Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னரின் வாரிசு மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டவரும் கடைசியாக ௦இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னனுமான விக்கிரம ராஜசிங்கர் வம்சத்தின் கடைசி வாரிசு பிருதிவிராஜ் வேலூரில் மரணமடைந்தார்.

img1140117022_1_1.jpg

இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்கிரம ராஜசிங்கர் 26 ஆண்டுகள் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தார். போரின் இறுதியில் மன்னரும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவானார்கள்.

அவர்களை சிறைபிடித்த ஆங்கிலேயர்கள் வேலூர் கோட்டையில் 16.5 ஆண்டுகள் சிறை வைத்தனர். 1832ல் விக்கிரம ராஜசிங்கர் மரணம் அடைந்தார். அவர் புதைக்கப்பட்ட இடத்தில் பாலாற்றங்கரையில் 1990ல் முத்து மண்டபம் கட்டபட்டது.

இலங்கையில் கடைசி வரை ஆங்கிலேயரை எதிர்த்த தமிழ் மன்னரின் வீரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த மண்டபம் கம்பீர சின்னமாக நிற்கிறது. மன்னரின் வம்சத்தினர் இன்றும் வேலூரில் வாழ்ந்து வருகின்றனர். வேலூர் சாய்நாதபுரம் நடேச முதலி தெருவில் வசித்து வந்த மன்னரின் 3-வது வாரிசு பிருதிவிராஜ் இன்று மரணம் அடைந்தார்.

இவரை இளவரசன் என்று அப்பகுதி பொதுமக்கள் அழைத்து வந்தனர். ஏராளமான பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இவருக்கு புஷ்பா என்ற மனைவி, விக்கிரமன், விஜயகுமார் என்ற மகன்கள் உள்ளனர். இறந்த பிருதிவிராஜ் மன்னர் விக்கிரம சிங்கரின் மகன் வயிற்று பேரன் என்று தெரிவித்தனர்.

 

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1401/17/1140117022_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டவரும் கடைசியாக ௦இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னனுமான விக்கிரம ராஜசிங்கர் வம்சத்தின்   கடைசி வாரிசு பிருதிவிராஜ் வேலூரில் மரணமடைந்தார்.

 

 

இவருக்கு புஷ்பா என்ற மனைவி, விக்கிரமன், விஜயகுமார் என்ற மகன்கள் உள்ளனர். 

 

செய்தியில் தப்புள்ளதே...??

ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டவரும் கடைசியாக ௦இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னனுமான விக்கிரம ராஜசிங்கர் வம்சத்தின் கடைசி வாரிசு பிருதிவிராஜ் வேலூரில் மரணமடைந்தார்.

இவருக்கு புஷ்பா என்ற மனைவி, விக்கிரமன், விஜயகுமார் என்ற மகன்கள் உள்ளனர்.

செய்தியில் தப்புள்ளதே...??

எங்கள் ஊடகங்களி வரும் செய்திகள் தானே அப்படித்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் கடைசி தமிழ் மன்னனாரக இருந்த ஸ்ரீ விக்கிரம ராஜ சிங்கர், தனது பத்திரங்களில்... தமிழில் கையெழுத்துப் போட்ட மூல வடிவம், கொழும்பு நூதனசாலையில் (மியூசியம்) இருந்தது. இப்போது அதனை, சிங்களம் பாதுகாத்து வைத்திருப்பார்கள் என்று, நான் நினைக்கவில்லை.
 

லண்டன் நூதனசாலையிலிருந்த, அவரின் வாழ் போன்ற பல பாவித்த பொருட்களை... ஸ்ரீலங்கா நான்கு, ஐந்து வருடங்களுக்கு முன்பு, எப்படியோ தனக்கு கேட்டு வாங்கிக் கொண்டு விட்டது.

 

அவரின் வாரிசு என்று... இவ்வளவு நாளும் ஒருவர் இருந்திருப்பது... அவர் இறந்த பின்பு தான்... நமக்குத் தெரிய வருகின்றது.
அந்தப் பொருட்களையாவது.. லண்டன் மியூசியத்தில் இருந்து எடுக்க, திராவிடம் பேசும்.. தமிழக அரசியல் கட்சிகள் முனைந்திருக்கலாம்.

 

இலங்கையின் கடைசி தமிழ் மன்னனாரக இருந்த ஸ்ரீ விக்கிரம ராஜ சிங்கர், தனது பத்திரங்களில்... தமிழில் கையெழுத்துப் போட்ட மூல வடிவம், கொழும்பு நூதனசாலையில் (மியூசியம்) இருந்தது. இப்போது அதனை, சிங்களம் பாதுகாத்து வைத்திருப்பார்கள் என்று, நான் நினைக்கவில்லை.

