Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

25 ஆண்டுகளில் கிரேட்டஸ்ட் இந்தியர் பட்டியலில் ரஜினிக்கு முதலிடம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மும்பை: கடந்த 25 ஆண்டுகளில் வாழும் இந்தியர்களில் மிகச் சிறந்த 25 பேர் பட்டியிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

என்டிடிவி நிறுவனம் தனது வெள்ளிவிழாவையொட்டி, கடந்த கால் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச் சிறந்த 25 மனிதர்கள் யார் என்ற நாடு தழுவிய ஒரு கருத்துக் கணிப்பை இணைய தளம் மூலம் நடத்துகிறது. பொதுமக்கள் அதில் நேரடியாக வாக்களிக்கலாம்.

 

31-superstar-rajinikanth-gets-top-place-

 

இந்தப் பட்டியலில் ரஜினி, சச்சின் டெண்டுல்கர், அப்துல் கலாம், ஏ ஆர் ரஹ்மான், டோனி, கபில்தேவ், ரத்தன் டாடா என அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆளுமை கொண்ட விவிஐபிக்கள் இடம்பெற்றுள்ளன.

ஆன்லைனில் லைவ்வாக உள்ள கருத்துக் கணிப்பு இது என்பதால், ஒவ்வொரு நாளும் வாக்குகளின் அடிப்படையில் யாருக்கு என்ன இடம் என்ற விவரம் அந்த நிறுவன இணைய தளத்தில் இடம்பெற்றுள்ளது.

மூன்று தினங்களுக்கு முன் 5-ம் இடத்தில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு 7.03 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அவருக்கு அடுத்து சச்சின் டெண்டுகர் வருகிறார் 6.99 சதவீத வாக்குகளுடன். அப்துல் கலாமுக்கு மூன்றாவது இடமும், ஏ ஆர் ரஹ்மானுக்கு நான்காவது இடமும் கிடைத்துள்ளன. அமிதாப் பச்சனுக்கு 10வது இடமும், ஷாரூக்கானுக்கு 13 வது இடமும் கிடைத்துள்ளன.

 

http://tamil.oneindia.in/movies/specials/2013/08/superstar-rajinikanth-gets-top-place-ndtv-greatest-indian-poll-182506.html

  • கருத்துக்கள உறவுகள்

படிச்சவன் பண்பாணவனுக்கு இடமே இல்லையா?

கூத்தாடிகளும் தன்னலவாதிகளும் வாழ்க வளர்க!

  • கருத்துக்கள உறவுகள்
சாருகானின் படம் ஒன்றுக்கு ரஜனியை பற்றிய ஒரு பாடலும் காரணமாக போடப்பட்டதாம்.தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு தமிழ் நாட்டில் வசூல் கொட்டோ கொட்டென்று  கோடிக்கணக்கில் கொட்டுகிறதாம்.ரஜனி முதலாவதாக வருவதில்  சந்தேகம் இருக்கவில்லை.
 
ஏன் மக்கள் இப்படியானவர்களை தெரிகிறார்கள் என்பது மில்லியன் டொலர் கேள்வி?

இதற்கேன் ஏன் தமிழ் பத்திரிகைகள் கூத்தடிகின்ற்ன. அப்துல் கலாம். மூன்றம் இடம் என்றாலும் அவரை பற்றி தமிழன் பெருமைப்படலாம். தமிழகம் இந்தியாவில் 28 மாநிலங்களில் ஒன்று மட்டும் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

தன்  இனம் அழிக்கப்பட்டபோது

பார்த்துக்கொண்டு பதவியிலிருந்த

அப்துல்   

ரஜனிக்கு பின்னுக்கு  போயிருப்பதற்கு காரணம்

ரஜனியிடம் இருக்கும்

சில நல்ல குணங்களுக்காய் இருக்கலாம்  :icon_idea:

தன்  இனம் அழிக்கப்பட்டபோது

பார்த்துக்கொண்டு பதவியிலிருந்த

அப்துல்   

ரஜனிக்கு பின்னுக்கு  போயிருப்பதற்கு காரணம்

ரஜனியிடம் இருக்கும்

சில நல்ல குணங்களுக்காய் இருக்கலாம்  :icon_idea:

உண்மை நான் இவரது ரசிகனுக்கு அப்பால் இவரிடம் இருந்து பார்த்த ஒரு ஆழுமை ,மனிதம்,தூய்மை  எனக்கு பிடித்திருந்தது .........எமது போராட்டத்திற்கு உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாத ஒரு மனிதன் .
 
மற்றபடி இந்தியாவில் முதல் பிரஜையாய் வந்தால் என்ன ,வராட்டி என்ன .... :) ......இந்தியாவின் விடயத்துள் எந்த ஆர்வமுமில்லை :D ,பற்றும் இல்லை எனக்கு ,தமிழ்நாட்டை தவிர................ :)
  • கருத்துக்கள உறவுகள்

 

உண்மை நான் இவரது ரசிகனுக்கு அப்பால் இவரிடம் இருந்து பார்த்த ஒரு ஆழுமை ,மனிதம்,தூய்மை  எனக்கு பிடித்திருந்தது .........எமது போராட்டத்திற்கு உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாத ஒரு மனிதன் .
 
மற்றபடி இந்தியாவில் முதல் பிரஜையாய் வந்தால் என்ன ,வராட்டி என்ன .... :) ......இந்தியாவின் விடயத்துள் எந்த ஆர்வமுமில்லை :D ,பற்றும் இல்லை எனக்கு ,தமிழ்நாட்டை தவிர................ :)

 

 

இவரிடம் மனிதம் தூய்மை இருக்கிறது என எப்படி தீர்மானிக்கிறீர்கள்?

 

தமிழர்களை பெண்கள் குழந்தைகள் என்றும் பாராமல் இந்திய இலங்கை அரசுகள் இனவழிப்புச் செய்தபோது வாளாவிருந்த மனிதத்தைச் சொல்கிறீர்களா?

 

தூய்மை வேட்டி சட்டையில் மட்டும் இருந்தால் போதாது சார்! :D

இந்தியா முழுவதறகும் சேவை செய்தவர் அப்துல் கலாம். சனத்திற்கு பேதம் விளங்காததால் போய் சோனியா கந்தியை தெரிகிறது.  குஸ்புக்கு கோவில் கட்டுகிறது. இது எல்லாம தடி எடுத்து அடி போட்டு படிப்பிக்கத்தக பாடமா? இன்று நாடு வல்லரசு என்ற பெயரை எடுக்க முயன்றால் அது அவரின் பெயரை சொல்லித்தான். கற்றாரை காற்றாரே காமுறுவர் என்று 32 பல்கலைகழகங்கள் முனைவர் பட்டம் கொடுத்திருப்பத்தாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் கல்வி அறிவு முன்னேறாவிட்டால்..........

 

"அறிஞ்சவன் அறிய வேண்டும் அரியாலை பினாட்டுதட்டை"

படிச்சவன் பண்பாணவனுக்கு இடமே இல்லையா?

கூத்தாடிகளும் தன்னலவாதிகளும் வாழ்க வளர்க!

 

மிகச்சரியான கருத்து....

 

முதல் நான்கில் மூவர் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

முதல் நான்கில் மூவர் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள்..

 

வடக்கிலிலுள்ளவர்களை விட, தமிழ்நாட்டில் உள்ளவர்களிடம்... கணனிப் பாவனை அதிகம் உள்ளது. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.