Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிக்கப்படும் ஆந்திரா..... புது பெயர் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

29-telangana987-300-jpg.jpg

 

பிரிக்கப்படும் ஆந்திரா.. புது பெயர் என்ன? சீமாந்த்ரா, ராயல தெலுங்கானா, ஹைதராபாத்!

 

ஹைதராபாத்: ஆந்திராவில் உச்சகட்ட பரபரப்பு... மாநிலம் 2 ஆக பிரிக்கப்படுவது உறுதியாகிவிட்டது.. பிரிவினைக்கு எதிராக ஆதரவாக குரல்கள் உரத்து ஒலிக்கின்றன.

 

ஆந்திர மாநிலத்தைப் பொறுத்தவரை 3 பகுதிகள் உள்ளன. தெலுங்கானா, கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய மூன்றையும் உள்ளடக்கியதுதான் ஆந்திர மாநிலம்.

 

1956ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட போது தெலுங்கானா தனி பிரதேசமாகவே இருந்தது. பின்னர் தெலுங்கானா பகுதியும் சில கோரிக்கைகளுடன் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது.

 

ஆனால் தொடர்ந்தும் தெலுங்கானா பகுதி புறக்கணிக்கப்படுவதாகக் கூறி கடந்த அரை அரை நூற்றாண்டு காலமாக தனி மாநிலம் கோரி போராடி வருகின்றனர். இதன் கிளைமாக்ஸாக தற்போது ஆந்திரா பிரிக்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.

 

இருப்பினும் போராட்டக்காரர்கள் கோருவது போல் தனி தெலுங்கானாவாக இல்லாமல் ராயலசீலமாவின் 2 மாவட்டங்களை உள்ளடக்கி 'ராயல தெலுங்கானா'வை உருவாக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. அதாவது 10 தெலுங்கானா மாவட்டங்களுடன் இரண்டே இரண்டு ராயலசீமா மாவட்டங்கள்தானே இணைகிறது.. அதற்காக 'ராயல' தெலுங்கானா என்று வைப்பீர்களா? என்று கேட்கிறது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி.

 

அத்துடன் தெலுங்கானா தவிர்த்த எஞ்சிய ஆந்திர பகுதிக்கு என்ன பெயர் என்பதிலும் சர்ச்சை வெடித்திருக்கிறது. தெலுங்கானா தவிர்த்த பகுதிக்கு 'ஹைதராபாத்' என்ற பெயர் வைக்கலாமா என்று காங்கிரஸ் மேலிடம் பரிசீலித்தது. ஆனால் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்களோ, ஹைதராபாத் நிஜாம் ஆட்சிக்காலத்தை நினைவூட்டுவதாகக் கூறி இதை நிராகரித்துவிட்டனர்.

 

அப்படியானால் 'சீமாந்த்ரா' என்று வைக்கலாமா என்று பரிசீலிக்கப் போய் கடலோர ஆந்திராவின் 9 மாவட்டங்களுடன் ராயலசீமாவின் 2 மாவட்டங்கள்தானே இணைகிறது.. அப்படியெனில் எதற்கு சீமாந்த்ரா? பேசாமல் 'ஆந்திரபிரதேசம்' என்றே வைக்கலாமே என்றும் ஒரு தரப்பு போர்க்கொடி தூக்கியிருக்கிறது..

 

இத்தகைய சர்ச்சைகளால் ஆந்திராவில் பதற்றம் தொடர்கிறது.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

 

  • கருத்துக்கள உறவுகள்

தெலுங்கானாவை பிரிக்க இந்த ,கொல்டிகள், நடத்தும் இப்போராட்டம் பற்றிய செய்திகள், தெலுங்கர்களின் மீது எந்த அனுதாபத்தையும் தரவில்லை. "அடித்துக்கொண்டு ஒழிங்கடா..." என்ற எரிச்சலே மனதில் தோன்றுகிறது.

