Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடக கவனம் பெறத் தொடங்கியுள்ளது உக்ரேனில் வெடித்துள்ள மக்கள் புரட்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_71467456_020193964-1.jpgகிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரேனில் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள மக்கள் புரட்சி பெரும் ஊடக கவனம் பெற்றுள்ளது.

உக்ரேன் தலைநகர் கியெவ்வில் அரச கட்டிடங்களை முற்றுகையிட்டு சூறையாடி வரும் பொதுமக்கள், அங்குள்ள சுதந்திர சதுக்கத்தையும், நகர மையத்தையும் ஆக்கிரமித்துள்ளனர்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளும் பொருட்டும் அவற்றுடன் நட்புறவை வளர்க்கும் நோக்குடனும் ஐரோப்பிய ஒன்றியம் ஓர் மாநாட்டை லிதுவேனியாவில் கடந்த வாரம் நடத்தியது.

இதன் படி எதிர்வரும் 2014ம் ஆண்டிலிருந்து உக்ரேன் உள்ளிட்ட ஆறு கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்துடன் அங்கத்துவமற்ற நட்பு நாடுகளாக வர்த்தக தொடர்பை மேற்கொள்ளும் சூழ்நிலை தோன்றவுள்ளது.

எனினும் இந்த ஒப்பந்தத்தில் உக்ரேன் கையெழுத்திடுவதற்கு இறுதிநேரத்தில் மறுப்பு தெரிவித்துவிட்டது. இது உக்ரேன் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் உக்ரேன் கையெழுத்திட்டால், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மலிவான விலையில் எரிவாயு கிடைக்கும். ஆனால் அதே போன்று ஐரோப்பிய ஒன்றிய உற்பத்திகளுக்கான பாரிய சந்தை வாய்ப்பு உக்ரேனுக்கு கிடைக்கும். அதோடு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள், விசா கட்டுப்பாடுகள் என்பனவும் தளர்த்தப்பட்டு உக்ரேன் மக்கள் சுதந்திரமாக ஐரோப்பிய நாடுகளுக்கு வந்து செல்லும் வாய்ப்பு உருவாகும்.

இதனால் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது நிச்சயம் தமக்கு பயனுடையதாக இருக்கும் என பொதுமக்கள் கருதுகின்றனர். ஏற்கனவே உக்ரேனில் ஜனநாயக பண்புக்குறைவு, பழைய சர்வாதிகாரப் போக்குகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருத்தல் போன்ற காரணங்களால் உக்ரேன் மக்களிடையே அரசு மீது கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் இந்த ஒப்பந்ததில் கையெழுத்திட உக்ரேன் அரசு மறுப்பு தெரிவித்திருப்பது அவர்களுக்கு மேலும் கோபத்தை கிளறியுள்ளதுடன், இதனாலேயே இத்திடீர் மக்கள் புரட்சி வெடித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மாறாக உக்ரேன் பிரதமர் விக்டர் யனுகோவிச் தாம் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பதற்கான காரணங்களை இவ்வாறு கூறுகிறார். ரஷ்யாவின் நட்பு நாடுகள் மேலை நாடுகளின் பக்கம் சாய்வதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுத்துவிடும். இதனால் ரஷ்யாவுடனான எமது நல்லுறவை தியாகம் செய்துவிட முடியாது. அதோடு, இந்த ஒப்பந்தம் உக்ரேனின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு போதுமான நிதியுதவியை செய்வதாக இல்லை என்கிறார் அவர்.

இந்நிலையிலேயே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் அங்கு தீவிரமடைந்துள்ளது. தலைநகரில் அமைந்துள்ள அரச காலியங்கள் முற்றாக புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதால் அரச ஊழியர்கள் தத்தமது பணிகளை செய்யமுடியாது திணறுகின்றனர். சுதந்திர சதுக்கத்தில் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்றும் கூடி பல்வேறு சுதந்திர ஸ்லோகங்களுடன் முழக்கமிட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர், இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். சில எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்துள்ள போதும், சில எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தை எதிர்த்துள்ளன. வெறுமனே ஜனநாயக பண்புகளிலிருந்து விலகி, கோபத்தை மேலும் தூண்டக் கூடிய பயனற்ற செயலிது என அவை கூறியுள்ளன.

