Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுகவே !!!!!!!!!!!

Featured Replies

எழுகவே !!!!!!!!!!!

 

ஒரு பேப்பருக்காக கோமகன்

 

 

58139_379443132169644_1998440734_n.jpg

 

எழுகவே எழுகவே
எட்டுத்திக்கும் எழுகவே !!
பட்டி தொட்டி எங்கிலும்
போர்பரணி ,
எழுகவே எழுகவே
எழுக எழுக எழுகவே !!

கட்டுச் செட்டு என்று
வாழ்திருந்த   எங்களை
பட்டு பட்டு என்று
எம்மை
நீங்கள் சுட்டு விட்ட போதிலும் ,
கந்தகமும் பொஸ்பரசும்
எம்மை எரித்து  விட்ட போதிலும் ,
எழுகவே எழுகவே
எழுக எழுக எழுகவே !!!

கொத்துக் கொத்தாய்
எம்மை நீங்கள்
கொத்திக் குதறி எடுத்தாலும் ,
வீறுகொண்டு வீரியமாய்
நாங்கள்,
எழுகவே எழுகவே
எழுக எழுக எழுகவே !!!

ஊனை உருக்கி உதிரம் பாச்சி
வளர்த்த எங்கள் தேசமடா…..
காட்டு நரியும் கூட்டு ஓநாயும்
கூடிக் கொக்கரிக்க
விட்டு விடுவோமா சொல்லடா ??
எழுகவே எழுகவே
எழுக எழுக எழுகவே !!!!!!!

கொண்ட கொள்கை
கொண்ட உறுதி
கொட்டிக் கிடக்கு எம்மிடம்…
அழுகை நிறுத்தி
அச்சம் போக்கி
எழுந்து நின்று பாரடா…..
எத்தர்களும் எதிரிகளும்
புறமுதுகு காட்டி ஓடவே
நீயும் ,
போர்பரணி பாடடா…..
எழுகவே எழுகவே
வீரமுடன் எழுகவே !!!!!!!!!


கோமகன்
27 கார்த்திகை 2013


முதன் முறையாகத் தாளக் கட்டுடன் ஒரு கவிதை அல்லது பாடல் எழுதியிருக்கின்றேன் . உங்கள் ஆக்க பூர்வமான விமர்சனங்களை எதிர்பார்க்கின்றேன்  :)  :)  .

  • கருத்துக்கள உறவுகள்

பாரதியாரை நினைவு படுத்துகின்றது! நன்றுதொடருங்கள்!! :D

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கோ........

 

நிச்சயமாக இதை வரவேற்கப்போவதில்லை

எவருக்காகவும்

இவ்வாறு மாறவேண்டாம்..............

மாறவும் கூடாது............

அவர்களுக்கான பாடல் அல்லது  கவிதை என்பது

 எவருக்கும் தாளம் போடுவதற்காக வரக்கூடாது.............. :(  :(  :(

உயிரின் அடி நாதத்திலிருந்து வரணும் :(

.

  • தொடங்கியவர்

நன்று கோ.

 

வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி இளம் பிறையனாரே :) :) .

 

  • தொடங்கியவர்

பாரதியாரை நினைவு படுத்துகின்றது! நன்றுதொடருங்கள்!! :D

 

முண்டாசுக்கவிக்கு இணயாக யாரும் இல்லை . உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சுவியர் :) :) .

 

  • தொடங்கியவர்

வணக்கம் கோ........

 

நிச்சயமாக இதை வரவேற்கப்போவதில்லை

எவருக்காகவும்

இவ்வாறு மாறவேண்டாம்..............

மாறவும் கூடாது............

அவர்களுக்கான பாடல் அல்லது  கவிதை என்பது

 எவருக்கும் தாளம் போடுவதற்காக வரக்கூடாது.............. :(  :(  :(

உயிரின் அடி நாதத்திலிருந்து வரணும் :(

.

 

வணக்கம் விசுகு  ஐயா உங்கள் கருத்தாடலைப்  பார்க்கும் பொழுது " மாமியார் உடைச்சால் மண்குடமாம் மருமேள் உடைச்சால் பொன்குடமாம் என்ற சொலவடையும் . பெண்டில் கதைச்சால் தேனப்பா!!!!! அம்மா கதைச்சால் " ஏன் அப்பா " ??????? என்ற சொலவடையுமே நினைவில் வந்ததது . என்னைப் பொறுத்தவரையில் ஒரு கவிஞன் என்பதற்கு வரைவிலக்கணமானது , அவன் பலமுகம் கொண்ட படைப்பு ஆற்றல்களைக் கொண்டிருக்க வேண்டும் . தனிய ஒருமுகத்துடன் கவிதை வடிப்பவன் வெறும் பிரச்சாரப் பீரங்கிகளே!!!  இந்தக் கவிஞனுக்கு கொத்து றொட்டிக் கவிதையும் வடிக்கத் தெரியும்  :lol:  :icon_idea:  , இது போன்ற கவிதையும் வடிக்கத் தெரியும்   :D  . எது எப்படியோ உங்கள் கருத்தாடலுக்கு மிக்க நன்றி ஐயா . :)

 

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரையில் ஒரு கவிஞன் என்பதற்கு வரைவிலக்கணமானது , அவன் பலமுகம் கொண்ட படைப்பு ஆற்றல்களைக் கொண்டிருக்க வேண்டும் . தனிய ஒருமுகத்துடன் கவிதை வடிப்பவன் வெறும் பிரச்சாரப் பீரங்கிகளே!!!  இந்தக் கவிஞனுக்கு கொத்து றொட்டிக் கவிதையும் வடிக்கத் தெரியும்  :lol:  :icon_idea:  , இது போன்ற கவிதையும் வடிக்கத் தெரியும்   :D  . எது எப்படியோ உங்கள் கருத்தாடலுக்கு மிக்க நன்றி ஐயா . :)