 

பொழிவாரியாக தென்னிந்தியா பிரிவதற்கும், தமிழர்கள் தங்களின் பூர்வீக நிலங்களை, ஆந்திராவிற்கு தாரைவார்த்துக் கொடுக்கவும் காரணமானவர்கள் இந்த தெலுங்கர்கள். அப்போதைய சென்னை மாநிலத்திலிருந்து ஆந்திரா பிரிக்கப்படும்போது, வடஆந்திராவிலிருந்து பிழைப்பு தேடி வந்த தெலுங்கு பேசும் மக்கள் நெல்லூர்,சித்தூர் பகுதிகளில் குடியேறினர். அப்பகுதிகளின் நிலத்தின் உரிமையாளர்கள் தமிழர்கள்தான். அப்போதைய ஆந்திரா பிரிக்கப்பட அமைத்த படாஸ்கர் குழு, நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல, வாழும் மக்களின் மொழி தான் முக்கியமெனக் கூறி (இதே விதி, இன்றும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடுக்கி மாவட்டத்தை கேரளாவோடு இணைக்கும்போது பின்பற்றப்படவில்லை) தமிழர்களின் பூர்வீகப் பகுதிகள் அனைத்தையும் ஆந்திராவுடன் இணைக்க வஞ்சகமாக உத்திரவிட்டு தமிழர்களை ஏமாற்றினர். வழக்கம் போல அப்போது அதிகாரத்திலிருந்த நம் 'பேக்கு' தமிழக அரசியல்வியாதிகளும் எதிர்த்துக் குரல்கொடுக்கவில்லை!

இப்போதுள்ள ஆந்திராவின் ராயலசீமா மாவட்டம் தமிழர்களின் பூர்வீக நிலப்பகுதியாகும். ராயலசீமாவிலுள்ள சித்தூர் மாவட்டம், திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வட பெண்ணை ஆறு, பொன்வானி ஆறு, நந்தி மலை இவை எல்லாம் ஆந்திராவோடு தமிழர்களை ஏய்த்து இணைக்கப்பட்டவையாகும்.

மங்கலக்கிழார் , ம்.பொ சிவஞானம் போன்ற தலைவர்கள் மட்டுமே இந்த அநீதியை எதிர்த்து தீவிரமாக போராடினர் .சுதந்திரா கட்சியின் தலைவர் ராஜாஜி மட்டும் இவர்களுக்கு ஆதரவாக இருந்தார் .தீவிர போராட்டத்தின் விளைவாக திருத்தணி, வள்ளிமலை, திருவாலங்காடு போன்ற சில பகுதிகள் மட்டுமே தமிழக்த்திற்கு திரும்ப கிடைத்தன.இதில் வேடிக்கை என்னவெனில் "மதராஸ் மனதே" என சென்னையையும், திருப்பதியோடு தக்கவைக்க் கொல்டிகள் போராடியதுதான். நீதிக் கட்சியில் தமிழர்களின் தலைவர்களாக இருந்த தெலுங்கு தலைவர்கள் இதை எதிர்த்து போராடவில்லை .

1960ல் வரையறுக்கப்பட்ட எல்லைகளின்படி மொத்தம் 32,000 சதுர கிலோ மீட்டர் தமிழர் நிலப்பகுதி ஆந்திராவுடன் அப்பொழுது இணைக்கப்பட்டது.சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சுமார் 525 கிலோ மீட்டர் நிலப்பகுதி ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது . இன்று தமிழர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தி கொள்ளும் தெலுங்கர்கள், அன்று தமிழர்களுக்காக போராடவில்லை. அந்த தெலுங்கு தலைவர்கள், நாங்களும் தமிழர்களே என்று கூறி கூட இருந்தே குழி பறித்து ஆந்திராவை வளப்படுத்தினர்.

 

வழக்கம் போல் தமிழன் ஏமாளியாக நின்றான்!

