Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலோலி பல்லப்பை கிராமத்தில் கிணறு ஒன்றிலிருந்து மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

pluloly_CI.JPG

 

வடமராட்சியின்  புலோலிப்பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பல்லப்பை கிராமத்தில்  கிணறு ஒன்றில் இருந்து 17 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள்; மீட்கப்பட்டுள்ளன என குளோபல் தமிழ்ச்செய்தியாளர் தெரிவித்துள்ளார். எனினும் அவை அனைத்தையும் உரப்பைகளினுள் படையினர் எடுத்துச்சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த நிலையில். இந்த பகுதிகளில் உள்ள ஏனைய கிணறுகளை சுத்தம் செய்ய வேண்டாம் என்று இராணுவம் காணி உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அண்மையிலேயே மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளினில் தமது மூடப்பட்ட கிணறுகளை அகழ தொடங்கியிருந்தனர்.அவ்வாறு அகழும் பணிகள் நடந்து கொண்டிருக்கையினிலேயே மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள்; மீட்கப்பட்டுள்ளன.இது தொடர்பினில் அருகாகவுள்ள படை முகாமிற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து நேரினில் வருகை தந்த படையினர் அவை அனைத்தையும் உரப்பைகளினுள் படையினர் எடுத்துச்சென்றுள்ளனர் என குளோபல் தமிழ்ச்செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
 
 
1996ம் ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்டு சுமார் 17 வருடங்களுக்கு பின்னர் இந்த காணிகளும், வீடுகளும் அவற்றின் உரிமையாளர்களுக்கு மீள வழங்கப்பட்டிருந்தன. எனினும் இந்த பகுதிகளில் உள்ள கிணறுகளில் நூற்றுக்கும் அதிகமான சடலங்கள் காணப்படுவதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் வழங்க கூடாது என்றும், இராணுவத்தினர் பொதுமக்களை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
 
வடமராட்சிப்பகுதியினில் இராணுவத்தின் பிரதான முகாமாகவும் சித்திரவதை கூடமாகவும் பல்லப்பையே இருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/95312/language/ta-IN/article.aspx

வடமராட்சியில் படையினரால் விடுவிக்கப்பட்ட பகுதி கிணறு ஒன்றிலிருந்து 17 சடலங்கள் மீட்பு [ Photo/ video]

 

Video

யாழ்ப்பாணம் வடமராட்சியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பல்லப்பை என்ற பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில். இந்த பகுதிகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்ய வேண்டாம் என்று இராணுவம் காணி உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

நேற்று காலை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 15 வருடங்களுக்கு பின்னர் இந்த காணிகளும், வீடுகளும் அவற்றின் உரிமையாளர்களுக்கு மீள வழங்கப்பட்டிருந்தன.

எனினும் நேற்றுக் காலை அதன் கிணறு ஒன்றை சுத்தம் செய்யும் போது, அதில் இருந்து 17 சடலங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து இராணுவம் ஏனைய கிணறுகளையும் சோதனை இட்டுள்ளனர்.

இந்த பகுதிகளில் உள்ள கிணறுகளில் நூற்றுக்கும் அதிகமான சடலங்கள் காணப்படுவதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல் வழங்க கூடாது என்றும், இராணுவத்தினர் பொதுமக்களை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

vadamarachchi_1.jpg vadamarachchi_2.jpg

 

இங்கை ஊரிலை என்ன நடக்குது எண்டு தெரிஞ்ச அறிஞர்கள் கனபேர் சொல்லுங்கினம் உது  புலம் பெயந்தவை அவிழ்த்து விடும் கட்டுக்கதை எண்டு....    

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை ஊரிலை என்ன நடக்குது எண்டு தெரிஞ்ச அறிஞர்கள் கனபேர் சொல்லுங்கினம் உது  புலம் பெயந்தவை அவிழ்த்து விடும் கட்டுக்கதை எண்டு....    

 

 

இப்ப  புலிகள்  இல்லை

அப்ப

அவை யாரை  மெல்லுவதாம்???? :(

இப்ப  புலிகள்  இல்லை

அப்ப

அவை யாரை  மெல்லுவதாம்???? :(

 

ஓ....  சொல்ல மறந்திட்டன் முந்தி கொஞ்சக்காலம் வன்னிப்புலிகள்,  இப்ப புலம்பெயர்ந்த புலிகள்....  !    

 

ஆரம்பம் முதலே இராணுவத்தாலை அங்கை யாரும் காணாமல்  போனது கிடையேதே... !  

  • கருத்துக்கள உறவுகள்

ஓ....  சொல்ல மறந்திட்டன் முந்தி கொஞ்சக்காலம் வன்னிப்புலிகள்,  இப்ப புலம்பெயர்ந்த புலிகள்....  !    

 

ஆரம்பம் முதலே இராணுவத்தாலை அங்கை யாரும் காணாமல்  போனது கிடையேதே... !  

 

அதுக்குள்ள

தமிழ்தேசியவாதிகள்   என்ற  ஒன்றும்  கடிபடுகுது.

சத்தியமா  எனக்கு அர்த்தம்  தெரியல

உங்களுக்கு.............?

இவை எல்லாம் fresh body யா? இல்லைன்னா ஒரு 5-6 வருச பழசா?

இவை எல்லாம் fresh body யா? இல்லைன்னா ஒரு 5-6 வருச பழசா?

 

 

புதுசு எண்டால் என்ன பங்கு கேட்டு வீட்டை கறி வைக்க போறீயளோ...??  :unsure:

வழமை போல் இல்லையென்று பொய் சொல்லியுள்ளார்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.