Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விக்னேஸ்வரனுக்கு E.P.D.P யின் முதன்மை வேட்பாளர் பகிரங்க அழைப்பு!

Featured Replies

EPDP+tavarasa+and+vigneswaran.jpgஉண்மையும், உறுதியும் இருந்தால் ஒரே மேடையில் இருவரும் பேச முடியும்!

நமது பாதங்கள் நாளைய தலைமுறைக்கு சரியான திசையைக் காட்ட வேண்டும். யார் வெற்றி பெற்றாலும் அதன் பலாபலன்களை அனுபவிப்பவர்கள் நமது மக்க ளாகவே இருக்க வேண்டும். அடுத்தவரை இழிவுபடுத்து வதும், அவர்கள் மீது சேறுபூசுவதும், அவதூறு சுமத்து வதும் அரசியலின் பெயரால் எவருக்கும் இலகுவாக செய்து விட முடிகின்றது.

இந்த நாகரீகமற்ற போக்கை நாம் மாற்றியமைக்க முடியும். இவ்வாறு ஐ.ம.சு.முன்னணியின் முதன்மை வேட்பாளர் எஸ். தவராசா கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களுக்கு பகிரங்க அழைப் பொன்றை விடுத்துள்ளார். அவ்வழைப்பில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,

சகவேட்பாளர் என்பதற்கு அப்பால் நீதிபதி என்ற மரியாதைக்குரியவராக நீங்கள் இருந்திருக்கின்றீர்கள். அந்த மரியாதை காரணமாகவும் உங்கள் மீதுள்ள நம்பிக்கை காரணமாகவும் ஒர் அழைப்பை விடுகின்றேன்.

பொது மேடை ஒன்றில் உங்கள் கருத்தை நீங்களும் எமது கருத்தை நானும் தமிழ்மக்களிடம் எடுத்துச் சொல்வோம். மேலைநாடுகளில் இவ்வாறானதொரு நாகரீகமான பிரசார நடைமுறை உண்டு என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

ஒரேமேடையில் இருவேறு கருத்துக்கள் கொண்டவர்கள் இருந்து தமது கருத்துக்களை மக்கள் முன்னிலையில் வைக்கும் பக்குவம் இங்கு எவருக்கும் பழக்கப்பட்டதாகத் தெரியவில்லை. கொண்ட கொள்கையில் உறுதியும் உண்மையும் உள்ளது என்று நம்புகின்றவர்களுக்கு இதுசாத்தியம். நான் ஏற்றிருக்கும் கொள்கை உண்மையானது என்ற உறுதியும் நம்பிக்கையும் எனக்கு உண்டு. மதிப்புக்குரிய உங்களுக்கும் அவ்வாறு இருந்தால் நாம் பொது மேடையில் தோன்ற முடியும்.

இந்த பகிரங்க அழைப்பை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களாயின் எதிர்கால அரசியலாளர்களுக்கு நாம் வழிகாட்டிகளாக இருந்தவர்களாவோம். தனித்தனியாக பலமேடைகளில் ஒருவரை ஒருவர் சாடுவது அர்த்தமற்றது. அது உங்களைப் போன்றவர்களுக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் பொருத்தமானதல்ல என்பது எனது பணிவான அபிப்பிராயமாகும்.

எனது இப் பகிரங்க வேண்டுகோளை ஏற்பீர்களாயின் இது தொடர்பான மேலதிக ஏற்பாடுகளை இணைந்து செய்வதற்கு என்னை தொடர்புகொள்வீர்கள் என நம்புகின்றேன் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் E.P.D.P வேட்பாளர் எஸ்.தவராசா வேண்டுகோள் விடுத்துள்ள அழைப்புக் கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.

http://www.ilankainet.com/2013/08/epdp.html

  • கருத்துக்கள உறவுகள்

ஈ.பிக்கு தோல்வியில் நம்பிக்கை வந்து விட்டது.

வெளி  நாட்டில நாய்களை வீட்டுக்குள்ள வளர்க்கினம் என்று 
ஊரிலயும் குட்டை நாய்களை வீட்டுக்குள்ள வளர்க்கேளுமோ 

ஒரு நீதிபதிக்கு கிரிமினல் விடும் அழைப்பு. என்ன நெஞ்சழுத்தம்.

  • தொடங்கியவர்

 

வெளி  நாட்டில நாய்களை வீட்டுக்குள்ள வளர்க்கினம் என்று 
ஊரிலயும் குட்டை நாய்களை வீட்டுக்குள்ள வளர்க்கேளுமோ 

 

அரசாங்க எலும்புத் துண்டுக்கு வாலாட்டத் தானே வேணும்  :lol:

ஒரேமேடையில் இருவேறு கருத்துக்கள் கொண்டவர்கள் இருந்து தமது கருத்துக்களை மக்கள் முன்னிலையில் வைக்கும் பக்குவம் இங்கு எவருக்கும் பழக்கப்பட்டதாகத் தெரியவில்லை

 

முதலில் உங்கள் கட்சி ஆமிப் பாதுகாப்பு இல்லாமல் ஒரு பொது மேடைக்கு மக்கள் முன் தோன்றட்டும். அந்த மேடையில் வைத்து பொது மக்கள் கேட்டும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். அப்படி "ரவுன் கோல் மீடிங்" தான் தேர்தல் பிரசாரத்திற்கு பெயர் போன கூட்டங்கள். அந்த கூட்டங்களில், ஆமி வரமாட்டது என்று பொது மக்களுக்கு தெரிந்தால் அதன் பின்னர் நீங்கள் காட்டிய வேட்டியுடன் வீடு திரும்ப முடிந்தால் அதன் பின்னர் ஒன்றுடன் ஒன்று விவாதம் பற்றி பேசலாம்.

