Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேட்கிறவன் ...........!

Featured Replies

ஜனநாயக வழி நின்று நெடுநாள் போராடி

எம் தலையில் காலிமுகத்தில் சாணி பூசி

உருட்டி பிரட்டி எடுத்து எள்ளி நகையாடி

சிங்களம் மகிழ்ந்து இருந்த போது...

 

கேட்க நாதியற்று கேட்பார் எவரும் இன்றி

எம்மை காக்க எவர் வருவார் என

தந்தை செல்வா ஒரு மொழி ஒருஇனம்

என தமிழ்நாடு ஓடி ஐயாமாரை எம் ....

 

நிலை சொல்லி அழ அவரோ தன்னிலை

சொல்லிவிட்ட வரலாறு எம்மிடம் இருக்கு

நானோ இறையாண்மை அடிமை

நீயோ இன்னொரு அடிமை உனக்கு...

 

என்னால் என்ன செய்ய முடியும் என விளக்கம்

சொல்லி கை கழுவி விட்ட கதை நினைவிருக்கு

எமக்கு காலம் கடந்தது வர எமக்கான கனவை

சுமந்த ஒரு வீரன் வர நாம் பட்ட மகிழ்வு அளவில்லை..

 

தம்பியா வந்த அண்ணன் பின் தானை தலைவனாய்

வளர்த்த கரிகாலன் எம் இனத்தின் விடிவெள்ளி

எம்மை ஒரு பாதையில் ஒளியுடன் கூட்டி போன

வழிகாட்டி தான் நேசித்த மண்ணை மக்களை கட்டி

காத்த வரலாற்று நாயகன் ஈழம் என்னும் ஒரு தேசம்..

 

உலக வரைபடத்தில் உருவாக நின்ற ஒரு நாயகன்

மக்களில் இருந்து புலிகளை உருவாக்கி புலிகள்தான்

மக்கள் மக்கள்தான் புலிகள் என முழங்கிய தேசியத்தின்

தலைவனை அவர் பின்னால் சென்ற மக்களை...

 

இன்று 30 வருடம் வராதவன் 3வருடம் முன்வந்தவன்

பூனை என்கிறான் இடத்தை நிரப்ப முடியாது என்கிறான்

ஈழப் பெண்ணை விதைவைப் பெண்ணை மணப்பேன்

இலை மலர ஈழம் மலரும் என்றான் நடந்தது வேறு ...

 

புலித்தடைக்கு அனுமதி கொடுத்த சபாநாயகர்

காளிமுத்து பெண் கைபிடித்து இந்திய..

இறையாண்மைக்கு கட்டுப்பட்டு அரசியல்

நடத்தும் பயல் எம தமிழ் தலைமைகளை....

 

பூனை என்பதா முன்னம் பெரியார் பேரன் என்றார்

இப்போ பெரியார் தெலுங்கன் என்றார் அவரின்

அரசியல் சாசனம் இந்திய இறையாண்மைக்கு

உள் பட்டவேனே கட்சியில் உறுப்பினர் ஆகலாம்..

 

 

என்று இருக்க கனடாவிலும் ஐரோப்பிலும்

கிளை எதுக்கு டொலர்பார்க்க யூரோ பார்க்கவா

சிவத்த துண்டு போட்டு விறைப்பா நின்றால்

எம் தலைவன் ஆகமுடியும் என்கிற நினைப்பா

எம் தலைவன் காட்டி போன கட்சி அவர்...

 

உருவாக்கி போன கூட்டமைப்பு அதை

கேள்வி கேட்கவும் மாற்றி அமைக்கவும்

எமக்கே உரிமை சினிமா கூத்தடிக்கு இல்லை

எம்மை கேள்வி கேட்கும் உரிமை..

 

பொன்சேகா கோமாளிகள் என்றபோது வராத கோவம்

இப்ப ஏன் வருது விக்கி தமிழ்நாட்டு

அரசியலை சொல்ல இவருக்கு ஏன் வருது கோவம்

இவர்  மட்டுமா அங்கே அரசியல் தலைவர் ...

 

புலிபோல் சூடு போட்டு கொண்டாலும் பூனை

புலியாக முடியாது மானே நீதான் எமக்கு

அடுத்த காமடியன் பவரே பதவியும் கதிரையும்

வர நீ நாளை நிப்பா திருமாவளவன் நிலைமையில்..

அரசியல் மாற்றும் மாற்ற பண்ணும்..!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சூடாத்தான் இருக்கிறியள் :D

  • தொடங்கியவர்

செம கடுப்பு அக்கா :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி டோய் அஞ்சரன் உங்களுக்கு அட்டமத்தில சனி பிடிச்சிட்டுது ராசா.

எண்டாலும் கவிதைக்கு நன்றி.

  • தொடங்கியவர்

சாதித்தவன் குருதியை சிந்தியவன் எல்லாம் கசக்கி எறியப்பட்ட வெற்றுத்தாள்போல் இருக்க

கேப்பில ஆட்டோ ஓடியவன் தலவீறாம் வடக்கை நம்பி அழிந்தது போதும் .சாந்தி அக்கா .!

வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு வேண்டாம்... கருத்தாளன் வாசகனால் உள்வாங்கப்பட்டால்தான் அவனது கருத்துகளும் உள்வாங்கப்படும் என்பதனை கவனத்தில் எடுங்கள். வாசகனிலிருந்து கருத்தாளனோ அல்லது எழுத்தாளனோ அந்நியப்பட்டால் அவன் என்னதான் நல்ல கருத்தையோ ஆக்கத்தையோ கொடுத்தாலும் வாசகர்கள் அதை ஒரு பொருட்டாகக் கவனிக்கமாட்டார்கள். எனவே கருத்து எதுவாக இருந்தாலும் பாவிக்கும் வார்த்தைகளிலும் அணுகுமுறையிலும் வாசகரைவிட்டு அந்நியப்படாத தன்மையைக் கவனித்துக் கொள்ளுங்கள். :D


தம்பி டோய் அஞ்சரன் உங்களுக்கு அட்டமத்தில சனி பிடிச்சிட்டுது ராசா.

எண்டாலும் கவிதைக்கு நன்றி.

 

ஒருக்கா பஞ்சியைப் பாராம அடுத்த சனிக்கிழமை போய் அவருக்காக எள்ளும் எண்ணையும் எரிச்சுவிடுங்கோ பிள்ளை!! :lol::D
 

  • கருத்துக்கள உறவுகள்

"இன்று 30 வருடம் வராதவன் 3வருடம் முன்வந்தவன்

பூனை என்கிறான் இடத்தை நிரப்ப முடியாது என்கிறான்

ஈழப் பெண்ணை விதைவைப் பெண்ணை மணப்பேன்

இலை மலர ஈழம் மலரும் என்றான் நடந்தது வேறு ...

 

புலித்தடைக்கு அனுமதி கொடுத்த சபாநாயகர்

காளிமுத்து பெண் கைபிடித்து இந்திய..

இறையாண்மைக்கு கட்டுப்பட்டு அரசியல்

நடத்தும் பயல் எம தமிழ் தலைமைகளை....

 

பூனை என்பதா முன்னம் பெரியார் பேரன் என்றார்

இப்போ பெரியார் தெலுங்கன் என்றார் அவரின்

அரசியல் சாசனம் இந்திய இறையாண்மைக்கு

உள் பட்டவேனே கட்சியில் உறுப்பினர் ஆகலாம்.".

 

 

 

நீங்களும் உங்கள் முகத்தை இடைகிடை  நீட்டிக் காட்டுகின்றீர்கள் 
கவிதைக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒருக்கா பஞ்சியைப் பாராம அடுத்த சனிக்கிழமை போய் அவருக்காக எள்ளும் எண்ணையும் எரிச்சுவிடுங்கோ பிள்ளை!! :lol::D

 

 

இப்ப ஒவ்வொரு சனியும் நான் எள்ளெண்ணையில பொரில் செய்து ஏழரையாண்டவருக்கு எள்ளெண்ணையும் எரிக்கிறேன். இந்த முறை அஞ்சரனுக்காக ஒரு பொட்டளி எரிச்சுவிடுறேன். :lol:  இவ்வளவு சோழி சொன்னப்பிறகு விட்டால் தம்பிக்கு பாவமெல்லோ. :mellow:

 

  • தொடங்கியவர்

நன்றி வாத்தியார் ....சோழியன் ..சாந்தியக்கா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கூத்தாடி என்ற சொல்லை அதிகம் பாவிக்கின்றீர்கள் அஞ்சரன். கலைஞர்களை அவமதிக்கும் இந்தச் சொல்லைத் தவிர்த்தால் நல்லது.

சினிமா உலகத்தில் இருந்து வந்தவர்கள்தான் தமிழ்நாட்டைக் காலம் காலமாக ஆண்டு வருகின்றார்கள். அவர்களது ஆட்சியில் தமிழகம் முன்னேற்றப் பாதையில்தான் செல்கின்றது. எனவே சினிமா உலகத்தில் இருந்து வந்தவர்களும் மிகவும் செயல்திறன் உள்ளவர்கள்தான்.

  • தொடங்கியவர்

இப்ப இருக்குற ஒரு சினிமாக்காரன் சொல்லுங்கோ வெளிப்படையா எமக்காக இறங்கியவன் எவனும் இல்லை சங்கங்கள் கட்டளை போட்டா வந்து சுவிங்கம் சாப்பிட்டு போவங்க இதுக்கு அவங்களுக்கு மரியாதையை வேறையா அண்ணா வெளிநாடுகளில் படம் ஓட இப்ப இரண்டு சொல் ஈழம் பற்றி இடையில் போடினம் அதுகூட பிழைப்புதான் பாருங்கோ . 

அஞ்சரன்.... நீங்கள் சொல்ல வாறது என்னவென்று புரிகிறது.

ஆனால்... அதை புரிந்தும் புரியாதமாதிரி காட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறதே!

சில வேளைகளில் "மெளனம்" என்பதும் சிறந்த பதிலாகவும் செயலாகவும் அமைந்துவிடுகிறது.

அது உங்களுக்கும் ஒருநாள் புரியும். :)

எதுவாயினும்..... வாழ்த்துக்கள் அஞ்சரன்! :)

 

  • தொடங்கியவர்

நன்றி கிருபா அண்ணா கவிதை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.