Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருங்கிய தோழன்/தோழியை திருமணம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்று சொல்வார்கள். அந்த திருமணம் செய்யும் போது, திருமணம் செய்து கொள்ளப் போகும் தெரியாதவராக இருந்தால், அவர் எப்பேர்பட்டவர் என்பது தெரியாமல், மனமானது ஒருவித அழுத்தத்துடனும், படபடப்புடனும் இருக்கும். ஆனால் அந்த திருமணமானது விருப்பப்பட்டவருடன் நடந்தால், அப்போது வாழும் வாழ்க்கையே ஒரு தனி சுகம் தான். மேலும் அந்த வாழ்க்கையானது இனிமையாக செல்லும். அந்த வகையில் திருமணம் செய்து கொள்ள போகும் நபர், மிகவும் நெருங்கிய நண்பனாகவோ/தோழியாகவோ இருந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்ததுண்டா? ஆம், தெரியாதவரை திருமணம் செய்து கொண்டு, மனம் ஒத்துப் போகாமல் இருந்து, அடிக்கடி சண்டை போடுவதை விட, நன்கு புரிந்து கொண்டு, காதல் மலர வைத்த தோழன்/தோழியை மணந்தால், நிறைய நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, இந்த கட்டுரையானது திருமணம் என்று வீட்டில் பேசும் போது, காதல் செய்தவரை மணப்பதா அல்லது வீட்டில் பார்ப்போரை மணப்பதா என்ற குழப்பத்தில் இருப்போர் படிக்க வேண்டும். ஏனெனில் காதலை மலர வைத்த நெருங்கிய தோழன்/தோழியை திருமணம் செய்து கொண்டால், நிறைய நன்மைகள் கிடைக்கும். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா!!! * நண்பர்களை மணந்து கொள்ளும் போது, அவர்களுக்கு நம்மைப் பற்றிய கடந்த கால வாழ்க்கைப் பற்றி நன்கு தெரியும். மேலும் விருப்பங்கள், உணர்ச்சிகள் போன்றவற்றை நன்கு புரிந்திருப்பதால், திருமணத்திற்கு பின் நல்ல புரிதலுடன் சந்தோஷமான வாழ்க்கை வாழ முடியும். * புதிய நபரை திருமணம் செய்து கொண்டு, அவர்களுடன் சகஜமாக பழகுவதற்கு பல மாதங்கள் ஆகலாம். மேலும் அத்தகையவர்களிடம் சாதாரணமாக பழகுவதற்கு ஒருசில பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டி வரும். ஆனால் அதுவே தோழன்/தோழியாக இருந்தால், சாதாரணமாக சங்கடம் ஏதுமின்றி சகஜமாக பழகலாம். * நண்பர்களை மணந்து கொள்வதில் உள்ள நன்மைகளில் முக்கியமானது, மனதில் இருக்கும் கோபம், பொறாமை போன்றவற்றை வெளிக்காட்ட முடியும். இதனால் இருவரும் சிறு சண்டைகளுக்காக பிரியும் நிலை இருக்காது. ஆனால் வெளிநபராக இருந்தால், மனதில் வைத்து கஷ்டப்பட வேண்டியிருக்கும். எதையும் வெளிப்படையாக பேச முடியாது. உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாது. * நெருங்கிய தோழன்/தோழி வாழ்க்கைத் துணையாக வந்தால், வாழ்க்கையில் போர் அடிக்காது. இருவரும் மனம் விட்டு பேசுவதற்கு நிறைய டாபிக் இருக்கும். மேலும் உங்களுக்கு பிடித்தது ஏற்கனவே அவர்களுக்கு தெரிந்திருப்பதால், உங்களுக்காக அதற்கு தடை போடாமல், உங்களை ஊக்குவித்து, உங்களுடன் சேர்ந்து அதனை மேற்கொள்வார்கள். உதாரணமாக, விளையாட்டுக்கள். * முக்கியமாக தெரியாதவரை திருமணம் செய்த பின்னர் ரொமான்ஸ் செய்வதற்கு சற்று சங்கடமாக இருக்கும். ஆனால் அதுவே நண்பன்/தோழியை மணந்தால், எந்த ஒரு சங்கடமும் இருக்காது. மேலும் அப்போது மேற்கொள்ளும் ரொமான்ஸ் இன்னும் சூப்பராக இருக்கும்.

