Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள்.

http://www.kaasi.info/pages/kavithai.htm

இணைப்புக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

இணப்புக்கு நன்றிகள்

உணர்ச்சிக் கவிஞரின் கவிதைகளை இணைத்தமைக்கு நன்றிகள் சகாறா.

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழா! நீ பேசுவது தமிழா...?

தமிழா!

நீ

பேசுவது தமிழா?

அன்னையைத் தமிழ்வாயால்

'மம்மி' என்றழைத்தாய்...

அழகுக் குழந்தையை

'பேபி' என்றழைத்தாய்...

என்னடா, தந்தையை

'டாடி' என்றழைத்தாய்...

இன்னுயிர்த் தமிழை

கொன்று தொலைத்தாய்...

தமிழா!

நீ

பேசுவது தமிழா?

உறவை 'லவ்' என்றாய்

உதவாத சேர்க்கை...

'ஒய்ப்' என்றாய் மனைவியை

பார் உன்றன் போக்கை...

இரவை 'நைட்' என்றாய்

விடியாதுன் வாழ்க்கை

இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்

அறுத்தெறி நாக்கை...

தமிழா!

நீ

பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான்

'லெப்ட்டா? ரைட்டா?'

வழக்கறிஞன் கேட்டான்

என்ன தம்பி 'பைட்டா?'

துண்டுக்காரன் கேட்டான்

கூட்டம் 'லேட்டா?'

தொலையாதா தமிழ்

இப்படிக் கேட்டா?

தமிழா!

நீ

பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை

'பிரண்டு' என்பதா?

கோலத் தமிழ்மொழியை

ஆங்கிலம் தின்பதா?

கண்டவனை எல்லாம்

'சார்' என்று சொல்வதா?

கண்முன் உன் தாய்மொழி

சாவது நல்லதா?

தமிழா!

நீ

பேசுவது தமிழா?

பாட்டன் கையில

'வாக்கிங் ஸ்டிக்கா'

பாட்டி உதட்டுல

என்ன 'லிப்ஸ்டிக்கா?'

வீட்டில பெண்ணின்

தலையில் 'ரிப்பனா?'

வெள்ளைக்காரன்தான்

உனக்கு அப்பனா?

தமிழா!

நீ

பேசுவது தமிழா?

  • கருத்துக்கள உறவுகள்

பாவலரே!

என்ன கவி எழுதுகிறீர்

பாவலரே! போலிகளாய்

இருக்கின்றீர்கள்!

கன்னி அருந்தமிழணங்கு

கையிரண்டில் விலங்குடையாள்

கண்ணீர் கண்டும்

செந்நெருப்பு விழிகொண்டு

சீறியெழ மாட்டீரோ?

சீச்சி! வானில்

புண்ணிருந்தால் போலிருக்கும்

நிலாவினையும் காதலையும்

புனைகின்றீரே!

பொங்கு வெறித் தமிழ்கொண்டு

போர்க்களத்தே ஒளவையென்னும்

பூவை அந்நாள்

செங்குருதி குளித்திருந்த

தமிழ்மன்னர் சிறப்பெல்லாம்

கவிதை ஆக்கிச்

சங்க மணித் தமிழ்தந்தாள்...

அட நீங்கள் தாய்த்தமிழை

மறந்து நாட்டில

தெங்கிளநீர் முலைபாடித்

திரிகின்றீர்... கவிஞர்களா?

செத்துப் போங்கள்!

ஊர் பற்றி மொழி பற்றி

ஒரு பொழுதேனும் நீவிர்

உணர்கின்றீரா?

தீ பற்றி எரிகின்ற

வீட்டினிலே இசைபாடிச்

சிரிக்கின்றீர்கள்?

வாய்பற்றி எரியாதா?

தமிழன்னை மனம் நொந்து

வயிறெரிந்தால்

நீர்பற்றும் எழுத்தாணி

நொறுங்காதா? விளையாடல்

நிறுத்திமின்கள்!

சொல்லடுக்கிச் சொல்லடுக்கி

நீர் சொரிந்த பாடலெல்லாம்

போதும்... மாற்றார்

பல்லுடைத்து நமக்குற்ற

பழிதுடைக்க நாலுகவி

படைப்பீர்... ஓடி

வில்லெடுத்து வேலெடுத்துத்

தமிழிளைஞர் வெளிக்கிளம்ப

நெருப்பு வீசும்

சொல்லெடுப்பீர்... பாவலரே!