 

பொதுநலவாயத் தலைவர்களின் மகா நாடு முடியும் வரை ஊடகங்கள் கேள்வி கேட்கக் கூடாது என்று ஜெகத் ஜெயசூரியா ஊடகங்களை அழைத்து சொன்னது தேர்தல் விதிகளின் மீறலாகும். ஜெகத் ஜெயசூரியாவை வந்து அவர் கொடுத்த கட்டளைகளை திரும்ப பெறவைக்க முடியுமா? அதன் பின்னர் இராமநாதனுக்கும், சர்வானந்தாவுக்கும் இடையில் நடை பெறும் சண்டைகள் பற்றி அங்கயஜன் உண்மையை ஊடகங்களுக்கு சொல்லட்டும்.  

 

விக்கினேஸ்வரனுக்கு மட்டும் அல்ல, ஆறாம் திருத்தத்தின் கீழ் எல்லா கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும் பேசுவதற்கும், பதில் அளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது அதை நீக்கி வைத்துவிட்டு அதன் பின்னர் விக்கினேஸ்வரனை விவாதத்திற்கு அழைக்க முடியுமா? அதன் பின்னர் அவர் கேட்க்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்க முடியுமாயின் ஏன் அந்த சட்டம் அங்கே இருக்கிறது?

 

வெளிநாடுகளில் ஒன்றுடன் ஒன்று விவாதம் இருக்கிறது. அதற்கு அமைவாக புஸ் தேர்தலில் தானும் அந்த விவாதங்களில் பங்கு பற்றித்தான் வெற்றி ஈட்டினார். ஆனால் அகமதியனித் விவாதத்திற்கு அழைத்த போது அவர் செல்லவில்லை. காரணம் புஸ்சின் பேச்சுக்களை கவனிக்கும் அவரின் ஆதரவளர்கள் அவரின் தவறுகளுக்கு அவரின் வாக்களிப்பில் தண்டிப்பார்கள். அகமதியானித்தின் வாக்காளர்களால் அவரை தண்டிக்க முடியாது. எனவே இப்படி ஒரு பக்க விவாதங்களுக்கு ஒத்து போகத்தேவை இல்லை.  ஜனநாயகதேர்தலில் வேட்பாளன் தனக்கு சாதகமான முறையை பயன் படுத்தலாம். ஆமி வடக்கில் இருக்கும் வரை, அங்கு ஜனநாயகம் இல்லை; விக்கினேஸ்வரன் எந்த விவாததிற்கும் போகத்தேவை இல்லை.

 

தேர்தல் முடிய இங்கிலாந்து திரும்ப இருக்கும் நீர் விக்கினேஸ்வரனுக்கு அடாத்து செய்ய என்று போய் இருக்கிறீர். நீர் விடும் தப்பு, சரிகளில் உமது வாக்கு தங்கி இல்லை. ஆமி போடப்போகும் கள்ள வாக்கில் மட்டும்தான் நீர் சார்ந்திருக்கிறீர். விக்கினேஸ்வரன் தேர்தல் முடிய 13ம் திருத்தத்தை சரவதேச நாடுகளின் உதவியுடன் நடை முறைப்படுத்த முடியுமா என்று முயற்சிக்கப்போகிறவர். சர்வதேச நாடுகளுக்கு முன்னால் அவர் இராமநாத்னின் விவாத முறையான துவக்கு நீட்டும் விவாததத்தில் பங்கு பற்றிவிட்டு சர்வதேச தயவை இழக்க முடியாது.

 

அவருக்கு வெற்றி நிச்சயமான பின்னர் அவர் யாருடனும் விவாதத்திற்கு போகத்தேவை இல்லை. ஜனநாய முறைப்படி உம்மால் முடியுமானால், பொது மக்களிடம் தேர்தல் பிரசாரம் செய்து அவர் உம்முடன் விவாதத்திற்கு வரவில்லை என்றால் தோல்வி அடைவார் என்ற நிலையை வரச்செய்யும். அப்போது அவர் தானாக வந்து உம்முடன் விவாதத்திற்கு கேட்பார். முடிந்தால் செய்து பார்க்கலாம். 

 

முடியாவிட்டால் யாழில் இருந்து பகிரங்க அழைப்பு விடுகிறோம். உங்களுக்காக உங்களில் யாராவது ஒருவர் வந்து யாழில் வைக்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லத்தயாரா? முடிந்தால் வேறு எந்த சவால்களுக்கும் போகாமல் இந்த சவாலை ஏற்கலாம். எப்படி வசதி?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நீதிபதிக்கு கிரிமினல் விடும் அழைப்பு. என்ன நெஞ்சழுத்தம்.

 

இந்த கருத்து  கண்டிக்கத்தக்கது

என்ன இருந்தாலும் 

அவர் நாட்டிலுள்ள  மக்களுக்கு

அங்கிருந்தபடியேதான்

செய்கின்றார் யுவர் ஆனர்,,,,, :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.