Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கன்னட இராமசாமியை - (பெரியாரை) புறக்கணித்த முற்றம் - அழுகிறார் சுபவீ.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

subavee.jpg

           
நாகரிகம் கருதி அல்லது நாகரிகம் என்று கருதி, உண்மைகள் சிலவற்றைப் பட்டென்று உடைத்துப் பேசாமல் மறைத்து மறைத்துக் கூறுவதுதான், மிகப்பெரிய அநாகரிகம் என்று தோன்றுகிறது.
 
தஞ்சை அருகே விளாரில் உருவாக்கப்பெற்று அண்மையில் திறப்புவிழா நடைபெற்றுள்ள "முள்ளி வாய்க்கால் முற்றம்' குறித்த என் கருத்துகளையும், அதற்கான என் பாராட்டுதல்களையும் என் வலைப் பூவில் பதிவு செய்துள்ளேன்.
 
அதே முற்றம் குறித்த சில கசப்பான உண்மைகளை ஒளிவு மறைவின்றி உரைக்க வேண்டிய நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மூன்று செய்திகளைப் பேச வேண்டியுள்ளது.
 
1. முற்றத்தின் மீது, ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு தொடுத்த அனைத்துத் தாக்குதல்களும் மூடி மறைக்கப்பட்டுள்ளன.
 
2. ஒரு குறிப்பிட்ட பெரு முதலாளியும், அவர் பிறந்த சாதியும் உயர்த்திப் பிடிக்கப்பட்டுள்ள நிலை.
 
3. தந்தை பெரியாரின்  படம், திட்டமிட்டே முற்றத்தில் புறக்கணிக் கப்பட்டுள்ளது.
 
subavee1.jpg

முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு தன்னால் ஆன அனைத்துத் தடைகளையும், தொடக்கத்திலிருந்தே ஜெ. அரசு செய்து வந்துள்ளது. ஆனால், முற்றத்தின் முழுப்பொறுப்பாளர்களான அய்யா நெடுமாறனும், நடராசனும் அவற்றை அம்பலப்படுத்தாமல் அழுத்தி மறைத்துக்கொண்டே இருந்தனர். அது மட்டுமல்லாமல் முற்றம் திறப்பு விழா விற்கு, அம்மையாரையே அழைத்து வந்துவிடவேண்டும் என்று.
 

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவர் ஜெயலலிதா அரசால் இடிக்கப்பட்டுள்ளது. முழுவதும் இடிப்பதற்கான முன்னோட்டம் இது.

(அநேகமாக இந்தப் போலித் தமிழ்த் தேசியவாதிகள் யாருக்கும் தெரியாமல் ஜெயலலிதாவின் காலில் விழுந்து கதறிக் கொண்டிருப்பார்கள்)

தோழர் தியாகுவின் உண்ணாவிரதத்திற்கு பின்பு போலித் தமிழ் தேசியத்திற்கு ஏற்பட்ட இரண்டாவது தோல்வி இது. இனியாவது நண்பர் யார், எதிரி யார் என்பதை இனம் காணுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சுபவி வழமை போலவே கலைஞருக்கு வால்பிடிப்பதை நாகரீகமாகப் பிதற்றுகின்றார். அண்ணன் திருமாவளவனோ, கிருஸ்ணசாமியோ அழைக்கப்படவில்லை என்பதை விட, கருணாநிதியை ஏன் அழைக்கவில்லை என்பதைச் சுபவி நேரடியாக்க கேட்டிருக்கலாம்... அப்படிக் கேட்டிருந்தால் அவர் நியாமுள்ளர். அதனால் தான் கலைஞர் படத்தை வைக்க்கும் அளவு நேர்மை என்று கண்ணீர் வடிக்கின்றார்.

ஐயா சுபவி, இப்போதும் அடிமனதில் உங்களின் மீது மரியாதை உள்ளது. திரும்பத் திரும்ப இப்படிக் கலைஞருக்காகப் பிதற்றி மரியாதையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

சபேசன் என்ன சொல்கின்றார் எனில், அம்மாவின் காலில் விழுந்து கதறுவதை விடக் கலைஞரிடம் காசு வாங்கிப் பிதற்றலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி சரி.. ஜெயலலிதா சரி.. சுபவீ சரி.. சபேசனும் சரி.. எல்லோருமே இராமசாமியை வைச்சு பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே தமிழர்களின் வலியிலும் இழப்பிலும் தங்களின் சொந்த நலன்காக்கும் அரசியல்.. மற்றும் சுயநலத்தை வளர்த்துக் கொள்ள பின்நிற்காதவர்கள்..!