இல்லையெனில் தொழில் விடுங்கள்!

அதுவும் நன்றே!

தமிழ்மேல் ஆணை!

தாயே... தமிழே!

தலை கவிழ்ந்த பொற்செல்வி!

நீ கலங்க வேண்டாம்...

வருங்காலம் நின் காலம்!

அன்னாய்... இதுகேள்!

அடுத்த பரம்பரையில்

பொன்னால் முடிநீ

புனை நாள் இவண் செய்வேன்!

எள்ளி நகைத்து

நினைப்பழிப்போன் செந்நீர்

வெள்ளம் குளித்து

விளையாடுவேன் தாயே!

சத்தை இழந்த தமிழ்ச்

சாதி பிழைக்க நான்

பத்தாயிரங் கவிதை

பாடாமல் போவேனோ?

தாயே! துயரம்

தவிர்த்திரடி... மாற்றானை

நாயாய் அடித்து

நடுத்தெருவில் வைக்கின்றேன்!

என்னுயிரைத் தூக்கி

எறிந்து தமிழணங்கே

அன்னை நினதுயிராய்

ஆவேன் நான்... ஆணையடி!

  • கருத்துக்கள உறவுகள்

களம் புகுவாய்!

மானம் எனுமொரு பானையில் வாழ்வெனும்

தீனி சமைத்தவனே! - தமிழ்

போனதடா சிறை போனதடா! அட

பொங்கி எழுந்திடடா!

காட்டு தமிழ்மறம்! ஓட்டு வரும்பகை!

பூட்டு நொறுக்கிடுவாய்!- நிலை

நாட்டு குலப்புகழ்! தீட்டு புதுக்கவி!

ஏற்று தமிழ்க் கொடியே!

முந்து தமிழ்மொழி நொந்து வதைபட

இந்தி வலம் வரவோ? - இது

நிந்தை! உடனுயிர் தந்து புகழ்பெறு!

வந்து களம் புகுவாய்!

நாறு பிணக்களம் நூறு படித்துநம்

வீறு மிகுந்த குலம் - பெறும்

ஊறு துடைத்திடு மாறு புறப்படு!

ஏறு நிகர்த்தவனே!

நாலு திசைகளும் ஆள நடுங்கிய

கோழை எனக்கிடந்தாய்! - மலைத்

தோளும் குனிந்தது போலும்! விழித்தெழு

காலம் அழைக்குதடா!

  • கருத்துக்கள உறவுகள்

மடிந்து போ!

தேனைப் பொழிந்தும் கனிகள் சொரிந்தும்

செங்கரும்பைப் பிழிந்தும்

ஆநெய் கறுவாஏலம் கலந்தும்

அமுதாய்த் தமிழ்ப் புலவன்

ஊனை உயிரை உருக்கும் தமிழை

உன்றனுக்கே தந்தான்...

சோணைப் பயலே! தமிழை இழந் தும்

தூங்கி நின்றாயோடா?

முத்துக் குறளும் காப்பிய மைந்தும்

முதுகாப்பியன் தமிழும்

பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்

பதிகமும் உலாநூலும்

தித்திக்கும் கம்பன் புகழேந்தி

தேன் தமிழும் வீழ்ந்தே

செத்துத் தொலையப் பகை பொங்கியது!

சிரம் தாழ்ந்தனையோடா?

காள மேகக் கவிதை மழையும்

கவி பாரதி தமிழும்

கோலத் தேம்பா வணியும் அழகு

கொஞ்சு நற்சீறாவும்

தாளம் போட்டு வாழாப் பாரதி

தாசன் வெறித் தமிழும்

ஏலம் போட்டார் பகைவர்! அடநீ

எங்குற்றாயோடா?

முன்னைத் தமிழன் அன்னைத் தமிழை

முக்கூடல் நிறுவி

கண்ணாய் உயிராய் ஓம்பிய காலம்

கனிந்த புகழெல்லாம்

உன்னை ஒருதாய் உருவாக்கியதால்

உடைந்து துகள்படவே

மண்ணானது மானம் என வாழ்ந்தாய்!

மடிந்துபோ தமிழா!

  • கருத்துக்கள உறவுகள்

கலங்கரை

முந்தி முளைத்த கலங்கரை

தமிழ்ப் பரம்பரை - நடுச்

சந்தியில் வீழ்ந்து துடிப்பதேன்?

தாழ்ந்து கிடப்பதேன்?

அள்ளிக் கொடுத்தகை கேட்குதே!

