Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலம் மக்ரேவின் இலங்கை குறித்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் - ஊடக அமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்ச்சைக்குரிய செனல்4 ஊடகத்தின் பணிப்பாளர் கலம் மக்ரேவின் இலங்கை குறித்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மக்ரே இலங்கைக்கு விஜயம் செய்ததன் பின்னர், இலங்கை தொடர்பான அவரது நிலைப்பாட்டில் மாற்றம் உண்டாகும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் ஊடகவியலாளர் குழுவுடன் மக்ரே இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். மக்ரேயுடன், மொத்தமாக 30 ஊடகவியலாளர்கள் பிரித்தானியாவின் சார்பில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்க உள்ளனர். கலம் மக்ரேக்கு வீசா வழங்குவதில் இலங்கைக்கு எவ்வித சிக்கல்களும் கிடையாது என அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டு நாடு குறித்த புரிதலை ஏற்படுத்திக் கொள்வார் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எவ்வாறெனினும், இலங்கைக்கு எதிராக மற்றுமொரு ஆவணப்படத்தை தயாரிக்க செனல்4 ஊடகம், பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ளக் கூடுமென அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அதனை முறியடிக்கத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98743/language/ta-IN/article.aspx

கலம் மக்ரே நேர்மையானவர். அவர் இந்தியர் அல்ல என்பதை அமைச்சர் உணரவேண்டும்

Edited by tulpen

லஞ்சம் குடுக்கலாம் என்று நினைத்தார்களோ? :D அவ்வாறு முற்பட்டால் அதையும் அடுத்த காணொளியில் வெளியிட வேண்டும். :icon_idea:

என்ன செய்தாலும் எடுத்த உண்மைகள்  அழியாதது. வரலாற்றில் பதியப்பட்டவை

 

சிங்களவனின் ஆமி நாசிப்படைக்கு ஒப்பானது.

  • கருத்துக்கள உறவுகள்

கலம் மக்ரே அவர்களுக்கு பேட்டி கொடுப்பதற்காக ஒட்டுக்குழு, ஒட்டுண்ணி, எலும்புபொறுக்கி, புலிப்பினாமிகள் என்று தோற்றம் பெற்றுள்ள பழைய, புதிய தமிழ்ப் பெருமக்களை மகிந்த கூட்டம் தேடி அலைந்திருக்கலாம். சில பல அகப்பட்டுவிட்டதுபோல் தெரிகிறது! அதன் வெளிப்பாடே ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் திமிரான அறிக்கையாகவும் இருக்கலாம். :icon_idea:  

கலோ தலைமை Stooges அவர்களே  கலம் மக்ரே சீனா நெடுந்தெருக்களை நேர்த்தியாக அமைத்திருக்கிறதா இல்லையா என்று பார்த்து சான்றிதள் வழங்கும் பொறியியலாளர் அல்ல. அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க போகிறீர்களாயின் ஊடகவியலார் எந்த வீசாவில் வந்தாலும் மகாநாடு நடத்த உரிமை வேண்டும். முதலில் அதற்கான ஒழுங்கை பார்க்கவும்.

செனல் - 4 குழு இலங்கை வருகை

 

இலங்கைக்கு எதிராக ஆவணப்படங்களை வெளியிட்ட செனல் - 4 வின் ஊடகவியலாளர் கெலம் மெக்கரே மற்றும் அவரது ஊடகக் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை calum-macrae-1.jpgவந்தடைந்துள்ளனர்.

இந் நிலையில் கெலும் மெக்கரே மற்றும் அவரது குழுவினருக்கு எதிராக விமான நிலையத்தில் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். 
 
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூனின் ஊடகக் குழுவில் மக்கரேவும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
சனல்-4 ஊடகவியலாளர்களுக்கு எதிராக  விமான நிலையத்தில்  ஆர்ப்பாட்டம்.
 

சனல்-4 ஊடகவியலாளர்களுக்கு எதிராக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.

தேசிய ஒன்றுமைக்கான இயக்கமே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்  சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டகாரர்கள்,  சனல்-4 ஊடகவியலாளர்களின் வருகையை எதிர்க்கும் சுலோகம் தாங்கிய அட்டைகளை தாங்கியிருந்ததுடன் சனல்-4 புலிகளின் அட்டூழியங்களை வெளிப்படுத்த தவறியுள்ளதாகவும் இலங்கைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

சுனல்-4 ஊடகவியலாளர்களுக்கு விசா வழங்கிய அரசாங்கத்திற்கு எதிராகவும் ஆர்ப்பாட்டகாரர்கள் தங்களுடைய கோஷங்களை எழுப்பினர்.

சனல்-4 ஊடகவியலாளரும் 'யுத்த சூன்ய வலயம்' படத்தின் இயக்குநருமான கலம் மக்றே விமான நிலையத்தில் வைத்து ஆர்ப்பாட்டகாரர்களால் சுற்றிவளைகப்பட்டாரென சனல்-4 ஊடகவியலாளரான ஜொனாதன் சமூக வலைத்தளங்களுக்கு செய்திகளை உடனடியாக அனுப்பினார்.

maklim1-600x904.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.