Thatstamil

நெருங்கிய தோழி இல்லாவிட்டால்? (நீங்கள் பெண்ணாயின் 

தோழி இருக்குமிடத்தில் தோழன் என்று மாற்றி வாசிக்கவும்)

  • கருத்துக்கள உறவுகள்
மேற்கு நாடுகளில் ஒருவரை தெரிந்து நண்பர்களாகி பின்னர் நண்பர்களாக வாழ்ந்து  இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்கிறார்கள். இப்படி செய்த திருமணங்களில் அண்ணளவாக 50% மானவை விவாகரத்தில் போய் முடிகிறது. ஆகவே நண்பர்களை திருமணம் செய்வதும் எங்கோ உதைக்கிறதே???
 
 
 

 

மேற்கு நாடுகளில் ஒருவரை தெரிந்து நண்பர்களாகி பின்னர் நண்பர்களாக வாழ்ந்து  இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திருமணம் செய்கிறார்கள். இப்படி செய்த திருமணங்களில் அண்ணளவாக 50% மானவை விவாகரத்தில் போய் முடிகிறது. ஆகவே நண்பர்களை திருமணம் செய்வதும் எங்கோ உதைக்கிறதே???
 
 
 

 

 

மீதி 50% ஆவது தப்புதே. அதே பெரிய விசயம். :lol: :lol: :lol:

மீதி 50% ஆவது தப்புதே. அதே பெரிய விசயம். :lol: :lol: :lol:

அதுதானே  :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டுவுக்கு தற்ஸ்தமிழில் கொள்ளை அடிப்பதே வேலை போச்சு.... :lol: சொற்தொடர்களுக்கு இடைவெளி விட்டால் நன்றாக இருக்கும்..வேறை ஒன்றும் சொல்லத் தோன்ற இல்லை.. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை யாயினி இம்புட்டு தூரம் மினக்கெட்டு வந்தனீங்க கண்டிப்பா உங்க கருத்த சொல்லிட்டு தான் போகணும்.....

என்ன மாதிரி கட்டலாம இல்லையா.....

சுண்டுவுக்கு தற்ஸ்தமிழில் கொள்ளை அடிப்பதே வேலை போச்சு.... :lol: சொற்தொடர்களுக்கு இடைவெளி விட்டால் நன்றாக இருக்கும்..வேறை ஒன்றும் சொல்லத் தோன்ற இல்லை.. :)

ஆமா சுண்டுக்கு கொள்ளை அடிப்பது ஆஆனா யாயினி அக்காக்கு எப்பவும் தன்னோட பேர் damage ஆகமா வெள்ளையடிப்பது தான் வேலையா போச்சு.....

இப்பிடியான காதல் கத்தரிக்கா கல்யாணம் விஷயங்களுக்கு க்கருத்து சொல்லவே மாட்டவாம் ஏன்னா அவ ரொம்ப ரொம்ப நல்லவாவாம்..... :D

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை யாயினி இம்புட்டு தூரம் மினக்கெட்டு வந்தனீங்க கண்டிப்பா உங்க கருத்த சொல்லிட்டு தான் போகணும்.....

என்ன மாதிரி கட்டலாம இல்லையா.....

ஆமா சுண்டுக்கு கொள்ளை அடிப்பது ஆஆனா யாயினி அக்காக்கு எப்பவும் தன்னோட பேர் damage ஆகமா வெள்ளையடிப்பது தான் வேலையா போச்சு.....

இப்பிடியான காதல் கத்தரிக்கா கல்யாணம் விஷயங்களுக்கு க்கருத்து சொல்லவே மாட்டவாம் ஏன்னா அவ ரொம்ப ரொம்ப நல்லவாவாம்..... :D

 

 

 

நான் ரொம்ப நல்லவள் என்று சொல்லவே இல்லயே சுண்டு....இதுகளுக்கு கருத்து சொல்லப் போக பெரிய மனிசி வந்துட்டா என்று யாரும் நினைக்க எனக்கு ஏன் வீண் பிரச்சனை. :rolleyes:

பந்தியாக பிரித்து விட சொன்னதற்கு கிடைச்ச பணிஸ்மன்ற பாருங்களன்.. :)

 

வெள்ளை மாளிகையும் ஒரு முறை எரிந்த பின்னர் தானாம் வெள்ளை நிறம் தீட்டி 'வெள்ளை மாளிகை' என்று  அழைக்க தொடங்கினார்களாம்..