 

கருணாநிதி ஜெயலலிதாவின் மனிதாபிமானமற்ற இன்றைய நடவடிக்கையைக் கூட கண்டிக்க முன்வரவில்லை. முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு வித்திட்ட அவரால்.. இதனை கண்டிக்கவும் முடியாது. கண்டித்திருந்தால் கூட அது பெரும் பாதகம் தான்..!

 

ஆக.. ஜெயலலிதா.. கருணாநிதி.. சுபவீ எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. தமிழக மக்கள் இவர்களை என்று நிராகரித்து தமிழர்களை தமிழர்கள் ஆள வழி செய்கிறார்களோ அன்று தான் தமிழகம் ஒரு அளவுக்கு என்றாலும் இனப்பற்றுள்ள இன அடையாளத்தை வரலாற்றை இன எதிர்காலத்தை... உளத் தூய்மையோடு காக்கக் கூடிய அரசை அமைக்க முடியும்.

 

சினிமா மோகத்தில் அந்நிய மோகத்தில் இருக்கும் தமிழக மக்களில் படித்த கூட்டம் தெளியாத வரை.. அங்கு மாற்றம் என்பது மந்தமானதாகவே இருக்கும். இன்று போராடும் மாணவர்கள் நாளை தலைவர்கள் ஆனால் கொஞ்சம் கூடிய விரைவில் அது நிகழலாம். அதுவும் மாணவர்கள் இதே விழிப்புணர்வோடு இருந்தால். வளர்க்கப்பட்டால்.

ராமசாமியார் கூட்டத்தாலை  திராவிட நாடுகளில் இருந்து தண்ணி கூட தமிழர்களுக்காக  கொண்டு வர முடியவில்லை ...     இந்த திராவிடத்தை தமிழனை நசுக்க மட்டும் தான் பாவிக்கிறார்கள்...  

 

திமுக ஆரம்பித்த போது  கங்கிரசை ஆதரித்து நிண்டு  திமுக வை கடுமையாக எதிர்த்தவர்  இராமசாமியார்...   அதிலை படுதோல்வியும் கண்டார்...   இப்ப காங்கிரசோடை சேர்ந்து நிண்டு தமிழர்களை அழித்த கலைஞர்  நல்லவர்  அவருக்காக  இராம சாமியார் பெயரின்  மரியாதை வேணுமாம்... 

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

 

சினிமா மோகத்தில் அந்நிய மோகத்தில் இருக்கும் தமிழக மக்களில் படித்த கூட்டம் தெளியாத வரை.. அங்கு மாற்றம் என்பது மந்தமானதாகவே இருக்கும். இன்று போராடும் மாணவர்கள் நாளை தலைவர்கள் ஆனால் கொஞ்சம் கூடிய விரைவில் அது நிகழலாம். அதுவும் மாணவர்கள் இதே விழிப்புணர்வோடு இருந்தால். வளர்க்கப்பட்டால்.

 

வளரும் பயிரை முளையிலே தெரியும் என்பார்கள். தெரிகிறது. மாணவர்கள் வருவார்கள். நம்பிக்கையுள்ளது. 

மீண்டும் சொல்கிறோம். தமிழினத்தின் எதிரி சிங்களப் பேரினவாதமும், ஆரியப் பார்ப்பனியமும்தான். ஆரியப் பார்ப்பனியம் மிகத் தந்திரமாக தமிழர்களை தமிழர்களுடன் மோத விட்டிருக்கிறது.

அதனால்தான் ராஜபக்சேவை திட்டுவதை விட சிலர் அதிகமாக திராவிடத்தை திட்டிக் கொண்டு அலைகிறார்கள். விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டிற்கு போன பொழுது, அவர்களுக்கு அலுவலகம் அமைத்துக் கொடுத்ததும், பயிற்சி எடுக்க நிலம் கொடுத்ததும் திராவிடம்தான். அப்பொழுது பிறந்தே இருக்காதவர்கள் எல்லாம் இன்றைக்கு தமிழ்தேசியம் என்று நீட்டி முழக்கி, கடைசியில் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று முடிக்கிறார்கள்.

இப்படியே இருந்து அழிந்து போங்கள்! வேறு என்ன சொல்ல முடியும்??!!!

மீண்டும் சொல்கிறோம். தமிழினத்தின் எதிரி சிங்களப் பேரினவாதமும், ஆரியப் பார்ப்பனியமும்தான். ஆரியப் பார்ப்பனியம் மிகத் தந்திரமாக தமிழர்களை தமிழர்களுடன் மோத விட்டிருக்கிறது.

