Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாடு தனிநாட்டு கோரிக்கையை கையில் எடுக்குமா?

Featured Replies

"தமிழ்நாட்டை அவமதிக்கும் இந்திய மத்திய அரசு தமிழர்களை இப்படி அவமதிப்பது இந்திய அரசின் பாரபட்ச செயட்பாடுகள் வெளிப்படுகின்றன. இதுபோன்ற அவமதிப்புகள் தமிழ்நாட்டை பிரிக்க இந்தியா விரும்புகிறதா என்ற கேள்வி தமிழர்கள் மனதில் வெளிப்படுவது தவிர்க்க முடியாதது இது போன்ற செயற்பாடுகளை கட்சி வேறுபாடு இன்றி எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும்." 
சரவணை மைந்தன் 
 
jayalalitha.jpg
NEWS
 
தமிழகத்தை சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிக்கே இந்த அவமானம் என்றால், இந்திய அரசு சராசரி தமிழர்களை எப்படி மதிக்கும், ஈழ தமிழர்களை எப்படி நடத்தும் என சொல்ல வேண்டியதே இல்லை. தமிழர்களை அவமதிப்பது என்பது இந்திய அரசு அதிகாரிகளுக்கு பிடித்த ஒரு செயல்.
தமிழகத்தை ஒரு அடிமை மாநிலமாகவே இந்தியா பார்க்கிறது. திருச்சியில் வரவேற்புக்காக வந்த டி.ஜி.பி.யை சிறப்பு பாதுகாப்புக்குழு (எஸ்.பி.ஜி.)
அதிகாரி தடுத்ததாகவும், இதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
பிரதமருக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மன்மோகன்சிங்க்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ‘பெல்’ நிறுவனத்தின்
தொழிற்சாலை பிரிவை தொடக்கி வைப்பதற்காக 2–ந்தேதி திருச்சிக்கு வந்திருந்தீர்கள். தமிழக அரசின் சார்பில் உங்களை வரவேற்பதற்காக திருச்சி மாவட்ட கலெக்டரை தவிர்த்து,
நிதித்துறை அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர், காதி மற்றும் கிராமத்தொழில்துறை அமைச்சர்,
தலைமைச்செயலாளர், டி.ஜி.பி. ஆகியோரை நியமித்திருந்தேன். இந்த அதிகாரிகளுடன், நீங்கள் வந்த விமானத்துக்கு அருகே ஏணிப்படி இருந்த
பகுதியை நோக்கி நோக்கிச் டி.ஜி.பி. செல்லும்போது, சிறப்பு பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த
கீழ்நிலை அதிகாரியால் அவர் மூர்க்கத்தனமாக எதிர்கொள்ளப்பட்டுள்ளார். மேலும் விமானத்தை நோக்கி செல்வதற்கும் அவரால் டி.ஜி.பி. தடுக்கப்பட்டுள்ளார். டி.ஜி.பி. தனது சீருடையில் இருந்த நிலையில்கூட இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. ஏணிப்படி பகுதியில் உங்களை வரவேற்பதற்காக யார் யார் வருவார்கள் என்பதற்கான பட்டியல்
உங்களுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. அந்த பட்டியல் 1–ந்தேதி உங்கள் அலுவலகத்தால்
பெறப்பட்டுவிட்டது என்று உறுதியும் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் டி.ஜி.பி.யின் பெயரும்
இடம்பெற்றுள்ளது. பிரதமர் வரவேற்பு மற்றும் விடையளிக்கும் நபர்களில் டி.ஜி.பி.யின் பெயர் இடம் பெற்றிருந்தாலும் கூட, அதை உங்கள் அலுவலகம் உறுதி செய்திருந்தும் கூட, டி.ஜி.பி.க்கு ஏற்பட்ட இந்த ஒழுக்கக்கேடான நிலை,
சிறப்பு பாதுகாப்புக்குழு அதிகாரிகளின் ஒழுங்கீனத்தைக் காட்டுகிறது. மாநிலத்தின் தலைமைப் பதவியில் இருக்கும் போலீஸ் அதிகாரியான டி.ஜி.பி.யை, அதுவும் அவர் அந்த பதவிக்கான சீருடையை அணிந்திருந்த நிலையில், அவரை அடையாளம் காணமுடியாத எஸ்.பி.ஜி.யை நினைக்கும்போது ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் தமிழ்நாட்டுக்கு வரும்போது அமைதியாகவும், இடையூறின்றியும் வந்து செல்லும் சூழ்நிலையை உருவாக்குவதற்கான பொறுப்பை செய்திருந்தவர் அந்த டி.ஜி.பி.தான் என்பதையும் உங்களிடம்
தெரிவிக்கிறேன். எனவே நீங்கள் இந்த விவகாரம் குறித்து விசாரித்து, அந்த சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். எதிர்காலத்தில் இதுபோன்ற குறைபாடுகள் நேராமல் இருப்பதற்குரிய ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

அலோ மெசியு மன்மோகன் சிங்கனா! கேட்கிறதா? தமிழகத்தில்  தானை தளபதி இப்போ இல்லை. அவர் போய்ச் சேர்ந்து மூனுவருடம். எனவே D.G.P தான் வருவார். வந்தா ஒழுங்கா வந்தமோ, வேலையை கவனிச்சமோ என்று இருந்துங்க. நம்ம ஆபிசர்களிலே கையை போட்டு, கீட்டு அவங்க மானத்தை வாங்கினீங்க அப்புறம் அடுத்தடவை வரும் போது ......

  • கருத்துக்கள உறவுகள்

அலோ. பிரதமர்,

நீங்கள் தொடர்ந்தும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டால், நாங்கள் மேலும் பணிந்து போவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியேதும் இல்லை, என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்! :D

 

தமிழக மூனா!

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு சிங்களவன்தான் சரி.. துவக்குப் பிடியால் ஒரு போடு. பிறகு அவனைப் பிடிச்சு உள்ளை போடு.. அதுக்குப் பிறகு வெயிலில நிண்டதால் கிறுதி வந்தது எண்டு ஆளை வெ ளியில விடு.. :o

அடுத்தமுறை வடக்கன் தமிழ்நாட்டுக்கு வரும்போது ஒரு போடு போட்டு அனுப்பும்படி டிஜிபி அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.. :D

 தமிழ் நாட்டை இந்தியாவின் ஒருமாநிலமாக மதிக்காவிட்டால் - பிரிந்து போவதைத்தவிர வேறு வழியுள்ளதோ?

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு சிங்களவன்தான் சரி.. துவக்குப் பிடியால் ஒரு போடு. பிறகு அவனைப் பிடிச்சு உள்ளை போடு.. அதுக்குப் பிறகு வெயிலில நிண்டதால் கிறுதி வந்தது எண்டு ஆளை வெ ளியில விடு.. :o

அடுத்தமுறை வடக்கன் தமிழ்நாட்டுக்கு வரும்போது ஒரு போடு போட்டு அனுப்பும்படி டிஜிபி அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.. :D

 

 

அதுக்குத்தானே

தற்பொழுது

தொப்பி  போட்டவர்களை  பிரதமர்   பதவியில் வைத்திருக்கின்றோம்

அவன்  அடிப்பான்  என்று  தெரியும்

நாம் அதைத்தடுக்குமுடியாது என்றும்  தெரியும்

வேறு  வழி...............???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.