Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டக்ளசின் தேவையும் தயவும் ஆட்சியாளருக்கு புளித்துவிட்டதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளசின் தேவையும் தயவும் ஆட்சியாளருக்கு புளித்துவிட்டதா?

30 செப்டம்பர் 2013

எதிர்க்கட்சித் தலைவர் பதவி அங்கஜனுக்கா? பனிப்போர் தொடர்கிறது


வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்ட ஈபிடிபிக்கு 2 ஆசனங்கள் மட்டுமே கிடைத்தது. மிகுதி 5 ஆசனங்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் 1 ஆசனம் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசிற்கும் கிடைத்தது. அங்கஜன் யாழ்ப்பாணத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் வடக்கு மாகாணசபையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தமது கட்சிக்கே வழங்க வேண்டும் என்று ஈபிடிபி கோரியுள்ளது. இதனை வலியுறுத்தி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஈபிடிபியின் பொதுச்செயலரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மாகாணசபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 8 ஆசனங்கள் கிடைத்துள்ளன. எனினும், இதில் ஈபிடிபிக்கு யாழ்ப்பாணத்தில் ஒன்றும் கிளிநொச்சியில் ஒன்றுமாக இரண்டு ஆசனங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அதிக ஆசனங்களை வென்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அங்கஜன் இராமநாதனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குவதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர்கள் விருப்பம் கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது.

ஆனால் அங்கஜனை விட அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் என்ற வகையில், தமது கட்சியைச் சேர்ந்த கந்தசாமி கமலேந்திரனை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்று டக்ளஸ் தேவானந்தா அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மே 19ன் பின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தயவும் தேவையும் ஆட்சியாளருக்கு முக்கியமற்றதாக விளங்குவதனை அவர்களின் தொடர் நடவடிக்கைகள் புலப்படுத்துவதாக ஈபீடீபிக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ் மக்களுக்கு இடையிலான முகவராக தரகராக ஈபீடீபி தொழிற்;பட்டது. எனினும் இப்போது மக்களும் முன்னாள் விடுதலைப் புலிகளும் நேரடியாக அரசாங்கத்துடனும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் தொடர்புகளைப் பேணுவதனால் அதனையே ஆட்சியாளரும் விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தரகர்களை முகவர்களை விடுத்து வடக்கிலும் கிழக்கிலும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியை கட்டி எழுப்புவதில் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் முனைவதனால் எதிர் காலத்தில் ஆட்சியாளர்களின் முகவர்களாக தரகர்களாக தொழிற்பட்ட தமிழ்க் கட்சிகள் உதிர்ந்து போவதற்கு உரிய வாய்ப்புகள் அதிகரித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97143/language/ta-IN/article.aspx

அவர்களுக்கு மன்னர் ஆட்சி பிரகடனப்படுத்த எல்லோருமே ஒரு கட்சிக்கு ஆதரவாக, ஒரு குடையின் தொழில்படுபவர்களாக , ஒரு அதிகாரத்தை மதிப்பவர்களாக இருக்க வேண்டும். ஒரு கட்சியில் இருந்தாலும் யாரும் அளவுக்கு அதிக செல்வாக்கு காட்டவும் கூடாது. இது டக்கிக்கு  மட்டும் அல்ல தயா ஜெயசிறிக்கும் கூடத்தான். குடைக்குள் அதிக இடம் பிடிக்க முயலக்கூடாது. படித்த பேராசிரியாராக இருந்தாலும் நாமல் மாதிரி புண்ணாக்குகளைக் மானம் கெட்டு தலையில் வைத்து போற்றி புகழ்வேண்டும். அரச குடும்பத்தை காப்பாற்றுபவர்கள் சொல்லும் பேக்கதைகள், செய்யும் அடாவடிகள், அடிக்கும் கொள்ளைகள், நடத்தும் கொலைகளில் இருந்து காப்பாற்றப்படுவார்கள். மற்றையோர் சோடிக்கப்பட்டு, கடத்தப்பட்டு அழிக்கப்படுவார்கள்.

 

இதைத்தான் நவநீதம் பிள்ளை "அதிகரிக்கும் சர்வாதிகாரம்" என்றார்.

 

அரசியல் அமைப்பில் இருக்கும் காணி அதிகாரங்களுக்கு மேல் சென்று மொக்கன் பீரிசு மாகாணங்களுக்கு காணி அதிகாரம் இல்லை என்று தீர்ப்புக்கொடுத்துவிட்டு, தேர்தல் நடத்துவதால் அங்கு சர்வாதிகாரம் வளரவில்லை என்று அரசர் சுத்துவிட்டு பொத்தி மூடப்பார்க்கிறார்கள். 

தன்னினத்தை காட்டிக்கொடுத்து பிழைப்பு நடத்தினபோதே தெரிந்திருக்கும் என்றோ ஒருநாள் இந்த நிலைவரும் என்று அது அவர் நினைத்ததுபோல காலம் கடந்து வராது இப்போதே வந்துள்ளது உப்பு தின்றால் தண்ணி குடிக்கவேண்டுமப்ப ..

  • கருத்துக்கள உறவுகள்

என்னைக்கேட்டால் டக்கி மாமாவின் தேவை புளித்து விட்டது என்றே சொல்லுவேன்

இல்லையேல் கள்ள வாக்காவது போட்டு ஒரு 5 இடங்களில் ஆவது வெல்ல பண்ணி இருப்பார்கள்

முதல் ஆப்பு வீணையை ஓரமா வைச்சிட்டு வெத்திலையில போட்டி போட சொன்னது

இரண்டாவது ஆப்பு மாகாண சபையில் சில இடங்களை கள்ள வாக்காவது போட்டு வெற்றி பெற விடாதது

எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பாத்தா மாம்ஸ் க்கு ஆப்பு

அவர் வென்றதைத்தான் அங்கஜன் பறித்து எடுத்ததாக செய்தி போட்டார்கள். வாக்கு எப்படி எண்ணுவார்களோ தெரியாது. ஒரு கட்சியின் வாக்கு எண்ணப்படும் போது மற்றக்கட்சியின் பிரதிநிதிகள் பிரசன்னமாக இருக்காவிட்டால் அரசு நிறையத்தான் தில்லு முல்லு பண்ணி மாமாயை வெட்டி விழுத்தியிருக்கும். 10,000 பேர் அங்கஜனுக்கும், 14,000 பேர் கமலேந்திரனுக்கும் போட அந்தளவு தொகை EPDP யாழ்ப்பாணத்தில் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் நினைச்சால் வென்றிருப்பாராம் யாழ்ப்பாணத்தில். அவர் நினைக்கவில்லையாம். தேர்தல் நாள் போலி உதயன் பத்திரிக்கை அடித்து அனந்தி அரச கட்சிக்கு மாறிவிட்டார் என இராணுவத்துக்கு பொழுது போகாததால் செய்யப்பட்டதாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.