Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 ஐ அதிகாரங்களுடன் நடைமுறைப்படுத்துங்கள்;மஹிந்தவிடம் வலியுறுத்துவார் குர்ஷித்; கூட்டமைப்புடனும் இன்று பேச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13 ஐ அதிகாரங்களுடன் நடைமுறைப்படுத்துங்கள்;மஹிந்தவிடம் வலியுறுத்துவார் குர்ஷித்; கூட்டமைப்புடனும் இன்று பேச்சு

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் முக்கிய செய்தியுடன் இருநாள் பயணம் மேற்கொண்டு இன்று காலை இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், அரச தரப்பினரையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்தித்துப் பேச்சு நடத்தும்போது, 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமாகியுள்ள வடக்கு மாகாணசபைக்கான அபிவிருத்தி உட்பட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடுவார் என்று அறியமுடிகின்றது.

அத்துடன், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கொடுத்தனுப்பியுள்ள முக்கிய செய்தியை இந்தச் சந்திப்பின் போது ஜனாதிபதி மஹிந்தவிடம் குர்ஷித் கையளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ­ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ஷ ஆகியோரையும் இந்திய வெளி விவகார அமைச்சர் சந்தித்துப் பேச்சு நடத்துவார் எனவும் தெரியவருகின்றது.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸூடன் சல்மான் குர்ஷித் பேச்சு நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது சம்பூர் அனல் மின்நிலையம் தொடர்பான உடன்பாடுகளும் கைச்சாத்திடப்படவுள்ளன. அத்துடன், மீனவர்கள் பிரச்சினை குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.

அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் தலைமையில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.இதன்போது பல முக்கிய விடயங்கள் குறித்து அவருடன் தாம் பேச்சு நடத் தவுள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாளை செவ்வாய்க் கிழமை வடக்கு மாகாண முதலமைச்சரையும், ஆளுநரையும் யாழ்ப்பாணத்தில் வைத்துச் சந்திக்கவுள்ளார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித். இதன்போது வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கு இந்திய அரசின் வாழ்த்துக்களையும் அவர் தெரிவிக்கவுள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்த பின்னர் சந்திக்கும் முதல் வெளி நாட்டுப் பிரமுகராக சல்மான் குர்ஷித் இடம்பெறுகின்றார்.இறுதியாக மாலை 5.30 மணிக்கு ஊடகவியலாளர்களுடன் சந்திப்பை நடத்துவார். இதன் பின்னர் மாலை 6 மணிக்கு பலாலி விமான நிலையம் ஊடக மீண்டும் அவர் கொழும்பு திரும்பவுள்ளார் என்று இந்தியத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=284952345307661870#sthash.Nf6sSUPo.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

இதன் பின்னர் மாலை 6 மணிக்கு பலாலி விமான நிலையம் ஊடக மீண்டும் அவர் கொழும்பு திரும்பவுள்ளார் என்று இந்தியத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது

அடுத்த முறை பலாலி விமானநிலையம் ஊடாக மீண்டும் இந்தியா செல்லவேண்டும்

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய காங்கிரஸ் அரசு... விடுதலைப்புலிகளை அழித்து... மீண்டும் 1987 நிலைமையை உருவாக்கி சிறீலங்காவின் உதவியோடு தமிழ் மக்கள் மீது வேண்டாத ஒன்றை திணித்து சரிக்கட்ட நினைக்கிறது.

 

இந்தியா தனக்கு தேவையான தீர்வை திணிக்க நினைக்கிறதே தவிர தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு விருப்பங்களுக்கு இடமளிப்பதாகத் தெரியவில்லை.

 

போர்க்குற்றம்.. இன அழிப்பு.. மனித உரிமை மீறல்களை மூடிமறைக்க நினைக்கிறது.. பாரத தேசம். இதன் மூலம் சிறீலங்காவின் நீண்ட நாள் நண்பன் என்பதை அது சிங்களத்துக்கு அடித்துச் சொல்லவும் நினைக்கிறது.

 

அதற்கு சம்பந்தன்.. கூட்டணி.. மற்றும் சிறீலங்கா அரசு.. முள்ளிவாய்க்காலின் பின்னாலான நிலையை மக்களுக்கு அச்சமாகக் காட்டி.. உதவி வருகின்றன.

 

இந்த இடத்தில் தமிழ் மக்கள் மிகவும் நிதானமாகச் சிந்தித்து செயற்பட வேண்டும்.

 

கிடைப்பதை தூக்கி எறியாமலும்.. கிடைப்பதோடு.. திருப்திப்பட்டு விட்டவர்களை நம்பிக் கொண்டிராமலும்.. தமிழ் மக்கள் தமது அடுத்த கட்ட நகர்வுகளை நோக்கி புகலிடத்திலும்... தமிழகத்திலும் சரியான நகர்வுகளைச் செய்ய வேண்டும். இன்றேல்.. தமிழ் மக்கள்.. இந்திய - சிறீலங்கா கூட்டுச் சதிக்குள் சிறைப்படும் காலமே நெருங்கி வருகிறது.!

 

போர்க்குற்றவாளிகளும்.. போர்க்குற்றங்களும்.. இன அழிப்புக்களும்.. மனித உரிமை மீறல்களும்.. தெற்காசிய பிராந்தியத்தில் மன்னிக்கப்படவோ.. மறக்கப்படவோ முடியாதவை. தெற்காசிய அரசுகள்.. முழு மனித குலத்திற்கும் தவறான உதாரணமாகத் தொடர்வதை எனியும் அனுமதிக்க முடியாது. இதனை தமிழ் மக்கள் நன்குணர்ந்து நகர்வுகளைச் செய்தாகனும்.

 

மீண்டும்.. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒட்டுக்குழுக்களின் ஆதிக்கமே அதிகமாகவும் போகிறது. அவர்கள் இந்தச் சதிகளுக்குள் குளிர்காய நினைப்பவர்கள் என்பதையும் மக்கள் நன்கு அறிந்திருப்பது அவசியம்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

எப்ப வந்தாலும் சிங்கிடம் இருந்து ஒரு முக்கிய செய்தியோடை தான் வருவாராம்.

 

செய்தி குடுக்கும்போது சிங்கு ஏன் முக்கிகொண்டிருந்தார் எண்டு யாருக்கும் தெரியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.