Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தண்டவாளத்தில் கிடந்த தர்மபுரி திவ்யாவின் காதல் கணவர் இளவரசன் உடல்- தற்கொலையா? Read more at: http://tamil.oneindia.in/news/2013/07/04/tamilnadu-dharmapuri-ilavarasan-found-dead-suicide-178491.html

Featured Replies

தண்டவாளத்தில் கிடந்த தர்மபுரி திவ்யாவின் காதல் கணவர் இளவரசன் உடல்- தற்கொலையா?

தர்மபுரி: தர்மபுரி கலவரம் வெடிக்கக் காரணமான காதல் ஜோடியில் இளவரசனின் உடல் இன்று ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், மாரவாடியைச் சேர்ந்த தேன்மொழி என்பவரின் மகள் திவ்யா. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டு ஓடினார். இதையடுத்து தலித் மக்களுக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது. 3 தலித் கிராமங்கள் ஒட்டுமொத்தமாக சூறையாடப்பட்டன. இந்த விரக்தியில் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இந் நிலையில் தேன்மொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் தாக்கல் செய்தார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுபடி திவ்யா நீதிமன்றத்தி்ல் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜரான திவ்யா இளவரசனுடன் இனி வாழப் போவதில்லை என்றும் அம்மா முடிவுப்படி தான் நடக்கப் போவதாகவும் தெரிவித்தார். இதனால் இளவரசன் மனமுடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தர்மபுரி அரசு கலைக்கல்லூரியின் பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில் இளவரசனின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. தண்டவாளம் அருகே இருந்த அவரது பைக் மற்றும் கைப்பையை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இளவரசனின் சட்டைப்பையில் 2 கடிதங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டாலும் இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுகிறது. இது தற்கொலையா? அல்லது கொலையா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/07/04/tamilnadu-dharmapuri-ilavarasan-found-dead-suicide-178491.html

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஜாதிகள் ஒழியும்வரை தமிழினம் உருப்படாது திரைப்படங்களிலும் ஜாதிகள் இருப்பது போன்று படம் எடுப்பதை தடை பண்ணவேண்டும். ஊடகங்களிலும் ஜாதிகள் பெயரை உச்சரிப்பதை நிறுத்த வேண்டும் 

  • தொடங்கியவர்

1011933_10200173122150457_498629747_n.jp

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் ராமதாஸ் 2009 ஆண்டு வீதிகளில் இறங்கி தன்னுடைய படை பரிவாரங்களோடு போராடி இருந்தால் இலங்கையில் தமிழர் கொலையை ஓரளவேனும் தடுத்து இருக்கலாம் கேவலம் ஜாதி அரசியல் செய்து ஒரு அப்பாவி இளஞன் கொல்லப்பட்டு விட்டான்......

  • கருத்துக்கள உறவுகள்

தர்மபுரியில் தலித்துக்களுக்கு எதிராக நடந்த, கொள்ளை, தீவைப்பு, சூறையாடல், தலித் பெண்கள்மீதான பாலியல் வன்முறை, இவைகள் அனைத்துக்கும் காரணமாகவிருந்த காதல் ஜோடியில் பெண்ணான திவ்ஜாவை மரம்வெட்டிப் புகழ், சாதீய அரக்கன் ராமதாஸ் அவர்களது வன்முறைக்கும்பலது மிரட்டல் காரணமாகப் பணியவைத்து தாயுடன் திரும்பவும் சேர்த்துவைத்ததோடில்லாமல் இளவரசனை கடத்திக் கொலைசெய்திருக்கின்றது மரம்வெட்டி ராமதாஸது வன்முறைப்படை. ஆரம்பகால விஜயகாந்போல் குடும்ப அரசியலை விமர்சித்துவந்த ராமதாஸ் தனது மகனைக் கட்சியின் முக்கிய பொறுப்புக்களிலும், மத்தியில் அமைச்சராகவும் ஆக்கி அழகுபார்த்தவர். வன்னிய சாதியினரது ஏழ்மை கல்வியறிவின்மை ஆகியவற்றை தனது அரசியலுக்கு சாதிமுலாம் பூசிப் பயன்படுத்திக்கொள்கிறார். தைலாபுரம் தோட்டம் என்பது தனது அடியாட்களது வாழ்விடமாக்கியுள்ள ராமதாஸ் காடுவெட்டி குரு என்பவை தனது அடியாட்கள் கூட்டத்திற்கு தலைமை அடியாளாக நியமித்துள்ளார்.

 

தமிழ் நாட்டில்  மகாவலிபுரத்தில்  அண்மையில் நடந்த பாமாகப் பேரணியில் டாஸ்மார்க் சரக்கடித்துவிட்டு தலித்துக்கள் குடிமனையில் போய் சலம்பல் செய்ததால் காடுவெட்டி உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களை தமிழ்நாடு காவற்துறை கைதுசெய்தபோதிலும் தமிழ் நாட்டில் எதிர்வரும் மத்திய அரசிற்கான தேர்தலில் வெற்றிக்கூட்டணி அமைக்க மரம்வெட்டிக் கோஸ்டி தேவை என்பதை அறிந்து காடுவெட்டி உட்பட இருபதுபேரை மத்திய உள்துறை விடுவித்துள்ளது. இதற்க்குப் பிரதியுபகாரமாக எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் ஈழ ஆதரவுக் கொள்கையுடையோரை ஒன்றுசேரவிடாது பிரித்தாளும் நடவடிகைகளை நடப்பில் உள்ள காங்சிரஸ் அரசு செய்யத் தொடங்கியுள்ளது. மரம்வெட்டி ராமதாஸ் முழுமையான ஈழ ஆதரவாளர் இல்லையெனிலும் இது ஒரு ஆரம்பமே.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே பாட்டாளிமக்கள் கட்சி இரண்டாகப்பிளவு. ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் வேல்முருகன் புதுக்கட்சி ஆரம்பித்துவிட்டார். தலித் வன்னியர் மோதலினால் திருமாவளவனின் விடுதலைச்சிறுத்தைகளும் , இராமதாசின் பாட்டளிமக்கள் கட்சியும் முரண்பட்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் காதல் விவகாரத்தில்... அரசியல் கட்சிகள் தலையிட்டு ஊதிப் பெருப்பித்ததால்...
அந்தப் பெண்ணின் தந்தை தற்கொலை, பெண்ணின் காதலன் கொலை, எத்தனை ஊர் நிம்மதி இழந்து இருக்கின்றது. இது தேவையா...?
அந்தப் பெண்ணை, அந்த இளைஞன் வலுக்கட்டாயமாக திருமணம் செய்யவில்லையே...
காதல் விவகாரங்களில்... எல்லாம் அரசியல் கட்சிகள் ஏன் தலையிடுகின்றன என்று புரியவில்லை. :(

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனைக்கும் காரணம் ராமதாசின் பொறுக்கித்தனமான அரசியல்...

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனைக்கும் காரணம் ராமதாசின் பொறுக்கித்தனமான அரசியல்...

 

வன்னியர்களின் வாக்குகளை முழுவதுமாகப் பெற இராமதாஸ் நடத்திய நாடகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.