Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாயமான மலேசிய விமானம் கடலுக்குள் விழவில்லை ஆப்கானிஸ்தானில் இருப்பதாக ரஷ்ய செய்தித்தாள் கூறுகிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

malaysian-airlines_CI.jpg

மாயமான மலேசிய விமானம் கடலுக்குள் விழவில்லை என்றும், ஆப்கானிஸ்தானில் இருப்பதாகவும் ரஷ்ய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த 8ம் தேதி 227 பயணிகள், 1 விமானி, 1 துணை விமானி மற்றும் 10 சிப்பந்திகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற விமானம் மாயமானது. பின்னர் அது தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாகவும், அதில் பயணித்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசியா அறிவித்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவில் அந்நாட்டு மொழியில் வெளியாகும் எம்கேஆர்யூ என்ற செய்தித்தாள் விமானம் குறித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் மலேசிய விமானம் பாகிஸ்தான் எல்லையில் ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹாரின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது என்றும், அதில் பயணித்த அனைவரும் உயிருடன் இருப்பதாகவும் அந்த செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் விமானத்தின் இறக்கை ஒடிந்து இருப்பதாகவும் அது தரையிறங்குகையில் சேதமைடந்திருக்கலாம் என்றும் தற்போது சின்ன சாலையில் நிற்பதாகவும் அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

பயணிகள் பயணிகள் ஏழு குழுக்களாக பிரிக்கப்பட்டு மண் வீடுகளில் போதிய உணவின்றி தவித்து வருகிறார்களாம். 20 ஆசியர்கள் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளார்களாம்.

அதுவும் சிலரின் உத்தரவின்பேரில் கடத்தப்பட்டுள்ளது என்று அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது. இந்த செய்தி கடந்த 31ம் தேதி ரஷ்யாவில் வெளிவந்துள்ளது.

மலேசிய விமானம் மாயமான உடன் அது ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆதிக்கத்தில் உள்ள இடத்தில் பறந்ததாகவும், அங்கு தான் தரையிறங்கியதாகவும் கடந்த மாதம் 16ம் தேதி இங்கிலாந்தைச் சேர்ந்த தி இன்டிபென்டென்ட் செய்தி வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்திய விமானம் கடந்த 1999ம் ஆண்டு இந்திய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கடத்தப்பட்டு ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகருக்கு தான் கொண்டு செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

முன்னர் வெளிவந்த தகவல்கள் -விமானியே விமானத்தை கடத்தினாரா?

மாயமான விமானத்தின் விமானி மீது ஊடகங்கள் பல்வேறு சந்தேகங்களை முன்வைத்துள்ளன.

விபத்தில் சிக்கியதாக மலேசிய அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மாயமான விமானத்தின் விமானி மீது ஊடகங்கள் பல்வேறு சந்தேகங்களை முன்வைத்துள்ளன.

கடந்தமாதம் 8ம் தேதி 5 இந்தியர்கள் உட்பட 239 பயணிகளுடன் மலேசிய விமானம் ஒன்று மாயமானது. தொடர்ந்து கிடைத்த முரண்பட்ட தகவல்களின் அடிப்படையில் விமானம் கடத்தப்பட்டதா அல்லது விபத்தில் சிக்கியதா என்ற குழப்பம் நீடித்தது. கிட்டத்தட்ட 25க்கும் அதிகமான நாடுகள் மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டன. பின்னர், ஒரு வழியாக செயற்கைக் கோள்கள் உதவியுடன் விமானம் விபத்தில் சிக்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது மலேசியா.

எனினும்;, தனது பயணப் பாதையை மாற்றியது ஏன்? எப்படி விபத்து உண்டானது என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தொடர்ந்து தேடப் பட்டு வருகிறது. இதற்கிடையே மலேசிய விமானத்தின் சிதைந்த பகுதிகளை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விமானம் விபத்தில் சிக்கியதாகச் சொல்லப் பட்டாலும் அது எதிர்பாராமல் நடந்ததா அல்லது சதிச்செயலா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விமானத்திஅ விமானியே கடத்தி, விபத்தை உண்டாக்கியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. ஊடகங்கள் விமானியே இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என பலதரப்பட்ட யூகங்களைக் காரணங்களாகக் கூறுகின்றன.

முதல் காரணம்...

விமானிகள் தான் விமானத்தை கடத்தி இருக்ககூடும் என்ற சந்தேக எழுந்ததற்கு முதல் காரணம் விமானம் பாதை மாற மிகவும் அபாயகரமான தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுவது தான்.

விமானி தற்கொலை...

விமானத்தில் இருந்து கடைசியாக துணை விமானியே கட்டுப்பாட்டு அறைக்கு பேசியதாக ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விமானத்தை ஓட்டி சென்ற விமானி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர். தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை அதிகாரிகள் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சை திருப்பப் பட்ட விசாரணை...

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் டெய்லி டெலிகிராப் என்ற செய்தித்தாள் காணாமல் போன மலேசிய விமானம் குறித்து மலேசிய அதிகாரிகள் அளித்த அறிக்கைகள் முரண்பாடாக உள்ளது. விமானி குறித்த விசாரணையை திசை திருப்புகிறது.

சரி பார்க்கப்படாத தகவல்கள்...

மலேசிய அதிகாரிகள் மிகக்குறைவான தகவல்கலையே வெளியிட்டு உள்ளனர்.விமானம் குறித்து விசாரணை நடத்தியவர்களிம் எந்த தகவலையும் அவர்கள் சரிபார்க்கவில்லை. தற்போது இயந்திர கோளாறு காரணமாக விமானம் வெடித்திருக்கலாம் அல்லது தீ பற்றி இருக்கலாம் எனற கோணத்தில் திருப்புகிறது என அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மனநிலை தடுமாற்றம்...

