நிச்சயதார்த்துக்காக மணப்பெண்ணின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டுப்பெண்களும் ஒரு சிறுவனும் கொல்லப்பட்டதாகவும் சாரதியும் மேலும் இரண்டு பெண்களும் காயமடைந்துள்ளதாகவும் கந்தகார் பிரதேசத்துக்கான பொலிஸ் பேச்சாளர் Ghorzang Afridi தெரிவுத்துள்ளார்.

 

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

CIA உருவாக்கினது தான் தலிபானே. தலிபானை வைச்சு அமெரிக்கா.. ஆசியாவில் செய்ய வேண்டியதை எல்லாம் செய்துகிட்டுத்தான் இருக்குது. இதெல்லாம் அதுக்கு யுயுபி..! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹமிட் கர்சாயி சி ஐ ஏ யின் சொல்லை கேட்கவில்லை போல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.