ஓடு தூக்குதே! - இலை

கிள்ளிப் பொறுக்கித் திரியுதே!

உள்ளம் எரியுதே!

மாற்றார் தலைதனில் ஏற்றினாய்

கல்லை! வாட்டினாய்! - இன்று

மூட்டை சுமந்து நடக்கிறாய்!

தாழ்ந்து கிடக்கிறாய்

ஆதியில் மாடம் அமைத்தவர்

வாழ்வு சமைத்தவர் - அட

வீதியில் காலம் கழிப்பதோ?

நால்வர் பழிப்பதோ?

முல்லைக்குத் தேரை வழங்கினோம்

என்று முழங்கினோம்! - இங்கே

பிள்ளைக்குப் பாலில்லை பாரடா!

தருவார் யாரடா?

  • கருத்துக்கள உறவுகள்

மறப்பேனா?

பட்டினி கிடந்து பசியால் மெலிந்து

பாழ்பட நேர்ந்தாலும் - என்றன்

கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து

கவலை மிகுந்தாலும் - வாழ்வு

கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து

கீழ்நிலை யுற்றாலும் - மன்னர்

தொட்டு வளர்த்த தமிழ்மகளின் துயர்

துடைக்க மறப்பேனா?

நோயில் இருந்து மயங்கி வளைந்து

நுடங்கி விழுந்தாலும் - ஓலைப்

பாயில் நெளிந்து மரண மடைந்து

பாடையில் ஊர்ந்தாலும் - காட்டுத்

தீயில் அவிந்து புனலில் அழிந்து

சிதைந்து முடிந்தாலும் - என்றன்

தாயில் இனிய தமிழ்மொழியின் துயர்

தாங்க மறப்பேனா?

பட்ட மளித்துப் பதவி கொடுத்தொரு

பக்கம் இழுத்தாலும் - ஆள்வோர்

கட்டி அணைத்தொரு முத்த மளித்துக்

கால்கை பிடித்தாலும் - என்னைத்

தொட்டு விழுந்து வணங்கி இருந்தவர்

தோழமை கொண்டாலும் - அந்த

வெட்டி மனிதர் உடல்களை மண்மிசை

வீழ்த்த மறப்பேனா?

பொங்கு வெறியர் சிறைமதிலுள் எனைப்

பூட்டி வதைத்தாலும் - என்றன்

அங்கம் பிளந்து விழுந்து துடிக்க

அடிகள் கொடுத்தாலும் - உயிர்

தொங்கி அசைந்து மடிந்து தசையுடல்

தூள்பட நேர்ந்தாலும் - ஒரு

செங்களம் ஆடி வரும் புகழோடு

சிரிக்க மறப்பேனா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சி!

இலங்கை மலைதனிலே... தமிழச்சி!

என்ன துயரெலாம் காணுகின்றாயடி!

முழங்கை வலித்திடவே தேயிலை

முளைகள் பறித்து முகம் சிவப்பாயம்மா!

விலங்கும் உறங்கிநிற்கும் சாமத்தில்

விழித்து நெடுமலை ஏறி இறங்குவாய்!

பழங்கள் பழுத்திடாதோ உன் காலில்?

பச்சைக் குருதிநீர் பாயாதோ கண்மணி?

காலைப் பனிநனைவாய்! என்னம்மா...

காய்ந்து நடுவெயில் தனிலே கருகுவாய்;

பாலை நினைந்தழுவான் உன் பிள்ளை...

பாவி வெறும் முலை நினைந்தழுவாயடி!

ஏழை அடிமையடி தமிழச்சி!

இங்கோர் தமிழுடல் ஏனெடுத்தாயம்மா?

ஊழை நினைந்தழவோ? தமிழனின்

உரிமை இலாநிலை எண்ணி அழவோடி?

காட்டு மலைதனிலே... தமிழச்சி!

காலம் முழுவதும் நீ உழைத்தென்னடி?

ஓட்டைக் குடிசையொன்றும் வாழ்விலே

ஓயா வறுமையும் நோயும் இவையன்றி

தேட்டம் எதுபடைத்தாய்? அடி ஒரு

செம்புப் பணமேனும் தேறியதுண்டோடி?

நாட்டின் முதுகெலும்பே தமிழச்சி!

நானிலம் வாழநீ மாள்வதோ அம்மா?

புரச்சிக்கவியின் கவிதைகள் இணைத்தமைக்கு நன்றிகள் கந்தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.