Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போனஸ் ஆசன உறுப்பினராக ஆனந்தசங்கரியை நியமிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
anandasangary-seithy-20130923.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரியை போனஸ் ஆசன உறுப்பினராக நியமிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிங்கள ஊடகமொன்றில் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

  

கூட்டமைப்பின் சார்பில் கிளிநொச்சியில் போட்டியிட்ட ஆனந்த சங்கரி 2796 வாக்குகளை மட்டுமே பெற்றதுடன் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் 6 வது இடத்தில் இருந்தார். அந்த மாவட்டத்தில் போட்டியிட்ட கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு யாழ்ப்பாணத்தில் கிடைத்துள்ள இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்றை சங்கரிக்கு வழங்க தயாராகி வருவதாக தெரியவருகிறது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=93586&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இது கூட்டமைப்பு தனக்குத் தானே மண்ணள்ளிப் போடும் கைங்கரியத்துக்கு ஒப்பானது. சங்கரி தோல்வியின் வலியை உணரனும். அவரை அரசியலில் இருந்து கட்டாய ஓய்வில் அனுப்ப வழிபாருங்கள். அதைவிட்டிட்டு.. வேலில போற ஓணானைப் பிடிச்சு வேட்டிக்க விட்டிட்டு.. அப்புறம் குத்துது குடையுது என்று திணறும் நிலை வர வேண்டாம்.

 

ஒரே ஒரு கேள்வி.. ஏன் சங்கரி இல்லாமல் கூட்டமைப்பு இயங்க முடியாதோ..??! தமிழ் தேசிய மக்கள் விடுதலை முன்னணியினர் கூட்டமைப்பில் இல்லாமல் தானே கூட்டமைப்பு இயங்குது..! கருத்துக்களால் பெரிதும் ஒத்த அவர்களை ஏன் சம்பந்தன் கூட்டமைப்புக்குள் அரவணைக்க மறுக்கிறார். சங்கரி இடத்தில் காட்டும் நெகிழ்வை ஏன் அங்கு காட்டுறார் இல்லை..???!  சங்கரியை.. வெளிய விட்டால் சங்கரி.. மகிந்தவேடு கூட்டுப் போடுவார். போடட்டும்.. டக்கிளஸ்.. கருணாவின் கதிதான் அவருக்கும்..! :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பழம்பெரும் அரசியல்வாதியான சங்கரி அவர்கள் ஒரு மானஸ்தர்.. :rolleyes: மக்களால் நிராகரிக்கப்பட்டபின், கொல்லைப்புற வழியாக உள்ளே போக மாட்டார்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொருத்த வரை சங்கரிக்கு கொடுத்து உள்ளே எடுப்பது தான் மிகச்சிறந்த ராஜதந்திரம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பழம்பெரும் அரசியல்வாதியான சங்கரி அவர்கள் ஒரு மானஸ்தர்.. :rolleyes: மக்களால் நிராகரிக்கப்பட்டபின், கொல்லைப்புற வழியாக உள்ளே போக மாட்டார்.. :D

அதை ஒரு இராஜ தந்திர நகர்வு என்று சொல்லிக்கொண்டு கொல்லைப்புற வழியால் உள்ள போய் விடுவார் அவருக்கு அசிங்கப்படுவது ஒன்றும் புதிது இல்லை       

  • கருத்துக்கள உறவுகள்

பிந்தி கிடைத்த தகவல்களின் படி மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட ஒரு முஸ்லிம் வேட்ப்பாளருக்கும் ஒரு பெண் வேட்ப்பாளருக்கும் போனஸ் ஆசனம் கொடுக்க பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை

மக்கள்  தீர்ப்புக்கு  தலைவர்கள்  மதிப்பளிக்கவேண்டும்

மக்களால்   ஒதுக்கப்பட்டவர்களும்  அதை ஏற்று ஒதுங்கி மக்களின் தெரிவுகள்  சரியாக  அமைய  வழி விடணும்

அவர்கள்  உண்மையில்  மக்களை  நேசிப்பவர்களாயின் அதனையே செய்வர்.

  • கருத்துக்கள உறவுகள்

போனஸ் ஆசனத்திற்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர்கள் நியமிக்கப்படனும் என்பது தான் விதிமுறையாம்

அதாவது வெளியில் இருந்து யாரையும் கொண்டு வர முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

போனஸ் ஆசனத்திற்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர்கள் நியமிக்கப்படனும் என்பது தான் விதிமுறையாம்

அதாவது வெளியில் இருந்து யாரையும் கொண்டு வர முடியாது

 

 

