Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மொழிமூல இணைய சேவையிலிருந்து புலிகளின் கொடி நீக்கப்பட்டது!

Featured Replies

 

இலங்கை இப் பூமிப்பந்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாடு. அவர்கள் தமககென்று ஒரு நாட்டை உருவாக்கிவிட்டார்கள். வரலாறுகள் புராணங்கள் வரைவிலக்கணங்களை வைத்து எதுவும் செய்யமுடியாது. சிங்கள தேசமும் சிங்கள மக்களும் வெறும் உருவாக்கம் என்பதை எம்மைத் திருப்திப்படுத்த நாம் பேசிக்கொள்ளலாம் தவிர இவ்வுலகம் அதை ஏற்காது.

நீங்கள் சொல்லவருவது சிங்கள தேசம் அல்ல. அது ஸ்ரீலங்கா. தோடம்பழம் என்று நினத்து நாரத்தையை பிடிங்கி சாப்பிட்டால் வாய் புளிக்கும். 

 

அவர்கள் எங்கும் எதையும் உருவாக்கிவிட வில்லை. அது அடக்குமுறையால் வலிந்து கட்டப்பட்டிருக்கிறது. சோல்பரி என்ற தனிமனிதன் செய்த வேலை. இதை கூட்டணிக்காக எஸ். திருச்செல்வம் நீளமாக ஆராய்ந்து பல பதிவுகள் செய்தார். அதை படித்தால் விளங்கும்.

 

சோவியத் ரூசியா என்ற அடக்குமுறை அரசு பூமி பந்தில் அல்ல, பாதுகாப்பு சபையில் அல்ல, தென் துருவத்தில் அல்ல, சந்திர மண்டத்திலும் கூட சென்று அதன் கொடியை நாட்டியது. அந்த நாடு எங்கே என்று சொல்ல முடியுமா இப்போது? கிழக்கு சேர்மனி எங்கே என்று தெரியுமா இப்போது?. தாய்வனின் நிலை என்ன?. தீபெத்து நாடு ஒரு தேசம் மக்கள் இல்லை?

 

அவர்கள் பூமிப்பந்தில் அப்படி ஒன்றும் மஜிக் காட்ட வில்லை. அவர்கள் காட்டிய மஜிக் சோல்பரி கொடுத்த பபிள்கம்மை  உவிஞ்சு உவிஞ்சு  ஸ்ரீலங்கா என்ற என்ற பபிள் செய்து வெடிக்கக் காட்டி துட்டகைமுனுவிடம் திருப்பியதுதான் மஜிக்தான் அவர்கள் வெடித்த மஜிக் பபிள்கம். 

 

தங்களுக்கு ஐ.நா என்பது விளங்காததால் எங்களை எதோ நினைக்கிறிர்களோ தெரியவில்லை. ஐ.நா.வை சொல்ல வந்து பூமிப்பந்து என்று சொன்னால் நாங்கள் சற்று மிரண்டு போக்கப்போகிறோம்....... ?

 

ஐ.நா என்றால் நான்கு ரவுடிகள் ஒரு இரவு திருடப்போகும் போது சேர்ந்து கொள்ளும் கூட்டம் மட்டுமே!. இதனால்த்தான் இதுவரை தான் அடித்த நாடுகள் ஒன்றுக்கும் அமெரிக்கா ஐ.நாவிடம் அனுமதி பெறப் போகவில்லை. 

 

இதில் ஒன்றும் பூமி பந்து மஜிக் இல்லை.

Edited by மல்லையூரான்

 

இஸ்லாமியரிடம் அப்புறம் வருவோம்.. கீழே உள்ளதை எழுதியது நீங்கள்தான்..

பூர்வீக நிலத்தை விட்டு வெறொருவனின் நிலத்தில் கொடியை தூக்கிப்பிடிப்பதால் 0 என்கிற பெறுமானத்தில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடாது.

இதற்குத்தான் நான் பதில் எழுதினேன்.. பிரியோசனம் இல்லாத வேலையை ஏன் செய்கிறார்கள் எனக்கேட்டு..

உண்மை என்னவென்றால் இப்போதுள்ள காலகட்டத்தில் தமிழரின் புலிக்கொடியை யாராவது தூக்கிப்பிடித்தால் பாதிக்கப்பட்ட மக்கள் என்றுதான் பார்க்கிறார்கள். இதுதான் மாற்றம்.

 

இத்தாலி போத்துக்கல் போன்ற நாடுகள் இருக்கின்றது. அவர்கள் தங்கள் நாடு சார்பாக கொடியை பிடிக்கின்றார்கள். அவர்கள் எங்கேனும் தங்கள் மொழிக்காக கொடியை பிடிக்கின்றார்களா?

