Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரன் மேஜர் சிட்டு நினைவாக......!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்றோ ஒரு நாள், எனது அபிமானத்துக்குரிய கள உறவு, சாந்தியின் வேண்டுகோளுக்கு இணங்க, மாவீரன் சிட்டுவின் நினைவாக,அவரது வலைத்தளத்துக்காக அடியேன் எழுதிய கவிதையொன்றை, இன்று தேசக்காற்று இணையதளத்தில் கண்டேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்ற ஆவலில், இங்கு பதிகின்றேன்!

 

மேஜர் சிட்டுவுக்கு எனது வீர வணக்கங்களுடன்......

 

Mejar-Siddu-8.jpg

 

மரணத்தின் முகநூலுக்கு,
மனம் விரும்பி, நட்பு நாடிய,
மாவீரர்கள் வரிசையில்,
முண்டியடித்து முன்னேறியவன்!

 

வாழ்வின் வசந்தத்திற்கு
விடை கொடுத்தனுப்பிய,
வீரத் தளபதிகளின் வரிசையில்
விதையாகி வீழ்ந்தவன்!

 

வீசும் வாடைக் காற்றின்
வெறி அடங்கும் ஓசையில்…

அசையும் காவோலைகளின்
சர சரப்புச் சத்தத்தில் ,
ஆசையுடன் நிலம் தழுவும்
அலைகளின் முனகலில்,
சிற்றாறுகளின் சிரிப்பொலியில்,
சங்கீதம் படித்தவன்!

 

ஓயாத அலைகளின் காலத்தில்,
வெற்றி நடை பயின்ற,
வேங்கைகளின் படை நடையில்,
‘கம்பீர நாட்டை’ வாசித்தவன்!

கலைப் பண்பாட்டுக் கழகத்தின்.
காவலனாய் வாழ்ந்தவன்!

 

கறையாக நிலைத்து விட்ட
கண்ணீரால் காவியங்களும்,
சிதறிப் போன சொந்தங்களின்,
செந்நீரால் ஓவியங்களும்
செருக்களத்தில் வரைந்தவன்!

 

பார் போற்றி நிற்கும்
பாடகனாய் மலர்ந்தவன்!

 

பாசறைக் கீதங்களினால்,
போர்க்களத்தை உயிராக்கி,
குஞ்சும் குருமானுமாய்க்,
கொத்தாக வீழ்தல் கண்டு
நெஞ்சு பொறுக்காது,
போராடப் புறப்பட்டவன்!

 

புறநானூறு தந்த போர் மகனாய்,
போராடி, வீர மரணம் கண்டவன்!

 

கிட்டம்மானின் நினைவு நாளில்,
மொட்டவிழ்ந்த பாடலினால்,
கடலம்மாவிடம் நீதி கேட்டவன்!

 

சின்னச்சின்னக் கண்களில்,
மின்னல் விளையாடும் வேளையில்,
உயிர்ப் பூவை, நிவேதனமாக்கி,
ஓமந்தையில் வீழ்ந்தவன்!

 

போராளிகளின் பாசறையில்,
படைப்பாளியாய் வளர்ந்தவன்!

 

போராட்டமென்ற விருட்சத்தின்,
வேரடி மண்ணாகி நின்று,
போராட்ட காலத்தை,
வரலாறுகளில் வரைந்து,
விடுதலையின் வித்துக்களை,
வீதியெங்கும் விதைத்து,
வீரவரலாறு படைத்து,
விதையாகி வீழ்ந்தவன்!

மாவீரன் மேஜர் சிட்டு….

 

- புங்கையூரான்.

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் கவிதைக்கு

மேஜர் சிட்டு பாடிய சில பாடல்களை கேட்க....

http://thesakkaatu.com/doc759.html

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் குறிப்பாக சிட்டு வீரமரணம் அடைவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் களத்திலே இந்த பாடலை பாடிக்கொண்டு இருந்ததாக அவருடன் இணைந்து களமாடிய தோழர்கள் சொல்லுவார்கள்...

சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்.....

அண்ணன் என்ற நெஞ்சில் நூறு அர்த்தங்களை கூறிடும்....

http://thesakkaatu.com/uploads/2013/01/21-Cinna-Cinna-Kannil.mp3

http://thesakkaatu.com/uploads/2013/01/21-Cinna-Cinna-Kannil.mp3

விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் ‘உயிர்ப்பூ’.

இப்படத்தில் சிட்டண்ணன் பாடும் ஒரு பாடல் வருகிறது.

ஒருமுறை கேட்டால் யாரையும் கட்டிப்போட்டுவிடும் பாடல்.

“சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்”

சிட்டண்ணனின் புகழ்பெற்ற பாடல்களில் இப்பாடல் எப்போதும் முதன்மையாக இருக்கும்.

கண்ணீரில் காவியங்கள் தொடங்கி இறுதியாக அவர் பாடிய பாடல் . ‘சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்’ என்ற சோலைச் சிறுவர்களின் இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல்வரையும் சுமார் 75 பாடல்களைப் பாடியிருக்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் குறிப்பாக சிட்டு வீரமரணம் அடைவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் களத்திலே இந்த பாடலை பாடிக்கொண்டு இருந்ததாக அவருடன் இணைந்து களமாடிய தோழர்கள் சொல்லுவார்கள்...

சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்.....

அண்ணன் என்ற நெஞ்சில் நூறு அர்த்தங்களை கூறிடும்....

http://thesakkaatu.com/uploads/2013/01/21-Cinna-Cinna-Kannil.mp3

http://thesakkaatu.com/uploads/2013/01/21-Cinna-Cinna-Kannil.mp3

விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் ‘உயிர்ப்பூ’.

இப்படத்தில் சிட்டண்ணன் பாடும் ஒரு பாடல் வருகிறது.

ஒருமுறை கேட்டால் யாரையும் கட்டிப்போட்டுவிடும் பாடல்.

“சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்”

சிட்டண்ணனின் புகழ்பெற்ற பாடல்களில் இப்பாடல் எப்போதும் முதன்மையாக இருக்கும்.

கண்ணீரில் காவியங்கள் தொடங்கி இறுதியாக அவர் பாடிய பாடல் . ‘சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்’ என்ற சோலைச் சிறுவர்களின் இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல்வரையும் சுமார் 75 பாடல்களைப் பாடியிருக்கிறார்.

அந்தச் சம்பவத்தைத் தான், பின்வரும் வரிகள் மூலம் சொல்ல விழைந்தேன், சுண்டல்!

 

சின்னச்சின்னக் கண்களில்,

மின்னல் விளையாடும் வேளையில்,

உயிர்ப் பூவை, நிவேதனமாக்கி,

ஓமந்தையில் வீழ்ந்தவன்!

 

அதை நினைவூட்டியமைக்கு நன்றிகள், சுண்டல்! :D 

  • கருத்துக்கள உறவுகள்

மேஜர் சிட்டு பாடிய பாடல்கள் கீழ்வரும் இணைப்பில் கேட்கலாம் :-

 

http://chiddu.com/ca...egory/பாடல்கள்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.