இன்று தமிழர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தி கொள்ளும் தெலுங்கர்கள், அன்று தமிழர்களுக்காக போராடவில்லை. அந்த தெலுங்கு தலைவர்கள், நாங்களும் தமிழர்களே என்று கூறி கூட இருந்தே குழி பறித்து ஆந்திராவை வளப்படுத்தினர்.

 

வழக்கம் போல் தமிழன் ஏமாளியாக நின்றான்!

 

கருணாநிதியும் தெலுங்கன் தானாமே!

 

தமில்த்தெலுகு என்று ஒரு பெயரை அறிவிக்கலாம் :icon_idea:  :icon_idea:  :icon_idea: . உண்மைதான் தமிழன் இழந்த பகுதிகள் கொஞ்சமில்லை.பக்கத்துக்கு மாநிலங்கள் ஆந்திரா,கர்நாடகா,கேரளா என்று தமிழ் நாட்டின் நிலங்களை ஆக்கிரமிச்சுவிட்டன. அதை இனி அடையவே முடியாது. தமிழனுக்கு வாய்த்த தலைமைகள் அப்பிடி நாம் என்ன பண்ணமுடியும். நெடுமாறன் ஐயா எழுதிய தமிழன் இழந்த மண்,மற்றும் தமிழ்நாடு வந்தேறிகளின் வேட்டைக்காடு என்ற நூல்களை  படித்தபின் எனக்குள் ஒரு வெறி. தமிழ் நாட்டில் ஒரு கிட்லர்  மட்டுமே இழந்த பகுதிகளை மீட்கலாம் என்று .ஏன் என்றால் முந்தய ஜெர்மனியும் கிட்ட தட்ட தமிழ்நாடு போலவே பக்கத்து நாடுகளினால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது கிட்லர் வந்தபிறகே ஓரளவிற்கு ஜெர்மன் மண் ஜெர்மானியர்களுக்கு சொந்தமானது.  கிட்லரின் எனது போராட்டம் என்ற நூலை ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டும் அப்போதுதான் தாங்கள்  இழந்தது என்ன என்று தெரிய வரும் நன்றி ராஜவன்னியன் அண்ணா 

 

ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலுங்கானா உருவாகுவது திட்டதிட்ட உறுதியாகி விட்டது. இந்தப் போராட்டம் சுமார் அரை நூற்றாண்டு வரலாறு கொண்டது. பாஜக காங்கிரஸ் போன்ற பெருநிறுவன கட்சிகளை பொறுத்தவரை தெலுங்கானா பகுதியில் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேறுவார்கள், அதை வைத்து இந்தியாவில் எப்படி ஆட்சி அமைக்கலாம் என்பது தான் அவர்கள் பிரச்சனை. 

தமிழ்நாடு போன்று 40 நா.ம உறுப்பினர்களை கொண்ட மாநிலங்கள் எல்லாம் தங்கள் உரிமையை நிலைநாட்ட போராடுகிறது. இந்திய அரசால் புறக்கணிக்கப்படுகிறது. 10 அல்லது 5 அதற்கும் குறைவான நா. ம உறுப்பினர்கள் கொண்ட வடகிழக்கு மாநிலங்களின் பரிதாப நிலைமை சொல்ல வேண்டியது இல்லை. இந்திய அரசின் சுரண்டலுக்கு கடுமையாக ஆட்பட்டுள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் உரிமைகளை அவர்கள் எவ்வாறு தக்க வைத்துக் கொள்வார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். 

எனினும் தமிழர்கள் நாம் கவனிக்க வேண்டியது. ஒரு மாநிலம் உருவாகுவதற்கு 50 ஆண்டுகள் போராட்டம் தேவைப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு தனக்கான தன்னாட்சி அதிகாரம் கோரி இன்னும் போராடத் தொடங்கவே இல்லை. இன்னும் நமது தமிழ்த் தேச விடுதலை கனவு என்பது நெடுந்தூரத்தில் தான் உள்ளது. இன்னும் எத்தனை ஆண்டுகள் அதற்காக நாம் போராட வேண்டி உள்ளது? 

