Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராகுல்காந்தியை முத்தமிட்ட பெண்ணை எரித்துக் கொன்றார் கணவன்! – அசாமில் பரபரப்பு சம்பவம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல்காந்தியை முத்தமிட்ட பெண்ணை எரித்துக் கொன்றார் கணவன்! – அசாமில் பரபரப்பு சம்பவம். 

[saturday, 2014-03-01 20:03:17]
rahul-010314-150.jpg

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். கடந்த 26–ந்தேதி ராகுல் காந்தி அசாம் மாநிலம் சென்றார். ஜோர்கட் என்ற இடத்தில் அவர் மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் ஆலோசனை செய்தார். இதில் 600 பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் ராகுல்காந்தி கருத்துக்களை கேட்டார். அப்போது காங்கிரஸ் பெண் கவுன்சிலர் போன்டி ராகுல்காந்தியை அனைவரது முன்னிலையிலும் கன்னத்தில் முத்தமிட்டார். முத்த மிட்ட இந்த படம் மறுநாள் அனைத்து பத்திரிகையிலும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் ராகுல் காந்தியை முத்தமிட்ட பெண் கவுன்சிலர் போன்டி தீக்காயங்களுடன் அவரது வீட்டில் பிணமாக கிடந்தார்.

  

அந்த பெண்ணின் கணவர் 40 சதவீதம் எரிந்த நிலையில் இருந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை எரித்து கொன்று கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ராகுல்காந்தியை முத்த மிட்டது தொடர்பாக தான் போன்டிக்கும், அவரது கணவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மனைவியை அவர் எரித்து கொன்றதாக கூறப்படுகிறது.

போன்டி, கணவரால் எரித்து கொல்லப்பட்டரா? அல்லது தீக்குளித்து தற்கொலை செய்தாரா? என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வரும். இதற்கிடையே எரித்துக் கொல்லப்பட்ட பெண் ராகுல் காந்தியை முத்தமிட்டவர் அல்ல என்று அசாம் போலீசார் மறுத்துள்ளனர்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=104697&category=IndianNews&language=tamil

அரசியல் செய்ய முனைந்த பெண் கவுன்சிலர்.

அவமானப்பட்ட கணவன்.

  • கருத்துக்கள உறவுகள்

rahulgandhi81.jpg

 

மகளிர் அமைப்பினரிடையே உரையாற்றிய ராகுல் காந்திக்கு ஒரு பெண் முத்தம் கொடுத்து வரவேற்றார். அந்தப் பெண் எரித்துக் கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அசாமில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது, அசாமில் மகளிர் அமைப்பினரிடையே உரையாற்ற வந்த ராகுலை, போன்டி என்ற காங்கிரஸ் பெண் கவுன்சிலர் நெற்றியில் முத்தமிட்டு வரவேற்பு அளித்தார்.

 

ராகுலுக்கு முத்தம் கொடுத்து வரவேற்றதை விரும்பாத அவரது கணவர் இவரின் செயலால் பெரும் அதிர்ச்சி அடைந்தாராம். இதை அடுத்து இருவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் மூண்டுள்ளது. கைகலப்பில் ஈடுபட்ட நிலையில் அவர் தனது மனைவியை தீவைத்து எரித்துள்ளார். தானும் தீவைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் சிகிச்சக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் அந்தப் பெண் உயிரிழந்ததாகவும், கணவர் தீக்காயங்களுடன் போராடுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

 

இருவரும் தற்கொலைக்கு முயன்றனரா அல்லது போன்டிக்கு தீவைத்த அவரது கணவர் தானும் தீவைத்துக்கொண்டாரா என்பது குறித்து குழப்பாமான நிலை நிலவுவதாகவும் இது குறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=117335

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்ஸாமில் தீயில் கருகி இறந்தவர் ராகுல் காந்தியை முத்தமிட்டவர் அல்ல - போலீஸ்

 