இந்நிலையில் அமைதியான முறையில் யாரும் தமது எண்ணங்களை வெளிப்படுத்த உரிமையுண்டு என உக்ரேன் அதிபர் அரச நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரேபிய நாடுகளின் மக்கள் புரட்சியை ஞாபகப்படுத்தும் வகையில் உக்ரேனின் ஆர்ப்பாட்டம் தற்போது தொடர்ந்து ஊடக கவனம் பெற்று வருகிறது.

http://www.4tamilmedia.com/social-media/facebook/19019-ukraine-unrest-protesters-blockade-government-sites

  • கருத்துக்கள உறவுகள்

டுனீஷியா, எகிப்து, சிரியா என்று மக்கள் புரட்சி தொடங்கி இப்ப உக்ரேனிலும்.. மக்கள் தாங்களா புரட்சி பண்ணுகினமா? நம்ப முடியல.. :rolleyes:

டுனீஷியா, எகிப்து, சிரியா என்று மக்கள் புரட்சி தொடங்கி இப்ப உக்ரேனிலும்.. மக்கள் தாங்களா புரட்சி பண்ணுகினமா? நம்ப முடியல.. :rolleyes:

அவர்கள் புரட்சி பண்ணவில்லை. நேடோ பண்ண வைக்குது.

கிரேக்கம் போல் கடன் கொடுத்து உக்ரைனை மடக்க திட்டம் போட்டார்கள் ஆனால் புடின் குறுக்கால புகுந்து கடனும் அடைத்து குறைந்த விலையில் எரிவாயும் கொடுத்துவிட்டார்.

சைப்பிரசை மடக்கி ரசிய பணக்காரரை உசுப்பேத்தியதும் காரணம்.

அது தான் மேற்கு ஊடகங்கள் புரட்சி நாதம் பாட தொடங்கிவிட்டன.

அவர்கள் புரட்சி பண்ணவில்லை. நேடோ பண்ண வைக்குது.

 

 

 

போலந்து நாட்டில் நாட்டோ வலுவான தளம் அமைத்துள்ளது

எனவே உக்ரனே எந்த விதத்திலும் பயன்படாது

 

 

 

கிரேக்கம் போல் கடன் கொடுத்து உக்ரைனை மடக்க திட்டம் போட்டார்கள் ஆனால் புடின் குறுக்கால புகுந்து கடனும் அடைத்து குறைந்த விலையில் எரிவாயும் கொடுத்துவிட்டார்.

 

கிரீசு நாடு தனது பொருளாதார சீர்கேட்டினால் தான் தள்ளாடியது ..தக்க சமயத்தில் ஐரோப்பிய நாடுகள் உதவி செய்யவில்லை என்றால் அங்கு கண்டிப்பாக புரட்சி வெடித்திருக்கும்

 

 

 

சைப்பிரசை மடக்கி ரசிய பணக்காரரை உசுப்பேத்தியதும் காரணம்.

அது தான் மேற்கு ஊடகங்கள் புரட்சி நாதம் பாட தொடங்கிவிட்டன.

 

 

சைப்ருஸ் நாடு அன்று முதல் இன்று வரை இங்கிலாந்தின் ஆதிக்கத்தில் தான் உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

டுனீஷியா, எகிப்து, சிரியா என்று மக்கள் புரட்சி தொடங்கி இப்ப உக்ரேனிலும்.. மக்கள் தாங்களா புரட்சி பண்ணுகினமா? நம்ப முடியல.. :rolleyes:

 

 

 

இவற்றுடன் ஒப்பிடும்போது

உக்ரேனின் மக்கள் போராட்டம் 100 வீதம் வெல்ல சந்தர்ப்பங்களுண்டு

2  முக்கியமான காரணங்கள்

1-  ஐரோப்பாவுக்குள் உள்ள ஐரோப்பியர்களைக்கொண்ட நாடு

2- ருசியாவுக்கு எதிரானது....

உக்கிரையினில் இது 2வது புரட்சி ,முதல் ஒரு முறை  ஏற்பட்டு  அதன் தலைவி சிறையில் உள்ளார்..

 

ரசிய கட்டுப்பாட்டில் தான் அந்நாடு உள்ளது. அந் நாட்டு மக்கள் ரசிய அரசின் மறைமுக கட்டுபாட்டுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி விட்டார்கள்.

ஜரோப்பாவுடன் சேர்ந்த மற்றைய பழைய கம்யூனிச நாடுகள்  நல்ல நிலைக்கு வந்துள்ளன.