இதை உணர்ந்து நாமும் நமக்கான தன்னாட்சி அதிகாரம் கோரும் போராட்டத்தை இன்றிலிருந்தே தீவிரப்படுத்துதல் வேண்டும். இல்லையெனில் நாளை தமிழ்நாடு தமிழர்கள் வசம் இருக்காது. இந்தியம் விழுங்கி ஏப்பம் விட்டிருக்கும்.

 
நன்றி முகனூல் நண்பர் 

 

  • கருத்துக்கள உறவுகள்

    தமிழனைச் சுற்றி இருக்கும்   எல்லாஇன மக்களிடமும் வஞ்சகமில்லாமல்  வஞ்சகமும் துரோகமும் நிறைந்திருக்கின்றன .தெலுங்கன் ,மலையாளி, கன்னடன் ,சிங்களவன் எல்லாருமே தங்கள் காரியத்தில் கண்ணாகவே இருக்கின்றனர்.

    தமிழனைச் சுற்றி இருக்கும்   எல்லாஇன மக்களிடமும் வஞ்சகமில்லாமல்  வஞ்சகமும் துரோகமும் நிறைந்திருக்கின்றன .தெலுங்கன் ,மலையாளி, கன்னடன் ,சிங்களவன் எல்லாருமே தங்கள் காரியத்தில் கண்ணாகவே இருக்கின்றனர்.

 

தமிழனும் லேசுப்படவனே!

கனடா வரை ஓடினாலும் ------- தமிழ் அரசியல்வாதிகளைப் பிடித்து, தங்கள் பிள்ளைகளுக்கு ஹிந்திய புலமைப்பரிசில் பெற்று பல்கலைக்கழகங்களில் அனுமதி வாங்கிவிடுவார்கள்.

 

Edited by நிழலி
தணிக்கை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமில்த்தெலுகு என்று ஒரு பெயரை அறிவிக்கலாம் :icon_idea:  :icon_idea:  :icon_idea: . உண்மைதான் தமிழன் இழந்த பகுதிகள் கொஞ்சமில்லை.பக்கத்துக்கு மாநிலங்கள் ஆந்திரா,கர்நாடகா,கேரளா என்று தமிழ் நாட்டின் நிலங்களை ஆக்கிரமிச்சுவிட்டன. அதை இனி அடையவே முடியாது. தமிழனுக்கு வாய்த்த தலைமைகள் அப்பிடி நாம் என்ன பண்ணமுடியும். நெடுமாறன் ஐயா எழுதிய தமிழன் இழந்த மண்,மற்றும் தமிழ்நாடு வந்தேறிகளின் வேட்டைக்காடு என்ற நூல்களை  படித்தபின் எனக்குள் ஒரு வெறி. தமிழ் நாட்டில் ஒரு கிட்லர்  மட்டுமே இழந்த பகுதிகளை மீட்கலாம் என்று .ஏன் என்றால் முந்தய ஜெர்மனியும் கிட்ட தட்ட தமிழ்நாடு போலவே பக்கத்து நாடுகளினால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது கிட்லர் வந்தபிறகே ஓரளவிற்கு ஜெர்மன் மண் ஜெர்மானியர்களுக்கு சொந்தமானது.  கிட்லரின் எனது போராட்டம் என்ற நூலை ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டும் அப்போதுதான் தாங்கள்  இழந்தது என்ன என்று தெரிய வரும் நன்றி ராஜவன்னியன் அண்ணா 

நான் எப்பவும் ஹிட்லர் பக்கம் தான்.

இனி சிரஞ்சீவி படம் வராதா

 

அரசியல் மாங்குனி :p

  • கருத்துக்கள உறவுகள்
தனித்தெலங்கானா பற்றி 30-ந்தேதி முடிவு
 
AndhraPradesh.jpg

தெலங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை டெல்லியில் நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் காரியகமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது.

