Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'அரசாங்கத்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை வெளியில் போட முடியாது'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DSC00437.JPG-
எம்.எஸ்.எம்.நூர்தீன்

'அரசாங்கத்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை வெளியில் போட முடியாது' என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, ஏறாவூரிலுள்ள அவரது இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

அரசாங்கத்தால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை வெளியில் போட முடியாது. அடுத்த ஆண்டு(2014) ஜனாதிபதித் தேர்தல் நடைபெறக் கூடிய சாத்தியம் இருக்கின்றது. அந்த தேர்தலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு முக்கியமாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடந்து முடிந்த மாகாண சபை தேர்தலில் சுமார் 53000 வாக்குகளை பெற்றது. ஜனாதிபதி தேர்தலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அரசாங்கத்திற்கு தேவையாகும். அதனால் அரசாங்கம் முஸ்லிம் காங்கிரசை வெளியில் போடாது.

இன்று இந்த நாட்டில் இன வாதம் தலை தூக்கியுள்ள நிலையில் பெரும்பான்மை சமூகம் பேரினவாதத்தை நோக்கி செல்கின்றன. அதனால் சிறுபான்மை சமூகங்களான தமிழ் முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டும்.

வட மாகாணத்தில் நடந்து முடிந்த தோதலின் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமை பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அரசியல் தீர்;வு பற்றி பேசவேண்டும். அதன் மூலம் தீர்வொன்றை எட்ட முடியும்.

முஸ்லிம்களை புறந்தள்ளிவிட்டு எந்த தீர்வையம் பெற்றுக்கொள்ள முடியாது. 

கிழக்கு மாகாணம் அனைத்து வளங்களும் நிறைந்த மாகாணமாகும். இந்த மாகாணத்தின் வளத்தினை பயன்படுத்தினால் அனைவருக்கும் இங்கு தொழில் வாய்ப்பு இருக்கின்றது. இங்குள்ள வளங்களை பயன்படுத்தி தொழில்களில் ஈடுபட்டால் பணிப்பெண்களாக வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் வராது.

எதிர்காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்கள் வெளிநாட்டுக்கு செல்வதை முற்றாக தடுப்பதற்காக மாற்று தொழில் நடவடிக்கைகளை நாம் இந்த மாகாணத்தில் ஏற்படுத்த வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் இரண்டு கிராமங்களை தெரிவு செய்து இன்னும் நான்கு ஐந்து வருடங்களுக்குள் அந்த பிரதேசத்திலிருந்து எந்தவொரு பெண்ணும் பணி; பெண்ணாக வெளி நாட்டுக்கு செல்லக் கூடாது என்ற நிலையை உருவாக்குவதே எனது இலக்காகும். 

அதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூரை தெரிவு செய்துள்ளேன். அதேபோன்று இன்னுமொரு தமிழ் கிரமம் ஒன்றையும் தெரிவு செய்து அந்த பிரதேசங்களில் வறுமையான நிலையிலுள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செய்து அவர்களுக்கு மாதமொன்றுக்கு பத்தாயிரம் ரூபா வருமானத்தை ஏற்படுத்த வழி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றேன்' என்றார்.

 

Edited by தமிழரசு

hafiz-nazeer-150x150.jpg

 

இன்று இந்த நாட்டில் இன வாதம் தலை தூக்கியுள்ள நிலையில் பெரும்பான்மை சமூகம் பேரினவாதத்தை நோக்கி செல்கின்றன. அதனால் சிறுபான்மை சமூகங்களான தமிழ் முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டும்.

 

முஸ்லிம்களை புறந்தள்ளிவிட்டு எந்த தீர்வையம் பெற்றுக்கொள்ள முடியாது. 
'அரசாங்கத்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை வெளியில் போட முடியாது'

"வடக்கில் நடந்து முடிந்த தேர்தல் ஒரு அற்புதமான, புனிதமான, தூய்மையான சரித்திர நிகழ்வு. தமிழ் மக்கள் தங்களின் உயிரிலும் மேலாக மதிக்கும் உரிமையை எந்த அற்பமான, அழிந்து போகும் உலகியல் இன்பங்களுக்காவோ, உடமைகளுக்குக்கவோ தாரை வார்க்கத் தயாராக இல்லை என்பதை எடுத்து சொல்லியிருக்கும் புனிதமான நாள்தான் இந்த இரண்டாயிரது பதின் மூன்றாம் ஆண்டு செப்டெம்பர் 21ம் திகதி.  இது மனித ஜனநாயகத்தை அறிந்து சரித்திரம் எழுதும் அறிஞ்ஞர்களால் போற்றிப் புகழப்பட்டு, பாராட்டி எழுதிவைக்கப்பட போகிறது. "

 