அப்படியாயின்

பெற்ற  வாக்குகளின் அடிப்படையில்  அடுத்தவர்கள் தேர்வு செய்யப்படணுமே தவிர

சிபாரிசுகள் ஆகாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம் யா

என்னைப்பொறுத்தவரை

மக்கள்  தீர்ப்புக்கு  தலைவர்கள்  மதிப்பளிக்கவேண்டும்

மக்களால்   ஒதுக்கப்பட்டவர்களும்  அதை ஏற்று ஒதுங்கி மக்களின் தெரிவுகள்  சரியாக  அமைய  வழி விடணும்

அவர்கள்  உண்மையில்  மக்களை  நேசிப்பவர்களாயின் அதனையே செய்வர்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஆனந்தசங்கரி அவர்கள் தமிக்ஷர் விடுதலக்கூடணியின் தலைமைப்பொறுப்பிலிருந்து விலை சிறீலங்காவின் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கினை மீளப்பெறல்வேண்டும். அடுத்து தமிழ் மக்களுக்கு இதுவரை செய்த அநீதியான செயற்பாடுகளுக்கு பகிரங்க மன்னிப்பினைக் தமிழ்மக்களிடம் கேட்கவேண்டும். இவை செய்யாது கூட்டமைப்பு இவரை உறுப்பினனர் பதவி வழங்குமாக இருந்தால், தந்தை செல்வாவது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நேற்றைய தேர்தல் வெற்றிக்குப்பின்பு உதறித்தள்ளியதுபோல், தந்தை செலாவால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக்கூட்டணியையும் உதறித்தள்ளியதற்குச் சமமாகும். கூத்தமைப்பு, இந்தியத் துரோகக்கும்பல்களிடம் மாட்டிக்கொண்டு படும்பாடு சொல்லிவேலையில்லை.

இதில காமெடி என்ன என்றால்  கிளிநொச்சியை யாழ் மாவட்டத்தில் இருந்து பிரித்தவர் சங்கரி. யாழோடு சேர்ந்து இருப்பதால் கிளிநொச்சி வளரவில்லை என்று. ஆனால் அந்த மண்ணில் அவருக்கு மரியாதை இல்லை . ஆனால் யாழ் மாவட்ட தேசியப் பட்டியல் மூலம் இவர் தெரிவாகுவார் என்றால்  இதப் போல  ஒரு கேவலம் எதுவும் இல்லை சங்கரிக்கு. எந்த யாழை வேண்டாம் என்று போனாரோ அதே யாழ் இப்ப இவருக்கு அரசியல் வாழ்வுப் பிச்சை கொடுக்க போகுது  ஊஊஊ  :o  :o  :o

Edited by யாழ்அன்பு

சங்கரி சார்பாக எவரும் கோரிக்கை வைக்கவில்லை .இணையத்தளங்களுக்கு பரபரப்பு செய்திக்காக சும்மா எழுதுவதுதான் வேலை ,எங்கு பிரதிநிதித்துவம் இல்லையோஅந்தப்பகுதிகளில் இருந்து சில கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது .அனேகமாக மன்னார்அல்லது  முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து நியமிக்கப்படலாம் .தெரிவுசெய்யப்பட்ட 28பேரில் 15பேர் தமிழரசுகட்சி யை சேர்ந்தவர்கள் .ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகூடிய விருப்பு வாக்கு எடுத்தவர்களும் தமிழ்ரசுகட்சியை சேர்ந்தவர்கள் .

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே

என்ன தான் தமிழரசு கட்சி அதி கூடிய வாக்குகளை பெற்றாலும் அதிக வேட்ப்பாளர்கள் வென்றாலும் அவர்களின் வெற்றிக்கு காரணம்

தலைவரை புரட்சியாளன் என்று சொன்னதும்

முள்ளிவாய்க்கால் இழப்பை பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியதும் மாவீரர்களின் தியாகத்தை முன்னிளைபடுத்தியதும் தான்

இது ஒரு கூட்டு முயற்சி வெற்றி

தயவு செய்து தமிழரசு கட்சியை கொம்பு சீவி விடாதீர்கள்

தாத்தா இனி ஓய்வெடுப்பதும் இளையோர் அரசியலுக்கு வர சந்தர்ப்பமளிப்பதும் நன்று. இன்னும் சேவை செய்ய விரும்பினால் வெளியிலிருந்து ஆலோசனை அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கலாம்.தனது பாலிய வயது, இளைய, முதிய காலத்து அரசியல், சமூக அனுபவங்களை வாராவாரம் பத்திரிகைக்கு எழுதி வெளியிடலாம். நாமும் படிக்கவும் உங்களைப்பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் முடியும் தாத்தா.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அத்தோட உடும்பு பிடிச்ச கதையளையும் எழுதணும்

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தாஓய்வெடுக்க வேண்டியது மக்கள் ஆணை.மக்கள் ஆணையை மீறி ததேகூட்டமைப்பு எந்தத் தவறான முடிவையும் எடுக்கக் கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.