Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூநகரி பிரதேசத்திற்கு மாகாணசபை பிரதிநிதித்துவம் வேண்டும் என கோரிக்கை! - முதலமைச்சருக்கு கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Poonakary-news240913-150.jpg

பூநகரி பிரதேச மக்கள் தமக்கு மாகாணசபை பிரதிநிதித்துவம் வேண்டி இரா.சம்பந்தன் மற்றும் வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு மகஜர் கையளிப்பு. நடுநிலைமையுடன் நீதியின் பக்கம் நின்று நடவடிக்கை எடுப்பார்களா? தலைவர் சம்பந்தரும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும். பூநகரி பிரதேசத்தின் கிராம அபிவிருத்திச்சங்கங்கள் மாதர் அபிவிருத்திச்சங்கங்கள் கமக்கார ஒன்றியங்கள் மீனவ சமாசங்களின் பிரதிநிதிகள் கூட்டாக இணைந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.தலைமை அலுவலகத்தில் வைத்து இன்று காலை இந்த மகஜரை கையளித்துள்ளனர்.

  

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்�� பொதுச்செயலாளர் மாவை.சேனாதிராசா கூட்டமைப்பின் இணைத்தலைவர்களான சுரேஸ் க.பிறேமச்சந்திரன்�� த.சித்தார்த்தன்�� செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கும் மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

 

வடமாகாணத்திலேயே ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது பூநகரி பிரதேச மக்களாகிய தாம் வறுமையின் உச்ச நிலையில் இருப்பதாகவும் கல்வி சுகாதாரம் தொழில் வாய்ப்புகள் உள்கட்டுமானங்கள் அடிப்படை வசதிகள் என்று தமது பிரதேசம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாகவும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் கவனிப்பாரற்று கிடக்கும் தமது பிரதேசத்துக்கு அரசியல் ரீதியாகவும் எத்தகைய பிரதிநிதித்துவமும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும் பூநகரி பிரதேசத்தின் வறுமையை அடிப்படையாக கொண்டே அரசாங்கம் கடந்த காலங்களில் சலுகைகளை கொடுத்து பூநகரி பிரதேச மக்களை தன்பக்கம் ஈர்த்து வைத்துள்ளதாகவும் வடமாகாணத்திலேயே அரசாங்கத்துக்கு சார்பாக வாக்களிக்கும் வீதம் தமது பிரதேசத்தில் அதிகரித்து காணப்படுவதற்கு வறுமையே காரணம் என்றும்�� இந்த வறுமையை போக்கி ஏனைய மாவட்டங்களை போன்று தமது பிரதேசமும் வளச்செழிப்பு பெற்று தமிழ் தேசியத்தை பலம் பெறச்செய்ய வேண்டுமானால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமது பிரதேசத்துக்கு மிகச்சிறந்த அரசியல் பிரதிநிதித்துவத்தை தர வேண்டும் எனவும் மகஜரில் கூறப்பட்டுள்ளது.

 

ஏனைய மாவட்டங்களில் கூட்டமைப்பின் தலைவர்களின் சமுகமளிப்புடன் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக மற்றும் பொதுக்கூட்டங்கள் போன்று கிளிநொச்சி மண்ணிலும் ஏழு வேட்பாளர்களையும் முன்னிலைப்படுத்தி ஒற்றுமையை முன்னெடுத்துச்செல்லாத காரணத்தினாலேயே தமது பிரதேசம் மாகாணசபை பிரதிநிதித்துவத்தை இழந்ததாகவும் அவர்கள் நேரில் குற்றம் சுமத்தியுள்ளனர். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிலிருந்து இரண்டு பெண்கள் போட்டியிட்டு இருவரும் தோல்வியை தழுவியுள்ளார்கள். இதில் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து மாகாணசபைக்கு இரண்டு உறுப்பினர்கள் தெரிவாகியிருப்பதால் பிரதேச ரீதியாக போனஸ் ஆசனம் அந்த பெண் வேட்பாளருக்கு அவசியமற்றதாகி விடுவதாகவும்�� பூநகரி பிரதேசத்துக்கு மாகாணசபை பிரதிநிதித்துவம் அவசியம் தேவைப்படுவதாகவும்�� எனவே புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு மேலும் ஒரு ஆசனத்தை வழங்குவது நீதியாகாதெனவும் பூநகரி பிரதேச மக்கள் நேரில் வலியுறுத்தியுள்ளனர்.

 

பூநகரி பிரதேசத்திலிருந்து மாகாணசபை தேர்தலில் போட்டியிட்ட ஆசிரியர் கே.வினுபானந்தகுமாரியை போனஸ் ஆசனத்தினூடாக மாகாணசபை உறுப்பினராக தெரிவுசெய்யும் போது�� வடமாகாணத்திலேயே வறுமையின் உச்ச நிலையிலிருக்கும் எமது பிரதேசத்தை காப்பாற்றி கடந்த காலங்களில் அரசுக்கு சார்பாக வாக்களிக்கும் சிறு வீதத்தைக்கூட தேசியத்தின் பால் இழுத்துச்செல்வதோடு கிளிநொச்சி�� முல்லைத்தீவு�� வவுனியா�� மன்னார் மாவட்டங்களுக்கு பொதுவாக எமது பிரதேசத்திலிருந்து தெரிவாகும் பெண் பிரதிநிதித்துவத்தின் மூலம் பெண்களின் பிரச்சினைகளை மாகாண மட்டத்துக்கும் சர்வதேச மட்டத்துக்கும் எடுத்துச்செல்ல முடியும் என்பதையும் வலியுறுத்தினார்கள்.