எனவே, தனித் தெலங்கானா பற்றிய அறிவிப்பு அன்றே வெளியாகலாம் என்பதால், கூடுதலாக ஆயிரம் துணை ராணுவப் படையினரை, மத்திய உள்துறை அமைச்சகம் ஆந்திராவுக்கு அனுப்பியுள்ளது.

ஏற்கனவே உள்ள ஆயிரத்து 200 துணை ராணுவப் படையினருடன், இவர்கள் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

இந்நிலையில், ஆந்திராவில் தனித் தெலங்கானா கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டங்கள் மீண்டும் வலுப்பெற்றுள்ளன.

உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர்.

இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல்களை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர்.

இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் பல்லம் ராஜு, கே.எஸ் ராவ், சிரஞ்சீவி, புரந்தேஸ்வரி, ஆந்திர முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி ஆகியோர் பிரதமர் மன்மோகன் சிங்கையும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் நேரில் சந்தித்து தெலங்கானாவுக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர்.

எனினும், தனித் தெலங்கானா உருவாக்கும் முடிவில், காங்கிரஸ் மேலிடம் உறுதியாக இருப்பதாக கூறப்படுவதால், ஆந்திர முதல்வர் உள்பட அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்வார்கள் எனத் தெரிகிறது.

 

http://puthiyathalaimurai.tv/upa-set-to-decide-on-telangana-centre-sends-more-forces-to-andhra

 

தனி தெளுங்கானாவிற்காக போராடி, மத்திய அரசை அவன் அடிபணிய வச்சுட்டான், ஆனால் , சித்தூர், நெல்லூர் போன்ற தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தமிழ் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள் , இவை முன்னர் தமிழ் நாட்டிற்கு உரிய பகுதிகள், தமிழர் அல்லாத திராவிடர்களால், அல்லது தமிழ் இந்திய விதிகளால் இந்த பகுதிகள் தாரை வார்ரக்கபட்டன், திருப்பதி உட்பட, திருப்பதி தமிழர்களுக்கு சொந்தமான் ஆலயம், எந்தவிதமான அடிப்படை வசதிகளுமற்ற பகுதிகளாக்க பட்டு விட்டன இந்த சித்தூர், நெல்லூர் போன்ற பகுதிகள்,, தமிழர்கள் இங்கே வாழ்வதால் ஆந்திர அரசு புறக்கணிக்கிறது.

தனி தெலுங்கான அமைந்தால் இந்த பகுதிகள் , எந்த மாநிலத்திற்கு சொந்தமாகும்?, இநத பகுதியில் வாழும் மக்கள் எந்த மாநிதுடன் சேந்து வாழ விரும்புவார்கள்? , இதை பற்றி ஒருபோதும் நம்ம தமிழ் நாடு திராவிட கட்சி காரன் பேசமாட்டான், ஏன்னா , அவன் தமிழன் இல்லையே. ஆனாபடியால் , அங்கே வாழும் தமிழ் மக்கள் தான் அந்த கோரிக்கையை முனவைது வேண்டும், 

தனி தெளுங்கானாவிற்காக போராடி அவர்கள் வெற்றி பெற முடியுமாயின் , இது ஏன் ,முடியாது?, நம்மை ஒன்று படவோ, நம்மை போராடவோ, எந்த திராவிட கட்சிகாரனும் , அனுமத்தித்தது இல்லையே. நாமளும் நமது போராட்டங்களை வலுவானதாக நடத்தியதில்லை.

அப்புறம் கும்முறான், குடயுறான் என ஓலமிடுவது தான் நம்ம புளப்பா போச்சு!, இது ஒரு தக்க தருணம், இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்க வாய்ப்பில்லை.

 

972300_698497320177353_499741364_n.jpg

இந்த "எழுமலையான்" யார் பக்கம்!????

 

நன்றி முகனூல் நண்பர்கள் 

Edited by யாழ்அன்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.