Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ரா‌ஜ் ) பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரகாஷ்ராஜ். நடிக்க உள்ளார் சீமான் தயாரிப்பில்

Featured Replies

1174843_625114650866693_1218673880_n.jpg

 

பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ரா‌ஜ் ) பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரகாஷ்ராஜ். நடிக்க உள்ளார் சீமான் தயாரிப்பில் 

தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ்ரா‌ஜ் நடிக்கிறார்.பிரபாகரன் வாழ்க்கை வரலாறு இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது.ஆக்சன் படங்களுக்கு‌ரிய விறுவிறுப்பும், திகில் படங்களுக்கு‌ரிய மர்மமும், மெலோ டிராமாக்களுக்கு‌ரிய சென்டிமெண்டும், செவ்வியல் படங்களுக்கு‌ரிய ச‌ரித்திரப் பின்னணியும், தியாகமும், வீரமும் நிறைந்தது தமி‌ழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை.

அந்த வாழ்க்கையின் சிறு துளியை‌த் திரையில் கொண்டு வந்தால்கூட அதுவொரு பிரமாண்ட பெருமைக்கு‌ரிய ஆக்கமாக இருக்கும்.அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குனரும், நாம் தமிழர் இயக்கத்தின் தலைவருமான சீமான். பிரபாகரனின் தீரமிகு வாழ்க்கையை டெலி சீ‌ரியலாக தயா‌ரிக்கும் வேலையில் அவர் மும்முரமாக உள்ளார்.

இதற்காக நடிகர் பிரகாஷ்ராஜை சந்தித்து‌ப் பேசியுள்ளார். பிரபாகரனின் வேடத்தை ஏற்று நடிக்கும்படி இந்த சந்திப்பில் பிரகாஷ்ராஜை கேட்டுக் கொண்டதற்கு நேர்மறையான பதிலே சீமானுக்கு கிடைத்திருக்கிறது. அதாவது பிரபாகரனாக நடிக்க சம்மதம் தெ‌ரிவித்துள்ளார் பிரகாஷ்ரா‌ஜ்.

என் மகன் இருந்திருந்தால் பிரபாகரனையே அவனுக்கு ரோல்மாடலாகக் காட்டிருப்பேன்!! – பிரகாஷ்ராஜ்

என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா, வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைத்தான் அவனோட ரோல் மாடல்னு பெருமையா சொல்லியிருப்பேன். அந்த அளவு தூய்மையான நேர்மையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். அவர் போன்ற தலைவர்கள் பிறந்ததே ஈழ மண்ணுக்குள்ள பெருமை”, என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

பிரபாகரன் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் உருவாகும் படத்தில் பிரபாகரனாக நடிக்கிறார் பிரகாஷ்ராஜ்.

சமீபத்திய ஈழப் போர் மற்றும் அதன் முடிவில் பிரபாகரன் குறித்து வந்த தகவல்களைக் கேட்டு மிகவும் வருத்தப்பட்ட பிரகாஷ்ராஜ், ‘நான் ஈழத்தில் பிறந்திருந்தால் நிச்சயம் பிரபாகரனைத்தான் ஹீரோவாகக் கொண்டு வளர்ந்திருப்பேன். அவர் பின்னால்தான் விசுவாசமாக நின்றிருப்பேன்’ என்று கூறியுள்ளார்.

பிரபாகரன் குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது…

“பிரபாகரனைப் போய் சிலர் சர்வாதிகாரின்னு சொல்றாங்க. அவர் என்ன சொந்த மக்களையே கொன்று குவித்த ஹிட்லரா… தன் மக்களுக்காக களத்தில் நின்று 30 ஆண்டுகளுக்கும் மேல் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய சுத்த வீரன் பிரபாகரன். தாக்குறது அல்ல அவர் நோக்கம்… தற்காப்புதான்.

அவர் என்ன வல்லரசு ஆசையில் உலகம் பூரா வலிந்து தாக்குதல் செய்து நாட்டைப் பிடிக்கவா முயற்சி பண்ணார்… கால காலமா தாங்கள் வாழ்ந்த மண்ணை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுக்க போர்க்களம் புகுந்தவர். அவர் கண்முன் நிகழ்ந்த இனவெறிக் கொடுமைகள்தான் அவரை, தன் மக்களின் விடுதலைக்காக வாழ்க்கையையே அர்ப்பணிக்க வைத்திருக்கிறது.

அவர் வாழ்க்கையை நினைத்தால் உடல் சிலிர்க்கிறது. அவரைப் போன்ற நேர்மையான, எளிமையான, மன உறுதியும் வீரமும் கொண்ட தலைவர்களை நாம் பார்த்ததில்லை. இது வெறும் ஹீரோ வொர்ஷிப் இல்லை. இப்படிப்பட்ட மாவீரர்களை, தலைவர்களைப் போற்றாவிட்டால், நாம் மாபெரும் சரித்திர தவறு செய்தவர்களாவோம்.

