Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்றி மறந்தவர்கள் மகனானாலும், காங்கிரசானாலும் மன்னிப்பு இல்லை: கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: நன்றி மறந்தவர்கள் மகனாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும் தி.மு.க. மன்னிக்காது என அக்கட்சி தலைவர் கருணாநிதி கூறினார்.

 

திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6 மணி அளவில் சென்னை சிந்தாதிரி பேட்டையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

 

தென்சென்னை, வடசென்னை மற்றும் மத்திய சென்னை திமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய கருணாநிதி, திராவிட இயக்க வரலாற்றில் சென்னைக்கு மிக முக்கியமான பங்கு உண்டு என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், மதச்சார்பற்ற அரசை காண திமுக பாடுபடுவதாக கூறினார்.

 

மூன்றெழுத்து கொண்ட தி.மு.க.,  திராவிடர்களை ஒன்றுபடுத்தி, அவர்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் இயக்கம் திமுக.

 

தொண்டர்களை சந்திப்பதில் எனக்கு இறுமாப்பு கிடையாது. நான் திராவிடர்களின் தலைவன். இருமாப்பு கொண்ட முதல்வர் ஜெயலலிதா போன்று கிடையாது; யாருக்கும் பயப்பட மாட்டேன் என்ற சொல் என்னிடம் கிடையாது. அன்போடும், அமைதியோடும்தான் உங்களிடம் இருப்பேன்.சோதனை, வேதனைகளை கடந்து சாதனை புரிவதாக திமுக விளங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தின் தேவைகளை நிறைவேற்ற திமுக பாடுபட்டு வருதாகவும் கருணாநிதி கூறினார்.

 

அரசியலில் தாம் 1938 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததாகவும், ஏறத்தாழ 75 ஆண்டு காலம் தாம் பொது வாழ்க்கையில் கழித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

"எனக்கு வயது 90 என்று கூறினார்கள். எனக்கு தெரியவில்லை. தந்தை பெரியார் அவர்கள் நூறு வயதை தொடும் வரை வாழ்ந்தார்கள். அண்ணா நம்மை விட்டு சென்றாலும், அவரின் கொள்கைகளை, கருத்துகளை எடுத்துச் சொல்ல தவறவில்லை

 

அண்ணாவின் கொள்கைகளையும், அவர் போதித்த கருத்துக்களையும் இன்றுவரை கடைபிடித்து வருவது திமுக மட்டுமே, அண்ணாவின் கொள்கைகளை திமுக கைவிடவில்லை. ஆனால் அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்திருப்போர் அந்த கொள்கையை கடைபிடிக்கவில்லை. அவரை மறந்து விட்டனர். அண்ணா பெயரை ஒப்புக்காக வைத்துக்கொண்டு இன்று தமிழகத்தில் ஆட்சி செய்வோர் அவரது கொள்கைகளை கடைபிடிப்பதில்லை.  அண்ணா பெயரில் அமைக்கப்பட்ட நூலகத்தை அழிக்க முயற்சிப்பதாகவும் கருணாநிதி குற்றம் சாட்டினார்.

 

கருணாநிதி கட்டிய பாலத்தில் பயணிக்க மாட்டேன்; கருணாநிதி கட்டிய தலைமை செயலகத்தை பயன்படுத்தமாட்டேன் என்று கூறுபவர்கள், முதல்வர் என்ற முறையில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கான உரிமையை பெற்றுக்கொடுத்தது தாம்தான் என்று குறிப்பிட்டார் கருணாநிதி. இது தொடர்பாக அவர் பேசுகையில்,"மாநில முதல்வர்கள் ஏற்றுவதற்காக 74ல் இந்திரா காந்தி அம்மையாரிடம் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை ஏற்று இந்தியாவிலுள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் தேசிய கொடியை ஏற்றும் உரிமையை கொடுத்தார். இன்று மாநில முதல்வர்கள் தேசிய கொடியை ஏற்றுகிறார்கள் என்றால், அதற்கு இந்த கருணாநிதிதான் காரணம்" என்றார்.

அவர் மேலும் பேசுகையில், ''நன்றி மறந்தவர்கள் யாராக இருந்தாலும் தி.மு.க. மன்னிக்காது. அது மகனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும் மன்னிப்பே கிடையாது என்று கூறினார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=26173

அப்ப இதே முடிவிலை தமிழ்நாட்டு மக்களும் உறுதியா இருங்கப்பா.

  • கருத்துக்கள உறவுகள்

ELARGE_20140326013836895772.jpeg

காமெடி கலாட்டாவில் கலந்து கொள்ளலாம் இந்த தட்சனாமூர்த்தி (கருணாநிதி)

  • கருத்துக்கள உறவுகள்

சாவதற்கு முதல் ஆள்வதற்காக

எதையும் செய்வார்

எதையும் இழப்பார் இந்த

அரசியல் சாணக்கியர்

 

முள்ளிவாய்க்காலையே ஆட்சிக்காக அனுமதித்த சண்டாளன் :(  :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.