 

அதையே உக்கிரையன் மக்களும் விரும்புகிறார்கள். ரசியா ஜரோப்பாவின்  எல்லைப் பரம்பலுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது

.ஈழத்தமிழர் நிலையில்  மத்திய இந்திய அரசின் நிலைப்பாடு மாதிரி.

போலந்து நாட்டில் நாட்டோ வலுவான தளம் அமைத்துள்ளது

எனவே உக்ரனே எந்த விதத்திலும் பயன்படாது

கிரீசு நாடு தனது பொருளாதார சீர்கேட்டினால் தான் தள்ளாடியது ..தக்க சமயத்தில் ஐரோப்பிய நாடுகள் உதவி செய்யவில்லை என்றால் அங்கு கண்டிப்பாக புரட்சி வெடித்திருக்கும்

சைப்ருஸ் நாடு அன்று முதல் இன்று வரை இங்கிலாந்தின் ஆதிக்கத்தில் தான் உள்ளது

சஜீவ்,

அமெரிக்காவிற்கு ஜெர்மனியிலும் வலுவான தளம் உள்ளது. அதற்காக போலந்தை விட்டு வைக்கவில்லை.

உக்ரைன் ரசியாவின் இராணுவ தொழிற்சாலை. அதை வளைத்து போடுவதற்குள் புடின் பாய்ந்து தடுத்துவிட்டார்.

கிரீஸ் ஒழுங்காக தான் இருந்தது. 80 பில்லியன் கடனில் ஒலிம்பிக் களியாட்டம் போட்டு வந்குரோத்தாகிவிட்டார்கள்.

சைப்பிரஸ் இராணியின் நாடு என்றாலும் பல பெரிய ரசிய பணக்காரர் காசை இழந்து மேட்டுக்குடி செஞ்சேனை கோபம் அடைந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா-சீனா-ஈரான்

இந்த மூன்று நாடுகளையும் நெருக்குவதே நோக்கம்.. சிரியாவை விழுத்த நினைத்ததும் அதற்காகவே.. இது மேற்கு கூட்டணியின் நீண்டகால செயற்திட்டம்..

சிரியாவை வீழ்த்த முடியாமல் செய்த புட்டின் உக்ரேனிலும் தலையிட்டுவிட்டார்.. மக்களை தூண்டிவிடுவது இங்கு மேற்கின் வேலை.. சிரியாவில் நேரடியாகவே எதிர்க்கும்பலுக்கு ஆயுதங்களை வழங்கினார்கள்.. இப்போதெல்லாம் சிரியாவின் கிளர்ச்சி செய்திகளில் வருவதேயில்லை.. மாறாக உக்ரேனில் மக்கள் கிளர்ந்துவிட்டார்கள்.. :D

ராஜபக்ச கூட்டமும் ஈரான் கப்பலை வரவழைப்பதும், சீனா-ரஷ்ய ஆதரவு உண்டென்று முழங்குவதும் இந்த அரசியல் அடிப்படையில்தான்..

இந்த இழுபறிக்கு நடுவில் நின்று இந்தியா அல்லல்படுது. :rolleyes:

இன்று ஈழத்தில் மனித உரிமைமீறல் நடைபெற்றுவிட்டது என்று மேற்குலகம் சொல்வது சனல் 4 காணொளிகளைப் பார்த்துவிட்டு அல்ல என்பது தெரிந்ததே.. இலங்கையின் போக்கை.. அதன் கூட்டுக்களை உறுதிப்படுத்திவிட்டு கொள்கைகளில் மென்மாற்றம் செய்துள்ளார்கள்.. அதற்கு சனல் 4 இன் காணொளிகளும் ஒரு சாட்டு..

இன்று சுமந்திர இனக்கொலை என்று பேச முடியாது என்கிறார்.. ஆனால் மேற்கினால் இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முடியாமல்போகும் ஒரு கட்டத்தில் அவர்கள் இனக்கொலை என்று ஒரு கருத்தை எடுக்கலாம்.. ஆனால் அதற்கு முன் ஊடகங்களில் சில ஆதாரங்கள் பிரபலப்படுத்தப்படும்..

அண்மையில் பிறேமனில் நடந்த விசாரணையில் இரண்டு முக்கியமான தீர்ப்புகளை வெளிவிட்டுள்ளார்கள்.. தேவை ஏற்படின், இவற்றை ஊடகங்களில் பிரபலப்படுத்துவார்கள்.. :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.