அவர்கள் கனடாவில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு தேசம் இருக்கின்றது. அவர்கள் தங்கள தேசத்தில் இருந்துதான் இங்கே வந்தார்கள். நாம் தேசத்தை உருவாக்குவதற்குப் பதிலாக அதை விட்டு வந்தவர்கள். தேசத்திற்கு மாற்றுத்தெரிவாக புலம்பெயர்ந்தவர்கள். இங்கு வந்தபின்னார் தேசம் தேசீயம் எல்லாம் நாம்தான் என்று மிதப்பவர்கள். இதற்கு பெறுமானம் இல்லவே இல்லை. எப்படி உங்களால் அவர்களை எம்முடன் ஒப்பிட முடிகின்றது என்று புரியவில்லை !

தேசம் என்பது முள்ளந்தண்டு போன்றது. அது உள்ள ஒருவனை அது இல்லாத ஒருவனுடன் ஒப்பிட முடியாது.

எமது பிரச்சனையை கதைத்தால் உடனே என்னுமொரு நாட்டுக்காரனை இழுத்துவருவதே வேலையாய்போச்சு. அங்கால இஸ்ரேல் பாலஸ்தீனம் இங்கால இத்தாலி போத்துக்கல். தமிழர்களின் தங்கள் நிலை குறித்த மாயையும் கற்பனையும் நம்பமுடியாமல் இருக்கின்றது. இமயத்தில் புலிக்கொடி எற்றியதும் லெமோரியகண்டத்தில் பிளேன் ஓட்டியதும் என்று கடசியில் கோவணமும் இல்லை. எமத நிலையை முதல் யதார்த்தமாக உணரமுற்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சண்டமாருதன்..

உங்களது இந்தக் கருத்துக்கும், முதலில் பதிந்த கருத்துக்கும் முரண்பாடுகள் உள்ளன.. நாடு உள்ளவர்கள் / இல்லாதவர்கள் என்கிற புதிய நிபந்தனையை இப்போது உட்புகுத்துகிறீர்கள்.. :D

 

 

இத்தாலி போத்துக்கல் போன்ற நாடுகள் இருக்கின்றது. அவர்கள் தங்கள் நாடு சார்பாக கொடியை பிடிக்கின்றார்கள். அவர்கள் எங்கேனும் தங்கள் மொழிக்காக கொடியை பிடிக்கின்றார்களா?

அவர்கள் கனடாவில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு தேசம் இருக்கின்றது. அவர்கள் தங்கள தேசத்தில் இருந்துதான் இங்கே வந்தார்கள். நாம் தேசத்தை உருவாக்குவதற்குப் பதிலாக அதை விட்டு வந்தவர்கள். தேசத்திற்கு மாற்றுத்தெரிவாக புலம்பெயர்ந்தவர்கள். இங்கு வந்தபின்னார் தேசம் தேசீயம் எல்லாம் நாம்தான் என்று மிதப்பவர்கள். இதற்கு பெறுமானம் இல்லவே இல்லை. எப்படி உங்களால் அவர்களை எம்முடன் ஒப்பிட முடிகின்றது என்று புரியவில்லை !

தேசம் என்பது முள்ளந்தண்டு போன்றது. அது உள்ள ஒருவனை அது இல்லாத ஒருவனுடன் ஒப்பிட முடியாது.

எமது பிரச்சனையை கதைத்தால் உடனே என்னுமொரு நாட்டுக்காரனை இழுத்துவருவதே வேலையாய்போச்சு. அங்கால இஸ்ரேல் பாலஸ்தீனம் இங்கால இத்தாலி போத்துக்கல். தமிழர்களின் தங்கள் நிலை குறித்த மாயையும் கற்பனையும் நம்பமுடியாமல் இருக்கின்றது. இமயத்தில் புலிக்கொடி எற்றியதும் லெமோரியகண்டத்தில் பிளேன் ஓட்டியதும் என்று கடசியில் கோவணமும் இல்லை. எமத நிலையை முதல் யதார்த்தமாக உணரமுற்படவேண்டும்.

 

எவ்வளவு பூமிப் பந்து மஜிக்காட்டினாலும், லண்டன் மெற்றோ மொழிகளை கொடிகளுடன் இணைக்கிறது. எமது கொடி நீக்கப்பட்ட காரணம் கதிரகாமர் வெற்றிகரமாக புலிகள் பயங்கரவாதிகள் என்று பிரசாரம் செய்தால் மட்டுமே அல்லாமல் மொழிக்கு கொடியை போடுவது பொருந்தாது என்று தாங்கள் சொல்ல வந்த விவாதத்தால் அல்ல.