தலைமை விமானி ஜாகாரி அகமது ஷா சரியான மன நிலையில் இல்லை எனறு கூறப்படுகிறது. அவர் தீவிர குடும்ப பிரச்சினைகளை சந்தித்து வந்தார் என அவரது நீண்ட நாள் நண்பர் கூறியதாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன.

தற்கொலை முயற்சியா...

மேலும், ஷா தனது மனைவியிடம் இருந்து பிரிந்து வாழந்தார் என்றும், மேலும் அவருக்கு மற்றொரு பெண்ணுடனும் தொடர்பு இருந்ததாகவும், ஆனால் அந்த உறவிலும் சிக்கல் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மனமுடைந்த விமானி தற்கொலை முயற்சியாக விமானத்தை விபத்தில் சிக்க வைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா...?

இங்கிலாந்து பத்திரிகைகள் ஏற்கனவே அரசியல் காரணங்களுக்காக தலைமை பைலட் ஷா விமானத்தை கடத்தி இருக்கும் சாத்திய கூறுகள் உள்ளதாக செய்தி வெளியிட்டு இருந்தன .தலைமை பைலட் அரசியலில் ஆர்வமாக இருந்தார் என்றும் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிமின் ஆதரவாளராக இருந்து உள்ளார் எனவும் தெரிவித்து இருந்தன. 

சுயநினைவை இழந்த பயணிகள்...

ஷா விமானத்தை 45,000 அடி உயரத்திற்கு கொண்டு சென்று அந்த உயரத்திலேயே 23 நிமிடம் விமானத்தை வைத்து அதன் பிறகே கீழ் நோக்கி வந்துள்ளார். அந்த உயரத்தில் 12 நிமிடங்களிலேயே ஆக்சிஜன் தீர்ந்திருக்கும். இதனால் விமானம் கடலுக்குள் விழுவதற்கு முன்பே பயணிகள் ஆக்சிஜன் இன்றி சுயநினைவை இழந்திருப்பார்கள் எனச் சந்தேகிக்கப் படுகிறது.

தீர்ந்து போனதா எரிபொருள்....

விமானியே விமானத்தின் எரிபொருளை தீரவைத்து விமானததை கீழ் நோக்கி விழவைத்து இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

யார் அந்தப் பெண்....

கடந்த 8-ம் தேதி விமானத்தை இயக்கும் முன்பு கேப்டன் ஷா ஒரு பெண்ணுடன் தனது செல்போனில் பேசியுள்ளார். அதன் பிறகே அவர் விமானத்தை இயக்கி வேறு பாதையில் சென்றுள்ளார். போலீஸ் விசாரணையில் அந்தப் பெண்ணின் செல்போன் எண் போலி முகவரியில் வாங்கியதாக தெரியவந்துள்ளது. அதனால் இது தற்கொலை அல்லது சதி முயற்சியாக இருக்கலாம் என்றே நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  (ஒன் இந்தியா)

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105132/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
 

 மலேசிய விமானத்தை கடத்தியது அமெரிக்காவா?

 

1165764757hijack.jpg


காணமால் போன மலேசிய விமானத்தை அமெரிக்கா கடத்தி வைத்துள்ளதாக வெளியாகியுள்ள  செய்தியால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காணமால் போன மலேசிய விமானத்தில் இருந்த ஒரு பயணி தான் ஒளித்து வைத்திருந்த ஐபோனில் இருந்து விமானம் இருக்கும் இடத்தை படம் பிடித்து தனது அமெரிக்க நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக வந்த செய்தியை அடுத்து, உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மாயமான மலேசிய விமானத்தை அமெரிக்க ராணுவம் கடத்தி, Diego Garcia என்ற தீவில் ஒளித்து வைத்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் கசிந்து வந்தன.

இந்த தீவு இந்திய பெருங்கடலில் உள்ளது. அமெரிக்காவுக்கு சொந்தமான இந்த தீவில் அமெரிக்க போர்விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த தீவில்தான் மலேசிய விமானம் இருப்பதாக, அந்த விமானத்தில் பயணம் செய்த அமெரிக்க பயணி Phillip Wood என்பவர் தனது நண்பரும் பத்திரிகையாளருமான Jim Stone என்பவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக தகவல் பரவியுள்ளது.

மேலும் பயணி ஒரு புகைப்படமும் அனுப்பியுள்ளதாகவும் ஆனால் அந்த புகைப்படத்தில் எந்த படமும் இல்லாமல் கருப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Phillip Wood என்பவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ் பின்வருமாறு அமைந்துள்ளது
“நாங்கள் அனைவரும் ஒரு ராணுவ அமைப்பால் கடத்தப்பட்டு, சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், நான் எனது ஐபோனை மர்ம உறுப்பில் மறைத்து கொண்டதாகவும், மற்றவர்களின் போன்கள் எல்லாம் கைப்பற்றப்பட்டதாகவும்,

தன்னை ஒரு தனிமைச்சிறையில் வைத்துள்ளதாகவும், அந்த இடம் இருட்டாக உள்ளது. தனது உடலில் போதைபொருள் செலுத்தப்பட்டுள்ளதால் தன்னால் அதிக அளவு சிந்திக்க முடியவில்லை என அவர் அனுப்பியுள்ள எஸ்.எம்.எஸ்சில் தெரிவித்துள்ளார்.
 

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=595892825403804894#sthash.yDuCd7yX.dpuf

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணொளியில் காட்டப்படும் குறுஞ்செய்தி ஒரு அமெரிக்கரால் எழுதப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வேறு  எங்கென்று சொல்லமுடியும்

 

சிறீலங்கா

எதற்கெடுத்தாலும் புலி  என்பது போல்.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.