Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

175 வருட கல்லூரி வரலாற்றில் இதுவே மிகப்பெரும் சாதனை ; வேம்படி அதிபர் வேணுகா பெருமிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

84cbd995c67aefe987ae78f6e6fd2942.jpg

175 ம் ஆண்டு நிறைவிலே இதுவரை காலத்திலும் இல்லாத இந்த வெற்றி எமக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் என வேம்படி பெண்கள் உயர் தர பாடசாலை அதிபர் வேணுகா சண்முகரட்ணம் தெரிவித்தார்.

 
வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுகள் தொடர்பாக உதயன் ஒன்லைன் கல்லூரி முதல்வரிடம் கேட்டபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
யாழ் மாவட்ட பாடசாலைகளில் எமது மாணவிகளே முன்னிலை பெற்றுள்ளனர் என்பது விசேட அம்சமாகும். கடந்த 2013 ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 28 மாணவிகள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். 8 ஏ சித்தியை 80 மாணவர்களும்  7 ஏ சித்தியை 60 வீதமான மாணவிகளும் பெற்றுள்ளனர். இதேவேளை கடந்த வருடம் பரீட்சைக்குத் தோற்றிய சகல மாணவர்களும் சாதாரண தரத்தில் சித்தி பெற்று உயர் தரத்தை தொடரவுள்ளனர். ஆகவே 100 சதவீதம் மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் என்பது சிறப்பான விடயம். 
 
 
இவர்களின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் பல்வேறு உந்துதல்களாகும். கடந்த வருடம் ஆளுநரால் சகல பாடத்திலும் ஏ பெற்ற சகல மாணவர்களையும் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் சமய பாடஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர். 
 
அதை விட 9 ஏ சித்தி பெற்ற மாணவிகள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 
 
எமது பாடசாலையில் குறைந்த சித்தி பெறும் மாணவிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கான விசேட வகுப்புக்கள் நடத்தப்பட்டன.  ஒவ்வொரு பாட ஆசிரியரும் இந்த விசேட வகுப்புக்களை நடத்தியிருந்தனர்.
 
 
எமது மாணவிகள் முழுமையாக எல்லாப் பாடங்களிலும் சித்தியடைந்துள்ளமைக்கு மேற்குறித்த விடயங்கள் பிரதான காரணியாக  அமைகின்றன. 
 
கடந்த வருடம் எமது பாடசாலை தேசிய ரீதியில் 10 ஆவது இடத்தில் இருந்தது. இந்த வருடம் அதற்கு முன் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
 
இவ் வெற்றிக்கு பெற்றோரின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. பெற்றோர் தமது பிள்ளைகளை விசேட வகுப்புக்களுக்கு அனுப்பி மிகுந்த ஒத்துழைப்பு வழங்கினர்.
 
175 ம் ஆண்டு நிறைவிலே இதுவரை காலத்திலும் இல்லாத இந்த வெற்றி எமக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இந்த வெற்றிக்கு அரும்பாடுபட்ட ஆசிரியர்களை நான் மனதார பாராட்டுகிறேன் என தெரிவித்தார். 
 
 

சாதனை படைத்தோர் சிறி லங்கா திறந்த வெளி சிறைசாலையில் இருந்து தப்பி வெளிகிட்டு வெளிநாட்டு கொம்பனியில் சாதனை படைப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவா ஒரு முக்கிய விடயத்தை மறைக்கிறா. தனது கல்லூயின் சாதனையைச் சொல்லும் அதேவேளை தனது ஒட்டுமொத்த சமூகத்தின் நிலையையும் சொல்லக் கூடிய துணிவு இல்லை.

 

கல்வி செயற்பாடுகளில் வீழ்ச்சி, யார் காரணம்?

jaffna%20teaching%20hospital%20volumteer

 

கல்விதான் எமது மூலதனம் எனக் கூறிவரும் எமது இனம் படிப்படியாக கல்வியில் சீரழிந்து செல்வதனை  எல்லோரும் கவனிப்பார்களா? இதற்கு வசதிவாய்ப்புக்கள் இல்லை, ராணுவ அட்டூழியம் , சிங்கள அரசாங்கத்தின் சதி என காரணங்களை அடுக்கிக்கொண்டு போகலாம் ஆனால் அதுவும் ஒரு காரணமாகவே இருக்கலாமே தவிர அதுவே முற்றான காரணம் அல்ல.

 

நேற்று வெளியான கல்விப்பொதுத் தராதர பரீட்சையில் இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் முதல் 10 இடங்களில் எந்தவொரு தமிழ் மாணவர்களும் உள்ளடங்கவில்லை என்பது வேதனைக்குரிய விடயம். மேலும் இதற்கு சிங்கள அரசுதான் காரணம் என கூறிவிட்டு சென்றுவிடமுடியாது.

 

பெற்றோர்கள், பாடசாலை நிர்வாகங்கள் இதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ளவேண்டும். 2009 இல் , 2010ல் கூட ஆன்டு ஐந்து மற்றும், உயர்தர பரீட்சைகளில் முதல் 10 இடங்களில் தமிழ் மாணவர்கள் வந்துள்ளார்களே.

 

ஆனால் அதன் பின்னர் படிப்படியாக வீழ்ச்சியடைந்தே செல்கின்றன. தமிழ் இனத்தின் கலை, கலாச்சாரம், பண்பாடு, பொருளாதாரம் எல்லாமே எம் இனத்தின் கல்வி செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது என்பதனை யாரும் மறந்துவிடமுடியாது.

 

http://www.eelanatham.net/articles/2014/04/03/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

 


க.பொ.த சாதாரண தரத்தில் 9447 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் சித்தியடையவில்லை.

 

a35c076a13dfa2eb00ad7f3fa43008c3.jpg

 

வெளியாகியுள்ள 2013 க.பொ.த சா/த பரீட்சை முடிவுகளின்படி 9447 மாணவர்கள் 9 பாடங்களிலும் சித்தியடைய தவறியுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

 
பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 66.67% மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 
 
பரீட்சை முடிவுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று  கொழும்பில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 
 
இம்முறை பரீட்சையில் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்ற மாவர்களின் எண்ணிக்கை 5737 என கல்வி அமைச்சர் தெரிவித்தார். 
 
2016ம் ஆண்டில் 75% சித்தியை எதிர்பார்க்க முடியும் என அவர் கூறினார். 
 
2013 பரீட்சை முடிவுகளின்படி விஞ்ஞான பாடத்தில் 67.53% மாணவர்களும் கணித பாடத்தில் 57.22% மாணவர்களும் ஆங்கில பாடத்தில் 47.68% மாணவர்களும் சித்தியடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார். 
 
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=210162828904415400#sthash.1eVpDOWG.dpuf

 

Edited by nedukkalapoovan

பத்து இடங்கள்  நம்பகதன்மை உடையதாக இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.