சோ.......நானும் damage ஆகாமல் இருக்க வெள்ளை தான் அடிச்சுட்டு திரிகிறன் என்று நினைச்சு கொண்டு இருந்தால் அப்படியே continue பண்ணுங்கோ பிளீஸ். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மீதி 50% ஆவது தப்புதே. அதே பெரிய விசயம். :lol: :lol: :lol:

 

 

 

 
எப்படியும் வாழலாம் என்ற கொள்கைகாரர் என்பது மட்டும் தெரிகிறது.  :D
  • கருத்துக்கள உறவுகள்

மீதி 50% ஆவது தப்புதே. அதே பெரிய விசயம். :lol: :lol: :lol:

 

ஆமாம் ஆமிக்காரனே மீதி 50% மும் திருமணமே செய்வதில்லை அதனால் தப்பிவிடுகிறார்கள். 

திருமணத்திற்கு முக்கியமானது ஒருவரையொருவர் புரிந்து கொள்வதும் சில முக்கிய பொருத்தங்களும் ஆகும்.    நண்பர்களாக இருப்பதற்கும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நெருங்கிய நண்பர்களாவதற்கு நீண்ட காலம் எடுக்கும்.  நீண்ட காலம் பழகும்போது புரிந்துணர்வு தானாக வந்து விடும்.  அவ்வாறுள்ள ஒத்த மனமுள்ளவர்கள்  திருமணம் செய்து தம்பதிகளாகுகிறார்கள்.  ஒத்த மனமில்லாதவர்கள் வாழ்நாள் முழுவதும் நெருங்கிய நண்பர்களாகவே இருந்து விடுகிறார்கள்.  இவர்களுள் திருமணத்திற்கு அத்தியாவசியமான பொருத்தங்கள் இல்லாத நண்பர்கள் அதனைப் புரியாது திருமணம் செய்யும்போது விவாகரத்தை நாடவேண்டிய தேவை ஏற்படுகிறது.   அதேபோல பொருத்தங்கள் பார்த்துச் செய்பவர்களில் புரிந்துணர்வு இல்லாதவர்கள், மனம் ஒத்து வாழ முடியாதவர்களே விவாகரத்தை நாட வேண்டிய நிலைமை.   எமது தமிழ்ச் சமூகத்தில், பொருத்தங்கள் பார்ப்பவர்களில் அநேகம் பேரை நம்ப முடியாது என்பது வேறு விடயம்.  மேலைத்தேய நாடுகளில், அவர்கள் சந்தித்தவர்களுள் யாரை அதிகம் பிடித்திருக்கிறதோ அவர்களைத் திருமணம் செய்கிறார்கள்.  இப்பொருத்தங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரிவதில்லை.   இப்பொருத்தங்கள் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக வாழுகிறார்கள்.  பொருந்தாதவர்கள் விவாகரத்தில் போய் நிற்கிறார்கள்.

 

நீங்கள், உங்கள் துணையைத் தேடும்போது, உங்களை முதலில் அறிந்து வைத்திருங்கள்.  அப்போதுதான் உங்கள் துணை உங்களுக்கு ஏற்றவரா என்பதையும் முடிவு செய்யலாம்.  உங்களுக்கே உங்களைப் பற்றித் தெரியாவிட்டால் உங்கள் துணையைத் தேர்ந்தெடுப்பது சிரமமே.

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ரொம்ப நல்லவள் என்று சொல்லவே இல்லயே சுண்டு....இதுகளுக்கு கருத்து சொல்லப் போக பெரிய மனிசி வந்துட்டா என்று யாரும் நினைக்க எனக்கு ஏன் வீண் பிரச்சனை. :rolleyes:

பந்தியாக பிரித்து விட சொன்னதற்கு கிடைச்ச பணிஸ்மன்ற பாருங்களன்.. :)

வெள்ளை மாளிகையும் ஒரு முறை எரிந்த பின்னர் தானாம் வெள்ளை நிறம் தீட்டி 'வெள்ளை மாளிகை' என்று அழைக்க தொடங்கினார்களாம்..

சோ.......நானும் damage ஆகாமல் இருக்க வெள்ளை தான் அடிச்சுட்டு திரிகிறன் என்று நினைச்சு கொண்டு இருந்தால் அப்படியே continue பண்ணுங்கோ பிளீஸ். :lol:

ஒன்னும் தெரியாத பாப்பா கதவ மூடி போட்டுக்கிட்டாலாம் தாழ்ப்பா....

ஹலோ 15 வயசுக்கு மேல ஆகிட்டாள பெரியவங்க தான் என்னமோ டீன் ஏஜ் பொண்ணு மாதிரி வெக்கப்பட்டு இருக்கிங்க.... சும்மா உங்க கருத்த சொல்லிட்டு போறது.....

:(:D

திருமணத்திற்கு முக்கியமானது ஒருவரையொருவர் புரிந்து கொள்வது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.