அதனால்தான் ராஜபக்சேவை திட்டுவதை விட சிலர் அதிகமாக திராவிடத்தை திட்டிக் கொண்டு அலைகிறார்கள். விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டிற்கு போன பொழுது, அவர்களுக்கு அலுவலகம் அமைத்துக் கொடுத்ததும், பயிற்சி எடுக்க நிலம் கொடுத்ததும் திராவிடம்தான். அப்பொழுது பிறந்தே இருக்காதவர்கள் எல்லாம் இன்றைக்கு தமிழ்தேசியம் என்று நீட்டி முழக்கி, கடைசியில் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று முடிக்கிறார்கள்.

இப்படியே இருந்து அழிந்து போங்கள்! வேறு என்ன சொல்ல முடியும்??!!!

 

 

தமிழினத்தின் எதிரிக்கு துணை போவது   திராவிடமே...   தமிழரின் எழுச்சிக்கு தடையாக இருப்பதும் கூட திராவிடமே... !   

 

ஈழத்தில்  தமிழினம் அலறிய போது  அதற்க்கு மிண்டு கொடுத்ததும் திராவிடமே,  நாளாந்த கடலில் இந்திய மீனவர்கள் சாகும் போதும்  தமிழ் துடிக்க திராவிடம் அடக்குகிறது... !   தமிழக விவசாயிக்கள் தண்ணீர் இல்லாமல்  தற்கொலை செய்கிறார்கள்  காரணமாக இருப்பதும் கூட  தெலுங்கு கன்னட  மலையாள  திராவிடர்களே... 

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சொல்கிறோம். தமிழினத்தின் எதிரி சிங்களப் பேரினவாதமும், ஆரியப் பார்ப்பனியமும்தான். ஆரியப் பார்ப்பனியம் மிகத் தந்திரமாக தமிழர்களை தமிழர்களுடன் மோத விட்டிருக்கிறது.

அதனால்தான் ராஜபக்சேவை திட்டுவதை விட சிலர் அதிகமாக திராவிடத்தை திட்டிக் கொண்டு அலைகிறார்கள். விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டிற்கு போன பொழுது, அவர்களுக்கு அலுவலகம் அமைத்துக் கொடுத்ததும், பயிற்சி எடுக்க நிலம் கொடுத்ததும் திராவிடம்தான். அப்பொழுது பிறந்தே இருக்காதவர்கள் எல்லாம் இன்றைக்கு தமிழ்தேசியம் என்று நீட்டி முழக்கி, கடைசியில் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று முடிக்கிறார்கள்.

இப்படியே இருந்து அழிந்து போங்கள்! வேறு என்ன சொல்ல முடியும்??!!!

 

தமிழ்நாட்டில் நிலம் குடுத்த திராவிடம் ஏன் கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் குடுக்கவில்லை? :D

மீண்டும் சொல்கிறோம். தமிழினத்தின் எதிரி சிங்களப் பேரினவாதமும், ஆரியப் பார்ப்பனியமும்தான். ஆரியப் பார்ப்பனியம் மிகத் தந்திரமாக தமிழர்களை தமிழர்களுடன் மோத விட்டிருக்கிறது.

அதனால்தான் ராஜபக்சேவை திட்டுவதை விட சிலர் அதிகமாக திராவிடத்தை திட்டிக் கொண்டு அலைகிறார்கள். விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டிற்கு போன பொழுது, அவர்களுக்கு அலுவலகம் அமைத்துக் கொடுத்ததும், பயிற்சி எடுக்க நிலம் கொடுத்ததும் திராவிடம்தான். அப்பொழுது பிறந்தே இருக்காதவர்கள் எல்லாம் இன்றைக்கு தமிழ்தேசியம் என்று நீட்டி முழக்கி, கடைசியில் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று முடிக்கிறார்கள்.

இப்படியே இருந்து அழிந்து போங்கள்! வேறு என்ன சொல்ல முடியும்??!!!

 திராவிடம் நீங்கள் கூறிய ஆரியப் பார்ப்பனியத்துக்கு தரகு வேலை பார்த்தது. அவ்வளவுதான்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

செல்வநாயகம் போராடும்போது தான் இதே திராவிடம் கையை விரித்தது என்பதையும் சொல்லலாமே.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் நிலம் குடுத்த திராவிடம் ஏன் கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் குடுக்கவில்லை? :D

 

'கற்றது கை மண்ணளவு'. நான்கற்றது ஒரு மண் அளவுகூட இல்லை. ஆனாலும் அதிலிருந்தும் நான் தெரிந்துகொண்டது.... எந்த இனங்களும் வேறு இனத்துடன் அதனதன் கலாச்சாரங்களுடன் இணக்கத்திற்குப் போனதில்லை, போவதற்கு முயற்சிப்பதும் இல்லை, தனித்துவத்தையே நாடி நிற்கின்றன. தமிழினத்தைத் தவிர.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.