கொண்ட கொள்கை, லட்சியம் வெல்ல தன் உயிரைப் பணயம் வைத்து எப்போதும் கழுத்தில் சயனைடு குப்பியுடன் காட்சி தந்த பிரபாகரன்தான் இப்போதும் எப்போதும் இளைஞர்களின் ரோல்மாடல். நாமெல்லாம் நேதாஜி, பகத் சிங் வீரத்தைப் பத்தி படிச்சிதான் தெரி்ஞ்சிக்கிட்டோம். ஆனா ஒரு மாவீரன் எப்படி இருப்பார்னு பிரபாகரனைப் பார்த்துதான் தெரிஞ்சிக்கிட்டோம். அவரைப் பாத்துதான் நாம வளர்ந்தோம்.

என் மகன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், ‘இதோ பார்… இந்த மாவீரன்தான்டா உன் ரோல்மாடல்’ என்று காட்டி வளர்த்திருப்பேன்…

பிரபாகரனைப் போல் அர்ப்பணிப்பு குணம் உள்ள ஒரு பெரும் தலைவனைப் பெற்றெடுத்ததே ஈழத் தமிழ் மண்ணுக்குள்ள பெருமையா நான் பார்க்கிறேன்.

‘வன்னி குண்டு வெடிப்புகளில் 5 புலிகள் இறக்கிறார்கள்… 50 புலிகள் பிறக்கிறார்கள்’ என்ற கவிதை நூறு சதவிகிதம் உண்மையானது”, என்று கூறியுள்ளார் பிரகாஷ்ராஜ்.

 
 

எம் இனத்தை வைத்து எப்பிடியெல்லாம்  வியாபாரம் பண்ணுறாங்களப்பா!

  • கருத்துக்கள உறவுகள்

தொடங்கிட்டாங்கப்பா.

 

சீமான் முடிஞ்சுது.. எனி பிரகாஷ் ராஜ்ஜுக்கு விழப் போகுது..!

 

விடுங்கைய்யா.. அந்தந்த மக்கள் தங்களுக்கு பிடித்தமானதைச் செய்யட்டும். ஹிந்திக்காரன் வரலாற்றையே மாத்தி.. பயங்கரவாதின்னு சொல்லி காசு தேடுறப்போ.. வக்காளத்து வாங்கிற தமிழ் ஆக்களும் இருக்கினம். அப்படிப் பார்க்கேக்க.. ஒரு வீரனின் உண்மையான வரலாற்றை திரைப்படமாகப் பதிவு செய்வதை வரவேற்கனும்..!

 

இல்ல இன்று மாவீரர்களை மறந்த கணக்கா.. நாளை தலைவரா.. யாரவர்.. என்று கேட்கிற நிலையில நிற்கும்..! இதைத்தான் சிங்களமும் ஒட்டுக்குழுக்களும் விரும்பினம். அதையே சில புலம்பெயர் ஆக்களும் விரும்பினம். அதிலும் உது எவ்வளவோ திறம்..! :icon_idea::o

  • கருத்துக்கள உறவுகள்

மெட்ராஸ் கஃபே படத்தை எதிர்த்ததுக்கு .. ஏன் சீமான் பதிலுக்கு படமெடுக்க மாட்டாரா என்று கேட்டினம்.. :D இப்ப சீமான் பதிலுக்கு எடுக்கப் போறார்..

 

என்னத்தை சொன்னாலும் படம் வெளியில் வரப்போவதில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் படம் எடுக்கிறாரோ இல்லையோ பிரகாஸ்ராஜ் பிரபாகரனாக நடிக்கிறாரோ இல்லையோ  எனது கடமை ஏதாவது ஒரு பிழையை கண்டுபிடிக்க வேண்டும் என்பது தான்.  :icon_mrgreen:

  • தொடங்கியவர்

எம் இனத்தை வைத்து எப்பிடியெல்லாம்  வியாபாரம் பண்ணுறாங்களப்பா!

நீங்க அவங்களுக்கு அள்ளிக் கொடுக்குறீங்க அவங்க வியாபாரம் பண்ணுறாங்க எங்களை வைத்து  :lol:

நீங்க அவங்களுக்கு அள்ளிக் கொடுக்குறீங்க அவங்க வியாபாரம் பண்ணுறாங்க எங்களை வைத்து  :lol:

 

 

எத்தனை வீதம் தாறாராம் சீமான்? :lol:  :lol:

இது உண்மையான தகவலா ? 

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே இயக்குனர் கௌதமன் இந்த படத்தை இயக்கப்போவதாக பேட்டியளித்துள்ளார். அல்லது அது வேறு படமா?

 

http://www.eelamdaily.com/news/10926/57/.aspx

 

  • தொடங்கியவர்

கௌதமன் தான் இயக்குறார் மச்சி  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.