 

இதில் பலரின் பயம் என்ன என்றால் இனி கதிர்காமரை திரும்ப வரவைக்க முடியாது. தமது திறமையால் மொழிக்கு கொடிகளை போட வேண்டாம் என்று கேடக முடியாது எனவே க்திர்காமர் செய்து வைத்த துரோகத்தை காப்பாற்றினால் மட்டுமே தங்கள் நிகழ்சி நிரல் முன்னால் போகும் என்று நினைக்கிறார்கள். அது கன நாட்கள் நிலைக்காது. அதன் முடிவு ஒருகிழமைக்குள் வரவிருக்கும் வடமாகாணத் தேர்தலாகவும் இருக்கலாம்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு முக்கிய காரணம் எம்மவர்களில் சிலரும் எமது சில ஊடகங்களும்தான். சிங்கள அரசு மிகவும் பலமான பிரச்சாரவசதிகளைக் கொண்டது. அவர்கள் பணபலம் படைத்தவர்கள். புலிக்கொடி தமிழ்மொழி இணையத்தில் இணைக்கப்பட்டபோது எமது ஊடகங்களும் எம்மவர்களும் இதைமுக்கிய செய்தியாகப் பிரகடனப்படுத்தினார்கள். உண்மையில் மகிழ்ச்சியான விடயம் என்றாலும் எமது ஊடகங்களும் எம்மவர்களும் அமைதியாக இருந்தால் சிங்களவனுக்கு இச்செய்தி சென்றிருக்கமுடியாது. சிங்கள நாட்டுக்கு எதிரான ஒரு நிகழ்வு அல்லது செய்திகள் வரும்போது பல சிங்களவர்கள், ஒருசில விலைபோன தமிழர்கள் உடனே அந்நிகழ்வு அல்லது செய்திக்கு எதிராக செயற்படத்துடங்குவார்கள். ஆனால் எம்மவர்கள் பலர் ஆரோ செய்வினம் என்று பேசாமல் இருப்பார்கள் அல்லது எங்களுக்குள்ளே நான் பெரியவன் சிறியவன் என்று உப்புச்சப்பில்லாதவிடயங்களுக்கு அடிபடத்துடங்குவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

//இங்கிலாந்தின் மெட்ரோ பொலிட்டன் பொலிஸாரும் உள்ளூர் லிவிசாம் பரோ கவுன்சிலும் தமது இணைய சேவையில் தமிழ் மொழிக்கு புலிகளின் கொடி ஒதுக்கப்பட்டிருந்ததை தற்போது தடைசெய்துள்ளது.

 

மெட்ரோ பொலிட்டன் பொலிஸார் மக்களுக்கு செய்யும் பணிகளை விளக்கிக் கூறுவதற்கு இந்த இணையத்தளங்கள் உதவுகின்றன.

 

பொலிஸார் மக்களுக்கு செய்யும் சேவையை தெளிவாக விளக்கும் முகமாகவே இந்த இணையத்தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் தமிழ் மொழியை தெரிவுசெய்யும்போது அதற்கான தேசியக் கொடியாக புலிகளின் கொடி அமைக்கப்பட்டிருந்தது. //

 

முதலில் இப்ப‌டியான‌... த‌மிழ்ச் சேவைக‌ளை, த‌மிழ‌க‌த் த‌மிழ‌னை விட‌ ஈழ‌த்த‌மிழ‌னே... அதிக‌ம் ப‌ய‌ன்ப‌டுத்துப‌வ‌னாக‌ இருப்பான். த‌மிழ‌க‌த் த‌மிழ‌ர்க‌ள்... ஆங்கில‌ம் பேச‌ வெளிக்கிட்டு எவ்வ‌ள‌வோ... கால‌மாகி விட்ட‌து. இப்போது அவ‌ர்க‌ள் க‌தைப்ப‌து த‌மிங்கிலீஸ் என்ற‌ ப‌டியால்... இந்த‌ச் சேவையை த‌மிழில் வாசிக்க‌ முன்வ‌ர‌மாட்டார்க‌ள். ஆன‌ ப‌டியால்.... புலிக்கொடியையே, மீண்டும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ ல‌ண்ட‌னில் உள்ள‌ ஈழ‌ உண‌ர்வாள‌ர்க‌ள் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு அழுத்த‌ம் கொடுக்க‌ வேண்டும். :rolleyes: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.