Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீ ...தனம் எதுக்கு உனக்கு ஆண்மையே .!!

Featured Replies

 

சீ.. தனம் என்னும் அறையில்

பூட்டப்படும் கன்னிகள் பல ஆயிரம்

ஓதிடும் மந்திரம் பொய்யாகி போகும்

தர்மத்தை மறந்து நீ வாழ்வே ..

.

புரட்சி செய்பவர் நாங்களே

ஆதாரம் பல உண்டு பூமியில்

வேதனைப் பிடியில் வாழ்க்கை ஏன் ?

நீ பூட்டினை உடைத்திட வேண்டும் ..

 

ஜாதிகள் சொல்லி தரம் பார்த்து ஊரினில்

அவர்கள் உயர்ந்து நின்றனர் சமத்துவம்

சொல்லி இவர்கள் இருக்க

சத்தம் இல்லாமல் மனங்களை கொன்றனர் ...

 

புரட்சி குணம் கொண்டு ஒரு மாற்றம்

சீ....தனம் கொடுப்பதில் கொண்டுவா

ஈழ விழுமியம் காத்திட பேணிட நீ .

ஆங்காரம் கொண்டு உன்னை மாற்றிக்கொள் ..

 

 

பென்னும் பெருளும் வாழ்க்கை என்றால்

ஆண் அவைகளை கட்டிட்டு அலையட்டும்

நான் முதிர்கன்னியா வாழ்ந்திட்டு போகிறேன்

என்னில் தொடங்கட்டும் முதல் புரட்சி ..

 

Edited by அஞ்சரன்

முதுகெலும்புள்ள எந்த ஆண்மகனும் சீதனத்தை எதிர்பார்க்கமாட்டான். சீதனத்தால் சீரழிந்த பெண்கள் அதிகம்.

ஆனால் சீதனம் கேட்பதில் முன்னிற்பதே... பெண்கள்தான் என்பது மிக வருத்தத்திற்குரியது.  அதாவது ஆண்பிள்ளைகளின் அன்னையரே அதை எதிர்ப்பார்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதைப்பற்றி பந்தி பந்தியாக நிறையக் கதைக்கலாம்.

 

பெண்கள் முதிர்கன்னியாக வாழ்வது என்பது எவ்வளவுக்கு சாத்தியப்படும் என்றும் தெரியவில்லை.

முதலில் ஆண்கள் மாறவேண்டும். பொன்,பொருள் என்பதைவிட நல் மனையாளே சிறப்பென்று கருதவேண்டும்.

ஆனால் சீதனம் என்பது சமுதாயம் சார்ந்து ஆணின் மதிப்பை அளவிடும் அடையாளமாக இருப்பதும் முக்கிய பிரச்சினையாக இருக்கின்றது.

 

அஞ்சரன்.... சமுதாயப் பிரச்சினைகளை நோக்கி புரட்சிகரமான  கருத்துக்களை முன்வைத்து எழுதுவதற்கு என் பாராட்டுக்கள்.

எழுத்துப்பிழைகள், சொற்தொடர்ச்சி இல்லாமை எனும் சிறுகுறைகளையும் கொஞ்சம் கவனிக்கவும்.

நன்றி...! :)

 

ஒரு பெண் இந்தக் கவிதையைப் பாடுகின்றாள் சரி . ஆனால் , பல சீ ........தனங்கள் பெண்களால்தானே கேட்கப்படுகின்றன ?? அதே நேரம் அம்மாவின் சொல்லுக்கு தலையாட்டுகின்றவனைக் கலியாணம் செய்யும் நேரம் செய்யாமல் இருக்கலாம் . கவிதைக்குப் பாராட்டுக்கள் அஞ்சரன் :) :) .

 

  • தொடங்கியவர்

நன்றி கவிதை ..கோமகன் வரவுக்கும் கருத்துக்கும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஒன்று புரியவில்லை ‘திருமணம் ஆகாத பெண்கள் ‘முதிர்க்கன்னிகளா?

 

ஔவையாரும், செந்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியும் ‘முதிர்க்கன்னிகள் என்ற வரிசையில் தான் இருக்கின்றார்களா?!.

 

 

‘திருமணமாகாத 50ஐத் தாண்டிய ஆண்களும் அப்படித்தான் அழைக்கப்படுவார்களா என்ன?

 

கொஞ்சம் விளக்குங்களேன்!

 

 

‘சீதனம் வாங்கும் ஆண்களைக் கட்டிச்சீரழிவதை விட, சித்திரவதைப்படுவதை விட! ‘பெண்கள்’ பெற்றவர்களுக்குப்பிள்ளைகளாக அவர்களைப்போற்றி,காப்பாற்றி வாழ்ந்தாலே போதும்!....

 

 

‘அடுத்தபிறப்பொன்று உண்டானால்! அதிலும் பெண்ணாகப்பிறப்பெடுத்தால்! ‘இந்தக்கல்யாணத்தைக் கட்டாமல் அப்பா, அம்மாவிற்கு ப்பிள்ளையாகவே இருக்க வேண்டும்” ஆண்டவா!:)

  • தொடங்கியவர்

எனக்கு ஒன்று புரியவில்லை ‘திருமணம் ஆகாத பெண்கள் ‘முதிர்க்கன்னிகளா?

 

ஔவையாரும், செந்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியும் ‘முதிர்க்கன்னிகள் என்ற வரிசையில் தான் இருக்கின்றார்களா?!.

 

 

‘திருமணமாகாத 50ஐத் தாண்டிய ஆண்களும் அப்படித்தான் அழைக்கப்படுவார்களா என்ன?

 

கொஞ்சம் விளக்குங்களேன்!

 

 

‘சீதனம் வாங்கும் ஆண்களைக் கட்டிச்சீரழிவதை விட, சித்திரவதைப்படுவதை விட! ‘பெண்கள்’ பெற்றவர்களுக்குப்பிள்ளைகளாக அவர்களைப்போற்றி,காப்பாற்றி வாழ்ந்தாலே போதும்!....

 

 

‘அடுத்தபிறப்பொன்று உண்டானால்! அதிலும் பெண்ணாகப்பிறப்பெடுத்தால்! ‘இந்தக்கல்யாணத்தைக் கட்டாமல் அப்பா, அம்மாவிற்கு ப்பிள்ளையாகவே இருக்க வேண்டும்” ஆண்டவா! :)

தங்கை இது நீண்ட கால கேள்வி விடை தெரிந்தால் எமக்கும் நன்மையே :D

 

  • கருத்துக்கள உறவுகள்

சீதனம் கொடுப்பதுமில்லை கேட்பதுமில்லை.... 

  • தொடங்கியவர்

சீதனம் கொடுப்பதுமில்லை கேட்பதுமில்லை.... 

 

வீடும் காரும் போதும் அப்படியா :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.