 

லண்டன் நூதனசாலையிலிருந்த, அவரின் வாழ் போன்ற பல பாவித்த பொருட்களை... ஸ்ரீலங்கா நான்கு, ஐந்து வருடங்களுக்கு முன்பு, எப்படியோ தனக்கு கேட்டு வாங்கிக் கொண்டு விட்டது.

 

அவரின் வாரிசு என்று... இவ்வளவு நாளும் ஒருவர் இருந்திருப்பது... அவர் இறந்த பின்பு தான்... நமக்குத் தெரிய வருகின்றது.

அந்தப் பொருட்களையாவது.. லண்டன் மியூசியத்தில் இருந்து எடுக்க, திராவிடம் பேசும்.. தமிழக அரசியல் கட்சிகள் முனைந்திருக்கலாம்.

 

நீங்கவேற, அதெல்லாம் பழைய அரசன்.

 

இப்போதுதான் இலங்கைக்கு புது அரசன் இருக்கிறாங்க இல்ல? 

 

அவரையும் அவற்ற தம்பிமாரையும் மீறி வாளென்ன மயிர் கூட புடுங்கேலாதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிபீடியா தரும் வரலாற்றின் படி விக்கிரம இராஜசிங்கன் கண்டி இராசதானியை ஆண்டான், இவன் இராஜாதிராஜ சோழனின் பரம்பரையில் வந்த மதுரையின் இராஜ பரம்பரையைச் சேர்ந்தவன் ஆவான்.இயற்பெயர் கண்ணசாமி இவன் மனைவியின் பெயர் ரங்கம்மா. 18 வயதில் சிங்கள அரசனாக முடிசூட்டப்பட்ட இவன் தெலுங்கு புத்தனாக இருந்ததுடன் தமிழையும் பேசக்கூடியவனாக இருந்தான். ஆங்கிலேயரிடம் தோற்றபின் கண்டி உடன்படிக்கையின்படி வேலூருக்கு நாடுகடத்தப்பட்டு சிரைவைக்கப்பட்டு அங்கு 1832 இல் இறந்தான். ---> சரித்திரம் மாற்றப்படிருப்பது போல் தெரிகிறது.

விக்கிபீடியா தரும் வரலாற்றின் படி விக்கிரம இராஜசிங்கன் கண்டி இராசதானியை ஆண்டான், இவன் இராஜாதிராஜ சோழனின் பரம்பரையில் வந்த மதுரையின் இராஜ பரம்பரையைச் சேர்ந்தவன் ஆவான்.இயற்பெயர் கண்ணசாமி இவன் மனைவியின் பெயர் ரங்கம்மா. 18 வயதில் சிங்கள அரசனாக முடிசூட்டப்பட்ட இவன் தெலுங்கு புத்தனாக இருந்ததுடன் தமிழையும் பேசக்கூடியவனாக இருந்தான். ஆங்கிலேயரிடம் தோற்றபின் கண்டி உடன்படிக்கையின்படி வேலூருக்கு நாடுகடத்தப்பட்டு சிரைவைக்கப்பட்டு அங்கு 1832 இல் இறந்தான். ---> சரித்திரம் மாற்றப்படிருப்பது போல் தெரிகிறது.

 

என்னத்தை சொல்ல? தமிழன் எண்டாலே யுத்தத்தில தோக்கிறவன் தானா?

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை சொல்ல? தமிழன் எண்டாலே யுத்தத்தில தோக்கிறவன் தானா?

 

யாழ் களத்தைப் பார்த்தாலே....

உங்களுக்கு தெரியவில்லையா...

நமது காலத்தில்... கண் முன்னே எத்தனை மக்கள் துடி, துடிக்கச் செத்தார்கள்.

அதனைப் பார்த்தும்... சிங்களவனும், இந்தியனும் தீர்வு தருவாங்க என்று... விசர்க் கூட்டம் நம்பிக் கொண்டிருக்குது.

 

உந்த‌... விச‌ர்க் கூட்ட‌த்தாலை... முழுப் பிர‌ச்சினையும், த‌மிழ‌னுக்கு வ‌ந்த‌து.

ந‌ல்ல‌... கால‌ம், ஒரு க‌ட்ட‌த்திலாவ‌து... உல‌கில் இப்ப‌டி ஒரு ச‌ன‌ம் இருக்குது என்ப‌தை... புலி நிரூபிச்சுப் போட்டுது என்ற‌ ச‌ந்தோச‌ம் நெடுக‌ இருக்கும். :)

 

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.