 

கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து பெண்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஒரேயொரு பெண் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றியடையாமல் போன ஆசிரியர் கே.வினுபானந்தகுமாரிக்கு போனஸ் ஆசனங்களில் ஒன்றை வழங்கி அரசியலில் கிளிநொச்சி முல்லைத்தீவு�� வவுனியா�� மன்னார் மாவட்ட பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யுமாறு மிகப்பிரதானமாக வலியுறுத்தியே குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

 

வடக்கின் முதலமைச்சராக க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவருக்கு மக்கள் பிரதிநிதிகள் மகஜர் கையளித்த முதல் சம்பவம் இதுவாகும். குறித்த மகஜரின் பிரதி ஒன்று பூநகரி பிராந்திய கிராம - மாதர் அபிவிருத்தி சங்கங்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் அதிவணக்கத்துக்குரிய மன்னார் ஆண்டகை இராயப்பு ஜோசப் அவர்களின் கவனத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

Poonakary-news240913-1.JPG

 

 

Poonakary-news240913-2.JPG

 

 

பூநகரி புலிகளின் நிர்வாகத்தில் மன்னார் கோட்டத்தின் கீழ் தான் செயற்பட்டது....  அந்தக்காலத்தில் சொல்வார்கள் பூநகரியில் விளையும் நெல் வருடம் முழுவதும் தமிழீழம் முழுவதுக்கும் சாப்பாடு போட போதுமானது எண்று,  அதுவே மன்னார் முழுவதும் விளைந்தால்...??   மட்டக்களப்பும் அம்பறை முழுவதும் விளையும் நெல்...??   

 

அவ்வளவு பெரிய வயல் வெளிகளை கொண்ட பூநகரி வறுமையில் இருக்கிறது எண்று கேட்க கஸ்ரமாக இருக்கிறது... !

 

கூட்டமைப்புக்கு இது பெரும் சுமையாக இருக்கலாம்...  வடக்கிலும் கிழக்கிலும் விளையும் நெல்லுக்கு நல்ல விலையை வாங்கி விவசாயிகளுக்கு குடுக்கும் கூட்டுறவை பலப்படுத்த வேண்டும்...  பல்தேசிய நிறுவனங்களுக்கும் சிங்கள வியாபாரிகளுக்கும் அடிமாட்டு விலைக்கு விவசாயிகளின் இயலாமை விலை போகாமல் காக்க வேண்டும்.. 

 

 

Edited by தயா

பூநகரி புலிகளின் நிர்வாகத்தில் மன்னார் கோட்டத்தின் கீழ் தான் செயற்பட்டது....  அந்தக்காலத்தில் சொல்வார்கள் பூநகரியில் விளையும் நெல் வருடம் முழுவதும் தமிழீழம் முழுவதுக்கும் சாப்பாடு போட போதுமானது எண்று,  அதுவே மன்னார் முழுவதும் விளைந்தால்...??   மட்டக்களப்பும் அம்பறை முழுவதும் விளையும் நெல்...??   

 

அவ்வளவு பெரிய வயல் வெளிகளை கொண்ட பூநகரி வறுமையில் இருக்கிறது எண்று கேட்க கஸ்ரமாக இருக்கிறது... !

 

கூட்டமைப்புக்கு இது பெரும் சுமையாக இருக்கலாம்...  வடக்கிலும் கிழக்கிலும் விளையும் நெல்லுக்கு நல்ல விலையை வாங்கி விவசாயிகளுக்கு குடுக்கும் கூட்டுறவை பலப்படுத்த வேண்டும்...  பல்தேசிய நிறுவனங்களுக்கும் சிங்கள வியாபாரிகளுக்கும் அடிமாட்டு விலைக்கு விவசாயிகளின் இயலாமை விலை போகாமல் காக்க வேண்டும்.. 

கூடவெ அவர்களது கோரிக்கைய நிறைவேற்ற வேண்டும் .அந்த பெண்மணிய போனஸ்ஆசனங்களில் ஒன்றை வழங்கி கௌரவப் படுத்த வேண்டும் நன்றி . :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கோணந்த சங்கரி க்கு முண்டுகொடுப்பத்தை ஒரு பக்கம் இருக்கட்டும் இந்த ஆட்களுக்கு உதவி பண்ண முடியாதா ? வானத்தில் இருந்து வைகுந்தம் காமித்து விட்டார்களா? சம்புஸ் (சம்பந்தர்)  டுப்பாக்கூர் ஆட்களுக்கு ஏன் போஸ் குடுக்குறீங்க.. ஏன் உங்களால் சப்போர்ட் பண்ண முடியாதா ஒன்றும் இல்லாத சபை ... இதற்கு இவ்வளவு பில்ட்ப்பு தேவையா..? கே.வினுபானந்தகுமாரிக்கு  ?? இவரு என்ன பரிசீலனை செய்வதற்கு...

டிஸ்கி:

 

Poonakary-news240913-2.JPG

என்றைக்கு கால் மேல் கால் போடுகிறார்களோ அன்றைக்கே அதிகாரா போதை வந்துட்டுது என்று அர்த்தம்.. உசாரா இருங்க ஈழதோழர்களே.. :icon_idea: :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.