பொய்யையும் பிரட்டையும் மட்டும் கொள்கையாகக் கொண்டு அரசியல் செய்யும் இலங்கை ஜின்னாவை இந்த உண்மை ஒருநாள் வந்து சேரும் என்ற எதிர்பார்ப்புடன்தான் அந்த மூன்று வசன்ங்களையும் எழுதினேன். இனியும் தமிழ் மக்கள் "அந்த தேர்தலால் மட்டும்தான்  ஒற்றுமையானார்கள்" என்று ஏமாற்று பேசாதேயுங்கள். தில்லு முல்லு மு.க.வின் காலில் விழாவிட்டால் கூட்டமைப்பு முஸ்லீம் மக்களை சென்றடைய முடியாது என்ற நப்பாசையில் உளறாதீர்கள். (மு.கவின். காலில் விழுவதை தவிர அரசுக்கும் வேறு வழி இல்லை என்று இனியும் முஸ்லீம் மக்களை மு.க ஏமாற்ற முடியாது. அரசும் அதற்கான காலம் வரும் போது மு.க.வை உதைக்கும்) செல்வா கட்டிவைத்த தமிழ்-முஸ்லீம் ஒற்றுமை அரசுக்கு ஒற்றர் வேலை செய்ய வெளிக்கிட்ட பதியுதீன்கள் சிலரால் சிதைக்கப்பட்டது. கக்கிம் இன ஒற்றுமைக்காக அல்லாமல் தலைவருக்கும் தொப்பி போட என்றுதான் வன்னி சென்றார் என்ற உண்மை மெல்ல மெல்ல வெளியே வந்தது. ஆனால் அந்த ஒற்றுமை இன்னொரு தமிழரசியல் தலைவரால் மீண்டும் கட்டி எழுப்பபடும். மு.க அவசியம் அதை புரிந்து கொள்ள வேண்டும். 

 

எது இருந்தும் வடக்கின் தேர்தலில் சொல்லப்பட்ட செய்தி முட்டாள்களே எங்களுக்கு அரசியலில் உண்மை எது ஏமாற்று எது என்றதை நீங்கள் சொல்ல வேண்டிய தேவை இல்லை என்பதாகும். அரசில் ஒட்டியிருந்து நக்கிக்கொண்டு  "மு.க. வை அரசு கைவிடாது" என்று கூறிக்கொண்டு எம்மை ஏமாற்ற முடியாது என்பதையும் தான் அடித்து வைத்து சொல்லியிருக்கிறார்கள் தமிழர்கள். "எமக்குள்  எப்படி 1948ம் ஆண்டு தொடக்கம் நேர்மையான தலைமைகளை வைத்து அரசியல் செய்து வருகிறோம்" என்ற பாடத்தை கூட்டமைப்பு  நல்லிணகத்துக்கான அமைப்பின் அசீன் மூலமாக முஸ்லீம்களுக்கும் சொல்ல வருகிறது என்பதை புரிந்து கொண்டால் போதும். கக்கீம் இலங்கையின் ஜின்னா ஆக வரப்படும் அவதிகளை சிங்கள பொதுபல சேனா வரைக்கும் தெரிந்து வைத்திருப்பது தாம் பள்ளிவாசல்கள் உடைக்கப்படும் அடிப்படை என்பதை மு.க புரிந்துகொள்ள வேண்டும்.

 

அதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூரை தெரிவு செய்துள்ளேன். அதேபோன்று இன்னுமொரு தமிழ் கிரமம் ஒன்றையும் தெரிவு செய்து-

 

(தமிழ் மக்களின் கிராமத்தையே குறிப்பிடாமல் தமிழ் மக்கள் பெயரால் அரசிடம் பணம் வாங்கவா?)

 

 

 


மு.க என்றால் மூடிய கண்களாக இருந்தவர்களின் கண்கள் திறக்க ஆரம்பித்திருக்கின்றன. அதாவது இனிமேல் மு.க என்று ஒரு கட்சியை முஸ்லீம் மக்கள் வைத்திருக்கமாட்டர்கள் என்பதை புரியத்தொடங்குகிறார்கள். இனிமேல் தி.மு.க (தில்லு முல்லு கட்சி) என்று பெயரை மாற்றினால் அது அவர்களின் கொள்கைக்கு கொஞ்சம் பொருத்தமாக இருக்கும். கக்கீம், கருணாநிதி போன்றோர் தமது எஜமான்களுடன் சேர்ந்து விடும் தில்லு முல்லை வெளிப்படையாக சொல்வதாக இருக்கும்.

 

 

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட போங்கடா .......  உங்களுக்குளுக்கும் அவங்களை விட்டால் வேறு யாரும் இல்லை, அவங்களுக்கும் உங்களை விட்டால் வேற  ஆட்களே இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு மாட்டில இருக்கிற ஒட்டுண்ணிகளைக் கூடத் தான் ஆடு மாடுகளால வெளியே போட முடியாது. அதுக்காக ஒட்டுண்ணிகள் பலம் பொருந்திய ஜீவராசிகள் என்றாகி விடுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.