 

கோமகன் இங்கு எழுதும் எனது கருத்துக்கள் உங்களை சங்கடப்படுத்தின் மன்னித்தருள்க. கவிதையோ கதையோ எதுவானாலும் ஒரு படைப்பென்பது ஒவ்வொருவரின் ஆத்மாவின் பிரதிபலிப்பேயாகும். ஒவ்வொரு கவிதை அல்லது கதையை எழுதும் படைப்பாளி நிச்சயம் அந்த எழுத்தில் ஒரு மூலையிலேனும் தனது வாழ்வை அல்லது தனது பாதிப்பை அல்லது தான் கடந்து வந்தவர்களின் பாதிப்பேனும் அங்கு உயிரோடு வாழும். அதுதான் ஒரு ஆத்மார்த்தமான படைப்பாகும்.இது எனது எழுத்துக்களின் அனுபவம். உங்களுக்கு மாறுபடலாம் என்பதனை உங்கள் கருத்து மூலம் உணர முடிகிறது.

இது தலைப்பு இதற்கு எழுதென்பது நீங்கள் இங்கு குறிப்பிடுகிற படைப்பாளி அல்லது கவிஞருக்குரிய அடையாளம்.

 

பல்முகம் கொண்ட ஆற்றல் என்பதற்கு நீங்கள் கொண்டிருக்கும் அர்த்தமும் எனது எண்ணமும் வேறானது. நீங்கள் எழுதி தாளக்கட்டோடு எழுதியதாக சொல்லியுள்ள மேலுள்ள கவிதையை உண்மையில் ஒரு தாளக்கட்டோடு வாசிக்கவோ ரசிக்கவோ முடியவில்லை. முடிவுதறிவோடு தான் வாசிக்க முடிகிறது.

நீங்கள் உங்கள் பன்முகத்தன்மையை விரிவாக்கம் செய்ய  விரும்பின்  அல்லது உங்களை பன்முகத்தன்மையாளனாய் அடையாளப்படுத்த விரும்பின் இத்தகைய முயற்சிகளில் நிச்சயம் வெற்றி பெற வாழ்த்துக்கள். ஆனால் வலிந்து இங்கு எழுதும் உங்கள் கருத்தாலும் சில இடங்களில் அதிகப்படியான மெத்தனப்போக்கும் நிச்சயம் உங்களை பன்முனத்தன்மையாய் அடையாளம் காட்டாது.

 

அங்கேயொரு கிறுக்குத் தனத்தை அல்லது தலைக்கனத்தைத் தான் வெளிப்படுத்துகிறது உங்கள் கருத்து.

 

  • தொடங்கியவர்

கோமகன் இங்கு எழுதும் எனது கருத்துக்கள் உங்களை சங்கடப்படுத்தின் மன்னித்தருள்க. கவிதையோ கதையோ எதுவானாலும் ஒரு படைப்பென்பது ஒவ்வொருவரின் ஆத்மாவின் பிரதிபலிப்பேயாகும். ஒவ்வொரு கவிதை அல்லது கதையை எழுதும் படைப்பாளி நிச்சயம் அந்த எழுத்தில் ஒரு மூலையிலேனும் தனது வாழ்வை அல்லது தனது பாதிப்பை அல்லது தான் கடந்து வந்தவர்களின் பாதிப்பேனும் அங்கு உயிரோடு வாழும். அதுதான் ஒரு ஆத்மார்த்தமான படைப்பாகும்.இது எனது எழுத்துக்களின் அனுபவம். உங்களுக்கு மாறுபடலாம் என்பதனை உங்கள் கருத்து மூலம் உணர முடிகிறது.

இது தலைப்பு இதற்கு எழுதென்பது நீங்கள் இங்கு குறிப்பிடுகிற படைப்பாளி அல்லது கவிஞருக்குரிய அடையாளம்.

 

பல்முகம் கொண்ட ஆற்றல் என்பதற்கு நீங்கள் கொண்டிருக்கும் அர்த்தமும் எனது எண்ணமும் வேறானது. நீங்கள் எழுதி தாளக்கட்டோடு எழுதியதாக சொல்லியுள்ள மேலுள்ள கவிதையை உண்மையில் ஒரு தாளக்கட்டோடு வாசிக்கவோ ரசிக்கவோ முடியவில்லை. முடிவுதறிவோடு தான் வாசிக்க முடிகிறது.

நீங்கள் உங்கள் பன்முகத்தன்மையை விரிவாக்கம் செய்ய  விரும்பின்  அல்லது உங்களை பன்முகத்தன்மையாளனாய் அடையாளப்படுத்த விரும்பின் இத்தகைய முயற்சிகளில் நிச்சயம் வெற்றி பெற வாழ்த்துக்கள். ஆனால் வலிந்து இங்கு எழுதும் உங்கள் கருத்தாலும் சில இடங்களில் அதிகப்படியான மெத்தனப்போக்கும் நிச்சயம் உங்களை பன்முனத்தன்மையாய் அடையாளம் காட்டாது.

 

அங்கேயொரு கிறுக்குத் தனத்தை அல்லது தலைக்கனத்தைத் தான் வெளிப்படுத்துகிறது உங்கள் கருத்து.

 

 

உங்கள் ஆக்க பூர்வமான விமர்சனத்தின் உட்பொருளை நன்றாகவே உள்வாங்க முடிந்தது . வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சாந்தி :) :) .

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.