குவஹாத்தி: அஸ்ஸாமில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்த பெண் அவரது கணவரால் தீவைத்து உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதாக வெளியான விவகாரத்தில் தற்போது போலீஸார் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
 
அந்தப் பெண் ராகுல் காந்தியை முத்தமிட்டவர் அல்ல என்று போலீஸ் கூறுகிறது. மாறாக, ராகுல் காந்திக்குக் கூட்டத்துக்குப் போய் விட்டு அவர் லேட்டாக வீடு திரும்பியதால் கணவருடன் சண்டை ஏற்பட்டதாகவும், அதில் அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்றும் போலீஸார் கூறுகின்றனர்.
 
அவரது கணவர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உயிர் பிழைத்து ஏதாவது கூறினால்தான் உண்மை தெரிய வரும். அஸ்ஸாமின் ஜோர்ஹாட் நகருக்கு ராகுல் வந்திருந்தார். அங்கு மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களுடன் கலந்துரையாடினார். அப்போது சில பெண்கள் திடீரென ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்தனர். அதில் ஒருவர்தான் தற்போது தீயில் கருகி உயிரிழந்தவரான போன்டி சுத்தியா என்று முதலில் தகவல்கள் கூறின. காங்கிரஸ் வார்டு உறுப்பினராவார் இவர்.
 
நேற்று இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சில நிமிடங்களில் வீட்டிலிருந்து அலறல் குரல்கள் கேட்கவே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். வீட்டுக்குள் கணவனும், மனைவியும் தீயில் கருகிய நிலையில் கிடந்ததைப் பார்த்து மக்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு போன்டி உயிரிழந்தார். அவரது கணவர் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட காயத்துடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராகுல் காந்திக்கு தனது மனைவி முத்தமிட்டதால் கோபமடைந்து அவருடன் கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் தீவைத்துக் கொன்று விட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அதை போலீஸார் மறுத்துள்ளனர். அந்தக் கூட்டத்திற்கு போன்டி போனது உண்மைதான். ஆனால் அவர் முத்தம் தரவில்லை. இதை அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் சிலரும் உறுதிப்படுத்தியுள்ளனர். உண்மையில் என்ன நடந்தது. இது கொலையா, தற்கொலையா என்பது குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறியுள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.in/news/india/assam-woman-who-kissed-rahul-gandhi-burnt-death-husband-194626.html

 

 

Edited by nedukkalapoovan

விஜய் tv யில் சிவகார்த்திகேயனை கொஞ்சியது போல் setup போல் உள்ளது...

 

பயமில்லாமல் பொம்பளைகளை கிட்டத்தில் விடுறாங்கள்....

Edited by naanthaan

கள்ளவடுவா  தேர்தலின் திசையை மாற்றி தனக்கு வாக்கு சேர்க்க பல பெண்களை அழைத்துவந்து குழப்பம் ஏற்படுத்தியிருக்கிறார். BJP நரிகள் உயிர் உள்ளதுகளாயின் பகிரங்க இடங்களில் அவமான நடத்தைக்காக இந்த இளவரசர் மீது வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
rahul-010314-150.jpg

 

ராகுலுக்கு முத்தமிட்ட, இப் பெண்ணை... அந்தக் கணவர்,
ராகுல் காந்திக்கே... திருமணம் செய்து வைத்திருக்கலாம், பாவம் அநியாயமாக ஒரு உயிர் போய்விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில் உள்ளது போண்டியா இல்லையா என்பதை கண்டுபிடித்தால் விசயம் தெரிந்துவிடுமே.. ஏன் குழப்புது பொலிஸ்?

படத்தில் உள்ளது போண்டியா இல்லையா என்பதை கண்டுபிடித்தால் விசயம் தெரிந்துவிடுமே.. ஏன் குழப்புது பொலிஸ்?

தேர்தல் நேரம் என்றபடியால் ராகுலின் 500 கோடி ஜப்பானிய பிரச்சார குழு குழப்பி தப்ப பார்க்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.